என் மலர்
நீங்கள் தேடியது "srh"
- டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தார்
- ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகசிறந்த கேட்ச் இது தான் என்று பேசப்பட்டது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், நடப்பு சீசனின் மிகசிறந்த கேட்சுக்கான விருதை ஐதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகசிறந்த கேட்ச் இது தான் என்று அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் பவர்பிளேயில் 71 ரன்கள் குவித்தது.
- இஷான் கிஷன் 48 பந்தில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பெங்களூருவில் மழை அச்சுறுத்தல் இருப்பதால் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். இதனால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். டாஸ் வென்ற ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தபோதிலும் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. டிராவிஸ் ஹெட் 10 பந்தில் 17 ரன்களும், அபிஷேக் சர்மா 17 பந்தில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பவர்பிளேயில் 71 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழந்தன. கிளாசன், அனிகெட் வர்மா தலா 24 ரன்களும், நிதிஷ் ரெட்டி 4 ரன்னிகளிலும், அபிநவ் மனோகர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8.4 ஓவரில் 100 ரன்களையும், 12.3 ஓவரில் 150 ரன்னையும் தொட்டது. இஷான் கிஷன் 28 பந்தில் அரைசதம் அடித்தார்.
17 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அத்துடன் ஐதராபாத் 203 ரன்கள் குவித்தது.
19ஆவது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஐதராபாத் 216 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.
இஷான் கிஷன் 48 பந்தில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ரஜத் படிதார் இம்பேக்ட் பிளேயராக களம் வருவதால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.
- மயங்க் அகர்வால் படிதாருக்குப் பதிலாக களம் இறங்குகிறார்.
ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூருவில் மழை அச்சுறுத்தல் இருப்பதால் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். இதனால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, அபிநவ் மனோகர், கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா, ஜெய்தேவ் உனத்கட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:-
பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், லுங்கி நிகிடி, சுயாஷ் சர்மா.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.
இப்போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற லசித் மலிங்காவின் சாதனையை ஐதராபாத் வீரர் ஹர்ஷல் படேல் முறியடித்தார்.
ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் மலிங்கா (2,444 பந்துகள்), சாஹல் (2,543 பந்துகள்), ப்ராவோ (2,656 பந்துகள்), பும்ரா (2,832 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் 'பிளே ஆப்' சுற்று கனவை ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா தகர்த்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்தில் 59 ரன் (4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஐதராபாத் அணியை வெற்றி பெற வைத்தார்.
நேற்றைய போட்டியில் லக்னோ நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை ஐதராபாத் எளிதில் எடுத்தது. ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறிய ஐதராபாத் இந்த வெற்றி மூலம் லக்னோவையும் தன்னுடன் இழுத்து சென்றது.
அதிரடியாக விளையா டிய அபிஷேக் சர்மா விக்கெட்டை திக்வேஷ் ரதி கைப்பற்றினார். அப்போது அவர் தனது வழக்கமான 'நோட்புக்' கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரிடம் அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட் டார். இருவருக்கும் இடையேயான இந்த மோதலால் ஆடுகளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள்.
நோட்புக் கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் 2 முறை விதிகளை மீறியுள்ளார். இதற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
மீண்டும் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதம் செய்ததற்காகவும் திக்வேஷ் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக குஜராத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது. தடையோடு திக்வேசுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஒரு போட்டியில் இருந்து பெறும் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை அபிஷேக் சர்மா பறக்கவிட்டார்.
இதனையடுத்து திக்வேஷ் ரதி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது திக்வேஷ் ரதி அவரை பார்த்து கோவமாக கையை வீசி பின்னர் தனது சிக்னேச்சர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான அபிஷேக் சர்மா களத்திலேயே அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆடுகளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இப்போட்டியில் தோல்வி முடிந்ததன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பபை இழந்து லக்னோ வெளியேறியது.
இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டி போடுகின்றன.
- மிட்செல் மார்ஷ், மார்கிராம், பூரன் அரைசதம் விளாசினர்.
- ரிஷப் பண்ட் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ்- மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் நிதானமாக விளையாடி மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
பவர்பிளேயான முதல் 6 ஓவரில் லக்னோ விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 28 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 9 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது மிட்செல் மார்ஷ் 39 பந்தில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 6 பந்தில் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். மார்கிராம் 28 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ 15.1 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது. மார்கிராம் 38 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 15.4 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் படோனி ஜோடி சேர்ந்தார். 17 ஓவர் முடிவில் லக்னோ 168 ரன்கள் எடுத்திருந்தது.
