search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunil Narine"

    • டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
    • இதில் விளையாடக் கோரி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன்.

    இதற்கிடையே, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடக் கோரி அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து, சுனில் நரைன் ஓய்விலிருந்து வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என அழைப்புகள் வந்தன. நான் ஓய்விலிருந்து திரும்ப வந்து டி20 உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கதவை நான் ஏற்கனவே மூடிவிட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் தொடர்ந்து ஆதரிப்பேன். அவர்கள் கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

    • நேற்று நடைபெற்ற கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சுனில் நரைன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்
    • இதன் மூலம் 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார்

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உள்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.

    இதன் மூலம் பகுதி நேர பேட்ஸ்மேனான சுனில் நரேன் இந்த சீசனில் விராட் கோலி (361), ரியன் பாராக (284) ஆகியோருக்குப் பின் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை நெருங்கி வருகிறார்.

    இந்நிலையில் தம்முடைய முதல் சதத்திற்கும் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடுவது குறித்தும் சுனில் நரேன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு போட்டியிடுவீர்கள் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் அதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக ஓப்பனிங்கில் விளையாடவில்லை. இருப்பினும் அணிக்கு மீண்டும் வந்துள்ள கௌதம் கம்பீர் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார்.

    இந்த தொடரில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுப்பதற்கான உறுதியையும் கம்பீர் எனக்கு கொடுத்தார். எனவே 14 போட்டிகளிலும் என்னுடைய அணிக்காக முடிந்தளவுக்கு சிறந்த துவக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய வேலையாகும்" என்று கூறினார்.

    • கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
    • அவரின் நெருங்கிய நண்பர்களான பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறோம்.

    கொல்கத்தா:

    17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய சுனில் நரேன் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார்.

    இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார்.

    நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் வரும் ஜூன் 1-ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் டி20 உலகக்கோப்பை அணியில் சுனில் நரைன் இடம் பெறுவாரா என ராஜஸ்தான் வீரர் ரோவ்மன் பவலிடம் கேள்வி கேட்க்கப்பட்டது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    220 ரன்களை சேசிங் செய்தது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது. நான் களமிறங்கிய போது சுனில் நரைனை அட்டாக் செய்யும் திட்டத்துடன் தான் களமிறங்கினேன்.

    ஏனென்றால் கொல்கத்தா அணியின் சிறந்த பவுலர் நரைன் தான். அதேபோல் சூழலும் அதற்கேற்றபடி அமைந்தது. அதனால் எனது பலத்தை அறிந்து, ஷாட்களை விளையாடினேன். அது ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது. கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

    ஆனால் எங்கள் எல்லோரையும் அவர் தவிர்த்துவிட்டு செல்கிறார். அவரின் நெருங்கிய நண்பர்களான பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறோம். டி20 உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன் நிச்சயம் மனதை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.

    ராஜஸ்தான் அணியின் சிந்தனையும், எண்ணமும் ஒன்றாக உள்ளது. அதேபோல் பெஞ்சில் உள்ள வீரர்களுக்கும் சரியான விஷயங்கள் சரியான நேரத்தில் பகிரப்படுகிறது. சர்வதேச வீரரான எனக்கு சரியாக தகவல்கள் சொல்லப்படுவதை நிச்சயம் பாராட்ட வேண்டும். எங்கள் வீரர்கள் அனைவரும் நல்ல சூழலில் உள்ளோம்.

    வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்காக நான் 4 அல்லது 5 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாடி வருகிறேன். அதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் என்னை மேல் வரிசையிலும் களமிறக்கலாம். அடுத்த சில நாட்கள் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு நாட்களில் சங்கக்காராவின் காதுகளில் இதனை தொடர்ச்சியாக சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் சதம் அடித்து அசத்தினார்.
    • கொல்கத்தா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உல்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.

    அந்த பட்டியல்:-

    107 & 3/21 - கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக பஞ்சாப், பெங்களூரு, 2011

    175* & 2/5 - கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக புனே, பெங்களூரு, 2013

    104* & 2/38 - ஷேன் வாட்சன் (ஆர்ஆர்) எதிராக கேகேஆர், பிரபோர்ன், 2015

    106 & 1/13 - ஷேன் வாட்சன் (சிஎஸ்கே) எதிராக ஆர்ஆர், புனே, 2018

    109 & 2/30 - சுனில் நரைன் (கேகேஆர்) எதிராக ஆர்ஆர், கொல்கத்தா, 2024

    • சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்தல் செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், பிலிப் சால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிலிப் சால்ட் 13 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி சிறப்பாக விளையாடி 18 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் சுனில் நரைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 49 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது.

    தொடர்ந்து விளையாடிய அவர் 56 பந்தில் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா 17.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

    • நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் இஷான் சர்மா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட்- சுனில் நரைன் களமிறங்கினர். சால்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நரைனுடன் இளம் வீரர் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்து டெல்லி அணியின் பந்து வீச்சை சரமாரியாக விளாசினர்.

    அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த ரஸல் (41) - ரிங்கு சிங் (26) அவர்களது பங்குக்கு அதிரடியை காட்டினார்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    எனது எண்ணம் முழுவதும் உலகக்கோப்பை தொடரை சுற்றியே இருக்கும் நிலையில், விரல்கள் இன்னும் தயாராகவில்லை என்று சுனில் நரைன் விளக்கம் தெரிவித்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளன.

    வெஸ்ட் இண்டீஸ் நேற்று கடைசி அணியாக 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்தது. இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைனுக்கு இடம் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சுனில் நரைன் கூறுகையில் ‘‘நான் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்பினேன். சர்வதேச கிரிக்கெட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதை மிஸ் செய்கிறேன். என்னுடைய எண்ணம் எல்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணி,  உலகக்கோப்பையை சுற்றியே இருக்கிறது. ஆனால், என்னுடைய வீரர்கள் ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதற்கு தயாராக இருப்பதாக நான் உணரவில்லை.



    டி20 உலகக்கோப்பையில் நான் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசுகிறேன். ஆனால், அது எளிதாக இல்லை. பிசியோவின் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. இது என்னை சர்வதேச போட்டியில் இருந்து வெளியே தள்ளிவிட்டது.

    உலகக்கோப்பைக்கான அணியில் என்னை சேர்த்துக் கொள்ளலாமா? என்று தேர்வுக்குழுவினர் ஆலோசனை நடத்தியது மிகவும் சந்தோசமாக உள்ளது. இது என் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது’’ என்றார்.
    இந்தூரில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடித்த 246 ரன் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. #IPL2018 #KXIPvKKR
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 44-வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன் (75), தினேஷ் கார்த்திக் (50), அந்த்ரே ரஸல் (31) ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.

    பின்னர் 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    கேஎல் ராகுல் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, கிறிஸ் கெய்ல் திணறினார். பஞ்சாப் அணியின் ஸ்கோர் 5.4 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது கெய்ல் 21 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தடைபோட்டார் அந்த்ரே ரஸல்.



    மறுமுனையில் நம்பிக்கையுடன் விளையாடிய கேஎல் ராகுல் 29 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கருண் நாயர் 3 ரன்னிலம், அக்சார் பட்டேல் 19 ரன்னிலும், பிஞ்ச் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் - அன்ட்ரிவ் டை பஞ்சாப் அணியின் ஸ்கோரை 200 ரன்னைத் தாண்டி இழுத்துச் சென்றனர். கடைசி ஓவரில் டை (14), அஸ்வின் (45) ஆட்டமிழக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×