என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry"

    • கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.
    • இனிமா கொடுத்துப் பார்த்தும் நகை வெளியே வரவில்லை

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பத் புலிக்காலோடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடல் நலம் பாதித்த தனது 2 வயது பெண் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க, நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சென்றிருந்தார். அப்போது குழந்தை மருத்துவமனையின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை கிராம் எடையுள்ள தங்க நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், அந்த பகுதியில் தேடிப்பார்த்தார்.

    ஆனால் குழந்தையின் நகை கிடைக்கவில்லை. காணாமல் போன தனது குழந்தையின் நகை குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, இளம்பெண் ஒருவர் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்ததாக கூறினர். இதையடுத்து அந்த பெண்ணிடம் சென்று குழந்தையின் தாய் கேட்டார்.

    ஆனால் அவர் சரியாக பதில் கூறவில்லை. ஆனால் அந்த பெண்தான், குழந்தையின் நகையை திருடியிருக்க வேண்டும் என்று அனைவரும் கருதினர். ஆகவே அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, குழந்தையின் தாய் உள்ளிட்டோரால் குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போதும் அவர் தனக்கு தெரியாது என்றே கூறினார். இருந்தபோதிலும் அவரின் மீதான சந்தேகம், போலீசாருக்கு விலகவில்லை. ஆகவே அவரை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.

    அப்போது காணாமல் போன குழந்தையின் தங்க நகை, இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்தது தெரிந்தது. அந்த பெண் நீலம்பூர் பகுதியை சேர்ந்த சமீனா (வயது35) என்பது கண்டறியப்பட்டது. கிளினிக்கில் குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, குழந்தை கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடியது தெரியவந்தது.

    பின்பு மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, திருடிய நகையை தனது வாய்க்குள் போட்டு விழுங்கியிருக்கிறார். அது அவரது வயிற்றுக்குள் இருந்தது எக்ஸ்ரேயில் தெரிந்துவிட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சமீனா வயிற்றுக்குள் இருக்கும் தங்க நகையை வெளியே எடுப்பதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்து இனிமா கொடுத்தனர். ஆனால் பல முறை முயற்சி செய்தும், இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து தங்க நகை மட்டும் வெளியே வரவில்லை.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். அதுகுறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திவருகின்றனர். இனிமா கொடுத்து எடுப்பது எளிமையான விஷயம் என்பதால், அந்த முறையே தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. 

    • ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார்.
    • அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

    தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், 14 வயது சிறுவன் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி மோமோஸ் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் மோமோஸ் மீது தீரா காதல் கொண்ட சிறுவனிடம் வீட்டில் உள்ள நகைகளை திருடி கொண்டுவந்து கொடுத்தால் மோமோஸ் வாங்கி தருவதாக மோமோஸ் கடைக்காரர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    இதையடுத்து அந்த சிறுவன் மெல்ல மெல்ல தனது வீட்டில் உள்ள நகைகளை திருடி அவர்க்ளிடம் கொடுத்து மோமோஸ் சாப்பிட்டு வந்துள்ளான்.

    ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து சிறுவனின் தந்தை போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.

    • தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
    • சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.

    வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா உலகின் மிகச்சிறந்த ரத்தினக் கற்கள் பதித்த நகைகளை உற்பத்தி செய்கிறது.
    • ரத்தின கல் நகைகள் அப்போதும் பிரபலமாக இருந்தன.

    இந்திய நகை வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் ரத்தினங்கள் பல்வேறு வகைகளில் நகைகளில் பாதிக்கப்பட்டது. இந்த கலையில் சில, 5000 ஆண்டுகள் பழமையானவை;

    1. குந்தன் நகைகள்:

    இந்திய ரத்தின நகைகளில் இந்த குந்தன் நகை வடிவம் முகலாயர்களின் அரச ஆதரவின் கீழ் செழித்து வளர்ந்தது; இன்னமும் இது பாரம்பரிய திருமணங்களில் ஒரு அங்கமாக உள்ளது. இந்த கலை வடிவத்தில், ஒரு ரத்தினத்துக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொடுப்பதற்காகவும், பக்கத்தில் உள்ள ரத்தினங்களிலிருந்து தனிமைப்படுத்துவதற்காகவும் தூய தங்கப் படலத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரம், குந்தன் நகைகளுக்கு மிகவும் பிரபலமானது.

