search icon
என் மலர்tooltip icon

    குஜராத்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த இரண்டு நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    குஜராத் மாநிலம், கேதா மாவட்டத்தில் ஆயுர்வேத சிரப் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களைத் தவிர, மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேதா மாவட்டத்தில் உள்ள நடியாட் டவுன் அருகே பிலோதரா கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் "கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா" என்கிற பெயரில் ஆயுர்வேத சிரப் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    இந்த சிரப் குறைந்தது 50 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சிரப்பில் மிகவும் விஷத்தன்மை கொண்ட "மெத்தில் அல்கோஹால்" என்கிற வேதியியல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சிரப்பை உட்கொண்ட கிராமவாசி ஒருவரின் ரத்த மாதிரியும் சோதனை செய்யப்பட்டது. அதில், மெத்தில் ஆல்கோஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேதா போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "கடந்த இரண்டு நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணைக்காக கடைக்காரர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனவும் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திடீரென 50 முதல் 117 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • ஏறக்குறைய குஜராத் முழுவதும் என்ற வகையில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் தற்போது மழை சீசன் கிடையாது. இருந்த போதிலும் நேற்று எதிர்பாராத வகையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமாகின. மேலும், மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குஜராத்தில் உள்ள 252 தாலுக்காவில் 234 தாலுக்காவில் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் 50 முதல் 117 மி.மீ. வரை மழை பெய்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, "மின்னல் தாக்கி பலர் உயிரிழந்த செய்தி கேட்டு கவலையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளூர் அதிகாரிகள் நிவாரணப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் உள்ள மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரனிபா டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்
    • நிலேஷை ரனிபா பிறருடன் சேர்ந்து அலுவலக மாடிக்கு அழைத்து சென்றார்

    குஜராத் மாநில கதியாவார் தீபகற்ப பகுதியில் உள்ள நகரம், மோர்பி (Morbi). இந்நகரம், செராமிக் பொருட்கள் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணியில் உள்ளதால், இங்கு கட்டிடங்களில், சுவர்களிலும், தரையிலும் ஒட்டப்படும் "டைல்ஸ்" வர்த்தகத்தில் பல தொழிலதிபர்கள் பல காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்குள்ள ரவாபார் குறுக்குசாலையில் ரனிபா (என்கிற விபூதி படேல்) என்பவர் ரனிபா இண்டஸ்ட்ரீஸ் எனும் டைல்ஸ் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவர் சகோதரன் ஓம் படேல், இவருக்கு உதவியாக உள்ளார்.

    இவர்கள் நிறுவனத்தில் நிலேஷ் தல்சானியான் எனும் தொழிலாளி ரூ.12 ஆயிரம் மாத சம்பளத்திற்கு பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 18 அன்று அவரை ரனிபா திடீரென வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.

    இதையடுத்து, பாதி மாத சம்பளத்தை மேலாளர் பரிக்ஷித் என்பவரிடம் நிலேஷ் பல முறை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து சென்ற நிலேஷ், தன் சகோதரர் மேகுல் மற்றும் அண்டை வீட்டுக்காரர் பாவேஷ் ஆகியோருடன் மீண்டும் வந்து மேலாளருடன் சம்பள பாக்கி குறித்து கேட்டார்.

    இந்த சச்சரவில் தீர்வு ஏற்படாததால், மேலாளர் பரிக்ஷித், ரனிபாவுக்கு தகவல் அளித்தார். ரனிபா தன் சகோதரர் ஓம் படேல் மற்றும் சிலருடன் அலுவலகத்திற்கு வந்து, மேலாளர் பரிக்ஷித்துடன் நிலேஷை அலுவலக மேல் தளத்திற்கு அழைத்து சென்றார். அங்கு வாக்குவாதம் மோதலாக மாறியது.

    அப்போது அவர்கள் அனைவரும் நிலேஷை பெல்டால் அடித்து, காலால் உதைத்து, முகத்தில் குத்தி பயங்கரமாக தாக்கினர். ஆத்திரத்திலிருந்த ரனிபா, நிலேஷ் வாயில் தன் காலணியை அழுத்தி சம்பளம் கேட்டதற்காக மன்னிப்பு கேட்க சொல்லி கடுமையாக தாக்கினார். அத்துடன் நிற்காமல், அப்பகுதியில் மீண்டும் நிலேஷை கண்டால் கொன்று விட போவதாகவும் மிரட்டினார்.

    அவமானத்துடனும், காயங்களுடனும் கீழே வந்த நிலேஷ் தன்னுடன் வந்தவர்களிடம் இதை தெரிவித்ததை அடுத்து அவர்கள் நிலேஷை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் மோர்பி நகர காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்தனர்.

