என் மலர்
நீங்கள் தேடியது "நெதர்லாந்து"
- கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
- மற்ற நாடுகளில் உள்ள தங்களது பழங்கால பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு அருங்காட்சியகம் வலியுறுத்தியது.
நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச் நகரில் கலை மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது எகிப்துக்கு சொந்தமான ஒரு கல்சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த சிற்பம் எகிப்து மன்னர் மூன்றாம் துட்மோஸ் வம்சத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனவும், சட்ட விரோதமாக இங்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மற்ற நாடுகளில் உள்ள தங்களது பழங்கால பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு அருங்காட்சியகம் வலியுறுத்தியது.
இந்தநிலையில் எகிப்துக்கு சொந்தமான கல்சிற்பத்தை நெதர்லாந்திடம் திருப்பி ஒப்படைப்பதாக பிரதமர் டிக் ஸ்கூப் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.
- காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளனர்.
காசாவை ஆக்கிரமித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதித்து நடவடிக்கை எடுக்க முடியாததால் நெதர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெசல் ஸ்மோட்ரிச் மற்றும் இடாமர் பென்-கிர் போன்ற தீவிர வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றும் இஸ்ரேலிய அமைச்சர்கள் டச்சு நாட்டுக்குள் நுழைவதையும், இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.
இருப்பினும், அமைச்சரவையில் எதிர்ப்பு காரணமாக இது நடக்கவில்லை. இதனால் காஸ்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
வெளியுறவு அமைச்சர் ராஜினாமாவைத் தொடர்ந்து, சமூக ஒப்பந்த அமைச்சர் மற்றும் அரசு செயலாளர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) காசாவில் பஞ்சம் நிலவுவதாக அறிவித்தது. காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளதாகக் அதன் அறிக்கை கூறியது.
- இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை நடக்கிறது
- டி20 உலககோப்பைக்கு கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். அதன்படி கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது. தற்போது இத்தாலி, நெதர்லாந்து அணிகள் 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இத்தாலி முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. இன்னும் 5 நாடுகள் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது.
- செல்போனுக்கு எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பத்தை வெங்கட் ரமணன் பதிவு செய்து இருந்தார்.
- வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
சென்னை, மேற்கு மாம்பலம், சீனிவாச பிள்ளை தெருவை சேர்ந்தவர் வெங்கட் ரமணன். இவரது மனைவி கலா. இவர்களது மகள் நெதர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வெங்கட் ரமணனும், அவரது மனைவியும் கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு நெதர்லாந்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர்.
இந்த வீட்டில் ஏற்கனவே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் மர்ம நபர்கள் வந்தால் செல்போனுக்கு எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பத்தையும் வெங்கட் ரமணன் பதிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வெங்கட்ரமணனின் செல்போனுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் தனது செல்போன் மூலம் வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடை ந்தார்.
இதுபற்றி அவர் உடனடியாக செல்போன் மூலம் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வெங்கட சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் வெங்கட்ர மணனின் வீட்டிற்கு சென்றபோது கொள்ளையர்கள் பொருட்களுடன் தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு ரோந்து பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் ஏழுமலை ஆகியோர் தலைமையிலான அசோக் நகர் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அருகில் உள்ள பக்தவத்சலம் தெருவில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 2 பேரையும் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பல்லாவரம் பகுதியை சேர்ந்த கமலக் கண்ணன் (65), திருப்பத்தூரை சேர்ந்த ஆரி பிலிப் (57) என்பது தெரிந்தது.
இதில் பிடிபட்ட கொள்ளையன் கமலக்கண்ணன் மீது 70 வழக்குகளும் ஆரி பிலிப் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.
நண்பர்களான இருவரும் கூட்டாக சேர்ந்து பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்கள் ஆவர். போலீசார் விரட்டிசென்றபோது தப்பி ஓடமுயன்ற கொள்ளையன் ஆரி பிலிப் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கைதான 2 பேரிடம் இருந்து 6 பவுன் நகை, 1 ½ கிலோ வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு பணம் மற்றும் கவரிங் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தின் பூட்டை உடைத்தும் புகுந்து உள்ளனர். அங்கு லேப்டாப் மட்டும் இருந்ததால் கொள்ளையடிக்காமல் திரும்பி வந்து இருக்கிறார்கள்.
