என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் 2026"
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் பலியாகினர்.
- இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற தடை விதிக்கப்பட்டது.
பெங்களூர்:
நடப்பு ஐபிஎல் சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மறுநாள் பெங்களூரில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். இதையடுத்து பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை.
ஓய்வு பெற்ற கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அரசுக்கு அளித்த அறிக்கையில் பெங்களூர் மைதானத்தில் ஏற்பட்ட இடநெருக்கடி தான் 11 பேர் பலியாக முக்கிய காரணம் என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற தடை விதிக்கப்பட்டது.
இதனால் வரும் ஐபிஎல் போட்டியில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி இந்த முறை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு பதில் ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட்டாக நவி மும்பை அல்லது ராய்ப்பூர் மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டி நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் போட்டிகளை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
- ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது.
- அடுத்த ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 18 சீசன்களை வெற்றிகரமாக கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் டி20 கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் கடந்த 2008-ம் ஆண்டு இந்த தொடங்கப்பட்ட இந்த தொடர் உலகளாவிய லீக் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதன் 18-வது சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதனையடுத்து இந்த தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதன்படி, அடுத்த ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் பிளேஆப் சுற்றுகள் பஞ்சாப் நகரில் முல்லான்பூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2025-ல் குவாலிஃபையர் 1 & எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் முல்லன்பூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.
- மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த மினி ஏலத்தில் 10 அணிகள் சேர்ந்து 77 பேரை ஏலத்தில் எடுக்கலாம். அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், சென்னை அணியிடம் ரூ.43.40 கோடி பணமும் உள்ளது.
இந்த நிலையில், ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஆண்ட்ரே ரசல், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லாததால் மேகரூன் கிரீனுக்கு பல அணிகள் போட்டி போட வாய்ப்பு உள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மினி ஏலத்தில் பங்குபெற போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
- கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஃபாப் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கு பதிலாக பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் வருவிருக்கும் மினி ஏலத்தில் பங்குபெற போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டனும், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவருமான ஃபாப் டு பிளெசிஸுக்கு இப்போது வயது 41.
கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் தொடரில் 2024-ம் ஆண்டு கொல்கத்தா பயிற்சியாளர் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்.
- ஐபிஎல் 2026-க்கான சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக கார்ல் குரோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நியமித்துள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி வர்த்தக பரிமாற்றம், தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் சமர்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்களை கொண்டு வருகின்றனர். அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளரை நியமித்துள்ளது. அதன்படி ஐபிஎல் 2026-க்கான சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக கார்ல் குரோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நியமித்துள்ளது.
இவர் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆவார். மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா பயிற்சியாளர் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது.
- சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக நடந்த டிரேட் முறையில் பல அணிகளில் நிறைய வீரர்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இதில் முக்கிய மாற்றமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கும் ராஜஸ்தான் அணியில் இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கும் மாற்றப்பட்டது ஆகும். மேலும் பல அணிகள் சில வீரர்களை கழற்றி விட்டும் தக்கவைத்தும் உள்ளது.
மேலும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான 10 அணிகளின் தலைமை பயிற்சியாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக உள்ளார். மும்பை அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே பயிற்சியாளராக உள்ளார். பஞ்சாப் அணிக்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ளார்.
மற்ற அணிகள் பொறுத்தவரையில் ஆர்சிபி அணிக்கு ஆண்டி பிளெவர், குஜராத் அணிக்கு ரெஹ்ரா, கொல்கத்தா அணிக்கு அபிஷேக் நாயர், டெல்லி அணிக்கு பதானி, லக்னோ அணிக்கு ஜஸ்டின் லாங்கர், ஐதராபாத் அணிக்கு டேனியல் விக்டோரி, ராஜ்ஸ்தான் அணிக்கு குமார் சங்ககாரா பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
- தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது.
- சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது.
சென்னை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.
முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது. இந்த நிலையில் ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது. இதனை சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இணைந்ததை அந்த அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது அதன்படி 'பிகில்' படத்தில் விஜய்யின் இன்ட்ரோ ஸ்டைலில் ஜடேஜா அந்த வீடியோவில் வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
- நிதிஷ் ராணா கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்கு விளையாடினார்.
- அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த சீசன் மும்பை அணிக்காக விளையாடினார்.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.
அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி கொல்கத்தா அணியில் இருந்து நிதிஷ் ராணா டெல்லி அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த அர்ஜூன் டெண்டுல்கர் லக்னோ அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நன்றி தெரிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் மயங்க் மார்கண்டே இணைந்துள்ளார்.
- தீபர் சாஹர் மீண்டும் சிஎஸ்கே அணியில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- ஆர்சிபி-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டன் சிஎஸ்கே அணிக்கு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதியில் நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
அந்த வகையில் சில வீரர்களை டிரேட் முறையில் மற்ற அணிக்கு கொடுக்க ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய தீபர் சாஹர் மீண்டும் சிஎஸ்கே அணியில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதேபோல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் சிஎஸ்கே அணிக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும் ஆர்சிபி-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சிஎஸ்கே அணிக்கும் மாற்ற பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணிக்கு மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டன் ஆகிய இரண்டு பேர் சிஎஸ்கே அணிக்கு வருவதை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.