    நவீன தழுவல்: தெளிவான வண்ணங்களைக் கொண்ட கனிம பூச்சுகள் குந்தன் கலையில் பல மாறுபாடுகளைக் கொண்டு வந்துள்ளன. மேலும், வெள்ளியால் செய்யப்பட்ட குந்தன் நகைகள் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்களில் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.

    2. ஜடாவ் நகைகள்:

    ஜடாவ் நகைகள் "பொறிக்கப்பட்ட நகைகள்" என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது திருமணம் அல்லது பண்டிகைகள் போன்ற மங்களகரமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தனித்துவமான கலைப்படைப்பு பல ரத்தினம், மாற்று ரத்தினம், விலையுயர்ந்த கற்கள், படிகங்கள் மற்றும் மணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது, அவை திடமான தங்கத் தகட்டில் பதிக்கப்பட்டுள்ளன. இந்திய கைவினைஞர்களின் உள்நாட்டுத் திறன்கள் மேற்கிலும் இந்த வடிவத்தை மிகவும் பிரபலமாக்கியுள்ளன.

    நவீன தழுவல்: இப்போதெல்லாம், ஜடாவ் கலை முலாம் பூசுவதையும் இணைக்கப்பட்டு ஆபரணத்திற்கு தனித்துவமான வண்ணத்தை வழங்குகிறது. மேலும், அழகியல் மதிப்பை மேலும் கூட்ட பட்டை தீட்டப்படாத வைரம் ஒரு மையக் கல்லாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

    3. லாக் நகைகள்:

    லாக் நகைகளின் (Lacquer) பல்வகை அழகு அதை உலகம் முழுவதும் பிரபலமாக்கியுள்ளது. இந்த கலை முன்பு ராஜஸ்தானி பழங்குடியினருக்கு மட்டுமே இருந்தது, ஆனால் இன்று இதன் சந்தை மிகப்பெரியது. டிமானியன், பாஜுபந்த் மற்றும் வளையல்கள் போன்ற லாக் ஆபரணங்கள் பல வடிவமைப்பாளர்களின் சேகரிப்பில் தவிர்க்க முடியாததாகும்.

    நவீன தழுவல்: பழங்காலத்தில், லாக் ஆபரணங்களை அழகுபடுத்த கண்ணாடிகள் மற்றும் கண்ணாடி மணிகள் பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது ரத்தினங்கள் பதிக்கப்படுகின்றன. மேலும், இந்த வகையான நகைகள் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் இருப்பதால், இது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

    4. நவரத்தின நகைகள்:

    அணிபவரின் நலனை உறுதிப்படுத்த, நவரத்தின நகைகளில், ஒன்பது மங்களகரமான கற்கள் ஒரே ஆபரணத்தில் பதிக்கப் படுகின்றன. இந்த ஒன்பது ரத்தினங்கள் மாணிக்கம், முத்து, வைரம், மரகதம், பவளம், பூனைகண், நீலம் , புஷ்பராகம் மற்றும் கார்னெட் ஆகும்; ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உள்ளது. உதாரணமாக, ரூபி தீய ஆவிகளை விரட்டுவதற்கு இணைக்கப்பட்டது; பவளம் நோய்களைக் குணப்படுத்துவதற்கும், கூர்மையான நினைவாற்றலுக்கும்; முத்து அமைதியைப் பேணுவதற்கும், புஷ்பராகம் அணிபவரின் நீண்ட ஆயுளுக்கும், மரகதம் ஏமாற்றுவதைத் தவிர்ப்பதற்கும் ஆகும்.

