search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prajwal Revanna"

    • பெண் மற்றும் அவரது கணவர் மீது தேவராஜ கவுடா பெங்களூரு ஹெப்பல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு ஆஜராகாத பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புளு கார்னர் நோட்டீசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை, முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் என்பவர் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடாவிடம் கொடுத்ததாகவும், அவர் இந்த வீடியோக்களை வெளியிட்டதாகவும் தகவல்கள் பரவியது. இதை தேவரா ஜகவுடா திட்டவட்டமாக நிராகரித்தார். இதையடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் கார் டிரைவர் கார்த்திக், பா.ஜ.க. வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் அவர்கள் 2 பேருக்கும் சம்மன் அனுப்பினர். அதில் 24 மணி நேரத்தில் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று அறிவித்து இருந்தனர். இதற்கிடையே தேவராஜ கவுடா மீது ஒரு பெண் ஹோலேநரசீப் நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் தேவராஜ கவுடா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும், வீடியோ கால் செய்து மனரீதியாக சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஹாசன் இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தேவராஜ கவுடா ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதே போல் தன் மீது புகார் செய்த பெண் மற்றும் அவரது கணவர் மீது தேவராஜ கவுடா பெங்களூரு ஹெப்பல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் பிரஜ்வல்வால் ரேவண்ணா வீடியோ வெளியானது தொடர்பாக தேவராஜ கவுடாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹரியூர் போலீசார் குலிஹால் கேட் என்ற பகுதியில் நேற்றிரவு வேதராஜகவுடாவை கைது செய்தனர். போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட தேவராஜ கவுடா கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஹோலேநரசிபுரா தொகுதியில் ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
    • ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தற்போது ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முடிந்ததும் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகுதான் அவரைப்பற்றிய ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி உள்ளது. அதுபோல் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் வேலை பார்த்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதே போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது. மேலும் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களில் ஒருவர் கடத்தப்பட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    அப்பெண்ணை எச்.டி.ரேவண்ணாவின் ஆட்கள் தான் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரேவண்ணா மீது ஆட்கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    • முன்ஜாமின் மனுவை திரும்ப பெறவும் ரேவண்ணா முடிவு.
    • சட்ட பிரிவுகள் அனைத்தும் ஜாமின் பெறக்கூடிய பிரிவுகள்தான்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின.

    இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து, பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில், ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பியின் தாயாருக்கு விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணாவை தொடர்ந்து தாயார் பவானி விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    முன்ஜாமின் மனுவை திரும்ப பெறவும் ரேவண்ணா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்ட சட்ட பிரிவுகள் அனைத்தும் ஜாமின் பெறக்கூடிய பிரிவுகள்தான் என நீதிமன்றம் கூறிய நிலையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    • 3 ஆயிரம் வீடியோ பதிவுகளில் பிரஜ்வல் ரேவண்ணா இருப்பதாக கூறப்படுகிறது.
    • ஹசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரனும், கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    அவர் 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அதை அவர் வீடியோ படம் எடுத்து பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானது.

    பிரஜ்வல் ரேவண்ணா தனது பண்ணை தோட்டத்தில் பெண்களின் கற்பை சூறையாடி படம் பிடித்ததாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 3 ஆயிரம் வீடியோ பதிவுகளில் பிரஜ்வல் ரேவண்ணா இருப்பதாக கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்யக்கோரி கர்நாடகா மாநில காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது பேச்சின் போது பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பயங்கர குற்றச்சாட்டுகளை கூறினார். ராகுல் பேசுகையில் கூறியதாவது:-

    ஹசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளார். பெண்களின் கற்பை அவர் சூறையாடி படம் பிடித்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.

    400-க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை அவர் சூறையாடி இருக்கிறார். அவரது இந்த காம லீலைகள் பா.ஜ.க. தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். என்றாலும் அவர்கள் பிரஜ்வல் ரேவண்ணாவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள்.

    அவரது கட்சியுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. 400 பெண்களின் கற்பை சூறையாடி வீடியோ எடுத்த பிரஜ்வல் ரேவண்ணா பற்றி இதுவரை பிரதமர் மோடி எதுவும் பேசாமல் இருக்கிறார். அவர் மவுனம் காப்பது ஏன்? என்று தெரியவில்லை.

    இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பக் கூடாது. சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    • பிரஜ்வால் வேரண்ணா இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்டுத்தியது.
    • கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் வேரண்ணா இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்டுத்தியது. தற்போது பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனியில் இருப்பதாக தெரிகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் அரசியல் ரீதியாக எங்களுடைய குடும்பத்தை பலவீனப்படுத்துவதற்காக சதி நடப்பதாக பிரஜ்வால் ரேவண்ணாவின் சகோதரரும், கர்காடகா மாநில மேலவை எம்.எல்.ஏ.-வும் (எம்எல்சி) ஆன சுராஜ் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுராஜ் ரேவண்ணா கூறுகையில் "பிரஜ்வால் ரேவண்ணா (சகோதரர்) ஈடுபட்டதாக கூறப்படும் பாலியல் மோசடி வழக்கு விசாரணைக்காக சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எது நிரூபிக்கப்பட வேண்டுமோ, விசாரணையில் அது நிரூபிக்கப்படும். நான் எப்படி அதற்கு பதில் சொல்ல முடியும்?. பிரஜ்வால் ரேவண்ணா குறித்த தகவல் ஏதும் என்னிடம் இல்லை.

    எனது தந்தை மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயிரம் வழக்குகள் தொடரப்படலாம். என்ன நிரூபிக்கப்பட வேண்டுமோ, அது இறுதியில் நிரூபிக்கப்படும். ரேவண்ணாவை பற்றி எங்களுடைய தாலுகா மற்றும் மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும். நான் ஏதும் கூற விரும்பவில்லை.

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம். ஹசன் அரசியலை நீங்கள் எடுத்துக் கொண்டால், ரேவண்ணாவிற்கு போட்டியாக யாரும் இல்லை. அரசியலில் அவரை போன்று யாரும் இல்லை. அவரை பலவீனப்படுத்த, இந்த சதிகள் அனைத்தும் தீட்டப்படுகின்றன.

    நேற்று கூட தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலையை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரஜ்வால் ரேவண்ணா வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதி. யாரும் யாரையும் குற்றம் சாட்டலாம். சிறப்பு விசாரணைக் குழு முடிவில் என்ன வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.

    இவ்வாறு சுராஜ் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.

    • பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு.
    • வீடியோக்கள் வெளியான நிலையில், ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.

    தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருப்போது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    இது தொடர்பாக பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.

    அவரை விசாரணைக்கு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி ஓட பா.ஜனதா உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விசா கிடைத்தது எப்படி? என கேள்வி எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.

    பிரஜ்வால் ரேவண்ணா விசாரணைக்காக இந்தியா அழைத்து வரப்படுவாரா? அல்லது விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோரை போன்று வெளிநாட்டிலேயே தங்கிவிடுவாரா? என்பது பின்னர்தான் தெரியவரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "ரேவண்ணா பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார். 

    இந்த பாவத்திற்காக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

    மிக மோசமான பாலியல் குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் - இதுதான் மோடியின் உத்தரவாதம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இதனையடுத்து பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    ரேவண்ணா நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எச்சரித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடிக்கு தகவல் தெரிவித்தேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

    வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
    • அதில், ஜெர்மனியில் இருந்து பிரஜ்வலை இந்தியா அழைத்துவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது. மத்திய அரசின் உதவியுடன் பிரஜ்வல் ஜெர்மன் சென்றுள்ளார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், ஹசன் சிட்டிங் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் பற்றி, நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாட்டை உலுக்கிய பயங்கரமான மற்றும் வெட்கக்கேடான வழக்கை பிரஜ்வல் எதிர்கொண்டுள்ளார்.

    இந்த வழக்கை விசாரிக்க சி.ஐ.டி.யின் கீழ் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் பிரஜ்வல் மீது கடந்த 28-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ஜெர்மனியில் இருப்பதால் விசாரணை நிலுவையில் உள்ளது.

    மத்திய வெளியுறவுத்துறை பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதுடன், சர்வதேச போலீஸ் உதவியுடன் ஜெர்மனியில் இருந்து அவரை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் வழங்க சிறப்பு விசாரணை குழு தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    • பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
    • பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கடுத்து ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடிக்கு தகவல் தெரிவித்தேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கடுத்து ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவர் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
    • பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் அவரைப் பாதுகாக்கப் போவதில்லை. கடும் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

    ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது.

    இந்நிலையில், பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி உள்ளது.

    ×