search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hajj"

    • கடந்த ஆண்டை போல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம்.
    • வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது.

    சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஹஜ்-2024-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கும் முறை 4-ந் தேதி ஆன்லைனில் தொடங்கி வருகிற 20-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) "HAJ SUVIDHA" செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்யலாம்.

    ஹஜ் 2024-ல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை நிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத்தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.

    கடந்த ஆண்டை போல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம்.

    வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் 31.01.2025 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும்.

    ஹஜ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு, ஹஜ் 2024-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி https://www.hajcommittee.gov.in/ மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புனித ஹஜ் பயணிகள் ‘ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது.
    • கூடுதல் விவரங்களை இந்திய ஹஜ் குழு இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புனித ஹஜ் பயணிகள் 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை வருகிற 20-ந்தேதி வரை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது. இந்திய ஹஜ் குழு இணையதளத்தின் (www.hajcommittee.gov.in) வழியாக அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் 'HCoI' செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

    இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 20-ந்தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 3.2.2024 வரையில் செல்லத்தக்க எந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் காசோலை நகல் அல்லது ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் விவரங்களை இந்திய ஹஜ் குழு இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் முதல் மாநிலமாக வரும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
    • கடந்த வருடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 20 ரூபாய் வாங்கினேன்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்ப் பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபு பக்கர் கூறியதாவது:-

    "தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் முதல் மாநிலமாக வரும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. பொங்கல் அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் 10 ரூபாய் வாங்கி இருக்கிறேன். கடந்த வருடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 20 ரூபாய் வாங்கினேன். இந்த வருடம் 100 ரூபாய் வாங்கியது மகிழ்ச்சி.

    இந்த வருடம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். சென்னையில் இருந்து அனைத்து விமானங்களும் ஹஜ் பயணத்திற்கு இயக்கப்படும். இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லை" என்றார்.

    ×