    நவீன தழுவல்: பாரம்பரியமாக, நவரத்ன கற்கள் பெரும்பாலும் மோதிரங்கள் மற்றும் பதக்கங்களில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது அவை காதணிகள், வளையல்கள், கவசங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல ஆபரணங்களை அழகுபடுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. இது பல்வேறு வண்ணங்களைக் கொண்டிருப்பதால் பல்வேறு இந்திய உடைகளுக்கு நன்றாக பொருந்தும்.

    5. பச்சிகம் நகைகள்

    இந்த பச்சிகம் நகை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் உருவானது, இன்றும் சமகால பேஷன் நகைகளின் இன்றியமையாத அங்கமாக உள்ளது. இது குந்தன் வேலையுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது, ஆனால் ஒரு தெளிவற்ற மற்றும் உடையக்கூடிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக பட்டை தீட்டப்படாத ரத்தின கற்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள் பயன்படுத்தி பச்சிகம் நகைகள் செய்யப்படுகின்றன. பச்சிகம் நகையின் அழகு மற்றும் அதன் வசீகரம் யாரையும் அதன்பால் விழ வைக்க போதுமானது.

    நவீன தழுவல்: முன்பு தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை பச்சிகம் கலைப்படைப்புக்கு அடித்தளமாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போது வெள்ளி பயன்படுத்துவதால் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்கிறது.

    6. மணிகளால் ஆன நகைகள்

    மணிகளால் ஆன நகைகள், ஒரு காலத்தில் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது உலகின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அறியப்படுகிறது. பழைய நாட்களில், கல் பதித்த மணிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, பெரும்பாலும் தலை அணிகலன்கள், கணுக்கால்கள் மற்றும் கவசங்களாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும், கடினமான கனிம மணிகள் பயன்படுத்தப் பட்டு கழுத்தில் அணியும் நகைகள் மற்றும் பிற ஆபரணங்களை அழகுபடுத்த பயன்படுகிறது.

    நவீன தழுவல்: மணி மற்றும் கல் ஆபரணங்களின் தனித்துவமான நகைகள் இப்போது எளிதாகக் கிடைக்கிறது. இந்த நகைகளில், கற்கள் மையப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஆபரணத்தை அசாதாரணமாக்க மணிகள் சுற்றி அமைக்கப் பட்டுள்ளன.

    7. சமகால கற்கள் பதித்த நகைகள்:

    இந்த வகையான நகைகள் பல வகை கலைகளை கலந்து ஒரு நவநாகரீக ஆபரணத்தை உருவாக்குவதாகும் . பொதுவாக, ரத்தினங்கள் மற்றும் மாற்று ரத்தினங்களை(ராசி கற்கள் அலாதவைகளை) வழக்கத்திற்கு மாறாக கலந்து ஒரு புதுப்பித்த நகையை உருவாதாக்கும். இன்று கற்களை அமைப்பதற்கான தளமாக ஸ்டெர்லிங் வெள்ளி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. விலை குறைவாக கிடைக்கச் செய்ய, அரிதாக, செம்பு மற்றும் பித்தளை கூட ஆபரணங்கள் செய்ய அடித்தள உலோகமாக பயன்படுத்தப்படுகிறது.

    • வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு போனது.
    • முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 49). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் திருட்டு போகியிருந்தது. இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன.
    • தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன.

    பெண்கள் மனதை கவரும் வகையில் புதிய புதிய வடிவமைப்புடன் நகைகள் வெளிவரும் போது தான் அதனை வாங்குதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பார்த்தவுடன் இந்த நகை வடிவமைப்பு எவ்வளவு அழகாக உள்ளது, இதனை எப்படி செய்திருப்பார்கள் என்றவாறு பல கேள்விகளை எழுப்புவதில் தான் அதன் மதிப்பே உள்ளது. அந்த வகையில் பெண்கள் அணிகின்ற நகைகளின் ஓர் வடிவமைப்பு உக்தி (அ) உருவாக்கும் முறை தான் பிலிகிரி வேலைப்பாடு.

