search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry"

    • சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
    • 5 மாத கைக்குழந்தை கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு பூத்தாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மனைவி மாரியம்மாள் (வயது70). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக பக்கது ஊரில் வசித்து வருகின்றனர். பெரியசாமி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாரியம்மாள் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது வீட்டிற்கு அருகே வடமதுரை கொல்லப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் (30), அவரது மனைவி கவுசல்யா (25) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதிலும், 5 மாதத்திலும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாளின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்தனர். மேலும் கவுசல்யா மாரிம்மாள் வீட்டிலும்வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு மாரியம்மாளுடன் சேர்ந்து கவுசல்யா மற்றும் அவரது கணவர் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் நள்ளிரவில் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை திருடிக் கொண்டு தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.

    அதிகாலையில் மாரியம்மாளின் வீடு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரது மகன் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராஜேந்திரன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாரியம்மாள் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு ஜெகநாதன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரித்ததில் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர்.


    அதன்பின்பு போலீசார் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் தாங்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கவுசல்யாவை போலீசார் அழைத்து சென்றபோது அவரது 5 மாத கைக்குழந்தை கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மாரியம்மாள் தனது வீட்டில் வேலை பார்த்த கவுசல்யாவை சரியாக வேலை பார்க்க வில்லை என சத்தம்போட்டு வந்துள்ளார். இது குறித்து அவர் தனது கணவரிடம் கூறவே அவரும் கோபத்தில் இருந்துள்ளார்.

    நேற்று இரவு ஜெகநாதன் எப்படியும் மாரியம்மாளை கொலை செய்து விட வேண்டும் என முடிவு செய்துள்ளார். வழக்கமாக டி.வி. பார்த்து விட்டு தூங்க சென்ற மாரியம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு வீட்டில் இருந்த ரத்த கறையை துணியால் துடைத்து அதனை வெளியில் வீசி உள்ளார். கொலையை மறைக்க அவர் கீழே தவறி விழுந்து இறந்ததுபோல காட்ட வேண்டும் என முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே இரவு மாரியம்மாளின் மகன் ராஜேந்திரனுக்கு தானே போன் செய்துள்ளார். உங்கள் அம்மாவை 4 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்து விட்டனர். நான் அவர்களை பிடிக்க செல்வதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று கூறி உள்ளார். ஆனால் அவரது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் போலீசார் விசாரித்தபோது மாட்டிக்கொண்டனர் என தெரிவித்தனர்.

    • அதிர்ச்சி அடைந்த இமானுவேல் விஜயன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
    • குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் சங்கரியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் இமானுவேல் விஜயன் (வயது 55). தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

    இவரது மூத்த மகனுக்கு கடந்த அக்டோபர் 20-ந் தேதி கோவையில் வைத்து திருமணம் நடைபெற்றது. வரவேற்பு விழா 22-ந் தேதி ஆறுமுகநேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் என்பவரின் மனைவி சங்கரி(27) என்பவர் மண்டபத்திற்கு வந்திருந்தார்.

    பின்னர் சங்கரி மணமகனின் உறவினர் பெண் ஒருவருக்கு மேக்கப் போடுவதற்காக மற்றொறு அறைக்கு சென்றார். அப்போது அந்த பெண்ணிடம் நகைகளை கழற்றி வைக்குமாறு கூறியுள்ளார். அதனை அந்த பெண்ணும் கழற்றி ஒரு பையில் வைத்துள்ளார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் அந்த அறைக்கு சென்று நகையை பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. அந்த பையில் ரூ.3.17 லட்சம் மதிப்பிலான 61 கிராம் நகைகள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இமானுவேல் விஜயன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் சங்கரியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நகைகளை திருடியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சங்கரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகைகளை மீட்டனர்.

    • கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). விவசாயியான இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.

    இவரது பண்ணையில் 200 ஆடுகள் உள்ளன. வழக்கமாக கணவன் மனைவி இருவரும் காலை சமையல் பணிகளை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வேளாண் தோட்டங்களுக்கு கொண்டு செல்வார்கள்.

    நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வடிவேல் தனது மனைவியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அங்குள்ள வேளாண் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வடிவேல் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளையடிக்கபட்ட நகையின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து உடனடியாக வடிவேல் தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதில் 4 பேரின் ரேகைகள் பதிவாகியுள்ளது. மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65). நேற்று மாலை பரமத்திவேலூர் பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள் என அந்த வாலிபர் மணிமேகலையிடம் கூறியதாக தெரிகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டை சேடர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பழனிசாமி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65). நேற்று மாலை பரமத்திவேலூர் பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவரை பின்தொடர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சுக் கொடுத்து உள்ளார். அப்போது மாலை நேரங்களில் தங்க நகைகளை அணிந்து கொண்டு செல்வது பாதுகாப்பானது அல்ல. இவ்வாறு நகை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள் என அந்த வாலிபர் மணிமேகலையிடம் கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து மணிமேகலை அவர் அணிந்திருந்த 12 பவுன் நகை நகைகளை கழட்டி பையில் வைத்துள்ளார்.

    ஆனால் அந்த வாலிபர் அப்படியே பையில் வைக்க வேண்டாம் எனக் கூறி அவரிடம் இருந்த ஒரு காகித பையை கொடுத்து நகையை வாங்கி கவரில் வைத்துள்ளார். இதைதொடர்ந்து அங்கிருந்து அந்த வாலிபர் மாயமானதாக தெரிகிறது. பையில் வைத்த நகைகளும் மாயமானது.

    இந்த சூழ்நிலையை அறிந்து சுதாரித்துக் கொண்ட மணிமேகலை நகையை திருடி சென்றதாக கூச்சலிட்டு உள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து அந்த வாலிபர் சென்ற திசையில் தேடி பார்த்தனர். ஆனால் வாலிபர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மாலை நேரத்தில் மூதாட்டியிடம் தங்க நகையை நூதன முறையில் கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஊழியரிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.
    • கைவரிசை காட்டிய ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள்,

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 40). இவர் ஆமத்தூரை அடுத்த வடமலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் அவர் தனது வீட் டில் இருந்து இருசக்கர வாக னத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று அதே போல் பள்ளிக்கு சென்ற அவர், மாலையில் பணி முடிந்து வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டி ருந்தார். முன்னதாக விருது நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவும் அவர் முடிவு செய்திருந்தார்.

    இதற்காக அவர் வந்த போது, சிவகாசி சாலையில் குமாரலிங்காபுரம் பகுதியில் அவரை பின்தொடர்ந்து மற்ெறாரு மோட்டார் சைக் கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி கள் 2 பேர் திடீரென்று ராஜலட் சுமி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.

    இருந்தபோதிலும் அவர்க ளிடம் கடுமையாக போரா டியும் பலனின்றி போனது. இதில் 5 பவுன் செயினில் ஒன்றரை பவுன் நகையுடன் அந்த ஆசாமிகள் தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து ராஜலட்சுமி ஆமத் தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடு பட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் . இவரது வீட்டில் கடந்த மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கல்வராயன்மலை கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 20). இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இேதபோல் கருமந்துறை பகுதியை சேர்ந்த சடைச்சி (50) என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கி ருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போனையும் திருடி சென்றனர்.

    இது குறித்து புகாரின் பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து தங்க நகை திருடும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சைபர்கிரைம் ேபாலீசார் உதவி நாடப்பட்டது.

    சடைச்சி என்பவரது வீட்டில் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அந்த செல்போன் கல்வராயன் மலை கிணத்தூர் பகுதியை சேர்ந்த தனபால் (28) மற்றும் அவரது மனைவி சசிகலா(20) ஆகிய இருவரிடமும் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரை யும் பிடித்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது.

    இத்தம்பதி மீது திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீடு புகுந்து நகை திருடிய தம்பதியை அவர்கள் திருடிய செல்போனே காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 வீடுகளில் புகுந்து 19 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டங்குளம் ரோடு விழுப்பனூரில் உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 15½ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய விஜயகுமார் கதவு உடைக்கப்பட்டு நகை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு கொள்ளை

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணா மலையை சேர்ந்தவர் மாரீஸ்வரி(36). சம்பவத் தன்று இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேலி ருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் மகள் பிரியா (வயது 25). இவர் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு கடலூர் பெண்கள் கல்லூரில் படித்தார். பின்னர் வீட்டிலிருந்து முந்திரி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது தந்தை ஞானபிரகாசம் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறி யுள்ளார். இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து நகையுடன் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்
    • இரவில் குடும்பத்தோடு விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலும் வசிப்பது வழக்கம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52 )விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஊருக்குள் ஒரு வீடும், விவசாய நிலத்தில் ஒரு வீடும் உள்ளது.பகலில் ஊருக்குள் இருக்கும் வீட்டிலும், இரவில் குடும்பத்தோடு விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலும் வசிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வழக்கம்போல் தூங்கிவிட்டு காலை மீண்டும் ஊருக்குள் உள்ள வீட்டில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1 லட்சத்து 22 ஆயிரம் பணமும் அைர பவுன் நகையும், வெள்ளி பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகன் வீட்டுக்கு அருகில் உள்ள மேலும் 3 வீடுகளிலும் திருட்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது.

