search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "life imprisonment"

    • கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் அனுப்பா்பாளையம் காந்திநகா் ஜீவா காலனியை சோ்ந்தவா் சரவணன் (வயது 35). இவரின் மனைவி லாவண்யா (28). இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு மே 22ந் தேதி ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரமடைந்த சரவணன் போா்வையால் லாவாண்யாவின் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளாா்.இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

    இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி டி.பாலு தீா்ப்பு வழங்கினாா்.இதில் சரவணனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜரானாா்.

    • ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீரென இறந்தார்.
    • கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி யை சேர்ந்தவர் மருதுவீரன் என்ற மதுரை வீரன் (வயது 50). இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மருதுவீரன் அடைக்கப்பட்டி ருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. அவ ருக்கு சிறை மருத்துவ மனையில் உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருது வீரனை சிறைத்துறை போலீ சார் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மருதுவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிறை அதி காரி முனிஸ்திவாகர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.
    • இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    பரமத்திவேலூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்த வர் சிம்பு ஜாபர்(26). இவர் வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.

    கொலை

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் அளித்த

    புகாரின் பேரில், பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கமிஷன் பிரச்சினை

    இதில் கோழிப்பண்ணை களுக்கு கூலி ஆட்களை அனுப்பி வைப்பத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரஜ்மன் (21), சாம்லுராம் (21) ஆகியோருக்கும், சிம்பு ஜாபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்து. மேலும் கமிஷன் பிரச்சினையில் இருவரும் சிம்பு ஜாபரை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அறிவழகன் வாதாடி வந்தார்.

    ஆயுள்தண்டனை

    இந்த நிலையில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் ரஜ்மன், சாம்லுராம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இருவரும் ேநற்று இரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனிடையே வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.

    • டெபோராவை 38 முறை கத்தியால் குத்தினார்
    • துப்பு கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை

    அமெரிக்காவில், கடந்த 2021-ல், 34-வயதான டனேலோ சவுசா கேவல்கான்டே எனும் பிரேசில் நாட்டை சேர்ந்தவர், 33 வயதான டெபோரா பிராண்டாவோ எனும் தனது தோழியை, அவரது 2 குழந்தைகளின் கண் முன்னே 38 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு கடந்த மாதம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    இதனையடுத்து, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், ஃபிலடெல்ஃபியாவிற்கு 50 கிலோமீட்டர் தொலைவில் பொகோப்சான் டவுன்ஷிப் பகுதியில் உள்ள செஸ்டர் கவுன்டி சிறைச்சாலையில் சவுசா கேவல்கான்டே அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 அன்று கேவல்கான்டே சிறையில் இருந்து சவுசா தப்பித்தார். இவரை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினருடன் ஹெலிகாப்டர்களும், டிரோன்கள் மற்றும் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேடுதல் வேட்டை குறித்து இவரது புகைப்படத்தை வெளியிட்டு பொது மக்களை செஸ்டர் கவுன்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் எச்சரித்து இருக்கிறது.

    அதில், "மக்கள் தங்கள் வீடுகளை பூட்டி கொண்டு பத்திரமாக இருக்க வேண்டும். கார்களையும், உடைமைகளையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். மேலும் தங்களை சுற்றி ஏதேனும் வித்தியாசமாக நடைபெறுகிறதா என விழிப்புடன் கவனிக்க வேண்டும்," என்று அந்த அலுவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

    ஆங்காங்கே இவரை கண்டதாக சில தகவல்கள் காவல்துறைக்கு வருகிறது. கேவல்கான்டே தப்பிய விதம் குறித்து சிறைத்துறை வெளியிட்டுள்ள வீடியோவில் வெள்ளை நிற டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்த இவர் இரு சுவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில் கைகளை வைத்து நகர்ந்து மேற்கூரைக்கு சென்று அங்கிருந்து தப்பியோடுவது தெரிகிறது.

    தப்பியவர் மீது மேலும் பல கொடூர குற்றசாட்டுகள் பிரேசில் நாட்டிலும் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வட்டார பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இவரை கண்டுபிடிக்க துப்பு கொடுப்பவர்களுக்கு சுமார் ரூ.8.3 லட்சம் ($10000) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார்.
    • வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது

    திருப்பூர், ஆக.2-

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் இல்லியம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 43). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தேங்காய் கொப்பரை களத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது கணவர் விபத்தில் இறந்தார். அவருடைய மகனும் வேறொரு விபத்தில் இறந்தார். இதனால் தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தானும் விஷம் குடித்து தனது மகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். தீவிர சிகிச்சைக்கு பின் ஆனந்தி உயிர் பிழைத்தார்.

