என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lucknow pitch"

    • பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி உள்பட 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன.
    • மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி குஜராத் , பெங்களூரு , பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னாசாமி மைதானத்தில் வருகிற 23-ந் தேதி ஆர்சிபி- சன்ரைசர்ஸ் அணிகள் மோத இருந்தனர். ஆனால் பெங்களூருவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டத்தை தொடர்ந்து இந்த போட்டி லக்னோவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இரு அணி கேப்டன்களும் ஆடுகளம் குறித்து அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.
    • இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

    லக்னோ:

    லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்தது. 100 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

    இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த இரு அணி கேப்டன்களும் ஆடுகளம் குறித்து அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

    20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல. கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது லக்னோ மைதானத்தில் கருப்பு மண் இருந்துள்ளது. அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும். ஆனால் போட்டி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக, பிட்ச் வடிமைப்பாளரை அழைத்த இந்திய அணி நிர்வாகம், ஸ்பின்னர்களுக்கு உதவும் சிகப்பு நிற மண்ணில் பிட்ச்-ஐ உருவாக்குமாறு கோரியுள்ளனர்.

    கடைசி நேரத்தில் பிட்ச்-ஐ மாற்றியமைத்த போது தான், பந்து மிக அதிகமாக ஸ்பின் ஆகும் வகையில் மாற்றிவிட்டனர். இதனால் பிட்ச்- உருவாக்கும் அதிகாரியை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது பிசிசிஐ. இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

    ×