    • மீனா தனது மகனுடன் தாழையூத்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • நகையை பறித்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் சிதம்பரநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மீனா(வயது 55). இவர்களது 25 வயது மகன் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    நகை பறிப்பு

    நேற்று மதியம் மீனா தனது மகனுடன் தாழையூத்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மட்' அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர் சாலையின் இருபுறமும் நோட்டமிட்டுள்ளார்.

    அப்போது மீனாவை தவிர வேறு மக்கள் நடமாட்டம் அந்த சாலையில் இல்லை என்பதை அறிந்த அந்த நபர் மீனாவின் அருகில் சென்றுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடியே, மீனாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகையை மர்ம நபர் பறிக்க முயன்றுள்ளார்.

    சி.சி.டி.வி. ஆய்வு

    ஆனாலும் மீனா செயினை கைப்பற்ற முயற்சி செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அவரது கழுத்தில் கிடந்த செயினை கைப்பற்ற அந்த நபர் மீனாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

    இதுகுறித்து மீனா அளித்த புகாரின்பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை கண்டுபிடி க்க அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார்.
    • விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் போலீசிடம்ன ஒப்படைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 45).

    இவர் தான் அடகு வைத்திருந்த 42 கிராம் (5 பவுன் ) நகைகளை மீட்டு பாக்கெட்டில் வைத்தார்.

    பின்னர் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு பாக்கெட்டை பார்த்தபோது நகைகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார்.

    அப்போது தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த மெக்கானிக் காதர் (45) என்பவர் கீழே கிடந்த நகையை எடுத்தார்.

    இது யாருடைய நகை என விசாரித்தார்.

    அந்த நேரத்தில் அங்கு வந்த பிரபாகர் இது என்னுடைய நகை எனக் கூறினார்.

    இருந்தாலும் நான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடுகிறேன்.

    நீங்கள் உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளைப் பெற்றுச் செல்லுங்கள் என காதர் கூறினார்.

    அதன் பேரில் காதர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார்.

    பிரபாகர் உரிய ஆவணங்களை காண்பித்தார்.

    தொடர்ந்து காதர் முன்னிலையில் பிரபாகரிடம் போலீசார் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்து கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.

    கீழே கிடந்த நகையை பத்திரமாக எடுத்து அதனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மெக்கானிக் காதருக்கு சால்வை அணிவித்து போலீசார் பாராட்டினர்.

    இது குறித்து காதர் கூறும்போது, அடுத்தவர்கள் பொருட்களுக்கு நாம் ஆசைப்படக்கூடாது.

    கீழே நகை, பணம் என எந்த விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    நேர்மையாக இருக்க வேண்டும்.

    அப்படி இருந்தாலே மனதிற்கு மன நிம்மதிதான் என்றார்.

    காத்ரின் இந்த மனித நேயமிக்க செயலை போலீசார் மட்டுமின்றி அனைவரும் மனதார பாராட்டினர்.

    • பெண்ணின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்குகியுள்ளார்.
    • அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஆறுமுக நாடார் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் பேகம். இவருடைய கணவர் ஷாகுல் ஹமீது. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு 3 குழந்தைகள் இவர்கள் மூன்று பேரும் திருவாரூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக சென்று விட்டு யாஸ்மின் பேகம் வீடு திரும்பியுள்ளார்.

    வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்ற போது 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உள்ளே மறைந்து இருந்து ஜாஸ்மின் பேகம் உள்ளே நுழைந்ததும் அவரின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்குகியுள்ளார்.

    இதில் மயக்கம் அடைந்து ஜாஸ்மின் பேகம் சம்பவ இடத்தில் கீழே விழுந்துள்ளார்.

    அப்போது அவர் கழுத்து மற்றும் காலில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

    ஜாஸ்மின் பேகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×