    அதி உன்னதமான மேம்பட்ட கைவினை வேலைப்பாடு என்பதில் தனித்து விளங்குவது பிலிகிரி வேலைப்பாடு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இந்த பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன. பிலிகிரி வேலைப்பாடு மூலம் எந்தவிதமான உருவம், வடிவம், வித்தியாசமான வளைவுகள் போன்றவற்றை உருவாக்க முடியும். ஒரே மாதிரியான தங்க நகைகளை வாங்கி அணிபவர்களுக்கு வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட பிலிகிரி நகைகள் ஆர்வத்தை தூண்டுகின்றன.

    பிலிகிரி நகை வடிவமைப்பின் சிறப்பு

    பிலிகிரி நகைகள் என்பது தனிப்பட்ட முறையில் வடிவமைப்பது. விலையுயர்ந்த உலோகத்தை மெல்லிய நூல்களாய் உருவாக்கி அதனை கொண்டு கைநேர்த்தியுடன் வடிவமைப்பதே பிலிகிரி நகைகள். அதாவது மெல்லிய பூக்கள், அழகிய சுழல் வேலைப்பாடு, கண்கவர் சிற்ப வடிவம், டெக்கோ ஸ்டைல் போன்றவாறு அற்புதமான பலவித வடிவமைப்பு உத்திகளுடன் நகை வடிவமைப்பு ஒருங்கிணைந்த பணியாக மேற்கொள்ளப்படுகிறது. எந்த வடிவமைப்பும் பிலிகிரி வேலைப்பாட்டில் செய்ய முடியாது என்று கூறமுடியாது.

    வரலாற்று சிறப்புமிக்க பிலிகிரி நகைகள்

    பிலிகிரி நகைகள் என்பது பழங்கால கலைவடிவம், நகைவடிவமைப்பு உத்தியில் நகைக்கான தனிசிறப்பு, வரலாற்று பின்னணி கொண்டதாகவும் உள்ளது. பிலிகிரி வேலைப்பாடு என்பது விருதுகள், பெரிய சின்னங்கள் மற்றும் ஆடைகளில் பொத்தான்கள் போன்றவாறு அலங்கார அணிவகுப்பிற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தன. பிலிகிரி நகைகள் என்பது 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மெசபடோமியா பகுதிகளிலேயே காணப்பட்டது. அதுமட்டுமின்றி ரோமானிய அரச குடும்பங்களிலும் பிலிகிரி வடிவமைப்பு உத்திகளில் உருவான நகைகள் அதிகளவு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. இதன் பின்னர் வந்த தலைமுறையினர் பழங்கால நகை வடிவமைப்பு ஓவியங்கள் மற்றும் வரையப்பட்ட முறைகளை பயன்படுத்தி புதிய நவீன உத்திகளை பயன்படுத்தி ஏராளமான நகைகளை பிலிகிரி முறையில் உருவாக்கி தந்தனர்.

    பிலிகிரி நகை உருவாக்கம்

    நகையை உருவாக்கும் முன் தங்கம் மற்றும் வெள்ளி என்பது மெல்லிய கம்பிகளாக உருவாக்கப்பட்டு அதன் மூலம் சிறு வடிவங்கள் உருவங்கள் வளைத்தும், பின்னப்பட்டும் உருவாகின்றன. இந்த சிறு சிறு வடிவங்கள் இணைத்து பெரிய நகைகளாக உருவாகின்றன இந்த கம்பிகளுடன் சிறு மணிகள் இணைப்பு இந்த நகை உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு வடிவமைப்பு சிற்பங்கள் மற்றும் ஓவிய அமைப்புகள் பின்னல் போன்று வளைவுகளாய் செதுக்கப்படுகிறது. கைநேர்த்தியுடன் செதுக்கப்படும் இந்த நகைகள் வடிவம் பெறுவது என்பது அற்புதமான கலை பணியாக உள்ளது. எனவே பிலிகிரி நகைகள் என்பது அதற்கென உள்ள பிரத்யேகமான வடிவமைப்பாளர்கள் மூலமே உருவாக்கம் பெறுகின்றன. நவீன வடிவில் பிலிகிரி நகைகள் கூடுதல் பொலிவுடன் வருகின்றன.

