என் மலர்
நீங்கள் தேடியது "PlayOff"
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக நடந்த லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன.
இந்நிலையில், லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
தமிழ் தலைவாஸ் உள்பட 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.
- சேப்பாக் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
குவாலிபையர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்சும் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்று திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் வெல்லும் அணி, 4-ந்தேதி நடக்கும் குவாலிபையர் 2 போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும். அப்போட்டியில் வெற்றி பெற்று அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 202 ரன்கள் எடுத்துள்ளது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.
திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.
பவர்பிளே முடிவில் திருப்பூர் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. துஷார் ரஹேஜா 28 ரன்னில் ரன் அவுட்டானார். அமித் சாத்விக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாய் கிஷோர் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் சசிதேவ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 26 பந்தில் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.
சேப்பாக் அணி சார்பில் லோகேஷ் ராஜ் 2 விக்கெட்டும், விஜய் சங்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.
- டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன.
- குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் சமீபத்தில் முடிவடைந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
லீக் சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, திருப்பூர் அணி களமிறங்குகிறது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, லீக் சுற்றில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்தது.
- திருப்பூர் அணி அதன் பிறகு கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று எழுச்சி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (14 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (10 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி), திருச்சி கிராண்ட் சோழாஸ் (6 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தன. சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் இன்றிரவு அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்சும் கோதாவில் இறங்குகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு இறுதிசுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
கலக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:
4 முறை சாம்பியனான பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, லீக் சுற்றில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்தது. நெருக்கமாக அமைந்த சில ஆட்டங்களில் கூட கடைசி கட்டத்தில் அட்டகாசமாக பந்து வீசி வெற்றிக்கனியை பறித்தது. பாபா அபராஜித் (3 அரைசதம் உள்பட 315 ரன்), ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (237 ரன் மற்றும் 8 விக்கெட்), ஆஷிக் (186 ரன்) ஆகியோர் பேட்டிங்கிலும், அபிஷேக் தன்வர் (13 விக்கெட்), பிரேம்குமார் (9 விக்கெட்), சிக்கனத்தை காட்டும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் எம்.சிலம்பரசன் (ஓவருக்கு சராசரி 5.62 ரன் வழங்கி 8 விக்கெட் எடுத்துள்ளார்) உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் மிரட்டுகிறார்கள்.
ஏற்கனவே திருப்பூர் தமிழன்சுக்கு எதிரான லீக்கில் 174 ரன் இலக்கை 16 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்திய கில்லீஸ் அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் காணும். வெற்றிப்பயணத்தை நீட்டித்து 6-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டும் ஆர்வத்துடன் தயாராகி வருகிறது.
திருப்பூர் எப்படி?
முதல் 3 ஆட்டங்களில் 2-ல் சறுக்கிய திருப்பூர் அணி அதன் பிறகு கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று எழுச்சி பெற்றதுடன், புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்தது. ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்திருக்கும் தொடக்க ஆட்டக்காரர் துஷர் ரஹேஜா (4 அரைசதம், 25 சிக்சருடன் 383 ரன்), அமித் சாத்விக் (218 ரன்), கேப்டன் சாய் கிஷோர் (95 ரன் மற்றும் 10 விக்கெட்), புதிய நட்சத்திரமாக உருவெடுக்கும் வேகப்பந்து வீச்சாளர் இசக்கி முத்து (9 விக்கெட்), சர்வதேச அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் (9 விக்கெட்), ஆகியோர் தான் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவர்கள் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும் வேட்கையுடன் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி கண்டுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.
இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.
- சேப்பாக், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
லீக் சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
திண்டுக்கல் டிராகன் அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கின்றது.
திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்துள்ள சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதுகின்றன.
நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் 3வது மற்றும் 4வது இடம்பிடித்த திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோத உள்ளன.
குவாலிபையர் 1 சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். இதில் தோல்வி அடைந்த அணி குவாலிபையர் 2 சுற்றில், எலிமினேட்டரில் வென்ற அணியுடன் மோதும்.
குவாலிபையர் 2 சுற்றில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி ஜூன் 6ம்தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
சென்னை:
சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 43வது லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட தொடரை விட்டு வெளியேறிய சூழ்நிலை காணப்பட்டாலும், பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சற்றே இருக்கத்தான் செய்கிறது.
தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் நீடிக்கும் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் அதிக வெற்றிகளை பெறவேண்டும். இதனால் இரு அணிகளும் 20 புள்ளிகளைத் தாண்டினால் கீழ் வரிசையில் இருக்கும் அணிக்கு அது சாதகமாக மாறும்.
புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி அதிக வெற்றியைப் பெறுவதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
பெங்களூரு, மும்பை, பஞ்சாப், லக்னோ அணிகள் வரும் போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவ வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, சிஎஸ்கே அணி எஞ்சியுள்ள 5 போட்டிகளில் அதிக ரன் ரேட்டில் கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
- ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.
இந்நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விஜய் மல்லையா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மல்லையான எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் நான்கு இடங்களுக்குள் தகுதிபெற்று ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்.சி.பி. அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏமாற்றமளிக்கும் தொடக்கத்திற்குப் பிறகு சிறந்த உறுதியும் திறமையும் வெற்றிகரமான வேகத்தை உருவாக்கியுள்ளன. கோப்பையை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.
- என்னை பொறுத்தவரை ஆட்டம் மாறியது டோனி அடித்த 110 மீட்டர் தூர சிக்சரால்தான்.
- மைதானத்திற்கு வெளியில் பந்து சென்றதால் யாஷ் தயாள் வீசுவதற்கு புதிய பந்து கிடைத்தது.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், போட்டி முடிந்ததும் வீரர்களின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:
இந்தப் போட்டியின் சிறப்பான விஷயமே எம்.எஸ்.டோனி அந்த பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தது தான். அதனால்தான் நனைந்து ஊறிய பந்திற்கு பதிலாக புதிய பந்து கிடைத்தது. நன்றாக வீச முடிந்தது.
பழைய பந்து ஈரமாக இருந்ததால், திட்டமிட்ட பகுதியில் பவுலிங் செய்ய முடியவில்லை. முதல் பந்திற்கு பின் யாஷ் தயாள் அசத்திவிட்டார். அப்படி ஒரு வெற்றியையும், கம்பேக்கையும் ஆர்சிபி அணி செய்துள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் ஒரு பணி காத்திருக்கிறது. அதனை வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம் என தெரிவித்தார்.








