என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் ஏலம்"
- ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
- இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
மும்பை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நாளை (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
இந்நிலையில் நாளை ஏலம் நடைபெற உள்ள சூழலில் ஏலப்பட்டியலில் இந்திய வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏதோ ஒரு ஐ.பி.எல். அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் அவரது பெயர் ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சியில் பெங்கால் அணியின் கேப்டனாக செயல்படும் அவர், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- வீரர்கள் ஏலப்பட்டியலில் முதல் கட்டமாக 1,355 பேர் இடம் பெற்று இருந்தனர்
- 35 வீரர்கள் புதிதாக ஏலத்தில் இடம் பெற்று உள்ளன.
மும்பை:
ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலம் வருகிற 16-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது. இந்த ஏலம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். 10 அணிகளும் 77 வீரர்களை ஏலத்தில் எடுக்க இயலும்.
வீரர்கள் ஏலப்பட்டியலில் முதல் கட்டமாக 1,355 பேர் இடம் பெற்று இருந்தனர். தற்போது வெளியான இறுதிப் பட்டியலில் 350 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். 1005 வீரர்கள் ஏலப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 350 வீரர்களில் 224 விளையாடத இந்தியர்களும் 16 ஏற்கனவே விளையாடிய இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் குயின்டன் டீ காக் உள்பட 35 வீரர்கள் புதிதாக ஏலத்தில் இடம் பெற்று உள்ளன. குயின்டன் டீ காக்கிற்கான அடிப்படை விலை ரூ.1 கோடியாகும்.
கேமரூன் கிரீன், லிவிஸ்டன், பிஷ்னோய், வெங்கடேஷ் அய்யர் உள்பட 45 வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- மினி ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதனை ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வீரர்களுக்கான அடிப்படை விலை குறைந்தபட்சம் ரூ. 30 லட்சம் என்றும் அதிகபட்சம் ரூ. 2 கோடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் ஆடிய திறமையான வீரர்கள் பலரும் ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் ஆரம்ப விலை ரூ.2 கோடியிலிருந்தே தொடங்கும்.
இந்நிலையில் இந்த மினி ஏலத்தில் அதிகபட்ச தொடக்க விலையான ரூ.2 கோடிக்கு வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னாய் ஆகிய இரு இந்திய வீரர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மொத்தம் 45 வீரர்கள் இப்பிரிவில் தங்களது பெயர்களை பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2026 ஏலத்தில் ரூ.2 கோடி அடிப்படை விலை வீரர்கள்:
ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் ஐயர், முஜீப் ரஹ்மான், நவீன் உல் ஹக், அபோட், அகர், கோனோலி, ஃப்ரேசர்-மெக்குர்க், கிரீன், இங்கிலிஸ், ஸ்மித், முஸ்தாபிஸூர், அட்கின்சன், பான்டன், கர்ரன், டாசன், டக்கெட், லாரன்ஸ், லிவிங்ஸ்டன், டைமல், ஜேமி ஸ்மித், ஆலன், பிரேஸ்வெல், கான்வே, டப்பி, ஹென்றி, ஜேமிசன், மில்னே, டாரில் மிட்செல், ஓ'ரூர்க், ரச்சின் ரவீந்திரா, கோட்ஸி, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, நார்ட்ஜே, ரூசோவ், ஷம்சி, வைஸ், ஹசரங்கா, பத்திரனா, தீக்ஷனா, ஹோல்டர், சாய் ஹோப், ஹொசைன் மற்றும் அல்ஸாரி.
- மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை.
சென்னை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் என கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். அதில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் maxi bro. மகிழ்ச்சி, குறும்புத்தனம், கேலி பேச்சு... நீங்கள் இல்லாமல் டிரெஸிங் ரூம் முன்பு போல் நிச்சயம் இருக்காது என கூறியுள்ளார்.
- ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.
- மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த மினி ஏலத்தில் 10 அணிகள் சேர்ந்து 77 பேரை ஏலத்தில் எடுக்கலாம். அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், சென்னை அணியிடம் ரூ.43.40 கோடி பணமும் உள்ளது.
இந்த நிலையில், ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஆண்ட்ரே ரசல், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லாததால் மேகரூன் கிரீனுக்கு பல அணிகள் போட்டி போட வாய்ப்பு உள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
- ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.
அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டு மன்மதனே வாராய்' பாடலுடன் சஞ்சு சாம்சனின் வீடியோவை பகிர்ந்த அவரது மனைவி சாருலதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
- ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.
அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சென்னை மைதானத்தில் எம்எஸ் தோனி சிஎஸ்கே ஜெர்சியிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ஜெர்சியிலும் ரசிகர்களுக்கு மத்தியில் உள்ளனர். அப்போது தோனி ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கை காட்டுவார். அந்த கூட்டத்தில் ஒரு பேனரில் விசில் போடு சஞ்சு சாம்சன் என எழுத்தப்பட்டிருந்தது.
