search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee"

    • சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.
    • 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்.

    ஒரு சில சமயங்களில் நமக்கு பிடித்த வேலையை பெறுவதற்காக பிடிக்காத வேலையை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். அத்தகைய சூழல்களில் வெறுப்பாகவும், வேலையை முழு ஈடுபாடு இல்லாமலும் செய்ய நேரிடும். சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.

    ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு. அதிலும் முக்கியமாக ஊதிய உயர்வு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பதால் அது கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். அதிலும் 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம். ஆனால், இங்கு ஒருவர் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார் அன்கேத். கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தராத நிறுவனத்தில் இருந்து வேலையை ராஜினாமா செய்துள்ளார். வேலையை ராஜினாமா தானே செய்துள்ளார் என்றால் சரி. அதனை கொண்டாடும் விதமாக இசைக்குழுவுடன் இணைந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் தற்போது பேசுபொருளாகியுள்ளார்.

    ஊதிய உயர்வு தராமல் இருந்ததால் கடும் அதிருப்தியில் இருந்த அன்கேத், பணியில் இருந்து விலகுவதை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட முடிவெடுத்தார். இதையடுத்து தனது நண்பர்கள் மற்றும் இசைக்குழுவை அழைத்து அன்கேத், நிறுவனத்தின் மேலாளர் அலுவலகம் முடிந்து வெளியில் வந்த போது வாசல் முன்பு மகிழ்ச்சியுடன் மேளம் அடித்து ஆடிப்பாடி நடனம் ஆடி கொண்டாடினார். இதனால் எரிச்சலடைந்த நிறுவனத்தின் மேலாளர், அன்கேத் மற்றும் குழுவினரை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வரும் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் படை தனி தாசில்தார் கண்ணன் தலைமையில் குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480 ரொக்கம் இருந்தது கண்டுபிடி க்கப்பட்டது.

    இது குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வடுவூர் நெய்வாசல் டாஸ்மாக்கில் பணிபுரிவதும், அங்கு வசூலான பணத்தை தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வந்து பின்னர் வங்கியில் செலுத்த இருந்ததும் தெரியவந்தது. இருந்தாலும் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.
    • வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஐதராபாத் அமிட்சில் பழமை வாய்ந்த பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ஐதராபாத் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    புத்தாண்டு தினத்தையொட்டி ஓட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது வாடிக்கையாளர்கள் கும்பலாக பிரியாணி சாப்பிட வந்தனர்.

    அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த பிரியாணி சூடாக இல்லை. மேலும் ருசியாகவும் இல்லை என வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    திடீரென அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.

    மேலும் சேர்களை தூக்கி அவர்கள் மீது வீசினர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓட்டலில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அனைத்து சென்று விசாரித்தனர்.

    ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.அதில் ஓட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மீது கட்டை மற்றும் சேர்களை கொண்டு தாக்குவது பதிவாகி இருந்தது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:

    பிரியாணி சூடாக இல்லை என்றதால் இந்த பிரச்சனை நடந்துள்ளது.முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென இந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை தாக்கியதால் நிலைமை மோசமாகியுள்ளது.

    இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
    • வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.

    உத்தமபாளையம்:

    கரூர் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பரமசிவம் என்பவர் மேலாளராக உள்ளார்.

    சின்னமனூர் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுத்து அதனை வசூல் செய்வதற்காக பல ஊழியர்களையும் கணேசன் நியமித்துள்ளார். கணேசன் 2 மாதத்துக்கு ஒரு முறை நிதி நிறுவனத்துக்கு வந்து வரவு செலவு கணக்குகளை பார்த்து பணத்தை பெற்றுச் செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று பைனான்ஸ் மேலாளர் பரமசிவம் மற்றும் ஊழியர் கண்ணன் ஆகியோர் வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொண்டு காமயகவுண்டன்பட்டியில் இருந்து நாராயணதேவன் பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    செல்லாயி அம்மன் கோவில் அருகே இவர்கள் நின்று கொண்டு இருந்த போது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் பணம் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றனர்.

    மிளகாய் பொடி தூவியதால் நிலை குலைந்து கீழே விழுந்த அவர்கள் அதன் பின்னர் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கண்ணன் தனது நண்பர்கள் 2 பேரை சேர்த்துக் கொண்டு வசூல் செய்த பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர். பணம் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில் ரூ.2 லட்சமே கிடைத்ததால் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளான கரூரைச் சேர்ந்த அபிஷேக் (36), வேலூரைச் சேர்ந்த பாஸ்கரன் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.2 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • மதுரையில் மறுசுழற்சி செய்யபட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக தயாரான சீருடைகள் விநியோகம் செய்யப்பட்டது.
    • நிப்பான் நிறுவனர் தனுஷ்கோடி மற்றும் இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் கோட்ட மேலாளார் பிரேமா மற்றும் சம்பத்குமார் ஆகியோர் சீருடைகளை வழங்கினர்.

    மதுரை

    மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சீருடைகள் தயாரிக்கப் பட்டு இந்திய ஆயில் நிறுவ னத்தின் மூலமாக சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழி யர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் சீரு டைகளாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந் நிகழ்வில் நிப்பான் நிறுவனர் தனுஷ்கோடி மற்றும் இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் கோட்ட மேலாளார் பிரேமா மற்றும் சம்பத்குமார் ஆகி யோர் கலந்து கொண்டு ஊழியர்களுக்கு சீருடை களை வழங்கினர்.

    • ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • துரைசாமிக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் கல்லாவில் இருந்த பணம் 5 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள கீழக்குயில்குடி சீனிவாசா காலனி கார்மேக நகர் பகுதியில் சேர்ந்தவர் துரைசாமி (வயது 62). இவர் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது திண்டுக்கல்- விருதுநகர் நான்குவழி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். தினமும் காலை 5 மணிக்கு கடை திறப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரு தினங் களுக்கு முன்பு கடையை திறந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வடை கேட்டுள்ளனர். வடை போடுவதற்கு சிறிது நேரமாகும் காத்திருங்கள் என துரைசாமி கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் துரைசாமியை தாக்கினர். இதில் துரைசாமிக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் கல்லாவில் இருந்த பணம் 5 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் சீனிவாச காலனி பகுதியை சேர்ந்த ராஜா மகன் கள் காசிநாதன் (20), நரேஷ் (19) ஆகிய இருவரை கைது செய்தனர்.

    • சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார்.
    • கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார். இதை பார்த்த பேரூராட்சி ஊழியர்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரித்த போது, தனக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. மேலும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறேன்.

    இந்த நிலையில் இன்று வேலைக்கு தாமதமாக வந்ததால் பேரூராட்சி ஊழி யர்கள் திட்டினர். இதனால் மனம் உடைந்த நான் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசாரி டம் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • அங்கன் வாடியில் அமுதலட்சுமி பணியாற்றி வந்தார்.
    • காயமடைந்த அமுத லட்சுமியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). இவரது மனைவி அமுதலட்சுமி (52). கடந்த 30 ஆண்டுகளாக அதே கிராமத்தில் அங்கன் வாடியில் அமுதலட்சுமி பணியாற்றி வந்தார். இந்நிலையில் அங்கன் வாடி தொடர்பான பணிக் காக உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவல கத்திற்கு தனது கணவ ருடன் அமுதலட்சுமி மோட் டார் சைக்கிளில் சென்றார். அப்போது எலவனாசூர் கோட்டை அருகில் இருந்த டீக்கடையில் டீ குடிப்ப தற்காக மோட்டார் சைக்கி ளை நிறுத்தினர்.

    அமுதலட்சுமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருந்ததால், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அமுத லட்சுமியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக புதுவை மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அமுதலட்சுமி பரிதாபமாக நேற்று உயிர் இழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எலவனா சூர் கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

    • சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது.
    • இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.

    இதுகுறித்து அந்த பிரிவின் மேலாளர் சரவணன் (39) என்பவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் டாலர் வைக்கப்பட்டு இருந்த பிரிவில் வேலை பார்க்கும் சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் டாலரை திருடியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்க டாலரை 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு நகை அடமான கடையில் அடமானம் வைத்தது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட கார்த்திகை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அதிமுக நிர்வாகியின் டீசல் காரில் பங்க் ஊழியர் பெட்ரோல் நிரப்பினார்
    • கார் டிரைவர் பங்க் ஊழியருடன் வாக்குவாதத்ததால் பரபரப்பு நிலவியது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு செல்வதற்காக, இவரது காரில் டீசல் நிரப்புவதற்கு டிரைவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ஓட்டிச்சென்றுள்ளார். அங்கு ஊழியர், அந்த காரில் டீசலுக்கு பதிலாக பெட்ரோல் போட தொடங்கினார். இதை கவனித்த டிரைவர் சத்தம் போட்டதால், அவர் பெட்ரோல் போடுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • மாணவி தூக்கத்தில் என்னை தொடாதே என்னை விட்டு விடு என சத்தம் போட்டுள்ளார்.
    • போலீசார் முகமது விபின்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே உறவினரான முகமது விபின்சன் (வயது 31) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    உறவினர் என்பதால் சிறுமியின் வீட்டிற்கு முகமது விபின்சன் அடிக்கடி சென்று வந்தார். சிறுமியும் உறவினர் என்பதால் அவருடன் பேசி வந்தார்.

    இந்த நிலையில் முகமது விபின்சன் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை மாணவி கண்டித்துள்ளார்.

    இருந்த போதிலும் அவர், மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இது கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. இதனை வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி வந்துள்ளார். இதனால் மாணவியும் தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு மாணவி, தனது தாயாருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மாணவி தூக்கத்தில் என்னை தொடாதே என்னை விட்டு விடு என சத்தம் போட்டுள்ளார்.

    இதையடுத்து மறுநாள் காலை மாணவியிடம் அவரது தாயார் இரவில் ஏன் அப்படி சத்தம் போட்டாய் என்று கேட்டார். அதன்பின்னரே மாணவி தனக்கு நேர்ந்த அனைத்தையும் தாயிடம் தெரிவித்தார்.இதை கேட்டதும் அதிர்ச்சியான மாணவியின் தாய், சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், முகமது விபின்சன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் முகமது விபின்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலியை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 43 வயது வாலிபர்.

    இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் டாஸ்மாக் விற்பனையாளரு க்கு, அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    இந்த விவகாரம் டாஸ்மாக் விற்பனை மேலாளரின் மனைவிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனது கணவரை கண்டித்தார். இருந்தபோதிலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணுடன் பேசி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் விற்பனையாளர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு அவரின் கள்ளக்காதலி வந்தார்.

    அவர் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு சத்தம் போட்டார். சத்தம் கேட்டு டாஸ்மாக் விற்பனையாளரும், அவரது மனைவியும் வெளியில் வந்த னர்.அப்போது இளம்பெண், டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவியை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசினார். இதை கேட்ட டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவி அப்படி பேசாதே என்றார். ஆனால் இளம்பெண் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தார்.

    ஆனால் இதனை கண்டு கொள்ளாமல், டாஸ்மாக் விற்பனையாளர், இளம்பெண்ணுடன் சேர்ந்து கொண்டு தனது மனைவியை பார்த்து உன்னால் என் வாழ்க்கையில் நிம்மதி போச்சு என தெரிவித்ததுடன் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார்.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் விலக்கி விட்டு காயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டாஸ்மாக் விற்பனையாளர் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கியது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலியை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    ×