என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லக்னோ"

    • விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • விமானத்தை விமானி பாதுகாப்பாக தரையிறக்கியதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    சவூதியில் இருந்து 250 பயணிகளுடன் லக்னோ வந்த விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை மற்றும் தீப்பொறிகள் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஹஜ் பயணிகளுடன் வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தை விமானி பாதுகாப்பாக தரையிறக்கியதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    முன்னதாக அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் பண்ட் சதம் விளாசினார்.
    • தான் சதம் அடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்துக் கொண்டாடினார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம் லக்னோவில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 118 ரன்னும், மிட்செல் மார்ஷ் 67 ரன்னும் அடித்தனர்.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட் இந்த ஆட்டத்தில் சதமடித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் தான் சதமடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்து கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • 29 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், 54 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.
    • மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 67 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், மேத்யூ பிரீட்ஸ்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிட்செல் மார்ஷ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    லக்னோ அணி பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. 9.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ரிஷப் பண்ட் 29 பந்திலும், மிட்செல் மார்ஷ் 31 பந்திலும் அரைசதம் அடித்தனர். லக்னோ அணி 14.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    16ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசிய மிட்செல் மார்ஷ் 3ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்தில் 67 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரி 4 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும். அப்போது லக்னோ 15.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்திருந்தது.

    3ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 17ஆவது ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் லக்னோ 7 ரன்கள் அடித்தது. இதனால் 191 ரன்கள் எடுத்திருந்தது.

    18ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 54 பந்தில் சதம் விளாசினார் ரிஷப் பண்ட். இந்த தொடரில் தொடர்ந்து மோசமாக விளையாடி வந்த நிலையில் சதம் விளாசியுள்ளார். இந்த ஓவரில் லக்னோ அணிக்கு 10 ரன்கள் கிடைத்தது. அத்துடன் 201 ரன்கள் சேர்த்தது.

    19ஆவது ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் அடித்தது லக்னோ. கடைசி ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் நிக்கோலஸ் பூரன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைக்க லக்னோ 227 ரன்கள் குவித்துள்ளது. ரிஷப் பண்ட் 61 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    • ஆர்சிபி வெற்றி பெற்றால் குவாலிபையர் 1-க்கு முன்னேறும்.
    • தோல்வியடைந்தால் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

    ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் ஆர்சிபி- லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெற்றால் ஆர்சிபி குவாலிபையர்-1க்கு முன்னேறும். லக்னோ ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இதில் வெற்றி பெற்றால் ஆறுதல் வெற்றியாக இருக்கும்.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி:-

    ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், பிரீட்ஸ்கே, ஆயுஷ் படோனி, அப்துல் சமாத், ஹிமாத் சிங், ஷபாஷ் அகமது, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், வில்லியம் ஓ'ரூர்கே.

    ஆர்சிபி அணி:-

    பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணால் பாண்ட்யா, புவி, யாஷ் தயால், நுவான் துஷாரா.

    • ஊழல் விசாரணை நடத்திய அதிகாரியை பழிவாங்க ரெயில்வே முன்னாள் வீரர் திட்டம்.
    • பீகாரில் இருந்து லக்னோ சென்று வில் அம்பால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன் உதவி துணை-ஆய்வாளரை ரெயில்வே முன்னாள் ஊழியர் வில் அம்பால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தாக்குதலில் உதவி துணை ஆய்வாளர் ஏ.எஸ்.ஐ. விரேந்திர சிங் (55) மார்பக்கத்தில் அம்பு பாய்ந்து காயம் அடைந்தார்.

    இதன் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பீகாரைச் சேர்ந்த தினேஷ் முர்மு (65) என்பவர் ரெயில்வேயில் கேங்மேனாக பணிபுரிந்தள்ளார். கடந்த 1993-ல் ரெயில்வேயில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்ததில் விரேந்திர சிங் ஒருவராக இருந்துள்ளார்.

    ஊழல் தொடர்பான விசாரணை முடிவில் தினேஷ் முர்மு, வேலையை இழந்துள்ளார். இந்த நிலையில்தான் பழிக்குபழி வாங்கும் விதமாக தற்போது லக்னோவில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வெளியில் வில் அம்புகளை கொண்டு தாக்கல் செய்துள்ளார்.

    தினேஷ் முர்மு கடந்த 2005ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரியை சந்திக்க டெல்லிக்கு சென்றார். அப்போது போலீசாரை தாக்கியதால் சிறைக்குச் சென்றார். 2015ஆம் அண்டு ஜான்பூர் ரெயில் நிலையத்தில் ஜிஆர்பி வீரரை தாக்கியதால் மூன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் விசாரணை நடத்திய அதிகாரியை தாக்கியுள்ளார்.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இப்போட்டியில் தோல்வி முடிந்ததன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பபை இழந்து லக்னோ வெளியேறியது.

    இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டி போடுகின்றன.

    • பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
    • 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.

    ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (22 சிக்சருடன் 346 ரன்), பிரப்சிம்ரன் சிங் (3 அரைசதத்துடன் 346 ரன்) தான் பஞ்சாப் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். இவர்கள் 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.

    முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்ட லக்னோ அணி அடுத்த 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றது. டெல்லி, மும்பைக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களில் சொதப்பலான பேட்டிங்கால் தோல்வியை தழுவியது. மார்க்ரம் (335 ரன்), மிட்செல் மார்ஷ் (378 ரன்), நிகோலஸ் பூரன் (404 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் சோடை போனால் அதன் பிறகு பெரும்பாலும் திண்டாடி விடுகிறது.

    இந்த நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    இதனால், களத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்கிறது.