அவர்கள் இதுபோல் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை ஆனதன் மூலம் நெதர்லாந்து ஒரு தனித்துவமான சாதனையை முறியடித்தது.
- நெதர்லாந்து அணிக்காக தேஜா நிடமனுரு அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார்.
உலகக்கோப்பை தகுதி சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்- நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து விக்கெட்டை இழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.
இதையடுத்து ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 30 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் 5 சாதனைகள் அரங்கேறியுள்ளது.
போட்டியை சமன் செய்த அதிகபட்ச ஸ்கோர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை ஆனதன் மூலம் நெதர்லாந்து ஒரு தனித்துவமான சாதனையை முறியடித்தது. அவர்கள் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 374 ரன்களை சமன் செய்தனர். இதற்கு முன் நேப்பியரில் 2008-ல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் 340 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
சேசிங் செய்யும் போது மூன்றாவது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்
நெதர்லாந்தின் 374 ரன், ஒருநாள் போட்டிகளில் இலக்கைத் துரத்தியதில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும். ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் இதுவாகும். தென்னாப்பிரிக்கா 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 435 ரன்களை சேஸ் செய்து அதிகபட்ச சேசிங் ஆகும்.
சூப்பர் ஓவரில் அதிக ரன்
இந்தப் போட்டியில், லோகன் வான் பீக் கிரிக்கெட் வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். 30 ரன்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.
முந்தைய சாதனையாக 2008-ல் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 போட்டியில் 25 ரன்களும், கடந்த ஆண்டு பெண்கள் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவரில் 25 ரன்கள் எடுத்ததே ஆகும்.
நெதர்லாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்த தேஜா நிடமனுரு
நெதர்லாந்து அணிக்காக தேஜா நிடமனுரு அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். இவர் மார்ச் தொடக்கத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தனது முதல் சதத்தை அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நிக்கோலஸ் பூரன் மூன்றாவது அதிவேக சதம் அடித்தார்
63 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிவேக சதம் அடித்த மூன்றாவது வீரராக நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 1999 -ல் வங்காளதேசத்திற்கு எதிராக பிரையன் லாரா 45 பந்துகளிலும், 2019-ல் இங்கிலாந்துக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 55 பந்துகளில் அதிவேக சதம் விளாசினர்.
அதற்கு அடுத்தப்படியாக ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இது மூன்றாவது அதிவேக சதமாகும்.
- நாட்டில் தஞ்சம் கேட்போரின் எண்ணிக்கையை குறைக்க ருடே முடிவு
- எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ருடே தனது பதவியை ராஜினாமா செய்தார்
நெதர்லாந்தில் மார்க் ருடே நான்கு கட்சிகள் கூட்டணி ஆதரவில் பிரதமராக இருந்து வந்தார். புலம்பெயர்ந்து நெதர்லாந்துக்கு வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்த கூட்டணி கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்பாடாமல் மோதல் முற்றியது. ருடே சமரசம் செய்ய கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதில் ரகசியம் ஒன்றுமில்லை. இடம்பெயர்வு கொள்கையில் கூட்டணி கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்து நிலவியது. தேர்தல் நடைபெறும் வரை மந்திரி சபை (காபந்து அரசு) தொடரும்' என ருடே தெரிவித்தார்.
இதன் காரணமாக 150 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது. ருடே நெதர்லாந்தின் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்தில் அடைக்கலம் கேட்டு வருபோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு 47 ஆயிரம் தஞ்சம் அடைய அனுமதி கேட்ட நிலையில், இந்த வருடம் அது இந்த வருடம் 70 ஆயிரமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இதை கட்டுக்குள் கொண்டுவர மாதத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என ருடே தலைமையிலான கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், தற்போது ஆட்சி கவிழ்ந்துள்ளது.
- நேற்று முன் தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- 16 மணி நேரம் ஆகியும் தியணைப்பு படையினரால் தீயை அணைக்க முடியவில்லை.
நெதர்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில் 3000 கார்களை ஏற்றி சென்ற ஒரு சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார்.
