என் மலர்
நீங்கள் தேடியது "டிஎன்பிஎல் 2025"
- திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
- இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாக இருக்கிறது.
இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி, திருப்பூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்மூலம், திருப்பூர் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.
இதில், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக, துஷர் ரஹாஜே 77 ரன்களும், அமித் சாத்விக் 65 ரன்களும் எடுத்தனர்.
புவனேஷ்வர் வெங்கடேஷ், வருண் சக்ரவர்த்தி, கணேஷன் பெரியசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், கார்த்திக் சரண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்நிலையில், திருப்பூர் அணி நிர்ணயித்த 221 என்கிற வெற்றி இலக்கை அடைந்து போப்பையை வெல்லும் முனைப்பில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.
- திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
- இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி, திருப்பூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதன்மூலம், திருப்பூர் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.
- இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அடுத்து முதலாவது தகுதி சுற்றில் 79 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
திருப்பூர் அணியில் பேட்டிங்கில் துஷர் ரஹேஜா (411 ரன்), அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால், சசிதேவும், பந்து வீச்சில் இசக்கிமுத்து (12 விக்கெட்), டி.நடராஜன், சிலம்பரசனும் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் சாய் கிஷோர் (128 ரன், 12 விக்கெட்) ஆல்-ரவுண்டராக அசத்துகிறார்.
ஆர்.அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியையும், 2-வது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
திண்டுக்கல் அணியில் பேட்டிங்கில் ஷிவம் சிங் (327 ரன்), விமல் குமார், பாபா இந்திரஜித், ஹன்னி சைனியும், பந்து வீச்சில் ஜி.பெரியசாமி (11 விக்கெட்), வருண் சக்ரவர்த்தி (10 விக்கெட்), சசிதரணும், ஆல்-ரவுண்டராக கேப்டன் அஸ்வினும் (296 ரன், 13 விக்கெட்) வலுசேர்க்கின்றனர்.
லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கலை தோற்கடித்து இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள திண்டுக்கல் அணி தீவிரம் காட்டும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும். இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் திண்டுக்கல்லும், ஒன்றில் (நடப்பு சீசனில்) திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
திருப்பூர்: அமித் சாத்விக், துஷர் ரஹேஜா, சாய் கிஷோர் (கேப்டன்), முகமது அலி, சசிதேவ், பிரதோஷ் ரஞ்சன் பால், மோகன் பிரசாத், சிலம்பரசன், மதிவாணன், டி.நடராஜன், இசக்கிமுத்து, அனோவன்கர்.
திண்டுக்கல்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), ஷிவம் சிங், பாபா இந்திரஜித், மான் பாப்னா, விமல் குமார், ஹன்னி சைனி, தினேஷ், கார்த்திக் சரண், புவனேஷ்வர், வருண் சக்ரவர்த்தி, சசிதரண், ஜி.பெரியசாமி.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய சேப்பாக் அணி 20 ஓவரில் 178 ரன்களை எடுத்தது.
திண்டுக்கல்:
9-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது.
கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன் ஜோடி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர். ஜெகதீசன் 81 ரன்னிலும், பாபா அபராஜித் 67 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சசிதரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. அந்த அணியின் விமல்குமார் அதிரடியாக ஆடினார். சிக்சர்களைப் பறக்கவிட்டார்.
17வது ஓவரில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 34 ரன்களை விளாசினார். விமல்குமார் 30 பந்தில் 65 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். பாபா இந்திரஜித் 41 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
- பாபா அபராஜித் 67 ரன்களிலும் ஜெகதீசன் 81 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
- விஜய் சங்கர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
திண்டுக்கல்:
9-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆஷிக் மற்றும் மொஹித் ஹரிகரன் களமிறங்கினர். இதில் மொஹித் 4 ரன்களிலும், ஆஷிக் 8 ரன்களிலும் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினர். இதனையடுத்து கேப்டன் பாபா அபராஜித் - ஜெகதீசன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பாபா அபராஜித் 67 ரன்களிலும் (44 பந்துகள்), ஜெகதீசன் 81 ரன்களிலும் (41 பந்துகள்) ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் தரப்பில் சசிதரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- திருச்சி தரப்பில் வசிம் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- திண்டுக்கல் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டிஎன்பிஎல் தொடரின் இன்றிரவு எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக வசிம் அகமது மற்றும் ஜெயராமன் சுரேஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பவர்பிளேயில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெயராமன் சுரேஷ் 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த கவுசிக்9, சஞ்சய் யாதவ் 1, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்குமார் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வசிம் 41 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
இதனை அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.
