என் மலர்
நீங்கள் தேடியது "Lucknow"
- தோல்வியடைந்த லக்னோ அணியையும், நவீன் உல் ஹக்கையும் ரசிகர்கர் கிண்டல் செய்து வருகின்றனர்.
- ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது.
சென்னை:
ஐபிஎல் 2023 சீசன் வரும் 28-ந் தேதியுடன் முடியவடைய உள்ளது. இறுதி போட்டிக்கு முதல் அணியாக சென்னை தகுதி பெற்றது. இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள குவாலிபையர் 2-ல் மும்பை- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த சீசனில் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயாமாக மாம்பழம் உள்ளது. மாம்பழம் சீசன் கேள்விபட்டிருக்கோம். ஆனால் ஐபிஎல் தொடர்ல இது மாம்பழம் சீசனா மாறியிருக்கு என்று சொல்லலாம்.
இந்த மாம்பழல் சீசன் தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர், லக்னோ அண்யின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் ஆவர். அவர் பெங்களூரு அணிக்கு எதிராக மோதிய போது விராட் கோலியுடன் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய வீரர்களை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பாராட்ட, இன்னொரு பக்கம் விராட் கோலி டக் அவுட்டானதை நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் கொண்டாடினார். இது ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக விராட் கோலி ரசிகர்கள், நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் கோலி பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர்.
இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன் உல் ஹக் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்த லக்னோ அணியையும், அந்த அணியின் நவீன் உல் ஹக்கையும் மாம்பழங்கள் மூலமாக ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Guys tension mat lo, we have started restocking tissues in Lucknow ?
— Swiggy Instamart (@SwiggyInstamart) May 24, 2023
அதில் லக்னோ அணி வீரர்களே டென்சன் வேண்டாம். லக்னோவில் டிஸ்யூ பேப்பர் ரெடி பன்ன ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டிருந்தனர்.
- ராணுவ வளாக சுவர் இடிந்து, குடிசை பகுதி மீது விழுந்தது.
- உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு
லக்னோ:
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் லக்னோ அருகே உள்ள தில்குஷா பகுதியில் ராணுவ வளாகத்திற்க வெளியே ஏராமானோர் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர்.
நேற்றிரவு கன மழை காரணமாக ராணுவ வளாக சுவர் இடிந்து விழுந்தது. உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக, காவல்துறை இணை ஆணையர் பியூஷ் மோர்டியா தெரிவித்தார்.
அதிகாலை 3 மணியளவில் ஒன்பது உடல்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் உன்னாவ் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதில் கணவன், மனைவி, குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்து சம்பங்களில் ஒரே நாளில் 12 பேர் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக 31-12-2005 முதல் 19-12-2009 வரை பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர் 2000-ம் ஆண்டில் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.
பின்னர், மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மந்திரிசபையில் 2003-ம் ஆண்டில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் துறை மந்திரியாக பதவியேற்றார். பின்னர், 2004-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.
அதன் பிறகு 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள காசியாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 2014 பாராளுமன்ற தேர்தலில் ராஜ்நாத் சிங் இதே மாநிலத்தின் தலைநகரான லக்னோ தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில், இன்று காலை பாஜக தொண்டர்களுடன் பேரணியாக சென்று லக்னோ மாவட்ட கலெக்டரிடம் தனது வேட்பு மனுவை ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார்.
80 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் நேருக்குநேர் மோதுகின்றன. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
அனைத்து கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதேபோல் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
பிரபல பாலிவுட் நடிகரும் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா லக்னோ தொகுதியில் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என முன்னர் சில தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம். #RajnathSingh #Rajnathfiles #Rajnathfilesnomination #LucknowLSseat

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்துவதற்காக சோனியா, ராகுலை தொடர்ந்து பிரியங்காவும் தீவிர அரசியலுக்கு வந்து உள்ளார்.
பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23-ந்தேதி ராகுல் அறிவித்தார்.
பிரியங்கா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்ற 38 தொகுதிகளின் பொறுப்பாளராக இளம் தலைவர்களில் ஒருவரும் ராகுலுக்கு நெருக்கமானவரான ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் இன்று உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர்.
இதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா, ஜோதிராதித்யா சிந்தியா மூவரும் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் லக்னோ விமான நிலையம் வந்தடைந்தபோது காங்கிரசார் மேளதாளம் முழங்க உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

சுமார் 15 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த பேரணியால் அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பேரணி செல்லும் வழிநெடுக பிரியங்காவை வரவேற்று பல்லாயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும், பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. லக்னோ நகரில் திரும்பிய திசையெல்லாம் பிரியங்காவை வரவேற்று நோட்டீசுகள் ஒட்டப்பட்டுள்ளன.
முதல்முறையாக பொறுப்பு ஏற்க வருவதால் பிரியங்காவுக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 15 கி.மீ. தூரப்பாதையில் 32 இடங்களில் பிரியங்காவுக்கு காங்கிரசார் வரவேற்பு கொடுக்க உள்ளனர். ஓரிரு இடங்களில் பிரியங்கா தொண்டர்கள் மத்தியில் பேச மேடை அமைக்கப்பட்டுள்ளது.
ஹசரத்கஞ்ச்-ல் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் சிலைகளுக்கு ராகுல், பிரியங்கா மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். அதன் பிறகு கட்சி அலுவலகமான நேருபவன் முன்பு இருக்கும் நேரு சிலைக்கு மாலை அணிவித்து விட்டு உள்ளே சென்று கட்சிப் பொறுப்பை ஏற்க பிரியங்கா திட்டமிட்டுள்ளார். #PriyankaGandhi #RahulGandhi #Lucknowroadshow
நாடாளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த இந்த கட்சிகள் திடீரென தனிக்கூட்டணியை உருவாக்கி இருப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.
எனவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசரமாக நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் ராஜ்பப்பர், மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
முன்னதாக மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. குறிப்பாக குலாம்நபி ஆசாத் பேசும்போது, ‘சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு குறித்து நாங்களும் கேள்விப்பட்டோம். எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை (இன்று) லக்னோவில் அறிவிப்போம்’ என்று மட்டுமே பதிலளித்தார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. #Congress #GhulamNabiAzad #SPBSP
