search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KXIP"

    • ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
    • ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.

    சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.

    ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. #IPL2019 #KXIPvSRH

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

    இந்த நிலையில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் ஆன்ட்ரூ டை, முருகன் அஸ்வின் நீக்கப்பட்டு முஜீப் ரகுமான், அங்கித் ராஜ்பூத் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.





    ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் ஆர்.அஸ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினார்கள். பஞ்சாப் அணியினர் தொடக்கத்தில் சிறப்பான பந்து வீச்சு மற்றும் நேர்த்தியான பீல்டிங் மூலம் எதிரணிக்கு நெருக்கடி அளித்து ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்கள். 2-வது ஓவரில் முஜீப் ரகுமான் பந்து வீச்சில் பேர்ஸ்டோ (1 ரன்) கேப்டன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்து களம் கண்ட விஜய் சங்கர் 2-வது ஓவரின் கடைசி பந்தில் முதல் பவுண்டரியை விரட்டினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்னே எடுத்து இருந்தது. 10 ஓவர்களில் அந்த அணி 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 56 ரன்னாக இருந்த போது விஜய் சங்கர் (26 ரன், 27 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து களம் இறங்கிய முகமது நபி 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

    அடுத்து மனிஷ் பாண்டே, தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் நிலைத்து நின்று அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 15.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. டேவிட் வார்னர் 49 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இந்த சீசனில் அவர் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும், மனிஷ் பாண்டே 15 பந்துகளில் 2 பவுண்டயுடன் 19 ரன் சேர்த்து முகமது ஷமி பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் களம் இறங்கிய தீபக் ஹூடா அதிரடியாக மட்டையை சுழற்றினார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 62 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 70 ரன்னும், தீபக் ஹூடா 3 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முஜீப் ரகுமான், முகமது ஷமி, ஆர்.அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (16 ரன், 14 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரஷித் கான் பந்து வீச்சில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால், தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். 13 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை கடந்தது. லோகேஷ் ராகுல் 34 பந்திலும், மயங்க் அகர்வால் 40 பந்திலும் அரைசதத்தை எட்டினார்கள்.

    அணியின் ஸ்கோர் 132 ரன்னாக உயர்ந்த போது மயங்க் அகர்வால் (55 ரன், 43 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-லோகேஷ் ராகுல் இணை 114 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த டேவிட் மில்லர் (1 ரன்), மன்தீப் சிங் (2 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். 19.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் 53 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 71 ரன்னும், சாம் குர்ரன் 3 பந்துகளில் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 6-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.


    ஐபிஎல் 2019 சீசனுக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து யுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 9 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். #IPL2019 #KXIP
    ஐபிஎல் அணிகள் 2019 சீசனுக்கு தயாராகி வருகின்றன. வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம், யார் யாரை விடுவிக்கலாம் என்பதில் கவனம் செலுத்து வருகிறது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேஎல் ராகுல், கருண் நாயர், கேப்டன் அஸ்வின் உள்பட 9 பேரை தக்க வைத்துள்ளது. 11 வீரர்களை விடுவித்துள்ளது. ஒரு வீரரை மற்ற அணியில் இருந்து வாங்கியுள்ளது.

    வெளிநாட்டு வீரர்களான சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், அண்ட்ரிவ் டை, கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லரை தக்கவைத்துள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விடுவித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச், 2. அக்சார் பட்டேல், 3. மோகித் சர்மா, 4. யுவராஜ் சிங், 5. பரிந்தர் ஸ்ரன், 6. பென் டிவார்ஷுயிஸ், 7. மனோஜ் திவாரி, 8. அக்தீப் நாத், 9. பர்தீப் சாகு, 10 மயாங்க் டாகர், 11. மன்சூர் டார்.
    நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெசனை ஹெட் கோச்சாக நியமித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். #KXIP #IPL2018
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 11 வருடமாக ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பங்கேற்று விளையாடி வருகிறது. ஒரு முறை மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    அதன்பின் அந்த அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது. அடிக்கடி வீரர்களையும், பயிற்சியாளரையும் மாற்றி மாற்றி பார்க்கிறது. ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை. கட்நத சீசனில் அஸ்வினை கேப்டனாகவும், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ச்-ஐ பயிற்சியாளராகவும் நியமித்தது. அத்துடன் கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் விளையாடினார்கள். சேவாக் ஆலோசகராக உள்ளார்.

    முதலில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி 2-வது கட்டத்தில் அதிக அளவில் வெற்றிகளை குவிக்க இயலவில்லை. இதனால் முதல் நான்கு இடங்களை பிடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெசனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.



    அடுத்த வாரம் மைக் ஹெசன் இந்தியா வருகிறார். அப்போது இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். 2019 உலகக்கோப்பைக்குப் பின் வரை நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்க வேண்டிய மைக் ஹெசன் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    டி20 லீக்கில் எந்த அணிக்கும் பயிற்சியாளராக இருந்ததில்லை. ஆனால் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக திறம்பட செயல்பட்டுள்ளார். இவரது தலைமையைில் 2015-ல் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 59 டெஸ்ட் போட்டியில் 30-ல்  வெற்றியை ருசித்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், நான்காவதாக பிளேஆப் சுற்றில் நுழைவதில் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #VIVOIPL #CSKvKXIP #DDvMI
    புதுடெல்லி:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோற்றது. 18 புள்ளிகளை பெற்றுள்ளது. சென்னை சூப்பர்கிங்ஸ் 2-வது அணியாக முன்னேறியது. அந்த அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது இன்னும் ஒரு ஆட்டம் அந்த அணிக்கு எஞ்சியுள்ளது.

    நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றது.

    பிளேஆப் சுற்றுக்கு இன்னும் ஒரு அணி தகுதி பெற வேண்டும். இதற்கான போட்டியில் 3 அணிகள் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ்
    (14 புள்ளி), மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய அணிகள் போட்டியில் உள்ளன. இதில் ராஜஸ்தானுக்கு போட்டிகள் முடிந்து விட்டது. மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு தலா 1 ஆட்டங்கள் உள்ளன.

    டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றதால் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியேற்றப்பட்டது. அந்த அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.



    இன்றைய கடைசி நாள் லீக்கில் 2 ஆட்டங்கள் நடக்கிறது. டெல்லி பெரோ சா கோட்லா மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரவு 8 மணிக்கு புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

    நடப்பு சாம்பியனான மும்பை அணி டெல்லியை கண்டிப்பாக வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தோல்வி அடைந்தால் மும்பை அணி வெளியேற்றப்படும்.

    மும்பை வென்று, கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் 14 புள்ளியின் சம நிலையில் இருக்கும். அப்படி நிகழும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும். ராஜஸ்தான், பஞ்சாப்பை ஒப்பிடுகையில் மும்பை ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. இதனால் டெல்லியை வீழ்த்தினால் அந்த அணி வாய்ப்பை பெறும் சூழ்நிலை உருவாகும்.

    இன்றைய ஆட்டங்களில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் தோற்றால் ராஜஸ்தான் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

    மும்பை வென்று, பஞ்சாப் தோற்றால் ராஜஸ்தான், மும்பை அணிகள் சம புள்ளியை பெறும். ரன்ரேடில் ஒரு அணி தகுதி பெறும். மும்பை தோற்று சென்னை அணியை பஞ்சாப் வீழ்த்தினால் ராஜஸ் தான், பஞ்சாப் அணிகள் சம புள்ளியை பெறும். ரன்ரேட்டில் ஒரு அணி நுழையும்.

    பஞ்சாப்பின் ரன்ரேட் -0.49 ஆக உள்ளது. இதனால் அந்த அணி சென்னைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். சென்னை அணி வலுவானது என்பதால் பஞ்சாப் வீரர்கள் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். முந்தைய ஆட்டத்தில் சூப்பர் கிங்சை ஏற்கனவே வீழ்த்தி இருப்பதால் பஞ்சாப் அணி நம்பிக்கையுடன் உள்ளது.



    மேலும், மும்பை - டெல்லி ஆட்டத்துக்கு பிறகு தான் இந்த ஆட்டம் நடக்கிறது. இதனால் அதன் முடிவுக்கு ஏற்றது போல விளையாடலாம். இந்த போட்டித் தொடரில் தொடக்கத்தில் அபாரமாக ஆடிய பஞ்சாப் பின்னர் தொடர் தோல்வியால் நெருக்கடிக்கு ஆளானது. தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இதனால், சென்னைக்கு எதிராக அதிரடியாக ஆடி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    ஏற்கனவே வாய்ப்பை இழந்த டெல்லி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி அந்த அணியை வெளியேற்றும் ஆர்வத்தில் உள்ளது. சென்னை அணி கடைசி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது. இதனால், இன்றைய இரண்டு போட்டிகளிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #VIVOIPL #CSKvKXIP #DDvMI
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கர்நாடகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் ஒன்றாக விளையாடுவது சிறந்த தருணம் என கருண் நாயர் தெரிவித்துள்ளார். #IPL2018 #KXIP
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சேவாக்கிற்கு அடுத்தபடியாக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இவருடன் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார்கள்.



    இவர்கள் மூன்று பேரும் ஜூனியர் அணியில் இருந்தே ஒன்றாக இணைந்து விளையாடியவர்கள். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இணைந்து விளையாடுவது சிறந்த தருணம் என்றும், சிறந்த உணர்வாக இருக்கிறது என்றும் கருண் நாயர் கூறியுள்ளார்.



    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதால், கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக முச்சதம் அடித்தபின், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தூரில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடித்த 246 ரன் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. #IPL2018 #KXIPvKKR
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 44-வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன் (75), தினேஷ் கார்த்திக் (50), அந்த்ரே ரஸல் (31) ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.

    பின்னர் 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    கேஎல் ராகுல் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, கிறிஸ் கெய்ல் திணறினார். பஞ்சாப் அணியின் ஸ்கோர் 5.4 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது கெய்ல் 21 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தடைபோட்டார் அந்த்ரே ரஸல்.



    மறுமுனையில் நம்பிக்கையுடன் விளையாடிய கேஎல் ராகுல் 29 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கருண் நாயர் 3 ரன்னிலம், அக்சார் பட்டேல் 19 ரன்னிலும், பிஞ்ச் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் - அன்ட்ரிவ் டை பஞ்சாப் அணியின் ஸ்கோரை 200 ரன்னைத் தாண்டி இழுத்துச் சென்றனர். கடைசி ஓவரில் டை (14), அஸ்வின் (45) ஆட்டமிழக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×