என் மலர்
நீங்கள் தேடியது "Royal Challengers Bengaluru"
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது.
அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
- ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்.பி.சி. அணியை நிர்வகித்து வருகிறது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் ஆர்.சி.பி. அணியை விற்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு RCB Cares தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு மேலும், தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு விராட் கோலி அஞ்சலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.சி.பி. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்!" என்று கோலி தெரிவித்துள்ளார்.
- 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
- கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று முன்தினம் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நாங்கள் இந்த தளத்தில் கருத்துகளை வெளியிட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வெளியே சென்றுவிடவில்லை. அமைதியாக இருப்பது என்பது இல்லாமல் போய்விட்டதாக இல்லை. இது துக்கம். ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வெற்றி பெற்ற பிறகு நினைவுகளை கூறும் வகையில் சக்தியுடன் நீங்கள் கொண்டாடினீர்கள். மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. ஆனால் ஜூன் 4-ந்தேதி (கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்) இது அனைத்தையும் மாற்றிவிட்டது.
அந்த நாளில் நமது இதயம் வெடித்து சிதறியது. அதன் பிறகு ஏற்பட்ட அமைதி நமது இடத்தை நிறுத்தி வைத்தது. இந்த அமைதியில் நாங்கள் துக்கத்தில் இருந்தோம், எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தோம், கற்றுக் கொண்டிருந்தோம். இப்போது நிதானமாக வெறும் பொறுப்பை தாண்டி நாங்கள் மீண்டும் ஏதாவது செய்வதை தொடங்கி இருக்கிறோம். இதில் நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளோம்.
நாங்கள் இன்று (அதாவது நேற்றுமுன்தினம்) முதல் மீண்டும் இந்த தளத்திற்கு திரும்பியுள்ளோம், கொண்டாட்டத்துடன் அல்ல, அக்கறையுடன் வந்துள்ளோம். உங்களுடன் கூட்டாக நிற்க, முன்னேறி நடக்க தயாராக உள்ளோம். கர்நாடகத்தின் பெருமையாக இருக்க நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம். இந்த ஆர்.சி.பி. கேர்ஸ் நிதி குறித்து முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம்.
- ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது.
அண்மையில் நடந்து முடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.
ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை இத்தொடரில் கைப்பற்றி அசத்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி அணியின் நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சோக சம்பவத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவித பதிவும் போடாமல் இருந்தது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இன்று ஒரு அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடைசியாக இங்கு பதிவிட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம். இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த ஆற்றல், நினைவுகள் மற்றும் தருணங்களால் நிரம்பியிருந்தது.
ஆனால் ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது. அன்றிலிருந்து மௌனம் எங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் வழியாக இருந்து வருகிறது. அந்த மௌனத்தில், நாங்கள் துக்கப்படுகிறோம். கேட்டல், கற்றல், மெதுவாக, வெறும் பதிலை விட வேறு ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம். நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்று.
அப்படித்தான் RCB CARES உருவானது. இது எங்கள் ரசிகர்களுடன் இருக்கவும், கவுரவிக்கவும், குணப்படுத்தவும், அர்த்தமுள்ள செயலுக்காக எங்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மேடை. நாங்கள் இன்று இந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை. ஆனால் அக்கறையுடன் திரும்புகிறோம். உங்களுடன் பகிர்ந்து கொள்ள, ஒன்றாக நிற்க... ஒன்றாக முன்னேற... கர்நாடகாவின் பெருமையாக தொடர ஆர்.சி.பி கேர்ஸ். எப்போதும் அப்படியே இருக்கும். விரைவில் மேலும் விவரங்கள்... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.
- 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களை காணும் ஆர்வத்தில் வந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக பாஜக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அம்மாநில துணை முதலமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும், "பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால்தான் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது" என்றார்.
- ஆர்சிபி அணியினர் திறந்த வெளி பஸ்சில் வெற்றி பேரணி நடத்துவதாக இருந்தது.
- கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாததால் வெற்றி பேரணி ரத்து செய்யப்பட்டது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.
மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு வந்து சேரும் ஆர்சிபி அணி, மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வரை சந்திக்கின்றனர். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு திறந்தவெளி பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடக்க இருந்தது. கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் கூறப்பட்ட நிலையில் அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கொண்டாட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு வந்த ஆர்சிபி வீரர்களுக்கு அந்த அணியின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக ரசிகர்கள் ஆர்சிபி அணியின் வருகைக்காக 1 மணி அளவில் இருந்தே விமான நிலையத்தை ரசிகர்கள் முற்றுகையிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வரை ஆர்சிபி அணியினர் சந்திக்கின்றனர்.
- மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கொண்டாட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.
மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு வந்து சேரும் ஆர்சிபி அணி, மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வரை சந்திக்கின்றனர். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பெங்களூருவில் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாது என காவல்துறை கைவிரித்ததால் அந்த அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- 18 வருட காத்திருப்புக்கு பின்பு பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
18 வருட காத்திருப்புக்கு பின்பு பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 18 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், 'காத்திருந்தது போதும், 18 வயதானால் வாக்காளராக பதிவு செய்யுங்கள்' என கோரிக்கை விடுத்துள்ளது.
- பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
- இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கானது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்ற புகைப்படங்களை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சாம்பியன் என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற டிசர்ட் அணிந்து, கோப்பையை பிடித்தபடி விராட் கோலி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த இன்ஸ்டா பதிவில் "ஐபிஎல் கோப்பையே! உன்னை கையில் ஏந்திக் கொண்டாட, என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே..! இந்த சீசனை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கானது" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- இந்த பேரணியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கும் பேரணி சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெங்களூரு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
- 18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
- இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி- சால்ட் களமிறங்கினர். விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சால்ட் அதிரடியாக விளையாடி 9 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மயங்க் அகர்வால் 24, பட்டிதார் 26 என ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த விராட், அதிரடியாக விளையாட ஆரமித்தார். ஆனால் அதற்குள் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 35 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து லிவிங்ஸ்டன் - ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2 சிக்சர்கள் விளாசிய லிவிங்ஸ்டன் 25 ரன்னிலும் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய ஜித்தேஷ் 10 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி திறமையுடன் விளையாடியது. பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர்.
இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தொடர்ந்து களத்திற்கு வந்த இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 39 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து இளம் வீரர்களான நேஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் வதேரா 15 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ரன்னிலும், ஓமர்சாய் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவ்வணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.