    நவீன வடிவமைப்புடன் கூடிய பிலிகிரி நகைகள்

    தற்போது பல நகை விற்பனை கூடங்களிலும் தனிப்பட்ட பிலிகிரி நகை பிரிவுகளையே காணலாம். அதில் அதிகபட்ச கலைநயம் மற்றும் ஜொலிக்கும் அமைப்புகள் கொண்டவாறு நகைகள் உருவாகின்றன. பொதுவாக பளிச்சிடும் மஞ்சள் வண்ண தங்க நகைகள் என்பது பிலிகிரி நகைகளாக வெளிவரும் போது மாறுபட்ட மஞ்சள், செம்மை, வெண்மை சாயலுடன் அதிக பளபளப்பு மற்றும் ஜொலிப்புடன் வருகின்றன. சல்லடை போன்ற அமைப்புடன் பெரிய பாந்தமான நகைகள் முதல் சிறிய அளவிலான நகைகளும் உலா வருகின்றன.

    பூக்கள் என்பது ஒவ்வொரு இதழ்களாக, அடுக்குகளாக விரிந்தவாறு உள்ள அமைப்புடன் நகைகளால் உருவாக்கப்படுகின்றன. பூக்கள் என்பதால் எடை அதிகரிக்காத வண்ணம் மெல்லிய கம்பிகள் கொண்டு இயந்திரம் மற்றும் கைவினை இணைந்தவாறு இதன் உருவாக்கம் உள்ளது.

    வித்தியாசமான கோணம் மற்றும் வளைவுகளுடன் கூடிய பிலிகிரி நெக்லஸ்கள் கழுத்தில் அணியும் போது புதிய ஓவியமாகவும், சிற்பமாகவும் ஜொலிக்கின்றன எனலாம். மற்ற நகைகள் போன்ற அழுத்தமான எம்போஸ் செய்யப்பட்ட வடிவமைப்புகள் காணாது. உயிரோட்டமான வடிவங்கள் கண்ணுக்கு விருந்தாகின்றன. பிலிகிரி நகைகளில் அழகிய பிரேஸ்லெட்கள், காதணிகள், நெக்லஸ்கள், சிறுசிறு மோதிரங்கள் போன்றவை நவீன உத்தியை பயன்படுத்தி மேம்பட்ட அழகுடன் உலா வருகின்றன. பார்த்தவுடன் பரவசமூட்டும் பிலிகிரி நகைகள் அதிக எடையில்லாத மெல்லிய நகைகள் என்பதுடன் பிரமாண்டமான நகை தோற்றத்தை தருவதால் பெண்கள் விரும்ப தொடங்கியுள்ளனர்.

    • காலம் கடந்தும் இதன் கலைநயம் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
    • பார்ப்பதற்கு அழகாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும் குந்தன் காரி.

    கலைநயம் மிக்க நகைகளை அனைவரும் விரும்புவர். பழமையான நகைகளில் அக்காலத்து கலைநயம் மிகுந்து காணப்படும். அவற்றின் நிறங்களும் தனித்துவமான தன்மையும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். பல்வேறு காலகட்டங்களில் பல வகையான கலைநயம் மிக்க நகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில இன்றளவும் மிகவும் பிரபலமாக உள்ளன. அவற்றை காண்போம்.

    தாராகாஷி

    இந்த வகையான கலைநயம் மிகுந்த நகை வகை 1500 களில் ஒரிசாவில் வளர்ச்சி அடைந்தது. இது கிரேக்க பிலிகரி வேலைபாட்டின் மாற்றி அமைக்கப்பட்ட வடிவமாகும். இயற்கையில் உள்ள வடிவங்களை இது பிரதிபலிக்கின்றது. தாராகாஷி நகைகள் தாவர மற்றும் உயிரினங்களின் வடிவங்களை கொண்டு வடிவமைக்கப்படும். மெல்லிய வெள்ளி கம்பிகளால் இந்த நகைகள் செய்யப்படும். பொதுவாக வட்ட வடிவத்தில் மையப்பகுதி இருக்கும். இவை நெக்லஸ், இடுப்பு மற்றும் கைகளில் அணியும் ஆபரணமாக பயன்படுத்தப்பட்டது. தற்போது மோதிரங்கள், காதணிகள், கால்கொலுசு, போன்ற ஆபரணங்கள் பெண்களிடம் மிகப் பிரபலமாக உள்ளது. காலம் கடந்தும் இதன் கலைநயம் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

