என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prajwal Revanna"

    • அதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் வைத்திருந்தார்.
    • போலீசார் பண்ணை வீட்டை சோதனை செய்து, மாடியில் இருந்து சேலையைக் கைப்பற்றினர்.

    முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எடுத்த 2,900 வீடியோக்கள் கடந்த ஆண்டு கசிந்தன.

    47 வயது பணிப்பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த வாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பண்ணை வீட்டின் மாடியில் இருந்த பழைய சேலை, குற்றத்தை நிரூபிக்க முக்கிய ஆதரமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

    பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, பிரஜ்வல் ரேவண்ணா பாதிக்கப்பட்ட பெண்ணின் சேலையை வலுக்கட்டாயமாக பறித்து வைத்திருக்கிறார். சேலையை அழிப்பதற்கு பதிலாக, அதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் பிரஜ்வல் அதை தனது பண்ணை வீட்டின் மாடியில் அதை மறைத்து வைத்திருந்தார்.

    விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவரிடம் சம்பவத்தன்று என்ன அணிந்திருந்தீர்கள் என்று போலீசார் கேட்டபோது, சேலையை அவர் திருப்பித் தரவில்லை என்றும், அது பண்ணை வீட்டில் இருக்கலாம் என்றும் அப்பெண் கூறினார்.

    இந்தத் தகவலின் பேரில், போலீசார் பண்ணை வீட்டை சோதனை செய்து, மாடியில் இருந்து சேலையைக் கைப்பற்றினர். அது தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

    அதில் விந்துவின் தடயங்கள் இருப்பதை உறுதி செய்தது. டிஎன்ஏ சோதனையில், அது பிரஜ்வாலின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனது.

    இந்தச் சேலையுடன், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலமும் வழக்கின் விசாரணையில் முக்கியமானதாக மாறியது.

    சேலையில் காணப்பட்ட டிஎன்ஏ சான்றுகள் பிரஜ்வாலுக்கு எதிரான அரசுத் தரப்பு வழக்கை வலுப்படுத்தின. இது இறுதியில் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க உதவியது.   

    • முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் வாழ்க்கை பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் முற்றிலும் மாறிவிட்டது.
    • எம்.பி.யாக ரூ. 1.2 லட்சம் சம்பளம் மற்றும் பிற வசதிகளைப் பெற்று வந்தார்.

    பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து சிக்கிய கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் வாழ்க்கை பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் முற்றிலும் மாறிவிட்டது.

    சிறை விதிகளின்படி, அவருக்கு மாதம் ரூ. 540 சம்பளம் பெற அனுமதிக்கப்படுகிறது. அதுவும் சிறை அதிகாரிகள் அவருக்கு ஏதாவது வேலை ஒதுக்கினால் மட்டுமே சாத்தியமாகும்.

    எம்.பி.யாக ரூ. 1.2 லட்சம் சம்பளம் மற்றும் பிற வசதிகளைப் பெற்ற அவர் ஒரு சாதாரண கைதியாக தனது நாட்களை கழிக்கிறார்.

    சிறையில் அவரது அன்றாட வேலைகள் ஒவ்வொரு நாளும் காலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. காலை உணவை முடித்த பிறகு, அவர் அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட வேலைக்குச் செல்ல வேண்டும்.

    சிறை விதிகளின்படி, ஆரம்பத்தில் அவருக்கு பேக்கரி உதவியாளர் அல்லது எளிய தையல் போன்ற வேலை ஒதுக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு வருடம் இந்த வேலைகளைச் செய்த பிறகு, அவரது தகுதிகளைப் பொறுத்து நெசவு அல்லது கொல்லர் போன்ற வேலைகளுக்கு மாற அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை உணவு வெவ்வேறு வகையான டிஃபினுடன் வழங்கப்படுகிறது. காலை 11:30 மணி முதல் மதியம் 12 மணி வரை மதிய உணவு இடைவேளை உள்ளது. மதிய உணவு மற்றும் இரவு உணவில் சப்பாத்தி, ராகி முத்தா, சாம்பார், சாதம் மற்றும் மோர் ஆகியவை அடங்கும்.

    வாரத்தின் செவ்வாய்க்கிழமை முட்டை, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் மட்டன், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் கோழிக்கறி வழங்கப்படும்.

    அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாரத்திற்கு இரண்டு முறை 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகிறார். மேலும், வாரத்திற்கு ஒரு முறை குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களைச் சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.   

