search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளே ஆப்"

    • நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
    • இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.

    இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்ற பிறகு எம்.எஸ்.டோனி ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை அணி வெளியேறியுள்ளது.

    இந்நிலையில், ருதுராஜ் கெயிக்வாட்டை கேப்டனாக வளர்த்தெடுக்க அடுத்த ஐபிஎல் சீசனிலும் எம்.எஸ்.டோனி விளையாட வேண்டும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
    • கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி. இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    மைதானத்தில் வெற்றிக் களிப்பில் கோலி உள்ளிட்ட ஆர்சிபி அணியனர் கொண்டாடித் தீர்த்தனர். இதனிடையே தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கைகொடுக்கும் வழக்கப்படி டோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்ற நிலையில் ஆர்சிபி அணியினர் தங்களது கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததால் தோனி அவர்களுக்கு கை கொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறி ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு சென்றார்.


     

    இருப்பினும் பிற சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி அணியினருடன் கைகுலுக்கினர். இந்நிலையில் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமலேயே டோனி மைதானத்தை விட்டு வேகமாக வெளியேறிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் தோனியின் செயல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    • என்னை பொறுத்தவரை ஆட்டம் மாறியது டோனி அடித்த 110 மீட்டர் தூர சிக்சரால்தான்.
    • மைதானத்திற்கு வெளியில் பந்து சென்றதால் யாஷ் தயாள் வீசுவதற்கு புதிய பந்து கிடைத்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

    முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், போட்டி முடிந்ததும் வீரர்களின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:

    இந்தப் போட்டியின் சிறப்பான விஷயமே எம்.எஸ்.டோனி அந்த பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தது தான். அதனால்தான் நனைந்து ஊறிய பந்திற்கு பதிலாக புதிய பந்து கிடைத்தது. நன்றாக வீச முடிந்தது.

    பழைய பந்து ஈரமாக இருந்ததால், திட்டமிட்ட பகுதியில் பவுலிங் செய்ய முடியவில்லை. முதல் பந்திற்கு பின் யாஷ் தயாள் அசத்திவிட்டார். அப்படி ஒரு வெற்றியையும், கம்பேக்கையும் ஆர்சிபி அணி செய்துள்ளது.

    அகமதாபாத் மைதானத்தில் ஒரு பணி காத்திருக்கிறது. அதனை வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம் என தெரிவித்தார்.

    • 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.

    இந்நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விஜய் மல்லையா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மல்லையான எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் நான்கு இடங்களுக்குள் தகுதிபெற்று ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்.சி.பி. அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏமாற்றமளிக்கும் தொடக்கத்திற்குப் பிறகு சிறந்த உறுதியும் திறமையும் வெற்றிகரமான வேகத்தை உருவாக்கியுள்ளன. கோப்பையை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்ககளை எடுத்து குஜராத் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.
    • பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெறியேறியது.

    ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    குஜராத் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். தோற்கும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

    இந்த சூழலில் மழையின் காரணமாக பெங்களூரு- குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் தாமதமாக போடப்பட்டது.

    இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில், விராட் கோலி 61 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    தொடர்ந்து, பிளெஸிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், மேக்ஸ்வெல் 11 ரன்களும் லாம்ரார் ஒரு ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அனுஜ் ரவாட் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, யாஷ் தயால், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.

    இதைதொடர்ந்து, குஜராத் அணி 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

    இதில், அதிபட்சமாக 52 பந்துகளில் சுப்மன் கில் சதம் அடித்து 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து, விஜய் சங்கர் அரை சதம் அடித்து 53 ரன்களும், விரிதிமான் சாகா 12 ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்தனர். ராகுல் திவாதியா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்ககளை எடுத்து குஜராத் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    இதனால், பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெறியேறியது. குஜராத் அணியின் வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    ×