    மலைவாசஸ்தலமான இமாசலபிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் இந்த சீசனில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

    • மனதளவில் பாதிப்பு அடைந்து ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
    • வீடியோ ஒன்றை பதிவு செய்து நெருங்கிய உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார்.

    லக்னோ:

    உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் மோகித் யாதவ். இவரது மனைவி பிரியா. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    மோகித் யாதவ் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு அவரது மனைவி கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றி எழுத வேண்டும் என அடிக்கடி தகராறு செய்து வந்தார். மனைவியின் குடும்பத்தினரும் சேர்ந்து சித்ரவதை செய்தனர்.

    சொத்துக்களை மனைவியின் பெயரில் எழுதித் தராததால் மோகித் யாதவ் மீது போலீசில் வரதட்சணை கொடுமை புகார் செய்தனர்.

    மனதளவில் பாதிப்பு அடைந்த மோகித் யாதவ் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது நெருங்கிய உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    திருமணத்தின் போது மனைவியின் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. சொத்துக்களை மனைவி பெயருக்கு மாற்றித் தராததால் போலீசில் பொய் வழக்கு கொடுத்தனர்.

    மனைவியுடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரும் என்னை சித்திரவதை செய்தனர். மனைவி அடிக்கடி என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் மனைவிக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால் எனது மாமியார் கர்ப்பமாக இருந்த எனது மனைவியின் கருவை கலைத்து விட்டார். மேலும் எனது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு கொடுப்பதாக மிரட்டல் விடுத்தனர்.

    தொல்லை தாங்க முடியாததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என வீடியோவில் கூறியிருந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகித் யாதவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
    • பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது

    உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

    இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

    • தோல்வியடைந்த லக்னோ அணியையும், நவீன் உல் ஹக்கையும் ரசிகர்கர் கிண்டல் செய்து வருகின்றனர்.
    • ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது.

    சென்னை:

    ஐபிஎல் 2023 சீசன் வரும் 28-ந் தேதியுடன் முடியவடைய உள்ளது. இறுதி போட்டிக்கு முதல் அணியாக சென்னை தகுதி பெற்றது. இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள குவாலிபையர் 2-ல் மும்பை- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்த சீசனில் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயாமாக மாம்பழம் உள்ளது. மாம்பழம் சீசன் கேள்விபட்டிருக்கோம். ஆனால் ஐபிஎல் தொடர்ல இது மாம்பழம் சீசனா மாறியிருக்கு என்று சொல்லலாம்.

    இந்த மாம்பழல் சீசன் தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர், லக்னோ அண்யின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் ஆவர். அவர் பெங்களூரு அணிக்கு எதிராக மோதிய போது விராட் கோலியுடன் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய வீரர்களை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பாராட்ட, இன்னொரு பக்கம் விராட் கோலி டக் அவுட்டானதை நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் கொண்டாடினார். இது ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக விராட் கோலி ரசிகர்கள், நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் கோலி பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர்.

    இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன் உல் ஹக் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இறுதியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்த லக்னோ அணியையும், அந்த அணியின் நவீன் உல் ஹக்கையும் மாம்பழங்கள் மூலமாக ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

    ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    அதில் லக்னோ அணி வீரர்களே டென்சன் வேண்டாம். லக்னோவில் டிஸ்யூ பேப்பர் ரெடி பன்ன ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டிருந்தனர். 

    • 76-வது ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்
    • இராணுவ சேவையில் தியாகம் செய்த அனைவரையும் மூன்று சேவைத் தலைவர்கள் கௌரவிக்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி, இந்தியா தனது வீரம் மிக்க இந்திய இராணுவத்தை பெருமைப்படுத்தவும் ,நன்றி செலுத்தவும் இந்திய இராணுவ தினத்தை கொண்டாடுகிறது.

    1949ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியான மார்ஷல் கே.எம் கரியப்பாவின் 76வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    மார்ஷல் கே எம் கரியப்பா ஜனவரி 15, 1949 அன்று பிரிட்டிஷ் தலைமை தளபதியான ஜெனரல் பிரான்சிஸ் புட்சருக்குப் பிறகு இந்திய இராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்றார். அதனால் இந்த மறக்கமுடியாத நாளில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அணிவகுப்பு நடைபெறும்.

    இராணுவ சேவையில் தியாகம் செய்த அனைவரையும் மூன்று சேவைத் தலைவர்கள் கௌரவிக்கின்றனர். மேலும், தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    இவ்விழா உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விழா நடைபெறுகிறது.இன்று 76-வது ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    ஜெனரல் மனோஜ் பாண்டே, தேச சேவையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    "இந்த இராணுவ தினமான 2024ல், இந்திய இராணுவத்தின் அனைத்து தரவரிசைகள், சிவில் ஊழியர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேச சேவையில் தங்கள் உயிரைக் கொடுத்த வீரார்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கிறோம். அவர்களின் தியாகம் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.இந்திய இராணுவம் 2024 ஐ "தொழில்நுட்பத்தில் இணைந்து செயலாற்றும் ஆண்டாக" இருக்கும்.இது இராணுவத்தின் திறன் தொழில்நுட்பத்தின் மாற்றத்திற்க்கு இணைந்து செயல்படும் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

    தேசிய உணர்வில் இந்திய ராணுவத்துக்கு தனி இடம் உண்டு. தேசம் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதியில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."ஜெய் ஹிந்த்" என்று தனது உரையை முடித்தார்.

    மேலும் இராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.
    • 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி ஒரு தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.

    நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.

    டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோ ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×