ரூ.2 கோடிக்கு தங்க நகை அணிந்து கலக்கும் 'பீடா' கடைக்காரர்

பிகானர் பகுதியில் சத்தா பஜாரில் ‘பீடா’ கடை நடத்தி வருபவர் பூல்சந்த். கைகளில் ஏராளமான மோதிரங்கள், கழுத்தில் அதிகளவில் தங்க செயின்கள், பிரேஸ்லெட்டுகள் மற்றும் காதணிகள் என உடம்பு முழுவதும் தங்க நகைகளை அணிந்துள்ளார்.
ரூ.2 கோடிக்கு தங்க நகை அணிந்து கலக்கும் 'பீடா' கடைக்காரர்
Published on

தங்க நகைகள் அதிகம் அணிவதை பெண்கள் விரும்புவது சகஜம். ஆண்கள் அதிகளவில் தங்க நகைகள் அணிவதில்லை. அப்படியே அணிந்தாலும் ஒன்றிரண்டு நகை மட்டுமே அணிவார்கள். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 'பீடா' கடைக்காரர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து கலக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள பிகானர் பகுதியில் சத்தா பஜாரில் 'பீடா' கடை நடத்தி வருபவர் பூல்சந்த். இவர் கைகளில் ஏராளமான மோதிரங்கள், கழுத்தில் அதிகளவில் தங்க செயின்கள், பிரேஸ்லெட்டுகள் மற்றும் காதணிகள் என உடம்பு முழுவதும் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் கடையில் 'பீடா' வாங்குவதற்கு வரும் கூட்டத்தை விட இவரை பார்ப்பதற்காகவே கூட்டம் அலைமோதி வருகிறதாம்.

பூல்சந்தின் குடும்பம் பாரம்பரியமாக இந்த கடையை நடத்தி வருகின்றனர். இவரது கடையில் குறைந்த விலையில் 'பீடா' விற்பனை செய்யப்படுவதோடு, இவரை பார்க்கவும் கூட்டம் குவிவதால் வியாபாரம் நன்றாக நடப்பதாக கூறுகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com