என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MI"
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது.
- சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 78 ரன்கள் குவித்தார்.
சண்டிகர்:
ஐ.பி.எல். தொடரின் 33வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 25 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 3 சிக்சர் அடித்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த பொல்லார்ட் சாதனையை முறியடித்துள்ளார்.
ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 224 சிக்சர்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்சிபி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம்.
- பஞ்சாப், மும்பை, டெல்லி அணிகள் தலா இரண்டு வெற்றிகள் மூலம் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணைகளைத் தவிர மற்ற எட்டு அணியிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டன.
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியே வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதுவரை நடந்துள்ள போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்...
ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து போட்டியில் நான்கில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 3-வது இடம் வகிக்கிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் 4-வது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐந்தாவது இடத்தையும், குஜராத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 10 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஒன்பது அல்லது எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன்ரேட், வெற்றித் தோல்வி ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.
தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அந்த அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.
இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் ஏறக்குறைய போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். ஆகவே ஆர்.சி.பி. அணிக்கு இன்றைய போட்டியிலிருந்து அனைத்து போட்டிகளும் சால்வா? சாவா? போட்டிகள் போன்றே கருதப்படும்.
பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.
- சென்னை அணி இந்த தொடரில் வெளியூரில் வெற்றி பெறவில்லை.
- சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.
மும்பை:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 3 ஆட்டத்திலும் சி.எஸ்.கே. (பெங்களூரு 6 விக்கெட் , குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட் ) வெற்றி பெற்றது. வெளியூரில் ஆடிய 2 போட்டியிலும் (டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட்) தோற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது போட்டியில் மும்பை இந்தியன்சை நாளை ( 14-ந் தேதி) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி இந்த தொடரில் வெளியூரில் வெற்றி பெறவில்லை. மேலும் மும்பை இந்தியன்சை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சவாலானது.
சி.எஸ்.கே. அணியின் பேட்டிங்கில் ஷிவம் துபே (176 ரன்), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (155) நல்ல நிலையில் உள்ளனர். ரச்சின் ரவீந்திரா, மிச்சேல், ரகானே, டோனி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். பந்துவீச்சில் முஸ்டா பிசுர் ரகுமான் 9 விக்கெட்டும், துஷார் தேஷ் பாண்டே 5 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளன.
ஆல்ரவுண்டர் பணியில் ஜடேஜா சிறப்பான நிலையில் இருக்கிறார். நாளைய போட்டிக்கான சி.எஸ்.கே. அணியில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது. தீக்ஷனா நீக்கப்பட்டு பதிரனா இடம் பெறலாம்.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதல் 3 ஆட்டத்திலும் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான்) தோற்றது. அதை தொடர்ந்து 2 போட்டியில் (டெல்லி, பெங்களூரு) வெற்றி பெற்றது. 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் அந்த அணி இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. கடந்த 2 ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
மும்பை அணியின் பேட்டிங்கில் இஷான்கிஷன் (161) ரன், ரோகித்சர்மா (156), திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும், பந்து வீச்சில் பும்ரா (10 விக்கெட்), கோயட்சி (8 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
- ஆகாஷ் தீப் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- சூர்யகுமார் யாதவ் 52 ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
197 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களையும், ரோகித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களையும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடினார்.
சூர்யகுமார் யாதவ் 52 ரன்களில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைசாக் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
- பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் பெங்களூரு அணி சரிவில் இருந்து மீண்டது. போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும்.
- இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள்.
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். இவரது படிப்பு முடிந்த உடன் குடும்பத்துடன் கனடாவுக்கு சென்று, அங்கேயே குடியேற விரும்பியதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது தயார் கனடா செல்ல விருமபாததால் இந்தியாவிலேயே தங்கியதாகவும், அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்து இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளராக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.
நீங்கள் கனடா சென்று, அங்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பினீர்களா? என்று அவரது மனைவி சஞ்சனா கேட்டதற்கு பும்ரா அளித்த பதில் வருமாறு:-
ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள். அதனால் நீங்கள் மாற்றுத்திட்டத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். படிப்பை முடித்ததும் கனடாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அங்கே என்னுடைய மாமா இருக்கின்றார்.