    தேவா

    தேவா பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கலைநயம் மிக்க நகை ஆகும். இன்றளவும் ராஜஸ்தான் குஜராத் போன்ற இடங்களில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. 23 கேரட் தங்கத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது மிகச் சிறப்பான மணிகளும் பதக்கங்களும் இணைத்து ஆரம் போல் செய்யப்பட்டிருக்கும். இதை உருவாக்கியவர் பிரதாப் காரியா நட்டுலால் சோனியாவால் என்ற பொற்கொல்லர் ஆவார். மகாராஜா சுமன் சிங் இந்த நகையை கவனித்தார். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் காலத்தில் இந்த கலைநயம் மிகவும் வளர்ச்சி அடைந்தது. இந்தப் பதக்கங்களில் உள்ள கலைநயம் மனதைக் கவரும் வகையில் இருக்கின்றது.

    பச்சிகம்

    பச்சிகம் குஜராத் மாநிலத்தில் கட்ச் என்ற ஊரில் உருவானது. குஜராத்தி மொழியில் பச்சிகர் என்றால் பொற்கொல்லர் என்று பெயர். அந்த பெயரில் இருந்து பச்சிகம் என்று பெயர் பெற்றது. இது பிளாட்டினம் மற்றும் வெள்ளி உலோகங்களால் தயாரிக்கப்படுவது. பொதுவாக கண்ணாடி மணிகள் விலை குறைந்த கற்கள் இவற்றைக் கொண்டு கலைநயத்தோடு பச்சிகம் உருவாக்கப்படுகிறது. மோதிரங்கள் வளையல்கள், கொலுசு, காதணிகள், நெத்திச்சுட்டி மற்றும் நெக்லஸ் போன்ற பல வகையான நகைகள் செய்யப்படுகின்றது இவற்றில் பதித்த கண்ணாடி மணிகள் மற்றும் அதன் அமைப்பும் கண்களை பறிக்கும் வண்ணம் சிறப்பாக இருக்கும்.

    மீனாகாரி

    மீனாகாரி ராஜா மான்சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எனாமல் கொண்டு செய்யப்படும் நகையாகும். இதை செய்வது சற்று கடினமானது. இந்த நகையை வடிவமைக்கும் போது அரக்கு குச்சிகளில் வைப்பார்கள். அதன் இடையே உள்ள துவாரங்களில் எனாமல் தூள்களை தூவுவார்கள். பிறகு அதை சூடேற்றுவார்கள். அந்த தூள் உருகி அந்த இடம் முழுதும் நிரப்பும் வரை சூடேற்றுவார்கள். பிறகு வடிவங்களை பொறித்து வெள்ளி அல்லது தங்கத்தால் நகையை செய்து முடிப்பார்கள். மிக அழகாக காட்சி அளிக்கும் இந்த நகையின் கலைநயம் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். பிகானீர்- ராஜஸ்தான், வாரணாசி - உத்திரபிரதேச, ஹைதராபாத் - ஆந்திர பிரதேசம் மற்றும் கொல்கத்தாவில் செய்யப்படும் மீனாகாரி நகை வகைகள் உலகம் முழுதும் பிரபலமானவை. நாத்வராவின் வெள்ளி மீனாகாரி நகைகள் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமானது.