    • வீடியோவிலும் பிரஜ்வலின் முகம் தெரியவில்லை
    • வீடியோ காட்சிகள் உட்பட 26 ஆதாரங்களை நீதிமன்றம் ஆய்வு செய்தது.

    கர்நாடகாவில் பாலியல்  வன்கொடுமை வழக்கில் முன்னாள்  பிரதமர் தேவகௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

    கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பிரஜ்வல் போட்டியிட இருந்த நிலையில் அவர் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியாகின.

    இதை தொடர்ந்து 47 வயதான வீட்டு பணிப்பெண் முன்வந்து புகார் அளித்தார்.  2021 ஆம் ஆண்டு ஹாசனில் உள்ள கனிகடாவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இரண்டு முறையும், பெங்களூருவில் உள்ள ரேவண்ணாவின் குடும்ப இல்லத்தில் ஒரு முறையும் பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.

    மேலும் 4 பெண்கள் முன்வந்து பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி பி.கே. சிங் தலைமையிலான விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் போலீஸ் எதிர்கொண்ட முக்கிய சவால், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான காட்சிகளை பிரஜ்வல் ரேவண்ணா படமாக்கினார் என்பதை நிரூபிப்பதாகும்.

    ஏனெனில் எந்த வீடியோவிலும் பிரஜ்வலின் முகம் தெரியவில்லை. வீடியோவை படம்பிடித்த நபரின் கைகள் மற்றும் அந்தரங்க பாகங்கள் மட்டுமே தெரியும். மேலும் பாதிக்கப்பட்டவரின் முகம் தெரியும்.

    வழக்கை நிரூபிக்க காவல்துறை முக்கியமாக  பாரன்சிக் உயர் தொழில்நுட்பத்தை நம்பியிருந்தது. இந்த ஆய்வானது, வீடியோ எடுக்கும் நபரின் அந்தரங்க உறுப்புகளை அவரது உடலின் மற்ற பாகங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காண்பதாகும்.

    கைகள் மற்றும் பிறப்புறுப்புகளின் உடல் அம்சங்களைக் கண்டறிந்து ஒப்பிடுவது பல நாடுகளில், குறிப்பாக குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில் பொதுவாக பயன்படுத்தும்  நடைமுறையாகும்.

    நீதிமன்ற அனுமதி பெற்று, பிரஜ்வலின் உடல் பாகங்களை புகைப்படம் எடுத்து வீடியோவில் காணப்படும் கைகள் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு இடையே 10 ஒற்றுமைகள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

    மேலும், வீடியோவில் உள்ள குரல் மாதிரியில் பிரஜ்வாலின் குரலுடன் ஒற்றுமையும் காணப்பட்டது. பின்னர் விசாரணை அதிகாரிகள் பிரஜ்வலின் பண்ணை வீடு மற்றும் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர்.

    வீடியோவில் காணப்படும் காட்சிகள் இந்த இரண்டு இடங்களிலும் படமாக்கப்பட்டதையும் விசாரணைக் குழு கண்டறிந்தது.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகளில் காணப்பட்ட DNA மாதிரி பிரஜ்வலின் DNA மாதிரியை ஒத்திருந்தது.

    வீடியோ பதிவு செய்யப்பட்ட தொலைபேசியை பிரஜ்வல் தனது ஓட்டுநரிடம் ஒப்படைத்திருந்தார். போலீசார் அதை மீட்டபோது, பிரஜ்வால் தானே வீடியோவை படமாக்கியிருப்பது தெரியவந்தது.

    மேலும் வழக்கில் தடயவியல் சான்றுகள் வலுவாக இருந்தன. போலீஸ் சmarpithaவீடியோ காட்சிகள் உட்பட 26 ஆதாரங்களை நீதிமன்றம் ஆய்வு செய்து இறுதியில் அவர் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது.

    இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பிரஜ்வலுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.11 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சத்தை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • தாத்தா தேவகௌடா அறிவுரையை ஏற்று நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.

    இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    ஆனால் கடந்த வருடம் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற அவர், தாத்தா தேவகௌடா அறிவுரையை ஏற்று மே 31 தேதி நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

    வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது.

    அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

    இந்நிலையில் இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(n)-ன் கீழ் (பாலியல் வன்கொடுமை) குற்றத்திற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  

    மேலும் ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. மொத்த அபராதத் தொகையான ரூ.10 லட்சத்தில், ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

    • பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.

    இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    ஆனால் கடந்த வருடம் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற அவர், தாத்தா தேவகௌடா அறிவுரையை ஏற்று மே 31 தேதி நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

    வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது.

    அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது பிரஜ்வால் கண்ணீர் விட்டார். அவர் அழுது கொண்டே நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததாகத் தெரிகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரஜ்வாலுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும். 

    • பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றதை ரத்து செய்யக்கோரி மஞ்சு எம்.எல்.ஏ., மற்றும் தேவராஜ்கவுடா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
    • தேவகவுடாவின் பேரன் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தேவகவுடா போட்டியிடவில்லை. இதையடுத்து அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றதை ரத்து செய்யக்கோரி மஞ்சு எம்.எல்.ஏ., மற்றும் தேவராஜ்கவுடா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் அதில் தேர்தலின்போது பிரமாண பத்திரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ரூ. 23 கோடிக்கும் அதிகமான சொத்து விவரங்களை மறைத்ததாக கூறியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான புகார் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்றும், எனவே அவரது எம்.பி. பதவி ரத்து செய்யப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

    இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா நிருபர்களிடம் கூறும்போது, கோர்ட்டு உத்தரவை மதிக்கிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன் என்றார். தேவகவுடாவின் பேரன் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.
    • பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோரும் உள்ளனர்.

    கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஹாசனில் தொகுதியில் ஏற்கனவே

    எம்.பி.யாக உள்ள பிரஜ்வால் ரேவண்ணா போட்டியிட்டார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தது மதச்சார்பற்ற ஜனதா தளம் இந்த முறை பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அதில், நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். இந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை- மார்பிங் செய்யப்பட்டவை. பிரஜ்வால் ரேவண்ணாவின் பெயரைக்கெடுக்கவே இத்தகைய போலி ஆபாச வீடியோக்களை பரப்பிவிட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வரும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணைய தலைவர் கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தேவகவுடா குடும்பம் இன்று நிருபர்களை சந்தித்து விளக்கம் தருவதாகவும் கூறியுள்ளது.

    இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளில் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரச்சார கூட்டத்தில் புகழ்ந்துபேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களை கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?" என்று பதிவிட்டுள்ளார்.

    கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளில் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து பிரபல நடிகையும், பெண்கள் உரிமை ஆர்வலருமான பூனம் கவுர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "ரேவண்ணா 2800 க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்துள்ளார். இப்போது அவர் ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ளார். இதையே இந்த அரசு தட்டி கேட்கவில்லை. நம்மை எப்படி இந்த அரசு பாதுகாக்கும். ஆதலால் இந்த தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஒருமுறை யோசித்து வாக்களியுங்கள். பெண்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்களா அவர்களுக்கு வாக்களியுங்கள். இது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை. இப்படி அநியாயம் செய்பவர்களிடம் அதிகாரத்தை கொடுத்துவிட்டு பின்பு புலம்பாதீர்கள் என்று பேசியுள்ளார்.

    நடிகை பூனம் கவுர் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், "பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி 3000+ வீடியோக்கள் எடுத்த கர்நாடகாவின் ஹாசன் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ரேவண்ணாவும் மோடியின் குடும்பம் தான். பாஜகவிடம் இருந்து பெண்களை காப்பாற்றுங்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய தலைவர் டி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பிரதமருக்கு நெருக்கமான ஒருவர் சம்பந்தப்பட்ட கொடூரமான வீடியோக்கள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வெளியாகியுள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கு மோடியின் உத்தரவாதத்திற்கு இந்த வீடியோக்களே சாட்சி. இதுதான் மோடியின் 'நாரி சக்தி'யின் (பெண்கள் சக்தி) உண்மையான நிலை.

    பெண்களுக்கு எதிரான பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றங்கள் பற்றி மோடி-ஷா வாய் மூடியுள்ளார்கள்.

    வீடியோக்கள் வெளியானதையடுத்து ரேவண்ணா நாட்டை விட்டு ஓடிவிட்டார், தப்பிக்க அவருக்கு உதவியவர் யார்? இந்த விடை நம் அனைவருக்குமே தெரியும்.

    பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தலின் போதும், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட போதும் மோடி மவுனம் காத்தார். ஆயிரக்கணக்கான பெண்களை சீரழிவுக்கு ஆளாக்கிய இந்த கூட்டாளி குறித்தும் மோடி மௌனம் காப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
    • இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டின் மாத்ரு சக்தியுடன் நாங்கள் நிற்கிறோம் என்பதில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

    காங்கிரசிடம் நான் கேட்க விரும்புவது அங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகிறது? காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

    இது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விசாரணைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என எங்கள் கூட்டாளியான மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது. இன்று அவர்களது குழு கூட்டம் கூடி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×