search icon
என் மலர்tooltip icon

    குஜராத்

    • ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து வென்றது.
    • ஆட்ட நாயகி விருது ரிச்சா கோஷுக்கு அளிக்கப்பட்டது.

    அகமதாபாத்:

    டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தில் தொடங்கியது.

    வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஷ்லி கார்ட்னர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. பெத் மூன் மற்றும் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் அரை சதமடித்தனர். பெத் மூன் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.

    ஆர்சிபி தரப்பில் ரேணுகா தாகூர் சிங் 2 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. எல்லீஸ் பெரி 34 பந்தில் 57 ரன்கள் எடுத்தார்.

    5-வது விக்கெட்டுக்கு இணைந்த ரிச்சா கோஷ், கனிகா அவுஜா ஜோடி அதிரடியாக விளையாடியது. ரிச்சா கோஷ் 27 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 64 ரன்கள் குவித்தார். கனிகா 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது ரிச்சா கோஷுக்கு அளிக்கப்பட்டது.

    • இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார்
    • சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம் .

    பயிற்சி மையத்தில் தனது மகளுடன் பேசியதற்காக மாணவன் ஒருவரைப் பெண்ணின் தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.

    கடந்த பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை, பயிற்சி மையத்தில் ஒரு மாணவர் ஆபீஸ் ரூமுக்குள் ஆசிரியர் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதல் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.  

    காயமடைந்த மாணவர் கார்த்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் அந்த மையத்தில் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார். அதே மையத்தில் படித்து வரும் ஒரு பெண் மாணவியுடன் தொலைப்பேசியில் கார்த்திக் பேசி வந்துள்ளார்.

    பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட் இதைப் பற்றி அறிந்ததும், இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். உரையாடலின் போது, ராச்சாத் திடீரென ஒரு கத்தியை எடுத்து கார்த்திக்கை பலமுறை சரமாரியாகக் குத்தினார்.

    சம்பவ இடத்திலிருந்த ஒரு ஆசிரியர் தலையிட்டு அவரை தடுத்தார். சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம். பலத்த காயங்களுடன் கார்த்திக்கை மீட்டு பயிற்சி மைய அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட்டை கைது செய்தனர்.  

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • இந்தியா 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அகமதாபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 52 ரன்களை அடித்து 73-வது ஒருநாள் அரை சதத்தைப் பதிவுசெய்தார்.

    ஆசியாவில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 16,000 ரன்களை எட்டிய வீரராக மாறினார் விராட் கோலி. இதன்மூலம் குறைவான இன்னிங்சில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை எட்டிய வீரராக விராட் கோலி (340 இன்னிங்ஸ்) சாதனையை படைத்தார்.

    • சுப்மன் கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
    • குறைந்த இன்னிங்சில் 2,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    அகமதாபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார். விராட் கோலி அரை சதம் கடந்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், சுப்மன் கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன் 50-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.

    மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

    • ஆசிரியர் ராஜேந்திர பார்மரிடம் பள்ளி முதல்வர் ஹிதேந்திர சிங் தாகூர் விசாரித்துள்ளார்.
    • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் பள்ளி முதல்வர், ஆசிரியர் ஒருவரை சரமாரியாக அடிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    நவ்யூக் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ராஜேந்திர பார்மர் மாணவர்களை திட்டி கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக ராஜேந்திர பார்மரிடம் பள்ளி முதல்வர் ஹிதேந்திர சிங் தாகூர் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பள்ளி முதல்வர், ஆசிரியரை 18 முறை அறைந்துள்ளார் .

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக நிலையில், மாவட்ட கல்வி அதிகாரி இது தொடர்பாக விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
    • டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு மிரட்டல் வந்துள்ளது.

    அண்மைக் காலங்களாக விமானங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகி உள்ளது. சில நாட்கள் முன் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் விமானத்துக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது.

    இந்நிலையில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்விதமாக கடிதம் ஒன்று விமான நிலைய வளாகத்தில் கிடந்துள்ளது.

    பெயர் எழுதப்படாத அந்த கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் சில தனியார் பள்ளிகளுக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பிரபலங்கள் உள்ளிட்ட யாரும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.
    • உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு.

    இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரும், ஆசியாவின் 2-வது பணக்காரராகவும் திகழ்பவர் கவுதம் அதானி. இவரது இளைய மகன் ஜீத் மற்றும் திவா ஷா ஆகியோருக்கு திருமணம் நிச்சயம் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில் திருமணம் நடைபெற்றது.

    ஜெயின் முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு எந்த பிரபலங்களும் அழைக்கப்படவில்லை. அதானி குழுமத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கான வரவேற்பு நாளை நடைபெற இருக்கிறது.

    திருமணத்தை முன்னிட்டு பல்வேறு சமூக சேவைகளுக்கான 10 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக வழங்குவதாக கவுதம் அதானி உறுதி அளித்துள்ளார்.

    இது தொடர்பான அதானி வெளியிட்டுள்ள பதிவில் "எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன், ஜீத்தும் திவாவும் இன்று திருமணத்தின் புனிதமான முடிச்சை பதிவு செய்தனர். இந்த திருமணம் மிகவும் எளிமையான மற்றும் தனிப்பட்ட விழா. ஆகவே, நாங்கள் விரும்பினாலும் கூட, அனைத்து நலம் விரும்பிகளையும் அழைக்க முடியவில்லை. அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், திருமணத்தின் படங்களை வெளியிட்டு, புதுமண தம்பதியினருக்கு ஆசீர்வாதங்களையும் அன்பையும் கோரினார். அதானிக்கு கரண், ஜீத் என இரண்டு மகன்கள். மூத்த மகன் பரிதி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் வழக்கறிஞர் மற்றும் சிரில் அமர்சந்த் மங்கல்தாஸின் பார்ட்னர் ஆவார்.

    2-வது மகன் ஜீத் தற்போது திவாவை திருமணம் செய்துள்ளார். திவா டைமண்ட் வியாபாரியின் மகள் ஆவார்.

    • பாதாள சாக்கடையில் 2 வயது ஆண் குழந்தை விழுந்தது.
    • 24 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் வைரவ் கிராமத்தில் உள்ள ஒரு பாதாள சாக்கடையில் 2 வயது ஆண் குழந்தை விழுந்ததாக போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புக் குழுவினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் சுமார் 60 முதல் 70 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கனரக வாகனம் ஒன்று ஏறி இறங்கியதால் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்தது. இதனால் இந்த சம்பவம் நிகழ்ந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 150 மீட்டர் வரை தேடிப்பார்த்தும் குழந்தை இருக்கும் இடம் தெரியவில்லை. தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது.

    இந்நிலையில், பாதாள சாக்கடைக்குள் விழுந்த குழந்தை சுமார் 24 மணி நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

    பாதாள சாக்கடையில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக குஜராத் அரசு 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
    • இந்தக் குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமை தாங்குகிறார்.

    அகமதாபாத்:

    நாட்டின் அனைத்து மத, மொழி, இன மக்களுக்கும் ஒரே மாதிரியான, பொதுவான உரிமைகளை வழங்கும் விதத்தில் பொது சிவில் சட்டம் ஒன்றை இயற்றுவதை மத்திய பா.ஜ.க. அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

    உத்தரகாண்டை தொடர்ந்து பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநில அரசும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    பொது சிவில் சட்டத்துக்கான வரைவைத் தயாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

    இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 4 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இந்தக் குழு தனது அறிக்கையை 45 நாளில் தயாரித்து அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்தக் குழுவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சி.எல்.மீனா, வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகர், முன்னாள் துணைவேந்தர் தக்ஷேஷ் தாக்கர், சமூக ஆர்வலர் கீதா ஷ்ராப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    • சூரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது.
    • மீண்டும் திருமண மண்டபத்துக்கு சென்று திருமணம் நடந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என போலீசார் கருதினர்.

    திருமணங்கள் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு விமரிசையாக நடைபெறும் போது சில நேரங்களில் அற்ப காரணங்களுக்காக மணமக்களின் வீட்டாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதே போன்ற ஒரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

    பீகாரை சேர்ந்த ராகுல் பிரமோத் மற்றும் குஜராத்தை சேர்ந்த அஞ்சலி குமாரிக்கு சூரத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக சூரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. பெரும்பாலான சடங்குகள் நிறைவடைந்து மணமக்கள் மாலை மாற்றுவது மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் திடீரென மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தினர்.

    விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி மணமகனின் குடும்பத்தினர் வாக்குவாதம் செய்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகளின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சனை போலீஸ் நிலையம் சென்றது. போலீசார் விசாரித்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர். ஆனாலும் மீண்டும் திருமண மண்டபத்துக்கு சென்று திருமணம் நடந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என போலீசார் கருதினர்.

    இதையடுத்து மணமக்களை போலீஸ் நிலையத்துக்கே வரவழைத்து அங்கு இரு வீட்டார் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். வழக்கமாக குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இந்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

    • பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு 48 பக்தர்களுடன் சொகுசு பேருந்து ஒன்று ஆன்மீக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளது.
    • கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    குஜராத்தில் சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

    பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு 48 பக்தர்களுடன் சொகுசு பேருந்து ஒன்று ஆன்மீக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளது.

    இன்று காலை 4.15 மணியளவில் டாங் மாவட்டத்தில் சபுதாரா மலைப் பிரதேச சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் தீவிர காயங்களுடன் அஹ்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் லேசான காயங்களுடன் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    • தாயுடன் தகாத உறவு வைத்திருந்ததால் மகன்களுக்கு ஆத்திரம்.
    • பலமுறை சொல்லியும் கேட்காததால் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.

    தாய் உடன் தகாத உறவை வைத்திருந்த கொத்தனாரை, அந்த பெண்ணின் இரண்டு மகன்கள் கத்தியால் குத்தி, குடலை உருவி எடுத்து வானத்தை நோக்கி வீசியதுடன், துண்டுதுண்டாக வெட்டிய சம்பவம் குஜரா்த மாநிலத்தில் நடந்துள்ளது.

    குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கிராமம் ஒன்றில் தாய் மற்றும் சஞ்சய் தாகூர் (வயது 27), ஜெயேஷ் தாகூர் (23) ஆகிய அவரது இரண்டு மகன்கள் வசித்து வந்துள்ளனர். பெண்ணின் கணவர் இறந்துவிட்டார்.

    இந்த பெண்ணிற்கு கொத்தனார் வேலை செய்து வந்த 53 வயதான ரடன்ஜி தாகூர் என்பவர் உடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவு பல வருடங்களாக நீடித்துள்ளது. இருவருக்கும் இடையிலான உறவு, அந்த பெண்ணின் மகன்களுக்கு பிடிக்கவில்லை.

    இது தொடர்பாக பலமுறை ரடன்ஜி தாகூரிடம், தாய் உடனான தகாத உறவை நிறுத்திக் கொள்ள வற்புறுத்தியுள்ளனர். ஆனால் ரடன்ஜி தாகூர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார்.

    தனது அம்மாவை இழிவுப்படுத்துவதாகவும், மறைந்த அப்பாவை கலங்கப்படுத்துவதாகவும் கருதினர். மேலும் உறவினர் இருவரையும் பார்த்து ஏளனமாக பேசியது மகன்களுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

    இதனால் ரடன்ஜி தாகூரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இந்த வார தொடக்கத்தில் இவர்களின் வீட்டருகே ரடன்ஜி தாகூர் வந்தபோது, இரண்டு மகன்களும ரடன்ஜி தாகூரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் ரடன்ஜி நிலைகுலைந்தார். உடனே இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தினர்.

    இதில் ரடன்ஜி தாகூரின் குடல் கீழே சரிந்தது. இருந்தபோதிலும் அவர்களுடைய ஆத்திரம் அடங்கவில்லை. குடலை எடுத்து வானத்தை நோக்கி வீசி, துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ளனர்.

    இவை அனைத்தும் பட்டப்பகலில் பெரும்பாலானோரின் முன்னிலையில் நடந்துள்ளனர். சிலர் இதை தடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பலனில்லை. தங்கள் ஆத்திரம் தீர்ந்ததும் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர்.

    இது தொடர்பாக ரடன்ஜி தாகூர் மகன் போலீசில் புகார் அளிக்க, போலீசார் செல்போன் நம்பரை வைத்து இருவரையும் கைது செய்துள்ளனர். 

    ×