    குந்தன்காரி

    19 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசவைகளில் உருவானது குந்தன் காரி நகைவகையாகும். இது வைரம், வைடூரியம், மாணிக்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்படுவது. பார்ப்பதற்கு அழகாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும் குந்தன் காரி பிரேஸ்லெட், நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் கொலுசுகள் இன்றைய நவீன நாகரிக காலத்திலும் மணப்பெண்களால் விரும்பப்படுவதாகும். விலையுயர்ந்த கற்களின் வேலைப்பாடு மனம் கவரும் வகையிலும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும். கற்களை நெருக்கமாக பொருத்தி சிறப்பாக செய்யப்பட்டிருக்கும்.

    ஜடோ

    இது மீனாக்காரி நகையின் அழகையும் குந்தன் காரின் நகையின் ஆடம்பரத்தையும் சிறப்பாக இணைத்து செய்யப்பட்ட நகையாகும். இது முகலாயர் காலத்தில் நமக்கு அறிமுகமான நகை வகையாகும். இந்த நகையில் அண்கட் வைர பொய்க்கிஸ் மற்றும் மாற்று மதிப்புள்ள கற்கள் இவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். பொதுவாக வைரப் பொய்கிகள் தங்கம் அல்லது வெள்ளி இழைகளால் சுற்றப்பட்டு இருக்கும். இதனால் கற்களின் பளபளப்பு தன்மை அதிகரிக்கும். இந்தப் போல்கிகள் அரக்கால் செய்யப்பட்ட வடிவமைப்புக்குள் அழுத்தி வைக்கப்படும். பிறகு தங்கம் கொண்டு இவற்றை செய்து முடிப்பார்கள். பல வண்ணம் கொண்ட மாற்றுக் கற்கள், விலை உயர்ந்த கற்கள் இவற்றால் ஜடோ நகைகள் செய்யப்படும். மணப்பெண்களை அலங்கரிக்கும் இந்த நகை கண் கவரும் வகையில் இருக்கும். அதன் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்ட கற்கள் மிகவும் அழகாக காட்சி அளிக்கும்.

    விக்டோரியன்

    இவை ஐரோப்பிய நகை வகையை சார்ந்தவை. பிரிட்டிஷ்காரர்களால் கொண்டுவரப்பட்டது. இந்த நகைகள் தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளியால் செய்யப்படுபவை. மேலும் இவை கற்கள் மற்றும் சாதாரணமாக கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படுபவை. இவை ஆங்கிலோ-இந்தியன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றவை. மலிவான விலையில் கிடைப்பதால் இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. பிரேஸ்லெட் மற்றும் தலையில் அணியும் ஆபரணங்கள் இந்திய பெண்களால் இன்றளவும் விரும்பப்படுகிறது. இவை நம் பாரம்பரிய உடைகளான புடவை, சல்வார் கமிஸ், காக்ரா சோலி, தோத்தி குரதாஸ் போன்ற எந்த ஆடைகளுக்கும் பொருந்தி போகக் கூடிய வகையில் உள்ளதால் இந்திய கலாச்சாரத்திற்கு மிகவும் பொருந்துகின்றது. குறைவான விலை மற்றும் கலைநயம் மிகுந்த வடிவமைப்பால் இந்த நகை அனைவராலும் விரும்பப்படுகிறது. நெக்லஸ், வளையல் போன்றவை இன்றளவும் இந்திய பெண்களால் பயன்படுத்தப்படுகின்றது

    • பானுப்பிரியா ஜெயங்கொண்டம் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி செங்குந்தபுரத்திற்கு வந்தார்.
    • பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பானுப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 4பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புது குடி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணி கண்ணன். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 28).

    இவர் நேற்று மதியம் ஜெயங்கொண்டம் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி செங்குந்தபுரத்திற்கு வந்தார். பின்னர் புதுகுடி கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பானுப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 4பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


    • சேலம் மாவட்டம் எடப்பாடி ஆசிரியர் காலனியில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நகையை பறித்து சென்றனர்.
    • 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நாகம்மாள் கழுத்தில் அணிதிருந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியை நாகம்மாள் (வயது 64). நேற்று இவர் தனது மகள் வசந்தம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் தாவாந்தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் படித்து வரும் தனது பேரனுக்கு மதிய உணவு கொடுக்க சென்று கொண்டிருந்தார்.

