என் மலர்
கர்நாடகா
- கோகிலு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிசம்பர் 20-ம் தேதி அகற்றப்பட்டன.
- மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் யலஹங்கா கோகிலு பகுதியில் பக்கீர் காலனி, வசீம் லே அவுட் ஆகிய இடங்களில் பொது இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிசம்பர் 20-ம் தேதி அகற்றப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், கோகிலுவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு நடவடிக்கையின்போது இடிக்கப்பட்ட உண்மையான நபர்களுக்கு மாற்று வீடுகளை வழங்குவதற்கான மாநில அரசின் முடிவை கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே. சிவகுமார் இன்று ஆதரித்தார். அதே நேரத்தில் திருப்திப்படுத்தும் அரசியல் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.
அந்த வீடுகளில் வசித்தோருக்கு மனிதாபிமான அடிப்படையில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. தகுதியானவர்களுக்கு நிச்சயம் வீடு கிடைக்கும். அதுவரை அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். ஆக்கிரமிப்புகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இல்லை.
ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பிறகு தகுதியுள்ள உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே நிவாரணம் என்பது மனிதாபிமான நடவடிக்கை என வலியுறுத்திய அவர், சட்டவிரோத ஆக்கிரமிப்பு இடங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு விரைந்து நிவாரணம் வழங்கவேண்டும் என சில பா.ஜ.க. தலைவர்களும் சில பிரிவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
- 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
- பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.
பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எலஹங்கா பகுதியில் உள்ள கோகிலு லேஅவுட், பக்கீர் காலனி மற்றும் வசீம் லேஅவுட் ஆகிய பகுதிகளில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், "வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் புல்டோசர் கலாச்சாரம் இப்போது தென்னிந்தியாவிலும், அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல்" என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பினராயி விஜயன் போன்ற மூத்த தலைவர்கள் கள நிலவரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.
இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் குப்பை கிடங்கு மற்றும் கல் குவாரி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டவை. அந்த இடம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றது மற்றும் சுகாதார சீர்கேடு நிறைந்தது.
நில மாஃபியாக்கள் இது போன்ற குடிசைப்பகுதிகளை உருவாக்கி அரசு நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள். பெங்களூருவை மும்பை போல குடிசை நகரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கேரளாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற பினராயி விஜயன் அரசியல் நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த நடவடிக்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் தகுதியுள்ளவர்களுக்கு ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.
- நாம் காங்கிரஸ்காரர்கள் என்று அழைக்கப்படுகிறோம்.
- இந்த வரலாறு மற்றவர்களுக்கு இல்லை. பாஜக-விடம் என்ன வரலாறு இருக்கிறது?
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக VB-G RAM G என்ற சட்ட மசோதாவை பாஜக அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி அடுத்த மாதம் 5-ந்தேதி நாடு தழுவிய மக்கள் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகிறது. இதை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டரக்ள் கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் 140-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியில் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் தலைவர்கள் அல்ல, வாக்குச்சாவடி மட்டத்தில் பணியாற்றும் தொண்டர்கள்தான் உண்மையான தலைவர்கள். நமது காங்கிரஸ் கட்சி 140 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.
நாம் காங்கிரஸ்காரர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இந்த வரலாறு மற்றவர்களுக்கு இல்லை. பாஜக-விடம் என்ன வரலாறு இருக்கிறது? நாங்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் பிறந்தவர்கள்.
மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா?. நான் காந்தி பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். அதைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களைக் கொண்டு வெளியிடப் போகிறேன். 100 காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளேன். 70 அலுவலகங்கள் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டன. பெங்களூருவில் மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்டிடங்களைக் கட்டப் போகிறோம். இதுகுறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்போம்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
- பெங்களூருவில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்.
