என் மலர்
நீங்கள் தேடியது "life imprisonment"
- விசாரணை நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
- விசாரணை நீதிமன்றம் எவ்வாறு ஒரு முடிவுக்கு வந்ததது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
உடல் ரீதியான தொடுதலால் மட்டுமே அதை பாலியல் உறவு என்று எடுத்துக்கொள்ள முடியாது என போஸ்கொ வழக்கிலிருந்து உயர்நீதிமன்றம் ஒருவரை விடுவித்துள்ளது.
போக்ஸோ வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டநபர் ஒருவர் அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
2017 ஆம் ஆண்டு மார்ச்சில், 14 வயது பெண்ணின் தாயார், தனது மகளை நபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாகக் குற்றம் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவருடன் ஃபரிதாபாத்தில் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.
சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அனால் சிறுமி போலீசிடமும், நீதிமன்றத்திலும் அளித்த வாக்குமூலத்தில், தானாக முன்வந்து குற்றம் சாட்டப்பட்டவருடன் [22 வயது] சென்றதாகவும், அவரை தனது காதலன் என்றும் காவல்துறையிடம் விவரித்தார். மேலும் அவர்கள் ஒரு வாடகை அறையில் ஒன்றாக தங்கியதாகவும் கூறினார்
மேலும் குற்றம் சாட்டப்பட்டவருடன் நான் தங்கியிருந்த போது, அவர் என் மீது எந்தவிதமான உடல் ரீதியான தாக்குதலையும் செய்யவில்லை, என்னுடன் தவறான செயல்களில் ஈடுபடவில்லை என்றும் உடல் ரீதியான தொடுதல்[physical relations] இருந்தது என்று மட்டுமே தெரிவித்தார். ஆனாலும் விசாரணை நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
உடல் ரீதியாக தொகுதல் [physical relations] மற்றும் பாலியல் செயல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகிய மூன்றுக்கும் சாட்சிகள் மூலம் வித்தியாசம் அறிந்து அதன் பின்தான் முடிவுக்கு வர வேண்டும் என்றும், சிறுமியுடன் உடல் ரீதியான தொடுதலே பாலியல் உறவு என விசாரணை நீதிமன்றம் எவ்வாறு ஒரு முடிவுக்கு வந்ததது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதலேயே அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வன்புணர்வு போக்ஸோ வழக்கில் சேரும். ஆனால் உடல் ரீதியான தொடுதலை மட்டுமே பாலியல் வன்புணர்வுக்கான போக்ஸோ வழக்காக கருத முடியாது.
முந்தைய விசாரணையில் சிறுமி, உடல் - ரீதியான தொடுதல் [physical relations] என்று குறிப்பிட்டுருந்தாலும், வன்புணர்வு என்ற அர்த்தத்தில் தான் அவர் குறிப்பிட்டாரா என்று தெளிவுபடுத்தப்படவில்லை எனவே சந்தேகத்தை மனுதாரருக்கு சாதகமாக்கி மனுதாரரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
- மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.
- இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
- 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என பல பெண்களை பலாத்காரம் செய்துள்ளான்.
- பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
தென்னாப்பிரிக்காவில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிக்கு 42 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோசிநதி பகாதி என்ற நபர் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள எகுர்ஹுலேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 2012 முதல் 2021க்கு இடைப்பட்ட 9 ஆண்டுகளில் 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என 90 பாலியல் பலாத்கார சம்பவங்களில் இவன் ஈடுபட்டுள்ளான்.
பகாதியால் (Nkosinathi Phakathi) பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என்று தென்னாப்பிரிக்காவின் தேசிய வழக்கு ஆணையம் (NPA) தெரிவித்துள்ளது.
பெண்கள் வேலைக்கும் போகும் போதும் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சில பெண்களை அவர்களின் சொந்த வீடுகளுக்கே சென்று எலக்ட்ரீஷியன் (Electrician) போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பகாதி தனது காலை இழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரபிரதேச பாஜக முடிவு செய்துள்ளது.
- லவ் ஜிகாத்' குற்றத்திற்கான அபராத தொகை 5 லட்சமாக உயர்த்தப்படும்.
லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு யோகி அரசு சட்டம் இயற்றியது.
இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இந்நிலையில் லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரபிரதேச பாஜக முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசம் மதமாற்றதடைச்சட்டம் 2024 என்று முன்மொழியப்படவுள்ள இந்த சட்ட திருத்தத்தை சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா உத்தரபிரதேச சட்டசபையில் இன்று அறிமுகம் வைத்தார்.
இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அபராத தொகை 50,000 ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.
லவ் ஜிகாத் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் புகார் கொடுத்தால் தான் வழக்குப்பதிவு செய்யப்படும். தற்போது அந்த வரம்பை தளர்த்தி யார் புகார் கொடுத்தாலும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று இந்த சட்ட திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
- உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.அனிதா மீண்டும் கர்ப்பமான நிலையில் தனக்கு ஆண் குழைந்தையை பெற்றுத் தர வேண்டும் என்று பன்னா லால் அனிதாவுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.
ஆண் குழந்தை பிறக்காவிட்டால் அனிதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்து கொள்வேன்தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுடன் இதுதொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் அனிதாவின் வயிற்றை அறுத்து, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதிப்பதாக மிரட்டி, தப்பியோட முயன்ற அனிதாவை பிடித்து அரிவாளால் வயிற்றை வெட்டினார்.
அனிதாவின் வயிற்றில் குடல்கள் வெளியே வரும் அளவுக்கு வெட்டு ஆழமாக இருந்துள்ளது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடையில் வேலை செய்த அவளது சகோதரர் ஓடி வந்து அவளை காப்பாற்றினார். அவரை பார்த்ததும் பன்னா லால் அங்கிருந்து தப்பியோடினார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனிதா உயிர்பிழைத்த நிலையில் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பன்னா லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பன்னா லால், தன் பொய் வழக்குப் பதிவு செய்ய அனிதா தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
- கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
திருப்பூர்:
திருப்பூா் அனுப்பா்பாளையம் காந்திநகா் ஜீவா காலனியை சோ்ந்தவா் சரவணன் (வயது 35). இவரின் மனைவி லாவண்யா (28). இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு மே 22ந் தேதி ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரமடைந்த சரவணன் போா்வையால் லாவாண்யாவின் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளாா்.இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி டி.பாலு தீா்ப்பு வழங்கினாா்.இதில் சரவணனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜரானாா்.
- ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீரென இறந்தார்.
- கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி யை சேர்ந்தவர் மருதுவீரன் என்ற மதுரை வீரன் (வயது 50). இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மருதுவீரன் அடைக்கப்பட்டி ருந்தார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. அவ ருக்கு சிறை மருத்துவ மனையில் உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருது வீரனை சிறைத்துறை போலீ சார் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மருதுவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிறை அதி காரி முனிஸ்திவாகர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.
- இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பரமத்திவேலூர்:
அசாம் மாநிலத்தை சேர்ந்த வர் சிம்பு ஜாபர்(26). இவர் வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.
கொலை
இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் அளித்த
புகாரின் பேரில், பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கமிஷன் பிரச்சினை
இதில் கோழிப்பண்ணை களுக்கு கூலி ஆட்களை அனுப்பி வைப்பத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரஜ்மன் (21), சாம்லுராம் (21) ஆகியோருக்கும், சிம்பு ஜாபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்து. மேலும் கமிஷன் பிரச்சினையில் இருவரும் சிம்பு ஜாபரை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அறிவழகன் வாதாடி வந்தார்.
ஆயுள்தண்டனை
இந்த நிலையில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் ரஜ்மன், சாம்லுராம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இருவரும் ேநற்று இரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.
- டெபோராவை 38 முறை கத்தியால் குத்தினார்
- துப்பு கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை
அமெரிக்காவில், கடந்த 2021-ல், 34-வயதான டனேலோ சவுசா கேவல்கான்டே எனும் பிரேசில் நாட்டை சேர்ந்தவர், 33 வயதான டெபோரா பிராண்டாவோ எனும் தனது தோழியை, அவரது 2 குழந்தைகளின் கண் முன்னே 38 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு கடந்த மாதம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இதனையடுத்து, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், ஃபிலடெல்ஃபியாவிற்கு 50 கிலோமீட்டர் தொலைவில் பொகோப்சான் டவுன்ஷிப் பகுதியில் உள்ள செஸ்டர் கவுன்டி சிறைச்சாலையில் சவுசா கேவல்கான்டே அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 அன்று கேவல்கான்டே சிறையில் இருந்து சவுசா தப்பித்தார். இவரை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினருடன் ஹெலிகாப்டர்களும், டிரோன்கள் மற்றும் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேடுதல் வேட்டை குறித்து இவரது புகைப்படத்தை வெளியிட்டு பொது மக்களை செஸ்டர் கவுன்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் எச்சரித்து இருக்கிறது.