    நகை பறிப்பு

    அப்போது தாவாந் தெரு காளியம்மன் கோவில் முன்பு உள்ள வேகதடையில் மெதுவாக செல்லும் பொழுது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நாகம்மாள் கழுத்தில் அணிதிருந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.

    இதனால் நாகம்மாளின் மகள் வசந்தம்மாள் கூச்சலிட்டவாறு அந்த வாலிபரை விரட்டிச் சென்றார். ஆனால் எடப்பாடி பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார்.

    சி.சி.டி.வி.யில் பதிவான கொள்ளையன் உருவம்

    இது குறித்து நாகம்மாள் எடப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனியார் மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் நீண்ட நேரமாக காத்திருந்த வாலிபர் ஒருவர் நாகம்மாள் சென்ற ஸ்கூட்டரை பார்த்து பின் தொடர்ந்து சென்று, நகையை பறித்த காட்சி பதிவாகி இருந்தது.

    எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்த சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
    • புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் ராசப்பன் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 47). இவர் நில புரோக்கர்தொழில் மற்றும் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த செல்வம் தான் அணிந்திருந்த செயின்,

    கைச்செயின், 2 மோதி ரங்களை பெஞ்ச் மீது வைத்துவிட்டு அறைக்குள் சென்று தூங்கிக் கொண்டி ருந்தார். நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அந்த பகுதிக்கு காரில் வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்து பெஞ்சின் மீது வைத்திருந்த தங்க கழுத்து செயின், தங்க கைச்செயின் ,தங்க மோதிரம் இரண்டு ஆகிய 15 பவுன் நகையை திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    அசந்து தூங்கிக் கொண்டிருந்த செல்வம் எழுந்து வந்து பெஞ்சில் வைத்திருந்த நகைகளை பார்த்த போது நகைகளை காணவில்லை.இது குறித்து செல்வம் நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் ராசப்பன் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த மாதம் 15-ந் தேதி கண்ணன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். தனது வேலைகளை முடித்துக் கொண்டு மதியம் 2 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
    • உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கக் காசு, மோதிரம் உள்பட 2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் குடித் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). விவசாயி.

    நகை திருட்டு

    கடந்த மாதம் 15-ந் தேதி கண்ணன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். தனது வேலைகளை முடித்துக் கொண்டு மதியம் 2 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கக் காசு, மோதிரம் உள்பட 2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இது பற்றி கண்ணன் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    2 பேர் சிக்கினர்

    இந்நிலையில் நேற்று ராசிபுரம் போலீசார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் தேங்கல்பாளையத்தில் கண்ணன் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மோட்டுபட்டியைச் சேர்ந்த ரமேஷ் (30), தாரமங்கலம் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த சேட்டு என்கிற பெருமாள்(40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    நகை பறிமுதல்

    அவர்களிடம் இருந்து ராசிபுரம் மற்றும் சில இடங்களில் திருடிய 5 1/2 பவுன் நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ரமேஷ் மற்றும் பெருமாள் ஆகியோரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தாரமங்கலம், எடப்பாடி, பனைமரத்துப்பட்டி, கெங்கவல்லி போன்ற போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் பகுதியில் கடந்த 2 -ந்தேதி வியாபாரம் செய்ய கோவை, பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 12 பவுன் எடை கொண்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டு இருந்தது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 37). இவர் சொந்தமாக டெம்போ வைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் விஜயன், தனது அம்மா பானுமதி, தம்பி பிரகாஷ் ஆகியோருடன் கடந்த 2 -ந்தேதி வியாபாரம் செய்ய கோவை, பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். படுக்கை அறையில் உள்ள பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த பானுமதியின் தாலிக்கொடி மற்றும் செயின், பிரகாஷின் செயின் உட்பட சுமார் 12 பவுன் எடை கொண்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து விஜயன் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×