இதனை பார்த்த சஞ்சு சந்தோசத்தில் குதிப்பார். உடனே அவரது ஜெர்சியில் மஞ்சள் நிறமாக மாறும். இவ்வாறு அந்த AI வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை சமர்ப்பிக்க பிசிசிஐ கெடு விதிக்கப்பட்டுள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.30 கோடி ரூபாய் உடன் நாளை நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள், கழற்றிவிடப்பட்டும் வீரர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வெளிநாட்டு வீரர்களில் ரச்சின் ரவீந்திரா, டேவான் கான்வே (நியூசிலாந்து) ஆகிய வீரர்கள் கழற்றி விட உள்ளதாகவும் கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களான விஜய் சங்கர், ராகுல் த்ரிபாதி, தீபக் ஹூடா ஆகியோர் உள்பட பல வீரர்களை கழற்றி விட உள்ளாதவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வீரர்களில் ஆயுஸ் மாத்ரே, உர்வில் படேல் தக்க வைக்கப்படுகின்றனர். வெளிநாட்டு வீரர்களில் பிரேவிஸ், நாதன் எல்லீஸ், பத்திரனா ஆகியோர் தக்க வைக்கபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பல அணிகள் எல்லிஸை ட்ரேட் முறையில் வாங்க ஆர்வம் காட்டிய நிலையில் சிஎஸ்கே அணி மறுத்துவிட்டது. ட்ரேட் முறையில் ஜடேஜா, சாம் கரன் வெளியேறுகின்றனர்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.30 கோடி ரூபாய் உடன் நாளை நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மும்பை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரை கழற்றி விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 4 வீரர்களில் வெங்கடேஷ் ஐயர் மட்டும் ரூ.23.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. இதனால் கொல்கத்தா அணி ரூ.40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்கும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த சீசனுக்கு முந்தைய சீசன் ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
- தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்துள்ளார்.
- வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.
இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது. அதோடு அதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் சில நட்சத்திர வீரர்கள் அதன் வாயிலாக அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு பெரியளவில் பேசப்பட்ட டிரேடிங்காக வாஷிங்டன் சுந்தரின் டிரேடிங் செய்தி அமைந்தது. ஏனெனில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்த வேளையில் அவரது இடத்திற்கு சரியான மாற்று வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே இது குறித்த தகவல் அதிகளவு வைரலாகி வருகிறது.
ஆனால் இது குறித்து குஜராத் அணியின் நிர்வாகமும் சரி, சென்னை அணியின் நிர்வாகமும் சரி உறுதியான அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய குஜராத் டைட்டன்ஸ் அணி மறுத்துவிட்டது.
- ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐ.பி.எல். மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மும்பை:
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற தொடர்களில் ஐ.பி.எல்லும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு குஜராத், லக்னோ ஆகிய 2 அணிகள் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகின்றன. அடுத்தாண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு மினி ஏலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஐ.பி.எல். 2023 தொடருக்கான மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிசம்பர் 23-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் விளையாடும் 10 அணிகளும் நவம்பர் 15-ம் தேதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
- அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 பேர் பதிவு செய்துள்ளனர்.
- பதிவு செய்த 991 வீரர் களில் 185 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள்.
மும்பை:
2023-ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 23-ந்தேதி கொச்சியில் நடைபெறுகிறது.
ஏலத்தில் பங்கு பெறும் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்வது கடந்த நவம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க 991 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 714 பேர் இந்தியர்கள். 14 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 பேர் பதிவு செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீசில் இருந்து 33 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 31 வீரர்களும், நியூசி லாந்தில் இருந்து 27 வீரர் களும், இலங்கையில் இருந்து 20 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மொத்தம் 277 வெளி நாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்க வைத்து கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை தான் ஏலத்தில் தேர்வு செய்ய முடியும்.
பதிவு செய்த 991 வீரர் களில் 185 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள். 786 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள். 20 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள். வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1.50 கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம் என உள்ளது. இதில் ரூ.2 கோடி அடிப்படை விலையில் 21 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், வில்லியம்சன், நிகோலஸ் பூரன், கேமமுன் கரீன் உள்பட 21 பேர் ரூ.2 கோடி அடிப்படையில் உள்ளனர். ரூ.2 கோடி மற்றும் ரூ.1.50 கோடி அடிப் படை விலை பட்டியலில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை. ரூ.1 கோடி பட்டியலில் மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே ஆகிய 3 இந்திய வீரர்கள் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த பிராவே ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை.