- புல்டோசர் ஆக்சன் என பினராயி விஜயன் கண்டனம்.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசைகளை சித்தராமையா அரசு அகற்றியது. இதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புல்டோசன் ஆக்சன் என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், "கர்நாடக மாநில விவகாரத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலையிடுவதை தவிர்கக் வேண்டும்" எனப் பதில் அளித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர்கள், பெங்களுருவை பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். பெங்களுருவில் ஆக்கிரமிப்புக்காரர்கள் குடிசைகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது. பினராயி விஜயன் அவரது மாநிலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
சித்தராமையா, அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பதற்கு எதிராக இந்த நடவடிக்கை தேவையானது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
- முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சு இருப்பதாக தகவல் பரவியது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து முட்டைகளை கொண்டு வந்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம்.
இந்தியாவிலேயே முட்டை, கறிக்கோழி உற்பத்தியில் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் திகழ்கிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக முட்டை விலை அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் ஒரு கோழி முட்டை ரூ.8-க்கு விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் கோழி முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் சிலர் முட்டை சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்.
இதையடுத்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை முட்டைகளை ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்தது. இதையடுத்து பெங்களூரு, மைசூரு, மண்டியா, சிவமொக்கா, பல்லாரி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முட்டைகள் மாதிரி சேகரித்து இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் மக்கள் சற்று ஆதங்கப்பட்டனர். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முட்டைகளை கொண்டு வந்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். அதன் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானது. அதனால் பொதுமக்கள் அச்சமின்றி முட்டையை சாப்பிடலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தகவலை இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் கூறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாக்ஸ்கான் 30 ஆயிரம் பெண்களை பணிக்கு அமர்த்தியதை ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
- மேக் இன் இந்தியா திட்டத்தை பாராட்டியதாக ராகுல் காந்திக்கு அமைச்சர் நன்றி தெரிவித்திருந்தார்.
கர்நாடக மாநிலத்தின் சாதனைகளுக்கு பெருமை தேடிக்கொள்வதன் மூலம் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கர்நாடகத்தின் வெற்றியை திருடுகிறார் என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை அங்கீகரித்தற்காக மக்களவை எதர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா பதில் அளித்துள்ளார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனது புதிய யுனிட்டில் 30,000 ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது. மேலும், இத்தகைய அளவில் மற்றும் வேகத்தில் உற்பத்தி வளரக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியதன் மூலம் முன்மாதிரியாகத் திகழ்ந்த கர்நாடகாவைப் பாராட்டி ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு அஷ்வினி வைஷ்ணவ் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் சித்தராமையா, "மேக் இன் இந்தியா உண்மையாக வெற்றி பெற்றிருந்தால், கர்நாடகா அரசு செய்த சாதனையை, பாஜக ஆளும் இரட்டை என்ஜின் மாநிலங்களால் ஏன் செய்ய முடியவில்லை. எங்களால் சாதனையை காட்ட முடியாதபோது, நீங்கள் மற்றவர்களின் வெற்றியை திருடி, பெருமையை எடுத்துக் கொள்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான பாக்ஸ்கான், சீனாவுக்கு வெளியே பெங்களூரு அருகே தேவனஹல்லியில் மிகப்பெரிய தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஐ-போன் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக பாக்ஸ்கான் திகழ்கிறது.
- லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
- மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து கோகர்ணா நோக்கி தனியார் பேருந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே சென்ற போது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் தனியார் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதில் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- 2028 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது
- இது விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு.
கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் 'கர்நாடக ஒலிம்பிக் - 2025' விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமையா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது பேசிய சித்தராமையா, "காங்கிரஸ் அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வென்றால் 4 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வென்றால் 3 கோடி ரூபாயும் பரிசாக தரப்படும். இது, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. கர்நாடக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வர் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், "அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. காவல்துறையில் 2 சதவீதமும் வனத்துறையில் 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, விளையாட்டு துறையில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
2028 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில் புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
- தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க இது உதவும்.
