என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    18 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காத்திருப்பு: ஆர்சிபி அணி குறித்து மனம் திறந்த மந்தனா
    X

    18 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காத்திருப்பு: ஆர்சிபி அணி குறித்து மனம் திறந்த மந்தனா

    • 18-வது சீசனில் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன்.
    • அந்த அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் முதல் அணியாக ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து 2-வது இடத்தில் குஜராத் அணியும் 3-வது இடத்தில் டெல்லியும் அணியும் இடம் பிடித்தது.

    இதனையடுத்து இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதும் அணி யார் என்பது நாளை தெரியும். எலிமினேட்டர் சுற்றில் குஜராத்- டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 5-ந் தேதி ஆர்சிபி அணியுடன் மோதும்.

    முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி அணி 2-வது முறையாக பட்டம் வெல்ல ஆவலுடன் உள்ளது. 3 சீசன்களில் ஆர்சிபி அணி ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.

    ஆனால் ஆடவர் ஆர்சிபி அணி 18 சீசனில் தனது முதல் பட்டத்தை வென்றது அற்புதமான உணர்வு என மகளிர் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    18-வது சீசனில் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன். நான் இறுதிப் போட்டியில் அங்கிருந்தேன். அனைவரும் கொண்டாடியதைப் பார்ப்பது அற்புதமாக இருந்தது.

    எனக்கு ஆர்சிபி நிர்வாகத்தினரை நன்றாகத் தெரியும். அவர்களின் கண்களில் கண்ணீரைக் கண்டேன். பதினெட்டு ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காத்திருப்பு. ஆனால் அது என் கண் முன்னே நடந்ததைப் பார்ப்பது ஒரு அற்புதமான உணர்வு. அந்த அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என மந்தனா கூறினார்.

    Next Story
    ×