என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunrisers hyderabad"

    • கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
    • தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தார்
    • ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகசிறந்த கேட்ச் இது தான் என்று பேசப்பட்டது.

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

    இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், நடப்பு சீசனின் மிகசிறந்த கேட்சுக்கான விருதை ஐதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றார்.

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகசிறந்த கேட்ச் இது தான் என்று அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



    • ஐபிஎல் வரலாற்றில் 3 ஆவது அதிகபட்ச ஸ்கோரை ஐதராபாத் அணி பதிவு செய்தது.
    • ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது.

    ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.

    இந்த போட்டியில் 278 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்துள்ளது.

    மேலும், ஒரு புதிய உலக சாதனையையும் ஐதராபாத் அணி படைத்துள்ளது. அதாவது, டி20 போட்டிகளில் அதிகமுறை 250க்கும் மேல் ரன்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படைத்துள்ளது.

    ஐதராபாத் அணி ஒரு இன்னிங்சில் 5 முறை (287, 286, 277, 266, 278) 250 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. இந்தப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், சர்ரி கவுன்டி அணியும் (தலா 3 முறை) உள்ளன.

    • அதிரடியாக விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 16 பந்துக்களில் 32 ரன்கள் அடித்து அவுட்டானார்.பொறுப்புடன் விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிளாசான் - இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

    இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை குவித்தது. 

    • ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • அடுத்த சுற்று வாய்ப்பை இந்த 2 அணிகளும் இழந்துவிட்டன

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட இந்த 2 அணிகளும் கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
    • ஜோஷ் ஹேசில்வுட் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.

    தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த ஆர்.சி.பி. அணியின் முக்கிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில், காயத்தில் இருந்து குணமடைந்த ஹேசில்வுட் மீண்டும் பெங்களூரு அணியில் இருந்துள்ளார். இது தொடர்பான விடியோவை பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

    • முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.
    • நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவில்லை என 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட அந்த அணி முந்தைய இரு ஆட்டங்களில் லக்னோ, பெங்களூரு அணிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தது. கொல்கத்தாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

    நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவில்லை என 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட அந்த அணி வெற்றியுடன் விடைபெற ஆர்வம் காட்டும். ஆறுதல் வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் யார்? கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    • ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
    • ஆர்சிபி அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.

    இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு சில தினங்களில் குழந்தை பிறக்கவுள்ளதால் பிளே ஆப் சுற்றை தவறவிடுகிறார்.

    இந்த முறையாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு உத்வேகத்தில் இருக்கும் நிலையில் இவரது விலகல் ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக இருக்கும். இவர் நடப்பு தொடரில் 9 போட்டிகள் விளையாடி 239 ரன்கள் குவித்துள்ளார்.

    சமீபத்தில், இளம் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெதெலுக்குப் பதிலாக நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட்டை ஆர்சிபி ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதி இருக்கின்றன.
    • 13-ல் ஐதராபாத்தும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

    இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் மழை அச்சுறுத்தல் காரணமாக லக்னோவுக்கு மாற்றப்பட்டது.

    பிளே-ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்), ஒரு முடிவில்லை என 17 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. அந்த அணியின் கடைசி ஆட்டம் (கொல்கத்தாவுக்கு எதிராக) மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதற்கு முந்தைய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்தது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (7 அரைசதத்துடன் 505 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். கேப்டன் ரஜத் படிதார், ஜேக்கப் பெத்தேல், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டுவும் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் குருணல் பண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா பலம் சேர்க்கின்றனர். தோள்பட்டை காயத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் (18 விக்கெட்) விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.

    இதற்கிடையே, லீக் சுற்றுடன் ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து) தாயகம் திரும்புவதால் அவருக்கு பதிலாக தற்காலிக மாற்று வீரராக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டை பெங்களூரு அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

    அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளியுடன் 8-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக 206 ரன் இலக்கை 10 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் என்று அதிரடி பட்டாளத்துக்கு குறைவில்லை. பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கம்மின்ஸ், இஷான் மலிங்கா நம்பிக்கை அளிக்கின்றனர்.

    இனிமேல் இழக்க எதுவுமில்லை என்பதால் ஐதராபாத் வீரர்கள் அச்சமின்றி அதிரடி காட்டி பெங்களூரு அணியின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பார்கள். அதே சமயம் புள்ளிபட்டியலில் டாப்-2 இடத்தில் நீடிக்க பெங்களூருவுக்கு இந்த ஆட்டத்தின் வெற்றி முக்கியம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடுவார்கள். மொத்தத்தில் இரு அணியிலும் 'சரவெடி' பேட்டர்கள் இருப்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதி இருக்கின்றன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    பெங்களூரு: பில் சால்ட் அல்லது ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், இங்கிடி, சுயாஷ் ஷர்மா.

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, ஜேய்தேவ் உனட்கட்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • லக்னோ 4 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.

    ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் தோற்றுள்ளது. முந்தைய மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது.

    தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில் இருக்கும் லக்னோ அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா? போன்றதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். மாறாக தோற்றால் அந்த அணியின் வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (410 ரன்), மிட்செல் மார்ஷ் (378), மார்க்ரம் (348), ஆயுஷ் பதோனி (326) நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், அப்துல் சமத் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. பந்து வீச்சில் திக்வேஷ் ரதி, ஷர்துல் தாக்குர், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளித்தாலும், தாக்கம் எற்படுத்த தவறுகின்றனர்.

    ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை (டெல்லிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 7 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருப்பதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணியில் அதிரடி சூரர்கள் அதிகம் இருந்தாலும், அவர்களது ஆட்டம் ஒருசேர நன்றாக அமையாததால் சறுக்கலை சந்தித்தது.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (314 ரன்), ஹென்ரிச் கிளாசென் (311), நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன் என்று பெரிய அதிரடி பட்டாளமே இருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் சரியாக நிலைத்து நிற்கவில்லை. பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கேப்டன் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி வலுசேர்க்கின்றனர். அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இன்று இந்தியா வருகிறார். அவர் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.

    ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள லக்னோ அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எல்லா வகையிலும் வரிந்து கட்டும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றி பெறுவதுடன், புள்ளி பட்டியலில் முடிந்த வரை முன்னேற்றம் காண ஐதராபாத் அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான்.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சச்சின் பேபி, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகெட் வர்மா, காமிந்து மென்டிஸ், கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் எளிதாக நுழைந்து விடும்.
    • பஞ்சாப், குஜராத், மும்பை, டெல்லி அணிகள் இடையே 'பிளே ஆப்' சுற்றுக்கு கடும் போட்டியில் இருக்கின்றன.

    10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரில் நேற்றுடன் 55 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இதுவரை எந்த அணியும் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இன்னும் 15 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

    முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தன. தற்போது பிளே ஆப் சுற்றின் 4 இடங்களுக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன.

    இதில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் எளிதாக நுழைந்து விடும். பஞ்சாப், குஜராத், மும்பை, டெல்லி ஆகிய அணிகள் இடையே 'பிளே ஆப்' சுற்றுக்கு கடும் போட்டியில் இருக்கின்றன.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆர்.சி.பி.க்கு இன்னும் 3 போட்டிகள் (லக்னோ, ஐதராபாத், கொல்கத்தா) உள்ளது. இதில் 2 ஆட்டம் சொந்த மண்ணில் நடக்கிறது. இதில் ஒன்றில் வென்றாலே தகுதி பெற்று விடும். முதல் 2 இடத்தை பிடிப்பதை அந்த அணியின் இலக்காக உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ்: 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளுடன் விளையாட வேண்டும். 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யும். ஒன்றில் வென்றால் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து பிளே ஆப் வாய்ப்பு அமையும்.

    மும்பை இந்தியன்ஸ்: 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டம் (குஜராத், பஞ்சாப், டெல்லி) எஞ்சியுள்ளது. இதில் 2 ஆட்டம் உள்ளூரில் இருக்கிறது. ரன் ரேட்டில் வலுவாக உள்ள அந்த அணி தொடர்ச்சியாக 6 போட்டி யில் வெற்றி பெற்றது. 2 வெற்றி பெற்றால் தகுதி பெற்றுவிடும். முதல் 2 இடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது.

    குஜராத் டைட்ன்ஸ்: குஜராத் அணிக்கு 4 ஆட்டம் உள்ளது. மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை அணிகளிடம் மோத வேண்டும். இதில் 2 போட்டிகள் உள்ளூ ரில் நடக்கிறது. 14 புள்ளிகளு டன் 4-வது இடத்தில் உள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக ரன்ரேட்டில் நன்றாக இருக்கிறது. 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெறும். முதல் 2 இடத்தை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.4 போட்டிகளில் தோற்றதால் வெளியேறும்.

    டெல்லி கேபிடல்ஸ்: 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப், குஜராத், மும்பை அணிகளுடன் மோத வேண்டும். தொடக்கத்தில் முன்னேறி இருந்த அந்த அணிக்கு தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்துடன் தோற்க வேண்டிய நேற்றைய ஆட்டத்தில் அதிர்ஷ்ட வசமாக ஒரு புள்ளி கிடைத்தது. கடைசி 5 ஆட்டத்தில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றது. எஞ்சிய ஆட்டங்களில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் அணி உள்ளது. 17 புள்ளிகள் வரை பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டம் இருக்கிறது. மூன்றிலும் வெற்றியை பெற்றால் மட்டுமே வாய்ப்பில் இருக்க இயலும். அதே சமயம் மற்ற முடிவுகள், ரன் ரேட்டை பொறுத்தே இருக்கிறது. முன்னறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்: 10 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ள பெங்களூரு குஜராத், ஐதராபாத் அணிகளுடன் மோத வேண்டும். 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் அந்த அணியின் ரன்ரேட் மோசமாக இருக்கிறது ஒரு ஆட்டத்தில் தோற்றால் வெளியேறி விடும்.

    • கன மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.
    • இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் இம்பெக்ட் பிளேயர் அஷுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதன் விளைவாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து கன மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.

    இந்த போட்டி ரத்தானதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகாரபூர்வமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    ×