பெங்களூரு:
அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து நாளை மறுதினம் காலை 8:54 மணிக்கு LVM 3 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, இஸ்ரோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்றைய கிட்டத்தட்ட ஆறு பில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் டவர் பிரச்சினை நீக்குவதற்கும், பில்லியன் கணக்கானவர்களுக்கு பிராட்பேண்டைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
- பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்தார்.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆலமரங்களை நடும் பணியை தேர்வு செய்தார்.
புதுடெல்லி:
"தென்னைய பெத்தா எளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு"
இது 'எங்க ஊரு ராஜா' என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். எவ்வளவு தத்துவமான வரிகள்.
தந்தை பிள்ளையிடம் காட்டிய பாசத்தை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்ற வரிகள்.
அப்படிப்பட்ட பிள்ளைப் பாசத்தை விட தாய்மைப் பேறு எவ்வளவு மகத்தானது.
அந்தத் தாய்மைப் பேறு தனக்கு இல்லை என்றாகிப் போனதும் இந்த பெண்மணி எடுத்த ஒரு முடிவு ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருமணம் முடிந்து பிள்ளைப் பேறுக்காக கோவில் கோவிலாக சென்று அரச மரத்தையும் ஆல மரத்தையும் சுற்றியவர் சற்றே மாறுபட்டு சிந்தித்தார்.
பிள்ளைக்காக மரங்களைச் சுற்றுவதை விட்டு அந்த மரங்களையே தன் பிள்ளைகளாக உருவாக்கினால் என்ன என தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டார்.
பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்த அந்தப் பெண்மணி, மரங்களை நடும் முயற்சியை தொடங்கினார். அதுவும் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆல மரங்களை நடும் பணியைத் தேர்வு செய்தார்.

இப்படிப்பட்ட தைரியமான முடிவெடுத்த அந்தப் பெண்மணி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.
சாலுமரத திம்மக்கா என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது பிறந்த மண் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் கிராமம். 1911-ல் பிறந்த அவர், இளம் வயதிலேயே ஹூலிகல்லு ஊரைச் சேர்ந்த சிக்கையாவை மணமுடித்தார்.
திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை வரம் கிடைக்கவில்லை. கணவரின் ஆதரவு இவரின் பெரும் வரமானது.
இருவரும் ஆலமரக் கன்றுகளை உருவாக்கி சில ஆலமரக் கன்றுகளை நட்டனர். அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு என ஆலமரக்கன்றுகள் பெருகின.
மரங்களை நடுவதுடன், அவைகளைத் தொடர்ந்து பராமரித்து வந்தனர். கோடைகாலத் தேவைக்காக மழைக்கால நீர் சேமிப்பாக சிறு சிறு குளங்களை வெட்டினர். தீராத தண்ணீர் பஞ்சத்தின் போதும் தளராமல் தொலை தூரம் சென்று குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஆலமரங்களுக்கு உயிர் தந்தனர் இந்த தம்பதியினர்.
கணவர் மறைந்த பிறகும் தன் முயற்சியிலிருந்து பின்வாங்காமல் தனது வாழ்நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்தார்.
தேசிய குடிமகன் விருது (1995), இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருது (1997), ஹம்பி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட நாடோஜா விருது (2010), இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (2019) உள்பட பல சிறப்புமிக்க விருதுகள் மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவை இவரை பெருமைப்படுத்தின.
கடந்த 2016-ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசியின் அங்கீகாரத்தையும் பெற்றார்.
இப்படி பல்வேறு புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி அன்று 114-வது வயதில் காலமானார்.

கன்னடத்தில் 'மரங்களின் வரிசை' என பொருள்படும் சாலுமரதா என அன்புடன் அழைக்கப்படும் திம்மக்காவின் வாழ்க்கைப் பணி பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.
