search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KKR"

    • ஆர்சிபி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம்.
    • பஞ்சாப், மும்பை, டெல்லி அணிகள் தலா இரண்டு வெற்றிகள் மூலம் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணைகளைத் தவிர மற்ற எட்டு அணியிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டன.

    நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியே வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதுவரை நடந்துள்ள போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்...

    ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து போட்டியில் நான்கில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 3-வது இடம் வகிக்கிறது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் 4-வது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐந்தாவது இடத்தையும், குஜராத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.

    பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 10 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஒன்பது அல்லது எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன்ரேட், வெற்றித் தோல்வி ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

    தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அந்த அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

    இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் ஏறக்குறைய போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். ஆகவே ஆர்.சி.பி. அணிக்கு இன்றைய போட்டியிலிருந்து அனைத்து போட்டிகளும் சால்வா? சாவா? போட்டிகள் போன்றே கருதப்படும்.

    பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது காயம் அடைந்தார்.
    • கொல்கத்தா அணியுடன் நேற்று இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் நிதிஷ் ராணா. இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் விளையாடினார். பீல்டிங் செய்யும்போது அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆர்சிபி, டெல்லி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை.

    அவர் காயம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் காயம் குணமடைந்து இன்று அணியுடன் இணைந்துள்ளார். இது அணிக்கு பேட்டிங்கில் கூடுதல் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்கு போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கெதிராக மட்டும் தோல்வியை தழுவியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணி அடுத்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வருகிற 14-ந்தேதி எதிர்கொள்கிறது.

    • சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டும், சுனில் நைரன் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் சால்ட் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அதன்பிறகு சுனில் நரைன் - அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.

    அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடினர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ரச்சின் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ், சிஎஸ்கே அணியின் கேப்டனாக தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    நிதானமாக விளையாடிய மிட்செல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே அவரது பாணியில் அதிரடியாக விளையாடினார். அவர் 28 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டோனி களமிறங்கினார். ஆனால் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டும், சுனில் நைரன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன.
    • இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன. இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.

    • கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கம்பீர் இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கம்பீர் இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்.

    கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது.

    கடந்த 2 ஐ.பி.எல். சீசன்களில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து கம்பீர் இந்த சீசனில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கம்பீர் சமூக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "எங்கள் ரசிகர்களின் அன்பினால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்!" என்று பதிவிட்டுள்ளார்

    கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதும் பாரதிய ஜனதாவில் கம்பீர் இணைந்தார். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. எம்.பி ஆக இருந்த கம்பீர் இந்தாண்டு ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அண்மையில் அரசியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
    • பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 83 ரன்கள் அடித்தார்.

    இதைத் தொடர்ந்து 183 ரன்களை துரத்திய கொல்கத்தா அணி 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது.

    இதன் மூலம் கொல்கத்தா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி இன்றி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றிருக்கிறது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு, கொல்கத்தா அணியின் வீரர் ரிங்கு சிங்குக்கு விராட் கோலி பேட் பரிசளித்தார். 

    • ரசல், ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • பெங்களூரு அணியின் வைஷாக் 1 விக்கெட் வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி நல்ல துவக்கம் கொடுத்தார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாப் டு பிளெசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது.


     

    இதைத் தொடர்ந்து 183 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு, பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 30 மற்றும் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் அய்யர் 30 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    ஸ்ரேயஸ் அய்யர் 24 பந்துகளில் 39 ரன்களை குவிக்க கொல்கத்தா அணி 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் வைசாக், யாஷ் தயால் மற்றும் மயான்க் டாகர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதன் மூலம் கொல்கத்தா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி இன்றி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றிருக்கிறது.

    • விராட் கோலி சிறப்பாக ஆடி 83 ரன்களை குவித்தார்.
    • ரசல், ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி நல்ல துவக்கம் கொடுத்தார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாப் டு பிளெசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 33 ரன்களை விளாசினார். இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும். 

    பிறகு வந்த கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. பெங்களூரு அணியின் விராட் கோலி 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    கொல்கத்தா அணி சார்பில் ரசல் மற்றும் ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுனில் நரைன் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

    • இன்றைய போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.
    • பெங்களூரு அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்த தொடரில் கொல்கத்தா அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்குகிறது. 

    கொல்கத்தா அணி தொடர் வெற்றியை பெறும் நோக்கில் களம் காண்கிறது.

    • இரு அணிகளும் பலமுறை களம் கண்டுள்ளன.
    • கவுதம் கம்பீரின் வீடியோவை பகிர்ந்து இருக்கிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் பிறகு, இரு அணிகளும் பலமுறை களம் கண்டுள்ளன.

    அந்த வகையில், இன்று நடைபெறும் போட்டிக்கு முன்பு ஐ.பி.எல். போட்டிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்பும் தனியார் சேனல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் கவுதம் கம்பீரின் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறது. அந்த வீடியோவில் ஆர்.சி.பி. குறித்து கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.


     

    "ஒவ்வொரு முறையும் நான் வீழ்த்த விரும்பும் ஒரே அணி, கனவிலும் நான் கட்டாயம் ஜெயிக்க விரும்பும் அணி என்றால் அது ஆர்.சி.பி. தான். அதிகளவு முக்கிய வீரர்கள் அடங்கிய இரண்டாவது அணி, அதிக பகட்டு கொண்ட அணி- க்ரிஸ் கெயில், விராட் கோலி, ஏ.பி. டி வில்லியர்ஸ் போன்ற வீரர்களை கொண்ட அணி."

    "உண்மையில் எதையும் வென்றிடாத அணி, எனினும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதாக நினைக்கும் அணி. அத்தகைய மனநிலை. அதை மட்டும்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கொல்கத்தா அணி இதுவரை பெற்ற மூன்று தரமான வெற்றிகள் அனைத்தும் ஆர்.சி.பி. அணிக்கு எதிராகவே அமைந்துள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் செய்ய விரும்பும் ஒரே விஷயம் களத்திற்கு சென்று ஆர்.சி.பி.யை வீழ்த்த வேண்டும் என்பது மட்டும் தான்," என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    • கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 2-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா தொடை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 

    ராஜஸ்தான் அணி ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக இருந்து வரும் நிலையில் கேஷவ் மகராஜ் இணைந்துள்ள மேலும்

    இதேபோல கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அல்லா கசன்ஃபரை கொல்கத்தா அணி நியமித்துள்ளது.



     


    • மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார்
    • அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற 2-வது தேசிய போட்டியின் போது முதுகு வலி ஏற்பட்டதாக ஷ்ரேயாஸ் ஐயர் தொடரின் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகினார்.

    பின்னர், மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்.

    அதன் பிறகு, ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. அப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    அப்போட்டியின் 4 மற்றும் 5-ம் நாட்களில், முதுகு வலி காரணமாக ஷ்ரேயாஸ் விளையாடவில்லை. முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு அவர் அறுவை சிகிக்சை செய்திருந்தார்.

    இந்நிலையில், முதுகு வலி காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ், முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×