    இது குறித்து காங்கயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆனந்தியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த குற்றத்திற்கு ஆனந்திக்கு ஆயுள் தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

    • அசோக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தகுமாா் , சுரேஷ்குமாா் ஆகியோரைக் குத்தியுள்ளாா்.
    • அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    திருப்பூர்:

    கும்பகோணம் அருகில் உள்ள வன்னிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பி.ஆனந்தகுமாா் (வயது 24). இவரது அண்ணன் சுரேஷ்குமாா் (27). இவா்கள் இருவரும் திருப்பூா் ஸ்ரீ நகரில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளா்களாகப் பணியாற்றி வந்தனா்.

    இந்த நிலையில், அனுப்பா்பாளையம் சந்தைப்பேட்டையில் கைப்பேசி பழுது நீக்கும் கடை வைத்திருந்த ஜாா்ஜ் என்கிற அசோக்குமாா் (32), ரவி என்கிற ஜெயகுமாா் (33) ஆகியோரிடம் இருவரும் பகுதிநேர வேலை செய்து வந்திருந்தனா்.இதையடுத்து, சகோதரா்கள் இருவரும் தனியாக செல்போன் பழுது நீக்கும் கடை வைப்பதற்கு முயற்சி செய்து வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில், ஆனந்தகுமாா், சுரேஷ்குமாா் ஆகியோா் கடந்த 2013 மே 5 ந்தேதி அனுப்பா்பாளையம் சந்தைபேட்டை அருகே வந்தபோது அவா்களைத் தடுத்து நிறுத்தி அசோக்குமாா், ஜெயகுமாா் ஆகியோா் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.

    அப்போது அசோக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தகுமாா் , சுரேஷ்குமாா் ஆகியோரைக் குத்தியுள்ளாா். இதில், காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் கோவையில் உள்ள தனியாா் மருத்துவனையில் சோ்கப்பட்டிருந்த ஆனந்தகுமாா் உயிரிழந்தாா். இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இந்த வழக்கானது திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், அசோக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் எஸ்.கனகசபாபதி ஆஜரானாா்.

    • ஏர்வாடி கருவேப்பிலாங்காடு, கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் திருமலை இவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தை உள்ளது.
    • கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி திருமலையை கைது ெசய்து, ெஜயிலில் அடைத்தனர்.

    சேலம்:

    ஏர்வாடி கருவேப்பிலாங்காடு, கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 41). இவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தை உள்ளது. இவர் சேலம் மாவட்டம் மல்லூர் அருகில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    பாலியல் தொல்லை

    இந்த நிலையில் 14 வயது சிறுமிக்கு இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 2 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த கொடுமை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்து கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்படி போலீசார், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி திருமலையை கைது ெசய்து, ெஜயிலில் அடைத்தனர்.

    ஆயுள் தண்டனை

    இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், திருமலைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    • குடிமங்கலம் காவல் துறையினா் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனா்.
    • சிறுமியை கடந்த 2020 டிசம்பரில் வெளியூருக்குக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம், உடுமலையை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (வயது 20), வெல்டிங் தொழிலாளி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தைகூறி கடந்த 2020 டிசம்பரில் வெளியூருக்குக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் குடிமங்கலம் காவல் துறையினா் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி டி.பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், சந்தோஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

    • மீனவ கிராமத்தினருக்குள் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.
    • கடலூர் நீதிமன்றத்தில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவ கிராமத்தினருக்குள் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் நேற்று கடலூர் நீதிமன்றத்தில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரின் நேற்று முன்தினம் முதல் கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், தாழங்குடா, கடலூர் துறைமுகம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பதட்ட நிலை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மீனவர் கிராம பகுதிகளில் பொதுமக்கள் கும்பலாக கூடுவதற்கு போலீசார் அனுமதி அளிக்காமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆற்று கரையோரம் மற்றும் துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுளுக்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்
    • வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (வயது 60) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களது மகன் விஜயராம் (36).     இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க அவருடைய அப்பா பாலுச்சாமி, அம்மா வெள்ளையம்மாளிடம் வலியுறுத்தினார்.

    இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பாலுசாமி இறந்துவிட்டார். மேலும், இவரது தாயார் வெள்ளையம்மாள் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது  இதில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், தாயாரை தலையில் அடித்து காயம் ஏற்படுத்தியதற்காக 3 ஆண்டு சிறையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜய்ராமனை உளுந்தூர்பேட்டை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
    • ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்தவர் தமிழ் செல்வன். இவருக்கும், ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்த அருண்குமாரின் தாயாருக்கும் தகாத உறவு இருந்தது.

    கடந்த 10.4.2019-ந் தேதி இது குறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் அருண்குமார் கேட்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கினைந்த வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அருண்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.

    • கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை
    • 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

    அரியலூர்,

    ஜெயங்கொண்டம் அடுத்த குருவாலப்பர் கோயில் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி மகன் விஜயகுமார்(வயது33). வாடகைக்கு ரேடியோ செட் கடை வைத்துள்ள இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பேரில், விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், விஜயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.இவ்வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மகளிர் நீதிமன்றம், குற்றவாளி விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜயகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜராகினர்.

    ×