திண்டுக்கல் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் பெரியசாமி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
- இப்போட்டியில் வெல்லும் அணி, 4-ந்தேதி நடக்கும் குவாலிபையர் 2 போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும்.
டிஎன்பிஎல் குவாலிபையர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்சும் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்று திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், இன்றிரவு நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இப்போட்டியில் வெல்லும் அணி, 4-ந்தேதி நடக்கும் குவாலிபையர் 2 போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும். அப்போட்டியில் வெற்றி பெற்று அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சேப்பாக் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
குவாலிபையர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்சும் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்று திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் வெல்லும் அணி, 4-ந்தேதி நடக்கும் குவாலிபையர் 2 போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும். அப்போட்டியில் வெற்றி பெற்று அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 202 ரன்கள் எடுத்துள்ளது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.
திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.
பவர்பிளே முடிவில் திருப்பூர் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. துஷார் ரஹேஜா 28 ரன்னில் ரன் அவுட்டானார். அமித் சாத்விக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாய் கிஷோர் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் சசிதேவ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 26 பந்தில் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.
சேப்பாக் அணி சார்பில் லோகேஷ் ராஜ் 2 விக்கெட்டும், விஜய் சங்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.
- டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன.
- குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் சமீபத்தில் முடிவடைந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
லீக் சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, திருப்பூர் அணி களமிறங்குகிறது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, லீக் சுற்றில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்தது.
- திருப்பூர் அணி அதன் பிறகு கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று எழுச்சி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (14 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (10 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி), திருச்சி கிராண்ட் சோழாஸ் (6 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தன. சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் இன்றிரவு அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்சும் கோதாவில் இறங்குகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு இறுதிசுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
கலக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:
4 முறை சாம்பியனான பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, லீக் சுற்றில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்தது. நெருக்கமாக அமைந்த சில ஆட்டங்களில் கூட கடைசி கட்டத்தில் அட்டகாசமாக பந்து வீசி வெற்றிக்கனியை பறித்தது. பாபா அபராஜித் (3 அரைசதம் உள்பட 315 ரன்), ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (237 ரன் மற்றும் 8 விக்கெட்), ஆஷிக் (186 ரன்) ஆகியோர் பேட்டிங்கிலும், அபிஷேக் தன்வர் (13 விக்கெட்), பிரேம்குமார் (9 விக்கெட்), சிக்கனத்தை காட்டும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் எம்.சிலம்பரசன் (ஓவருக்கு சராசரி 5.62 ரன் வழங்கி 8 விக்கெட் எடுத்துள்ளார்) உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் மிரட்டுகிறார்கள்.
ஏற்கனவே திருப்பூர் தமிழன்சுக்கு எதிரான லீக்கில் 174 ரன் இலக்கை 16 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்திய கில்லீஸ் அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் காணும். வெற்றிப்பயணத்தை நீட்டித்து 6-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டும் ஆர்வத்துடன் தயாராகி வருகிறது.
திருப்பூர் எப்படி?
முதல் 3 ஆட்டங்களில் 2-ல் சறுக்கிய திருப்பூர் அணி அதன் பிறகு கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று எழுச்சி பெற்றதுடன், புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்தது. ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்திருக்கும் தொடக்க ஆட்டக்காரர் துஷர் ரஹேஜா (4 அரைசதம், 25 சிக்சருடன் 383 ரன்), அமித் சாத்விக் (218 ரன்), கேப்டன் சாய் கிஷோர் (95 ரன் மற்றும் 10 விக்கெட்), புதிய நட்சத்திரமாக உருவெடுக்கும் வேகப்பந்து வீச்சாளர் இசக்கி முத்து (9 விக்கெட்), சர்வதேச அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் (9 விக்கெட்), ஆகியோர் தான் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவர்கள் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும் வேட்கையுடன் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி கண்டுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.
இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.
- சேப்பாக், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
லீக் சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
திண்டுக்கல் டிராகன் அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கின்றது.
திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்துள்ள சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதுகின்றன.
நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் 3வது மற்றும் 4வது இடம்பிடித்த திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோத உள்ளன.
குவாலிபையர் 1 சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். இதில் தோல்வி அடைந்த அணி குவாலிபையர் 2 சுற்றில், எலிமினேட்டரில் வென்ற அணியுடன் மோதும்.
குவாலிபையர் 2 சுற்றில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி ஜூன் 6ம்தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.