சாலுமரதா திம்மக்காவின் மரணத்துக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
"மரம் மனிதனைவிட உயர்ந்தது. அதற்கு தெரிந்தது எல்லாம் பிறருக்கு நன்மை செய்வதே" என அடிக்கடி கூறுவது திம்மக்காவின் வழக்கம். இன்று அவர் இந்த உலகில் இல்லை. ஆனால் அவர் நட்ட ஆயிரக்கணக்கான மரங்களின் உருவிலும், அவை விடும் மூச்சுக் காற்றிலும் திம்மக்கா நம்முடன் என்றென்றும் நிலைத்திருப்பார்.
- கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு சைரன் அமைத்தனர்.
- பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சுவர்ண விதான சவுதா அருகில் உள்ளது ஹலகா கிராமம். இங்கு 1452 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் செல்போன்களில் மூழ்கினர். மேலும் பொதுமக்கள் டி.வி. பார்ப்பதிலும் கவனம் செலுத்தினர்.
இதை கவனித்த கிராம பஞ்சாயத்து தலைவர் லட்சுமி ஜெகபதி மாணவர்களிடம் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கிராம மக்கள் தினமும் 2 மணி நேரம் செல்போன் மற்றும் டி.வி. பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடிவு செய்து இருப்பது தெரியவந்தது. எனவே அதே போன்று இங்கும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதன்படி கிராம மக்களை அழைத்து இது குறித்து தெரிவித்தார். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதன்படி கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு சைரன் அமைத்தனர். அந்த சைரன் தினமும் இரவு 7 மணிக்கு ஒலிக்க தொடங்கியதும் கிராமத்தில் உள்ள அனைவரும் இரவு 9 மணிவரை 2 மணி நேரம் செல்போன், டி.வியை அணைத்து விடுகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
- தனது 10 வயது மகனுடன் வசித்து வந்த மென்பொருள் நிறுவன ஊழியரான பபிதா தாஸுக்கு கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது.
- விக்ஞான் நகரில் இருந்த தனது ஒரு பிளாட், மாலூரில் இருந்த 2 நிலங்கள் ஆகியவற்றை அவசர அவசரமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் ஒருவர் சைபர் மோசடியில் ரூ.2 கோடியை இழந்துள்ளார்.
டிஜிட்டல் கைது மோசடி கும்பலின் வலையில் சிக்கிய அவர், பெங்களூருவில் உள்ள தனது வீடு மற்றும் நிலத்தை விற்று பணத்தை செலுத்தியுள்ளார்.
பெங்களூருவின் விக்னம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது 10 வயது மகனுடன் வசித்து வந்த மென்பொருள் நிறுவன ஊழியரான பபிதா தாஸுக்கு, கடந்த ஜூன் மாதம் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, அவரது ஆதார் எண் பெயரில் போதைப்பொருள் கடத்தப்பட்டிருப்பதாக மிரட்டியுள்ளனர்.
மும்பை காவல்துறை அதிகாரிகள் போல நடித்த கும்பல், அந்தப் பெண்ணை வீடியோ காலில் வரவழைத்து 'டிஜிட்டல் கைது' செய்துள்ளதாக வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்து மிரட்டியுள்ளனர். அவரது 10 வயது மகனை குறிப்பிட்டும் மிரட்டி பயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த மிரட்டலுக்கு பயந்து, ஜூன் முதல் நவம்பர் வரை சுமார் சிறிது சிறிதாக மொத்தம் 2.05 கோடி ரூபாய் பணத்தை அந்தப் பெண் அனுப்பியுள்ளார்.
இந்தப் பணத்தைத் திரட்டுவதற்காக விக்ஞான் நகரில் இருந்த தனது ஒரு பிளாட், மாலூரில் இருந்த 2 நிலங்கள் ஆகியவற்றை அவசர அவசரமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார். இது தவிர வங்கிக் கடனும் வாங்கியுள்ளார்.
இறுதியாக தடையின்மை சான்றிதழ் (NOC) வாங்க காவல் நிலையம் வைட்ஃபீல்ட் காவல் நிலையம் சென்றபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சைபர் குற்றங்களால் சுமார் 5,474 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.