அப்போது குடும்பமாக செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால் கனடா போன்ற வேறு கலாச்சாரத்தை கொண்ட நாட்டுக்கு நான் செல்வதை அவர் விரும்பவில்லை என எனது தயார் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக அது எனக்கு வேலை செய்தது. மாறாக கனடா அணிக்காக விளையாட முயற்சி செய்திருப்பேனா? அல்லது ஏதாவது செயதிருப்பேனா? என்பது தெரியவில்லை. இருப்பினும் அது வேலை செய்ததால் தற்போது இந்தியா மற்றும் மும்பை அணிக்காக விளையாடுகிறேன்" என்று கூறினார்.
- மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
- ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
முன்னதாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
இரு அணிகளும் அதிக தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது
- நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது.
இழந்தை இடத்தை மீண்டும் பிடிக்க மும்பை அணிக்கு கட்டாயம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி மீது உள்ள அதிருப்தி காரணமாகவே இந்த நிலை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக கடந்த மூன்று ஆட்டங்களிலும் விளையாடாத சூர்யகுமார் யாதவ் நாளை நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மறுபுறம், டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றியும், 3 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி படுதோல்வி அடைந்தது.
அந்த தோல்வியில் இருந்து மீள வேண்டுமெனில் புதிதாக வெற்றி ஒன்றை பெற வேண்டிய நிர்பந்தத்தில் டெல்லி அணி உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரம் சொந்த மண்ணில் விளையாடுவது மும்பை அணிக்கு கூடுதல் வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை மும்பை உடனான போட்டி குறித்து டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலையாளத்தின் வெற்றிபெற்ற அய்யப்பனும் கோஷியும்' படத்தின் போஸ்டரை எடிட் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது
- குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.
- இலங்கை வீரர் மதுஷங்கா காயம் காரணமாக 2024 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
- தென்ஆப்பிரிக்கா வீரர் U-19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றவர்.
ஐபிஎல் 2024 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க இருக்கிறது. களம் இறங்க 10 அணிகளும் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்களும் போட்டிகளை காண ஆர்வமாக உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கோப்பையை வெல்ல களம் இறங்க இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கையை சேர்ந்த மதுஷங்கா இடம் பெற்றிருந்தார். இவர் காயம் காரணமாக 2024 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் தென்ஆப்பிரிக்காவின் 17 வயதான மபாவா என்ற இளம் வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான மபாகா 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அபாரமாக பந்து வீசினார். 21 விக்கெட்டுக்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 21 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இவர் தென்ஆப்பிரிக்கா ஏ, தென்ஆப்பிரிக்கா எமெர்ஜிங் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் வீரர்கள் அறையை மலிங்கா, பும்ரா ஆகிய ஜாம்பவான்கள் உடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட மபாகா, பவுன்சர் மற்றும் யார்க்கர் பந்துகள் வீசுவதிலும் சிறந்து விளங்குகிறார்.
- ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெரேண்டர்ஃப் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார்.
- கடந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
ஐபிஎல் 2024 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தங்களது அணியில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வீரரை தேர்வு செய்து, அணியை தயார் படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேண்டர்ஃப் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த லூக் வுட்-ஐ மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைத்துள்ளது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான வுட் இங்கிலாந்து அணிக்காக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 50 லட்சம் ரூபாய் விலைில் வுட்டை அணியில் இணைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்து சீசனில் சிறப்பாக செயல்பட்டார். ஆர்ச்சர், பும்ரா இல்லாத நிலையில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
வருகிற 22-ந்தேதி ஐபிஎல் 17-வது சீசன் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மார்ச் 24-ந்தேதி மும்பை அணி தனது முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
- முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.
பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 23-ம் தேதி துவங்கியது. ஐந்து அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
லீக் பிரிவின் கடைசி போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.
லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3-வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை (மார்ச் 15) நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மார்ச் 17-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்