அதில், "மக்கள் தங்கள் வீடுகளை பூட்டி கொண்டு பத்திரமாக இருக்க வேண்டும். கார்களையும், உடைமைகளையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். மேலும் தங்களை சுற்றி ஏதேனும் வித்தியாசமாக நடைபெறுகிறதா என விழிப்புடன் கவனிக்க வேண்டும்," என்று அந்த அலுவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆங்காங்கே இவரை கண்டதாக சில தகவல்கள் காவல்துறைக்கு வருகிறது. கேவல்கான்டே தப்பிய விதம் குறித்து சிறைத்துறை வெளியிட்டுள்ள வீடியோவில் வெள்ளை நிற டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்த இவர் இரு சுவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில் கைகளை வைத்து நகர்ந்து மேற்கூரைக்கு சென்று அங்கிருந்து தப்பியோடுவது தெரிகிறது.
தப்பியவர் மீது மேலும் பல கொடூர குற்றசாட்டுகள் பிரேசில் நாட்டிலும் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வட்டார பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இவரை கண்டுபிடிக்க துப்பு கொடுப்பவர்களுக்கு சுமார் ரூ.8.3 லட்சம் ($10000) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார்.
- வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது
திருப்பூர், ஆக.2-
திருப்பூர் மாவட்டம் காங்கயம் இல்லியம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 43). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தேங்காய் கொப்பரை களத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது கணவர் விபத்தில் இறந்தார். அவருடைய மகனும் வேறொரு விபத்தில் இறந்தார். இதனால் தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தானும் விஷம் குடித்து தனது மகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். தீவிர சிகிச்சைக்கு பின் ஆனந்தி உயிர் பிழைத்தார்.
இது குறித்து காங்கயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆனந்தியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த குற்றத்திற்கு ஆனந்திக்கு ஆயுள் தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
- அசோக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தகுமாா் , சுரேஷ்குமாா் ஆகியோரைக் குத்தியுள்ளாா்.
- அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
திருப்பூர்:
கும்பகோணம் அருகில் உள்ள வன்னிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பி.ஆனந்தகுமாா் (வயது 24). இவரது அண்ணன் சுரேஷ்குமாா் (27). இவா்கள் இருவரும் திருப்பூா் ஸ்ரீ நகரில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளா்களாகப் பணியாற்றி வந்தனா்.
இந்த நிலையில், அனுப்பா்பாளையம் சந்தைப்பேட்டையில் கைப்பேசி பழுது நீக்கும் கடை வைத்திருந்த ஜாா்ஜ் என்கிற அசோக்குமாா் (32), ரவி என்கிற ஜெயகுமாா் (33) ஆகியோரிடம் இருவரும் பகுதிநேர வேலை செய்து வந்திருந்தனா்.இதையடுத்து, சகோதரா்கள் இருவரும் தனியாக செல்போன் பழுது நீக்கும் கடை வைப்பதற்கு முயற்சி செய்து வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், ஆனந்தகுமாா், சுரேஷ்குமாா் ஆகியோா் கடந்த 2013 மே 5 ந்தேதி அனுப்பா்பாளையம் சந்தைபேட்டை அருகே வந்தபோது அவா்களைத் தடுத்து நிறுத்தி அசோக்குமாா், ஜெயகுமாா் ஆகியோா் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.
அப்போது அசோக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தகுமாா் , சுரேஷ்குமாா் ஆகியோரைக் குத்தியுள்ளாா். இதில், காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் கோவையில் உள்ள தனியாா் மருத்துவனையில் சோ்கப்பட்டிருந்த ஆனந்தகுமாா் உயிரிழந்தாா். இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், அசோக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் எஸ்.கனகசபாபதி ஆஜரானாா்.
- ஏர்வாடி கருவேப்பிலாங்காடு, கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் திருமலை இவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தை உள்ளது.
- கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி திருமலையை கைது ெசய்து, ெஜயிலில் அடைத்தனர்.
சேலம்:
ஏர்வாடி கருவேப்பிலாங்காடு, கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 41). இவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தை உள்ளது. இவர் சேலம் மாவட்டம் மல்லூர் அருகில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.
பாலியல் தொல்லை
இந்த நிலையில் 14 வயது சிறுமிக்கு இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 2 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த கொடுமை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்து கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி திருமலையை கைது ெசய்து, ெஜயிலில் அடைத்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், திருமலைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.