என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்சிபி"
- இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது.
- அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை.
ஜூன் 4 ஆம் தேதி பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவaடுக்கப்பட்டது.
இந்நிலையி்ல் இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி தான் பொறுப்பு என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் காவல்துறையினரை ஆதரித்த தீர்ப்பாயம், அவர்களும் மனிதர்கள்தான், கடவுள்களோ மந்திரவாதிகளோ அல்ல என்று கூறியது. அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை என்றும், விரலால் தேய்த்தால் எந்த விருப்பத்தையும் நிறைவேற்ற முடியாது என்றும் கூறியது.
மூன்று முதல் நான்கு லட்சம் பேர் வருகை தந்ததற்கும், காவல்துறையினரிடமிருந்து முறையான அனுமதி பெறாததற்கும் ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும். சமூக ஊடகங்களில் பதிவுகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்ததாக தீர்ப்பாயம் கூறியது.
மேலும் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு மூத்த ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமாரை இடைநீக்கம் செய்த அரசின் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
- பெங்களூரு கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கத்தை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
- ஆர்சிபி அணி காவல்துறையிடம் உரிய அனுமதியை அல்லது ஒப்புதலைப் பெறவில்லை.
பெங்களூர்:
ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அது குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. அதன் முடிவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சமர்ப்பித்த இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் முழு முதல் பொறுப்பை ஏற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரு கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கத்தை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்தும் செய்துள்ளது. அவர் வகித்த பொறுப்பை மீண்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அளித்துள்ள அறிக்கையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் மூன்று முதல் ஐந்து லட்சம் பேர் அந்த இடத்தில் கூடுவதற்கு முதல் பொறுப்பு என்று தெரிகிறது. ஆர்சிபி அணி காவல்துறையிடம் உரிய அனுமதியை அல்லது ஒப்புதலைப் பெறவில்லை. அவர்கள் திடீரென்று சமூக ஊடகங்களில் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டனர். அதன் காரணமாக பொதுமக்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தில் ஒன்று கூடினர். காவல்துறை ஊழியர்களும் மனிதர்கள் தான். அவர்கள் கடவுள் அல்ல, மந்திரவாதியும் அல்ல என அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிக்கலில் உள்ளது. ஐபிஎல் நிர்வாகம் அந்த அணியைத் தடை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.
- கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தால் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை.
கர்நாடகாவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது சின்னசாமி கிரிக்கெட் மைதானம் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்தராமையா அரசு மீது கடும் விமர்சனம் எழுப்பப்பட்டது. ஆர்சிபி அணி நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் அடங்கிய மசோதா கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.
ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த தவறினால், நிகழ்ச்சிக்கு திட்டமிட்டவர், நிகழ்ச்சியை செயல்படுத்தியவர்கள் அதற்கு பொறுப்பானவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு 3 வருடம் வரை சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத குற்றமாக கருதப்படும் வகையில் மசோதா கொண்டு வரப்பட இருக்கிறது.
மழைக்கால கூட்டத் தொடரின்போது இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது.
- ஆர்சிபி வீரர்களுக்கு பெங்களூருவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.
ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டுகளிப்பதற்காக அங்கு மக்கள் ஏராளமானோர் கூடினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த நெரிசலைப் போல எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தலைமையில், பொருளாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் குழுவில் உள்ளனர்
- நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
- ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த வெற்றி, ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பையும், சந்தை மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆர்சிபி அணியின் உரிமையாளரான பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டயாஜியோ பிஎல்சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் உரிமையை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டயாஜியோ நிர்வாகம் ஆர்சிபி அணியின் முழு அல்லது பகுதி உரிமையை விற்க திட்டமிடுவதாகவும், இதற்கு ஆர்சிபி அணியை 2 பில்லியன் டாலர் வரையில் மதிப்பீட்டை எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, மேலும் அணியை விற்காமல் வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது.
18 வருடத்திற்கு பின்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின்பு இப்படியொரு முடிவு எடுத்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலியாகினர்.
- இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.
ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டுகளிப்பதற்காக அங்கு மக்கள் ஏராளமானோர் கூடினர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆர்சிபி நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் 11 பேர் பலியான சம்பவத்தில் புதிதாக கைது நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த சம்பவத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என ஆர்சிபி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 11-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்வரை ஆர்சிபி அணி நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது
- சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணியை தடை செய்வது ஒன்றும் புதிதல்ல. மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது.
- சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
- ஆர்.சி.பி. அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது.
- சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்துக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை கண்டித்து, இன்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர். அங்குள்ள மகாத்மா காந்தி சிலையின் படிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
- கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது.
பெங்களூரு:
பெங்களூருவில் ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி 4-ந் தேதி சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் ஆர்.சி.பி. மேனேஜ்மென்ட், டி.என்.ஏ. என்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது. இந்த நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
- ஒரே நேரத்தில் 3 நிகழ்ச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- கமிஷனர் மறுப்பு தெரிவிக்க 2 நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று முன்தினம் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்துவது. அதன்பின் ஆர்சிபி வீரர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரை ரோடு ஷோ நடத்துவது, அதன்பின் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் என மூன்று நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள வாய்ப்புள்ளதால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படும் என போலீசார் எச்சரித்ததால் பேரணி ரத்து செய்யப்பட்டது.
அதேவேளையில் விதான சவுதாவில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உளவுத்துறை தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்ட நெரிசல் நடைபெற்ற புதன்கிழமை காலை, சித்தராமையா வீட்டில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது போலீஸ் கமிஷனர் மூன்று நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என மறுத்துள்ளார். ஆனால் மூன்று நிகழ்ச்சிகளும் நடைபெற வேண்டும் என சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜ் வலியுறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் போலீஸ் கமிஷனர் பிடிவாதமாக இருக்க, விதான சவுதா மற்றும் சின்னசாமி மைதான நிகழ்ச்சிகளுக்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதனால் கோவிந்தராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
- ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
- இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் ரிட் மனு பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. மேலும் 2 பேர் கைது செய்யப்படலாம் என்பதால் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி இந்த ரிட் மனு கொடுத்துள்ளனர்.
இதனிடையே தனிப்படை போலீசார் அதிரடியாக இன்று காலை முதல் கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் சங்க செயலாளர், பொருளாளர் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.