18ஆவது ஓவரை இசான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமு விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதனால் லக்னோ 18 ஓவர் முடிவில் 170 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் லக்னோவிற்கு 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 19 ஓவரில் 185 ரன்கள் சேர்த்திருந்தது.
கடைசி ஓவரை நிதிஷ் ரெட்டி வீசினார். பூரன் 26 பந்தில் 45 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். இந்த ஓவரில் 20 ரன்கள் அடிக்க லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத்து அணிக்கு இந்த போட்டியின் வெற்றி தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏற்கனவே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. லக்னோ இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-
மார்கிராம், மிட்செல் மார்ஷ், பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, அப்துல் சமாத், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், வில் ஓ'ரூர்கி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-
இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கமிந்து மெண்டிஸ், கம்மின்ஸ், ஹர்ஷல் பட்டேல், ஹர்ஷ் துபே, ஜீசன் அன்சாரி, எசான் மலிங்கா.
- பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
- எம்.எஸ். தோனி 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் டெவாய்ட் பிரேவிஸ் அறிமுகம் ஆனார். தீபக் ஹூடா, சாம் கர்ரன் அணியில் சேர்க்கப்பட்டனர்.
ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது சமி வீசினார். முதல் பந்திலேயே ரஷீத் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து மாத்ரே உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் கர்ரன் அமைதியாக நிற்க மறுபக்கம் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சாம் கர்ரன் 10 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு மாத்ரே உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். 6ஆவது ஓவர் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் மாத்ரே ஆட்டமிழந்தார். அவர் 19 பந்தில் 30 ரன்கள் விளாசினார். அடுத்து பிரேவிஸ் களம் இறங்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 17 பந்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் சிஎஸ்கே திணறியது.
12ஆவது ஓவரை கமிந்து மெண்டிஸ் வீசினார். இந்த ஓவரில் பிரேவிஸ் 3 சிக்ஸ் விளாசினார். ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு கிச்ஸ் அடித்தார். அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சிக்க பவுண்டரி லைனில் கமிந்து மெண்டிஸ் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 12.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களாக இருந்தது. அடுத்து துபே 12 ரன்னிலும், எம்.எஸ். தோனி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார். தோனி ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
இறுதியாக 19.5 ஓவரில் 154 ரன்னில் சிஎஸ்கே ஆல்அவட் ஆனது. தீபக் ஹூடா கடைசி விக்கெட்டாக 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- புள்ளிகள் பட்டியலில் ஐதராபாத் 9ஆவது இடத்திலும், சிஎஸ்கே கடைசி இடத்திலும் உள்ளன.
- இந்த போட்டியில் தோல்வியடையும் அணி ஏறக்குறைய பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.
ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சிஎஸ்கே அணி:-
ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ஜடேஜா, பிரேவிஸ், ஷிவம் துபே, எம்.எஸ். தோனி, தீபக் ஹூடா, நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா.
சன்ரைசர்ஸ் ஐதராபத்:-
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கமிந்து மெண்டிஸ், கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், உனத்கட், ஜீஷன் அன்சாரி, முகமது சமி.
- ஷ்ரேயாஸ் அய்யர் 36 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
- பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் 2025 தொடரின் 27ஆவது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தனர். அவர்களின் எண்ணம் போன்று பந்து பேட்டில் நன்றாக பட்டது.
ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பிரப்சிம்ரன் சிங். இதனால் முதல் ஓவரில் பஞ்சாப் அணிக்க 14 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். பிரப்சிம்ரன் சிங் ஒரு பவுண்டரி அடிகக் 16 ரன்கள் கிடைத்தது. 3ஆவது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஆர்யா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். பிரப்சிம்ரன் ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது. அத்துடன் பஞ்சாப் கிங்ஸ் 53 ரன்கள் சேர்த்தது.
4ஆவது ஓவர ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஆர்யா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் கிங்ஸ் 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது.
5ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். பிரப்சிம்ரன் சிங் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கிடைத்தது. 6ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தன. இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.
7ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்தார். இவர் 23 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் வதேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 12.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. ஷ்ரேயாஸ் அய்யர் 22 பந்தில் அரைசதம் அடித்தார்.
13.3 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருக்கும்போது வதேரா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங் சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 17ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் 17 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 205 ரன்கள் குவித்தது.
18ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். இந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு 5 ரன்கள்தான் கிடைத்தது. 18 ஓவர் முடிவில் பஞ்சாப் 210 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில் 27 ரன்கள் கிடைத்தன.
ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.