என் மலர்
நீங்கள் தேடியது "Sunil Narine"
எனது எண்ணம் முழுவதும் உலகக்கோப்பை தொடரை சுற்றியே இருக்கும் நிலையில், விரல்கள் இன்னும் தயாராகவில்லை என்று சுனில் நரைன் விளக்கம் தெரிவித்துள்ளார். #WorldCup2019
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் நேற்று கடைசி அணியாக 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்தது. இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைனுக்கு இடம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சுனில் நரைன் கூறுகையில் ‘‘நான் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்பினேன். சர்வதேச கிரிக்கெட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதை மிஸ் செய்கிறேன். என்னுடைய எண்ணம் எல்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக்கோப்பையை சுற்றியே இருக்கிறது. ஆனால், என்னுடைய வீரர்கள் ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதற்கு தயாராக இருப்பதாக நான் உணரவில்லை.

டி20 உலகக்கோப்பையில் நான் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசுகிறேன். ஆனால், அது எளிதாக இல்லை. பிசியோவின் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. இது என்னை சர்வதேச போட்டியில் இருந்து வெளியே தள்ளிவிட்டது.
உலகக்கோப்பைக்கான அணியில் என்னை சேர்த்துக் கொள்ளலாமா? என்று தேர்வுக்குழுவினர் ஆலோசனை நடத்தியது மிகவும் சந்தோசமாக உள்ளது. இது என் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது’’ என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் நேற்று கடைசி அணியாக 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்தது. இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைனுக்கு இடம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சுனில் நரைன் கூறுகையில் ‘‘நான் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்பினேன். சர்வதேச கிரிக்கெட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதை மிஸ் செய்கிறேன். என்னுடைய எண்ணம் எல்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக்கோப்பையை சுற்றியே இருக்கிறது. ஆனால், என்னுடைய வீரர்கள் ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதற்கு தயாராக இருப்பதாக நான் உணரவில்லை.

டி20 உலகக்கோப்பையில் நான் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசுகிறேன். ஆனால், அது எளிதாக இல்லை. பிசியோவின் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. இது என்னை சர்வதேச போட்டியில் இருந்து வெளியே தள்ளிவிட்டது.
உலகக்கோப்பைக்கான அணியில் என்னை சேர்த்துக் கொள்ளலாமா? என்று தேர்வுக்குழுவினர் ஆலோசனை நடத்தியது மிகவும் சந்தோசமாக உள்ளது. இது என் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது’’ என்றார்.
இந்தூரில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடித்த 246 ரன் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. #IPL2018 #KXIPvKKR
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 44-வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன் (75), தினேஷ் கார்த்திக் (50), அந்த்ரே ரஸல் (31) ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.
பின்னர் 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
கேஎல் ராகுல் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, கிறிஸ் கெய்ல் திணறினார். பஞ்சாப் அணியின் ஸ்கோர் 5.4 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது கெய்ல் 21 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தடைபோட்டார் அந்த்ரே ரஸல்.

மறுமுனையில் நம்பிக்கையுடன் விளையாடிய கேஎல் ராகுல் 29 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கருண் நாயர் 3 ரன்னிலம், அக்சார் பட்டேல் 19 ரன்னிலும், பிஞ்ச் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் - அன்ட்ரிவ் டை பஞ்சாப் அணியின் ஸ்கோரை 200 ரன்னைத் தாண்டி இழுத்துச் சென்றனர். கடைசி ஓவரில் டை (14), அஸ்வின் (45) ஆட்டமிழக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர் 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
கேஎல் ராகுல் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, கிறிஸ் கெய்ல் திணறினார். பஞ்சாப் அணியின் ஸ்கோர் 5.4 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது கெய்ல் 21 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தடைபோட்டார் அந்த்ரே ரஸல்.

மறுமுனையில் நம்பிக்கையுடன் விளையாடிய கேஎல் ராகுல் 29 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கருண் நாயர் 3 ரன்னிலம், அக்சார் பட்டேல் 19 ரன்னிலும், பிஞ்ச் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் - அன்ட்ரிவ் டை பஞ்சாப் அணியின் ஸ்கோரை 200 ரன்னைத் தாண்டி இழுத்துச் சென்றனர். கடைசி ஓவரில் டை (14), அஸ்வின் (45) ஆட்டமிழக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.