    பட்டியலின பிரிவை சேர்ந்த நிலேஷின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக ரனிபா, அவர் சகோதரர் ஓம் படெல் மற்றும் மேலாளர் பரிக்ஷித் ஆகியோர் மீது சம்பந்தபட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்போது வரை கைது நடவடிக்கை ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இந்தியா.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    இந்திய அணி 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்நிலையில், பிற்பகல் 1.30 மணிக்கு இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா 50 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்
    • ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

    விராட் கோலி 63 பந்தில் 54 ரன் எடுத்து ஆல்-அவுட்.

    கே.எல். ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆல்அவுட்.

    மிட்செல் ஸ்டார்க் 10 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்.

    ஹேசில்வுட் 10 ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இங்லிஸ் 5 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    லபுஷேன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பும்ரா 2 விக்கெட்டும், சமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகின்றனர்.
    • தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து இறுதிப்போட்டியை காணவுள்ளனர்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் பலர் மைதானத்திற்கு வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் நேரில் வருகை தரவுள்ளனர்.

    இதேபோல், அசாம், மேகாலயா உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், அமித்ஷா அனுராக் தாகூர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து இறுதிப்போட்டியை காணவுள்ளனர்.

    தொடர்ந்து, உச்சநீதிமன்ற, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்கா, ஐக்கிய அரசு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் வருகை தருகின்றனர்.

    மேலும், தொழிலதிபர் லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி மனைவி நீட்டா அம்பானி ஆகியோரும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகியது.

    இதில், அதிகபட்சமாக ராசி வேன் டெர் துச்சன் 76 ரன்களை குவித்தார். தொடர்ந்து, டி காக் 41 ரன்கள், எய்டென் மார்க்ரம் 25 ரன்கள், டேவிட் மில்லர் 24 ரன்கள், டெம்பா பவுமா 23 ரன்கள், ஹெயின்ரிச் கிளென்சன் 10 ரன்களும் எடுத்தனர். இறுதியாக அன்டில் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 244 ரன்களை எடுத்தது.

    அகமதாபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நம்பர் பிளேட் இல்லாமல் வெள்ளை நிறத்தில் ஒரு கார் வேகமாக வருவதை கண்ட போலீஸ்காரர் கவுதம் ஜோஷி அந்த காரை நிறுத்த முயன்றார்.
    • சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் கார் சென்றபோது பேனட்டில் இருந்து போலீஸ்காரர் கவுதம் ஜோஷி கீழே விழுந்தார்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள கதிர்காம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் கவுதம் ஜோஷி மற்றும் போலீசார் அல்காபுரி பகுதியில் பாலத்தின் கீழ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வெள்ளை நிறத்தில் ஒரு கார் வேகமாக வருவதை கண்ட போலீஸ்காரர் கவுதம் ஜோஷி அந்த காரை நிறுத்த முயன்றார். ஆனால் கார் டிரைவர் காரை நிறுத்தவில்லை. மாறாக போலீஸ்காரர் கவுதம் ஜோஷி மீது மோதினார்.

    இதில் கார் பேனட்டில் தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரரை சுமார் 400 மீட்டர் தூரம் வரை கார் டிரைவர் இழுத்து சென்றுள்ளார். அப்போது சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் கார் சென்றபோது பேனட்டில் இருந்து போலீஸ்காரர் கவுதம் ஜோஷி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார் சம்பந்தப்பட்ட காரை துரத்தி சென்றனர்.

    எனினும் அந்த கார் வேகமாக சென்று விட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் கவுதம் ஜோஷியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கவுதம் ஜோஷி கார் பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் மீது மோதிய கார் டிரைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செல்போன்கள் இல்லாததால் ஆதரவற்று தவித்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசை தொடர்பு கொண்டு புகார் செய்தனர்.
    • கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9-வது மாடியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் ஒரு கொள்ளை கும்பல் புகுந்தது. அவர்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு உள்ளே புகுந்து அந்த பெண்ணை தாக்கி கட்டி போட்டனர்.

    பின்னர் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், லேப்டாப் மற்றும் செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றையும், காரையும் கொள்ளையடித்துள்ளனர்.

    சத்தம் கேட்டு அங்கு சென்ற 19 வயதான வீட்டு பணிப்பெண்ணை கொள்ளை கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் 2 பெண்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    செல்போன்கள் இல்லாததால் ஆதரவற்று தவித்த அந்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசை தொடர்பு கொண்டு புகார் செய்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு பக்கத்து மாவட்ட போலீசாரையும் உஷார் படுத்தினர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் கொள்ளை கும்பல் பஞ்சாப் நோக்கி தப்பி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    அப்போது ஒரு பஸ்சில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றொரு வாலிபர் உத்தரபிரதேசத்தையும், ஒரு வாலிபர் மத்திய பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 5 பேரும் காவலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

    தீபாவளிக்கு விடுமுறையில் ஊருக்கு செல்வதற்கு முன்பாக கொள்ளையடிக்க திட்டம் தீட்டி அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டதும், அப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பெண் தனியாக வசித்து வருவதையும் அறிந்து அவரது வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.