199 மீட்டர் நீளமுள்ள பனாமாவில் பதிவு செய்யப்பட்ட "ஃப்ரெமாண்டில் ஹைவே" எனும் கப்பல் ஜெர்மனியிலிருந்து எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அக்கப்பலில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பலர் கடலில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது:
இறந்த இந்திய மாலுமியின் குடும்பத்தோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் செய்கிறோம். காயமடைந்த 20 பேருடனும் தொடர்பில் உள்ளோம். அந்த கப்பல் நிறுவனத்திடமிருந்தும், நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்தும் தேவைப்படும் தகவல்களை பெற்று வருகிறோம்.
இவ்வாறு தூதரகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
23 மாலுமிகளை மீட்க மீட்பு படகுகளும், ஹெலிகாப்டர்களும் உபயோகப்படுத்தப்பட்டதாக டச்சு கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.
தீ விபத்து குறித்து வெளியாகும் படங்களில் அக்கப்பலிலிருந்து புகை வருவது தெரிகிறது. கப்பலில் இருந்த 25 எலக்ட்ரிக் கார்களில் ஒன்றிலிருந்து இந்த தீ உருவாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ உருவாகி 16 மணி நேரம் ஆகியும் தியணைப்பு படையினரால் தீயை அணைக்க முடியவில்லை.
தீயை முழுவதும் அணைக்க பல நாட்கள் ஆகலாம் என்றும் தீயை அணைக்க நீரை கப்பலில் கொண்டு தேக்கி வைத்து பயன்படுத்தும் போது நீரின் பாரத்தினால் கப்பல் கவிழ்ந்து விடும் ஆபத்து இருப்பதால், தீயை அணைக்க சரியான வழிமுறையை திட்டமிட வேண்டும் எனவும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாடன் கடலில் உள்ள அமலேண்ட் தீவின் கடற்கரை பகுதியிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் அருகே இக்கப்பலிலிருந்து உதவி கோரும் அழைப்பு முதலில் வந்ததாக கடலோர காவற்படை தெரிவித்தது.
- தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது.
- இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தர்மசாலா:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது. இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடபடும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் எனவும் முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
- தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது.
- மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தர்மசாலா:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது. இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2.30 டாஸ் போடப்படும் எனவும் 3 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2.20 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவன் வருமாறு:-
தென்ஆப்பிரிக்கா:
குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ககிசோ ரபடா, கேஷவ் மஜராஜ், இங்கிடி, ஜெரால்டு கோட்ஜி.
நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ டாவ்ட், காலின் அகேர்மான், பாஸ் டி லீட், தேஜா நிதாமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைபிரான்ட் இங்கில்பிரிட், வான்டெர் மெர்வ், லோகன் வான் பீக், ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.
- இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது.
- சதீர சமரவிக்ரம சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக்டோபர் 21) இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
நெதர்லாந்து அணியினர் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதன்படி நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இலங்கை அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்ட இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். 70 ரன்கள் எடுத்த போது சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 262 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான நிசாங்கா 54 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய பெரரா 5 ரன்களிலும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த சதீர சமரவிக்ரம சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய அசலங்கா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவில் சதீர சமரவிக்ரம 91 ரன்களுடனும், துஷன் ஹேமந்த 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
- நெதர்லாந்து அணியின் மேக்ஸ் ஓ டாவ்ட் 43 ரன்களை குவித்தார்.
- ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 56 ரன்களை குவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி பரேசி- மேக்ஸ் ஓ டாவ்ட் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வெஸ்லி பரேசி அவுட் ஆனார். இதனையடுத்து கேம்ஸ் ஓ டாவ்ட் - அகேர்மான் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேக்ஸ் ஓ டாவ்ட் 43 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் அகேர்மான் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். 92 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர்.
சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மட்டுமே நிலைத்து ஆடி 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நபி 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான குர்பாஸ் மற்றும் சத்ரான் முறையே 10 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரகமத் ஷா தன் பங்கிற்கு 52 ரன்களையும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 56 ரன்களையும் குவித்தனர்.
போட்டி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ஷஹிடி 56 ரன்களுடனும், உமர்சாய் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- கேப்டன் ரோகித் சர்மா 61 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார்.
- ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அபாரமான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 61 மற்றும் 51 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 51 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவருடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. போட்டி முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்களை குவித்தது. ஷ்ரேயஸ் அய்யர் 128 ரன்களுடனும், சூர்ய குமார் யாதவ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல் 102 ரன்களை குவித்தார். நெதர்லாந்து சார்பில் லீட் 2 விக்கெட்டுகளையும், மெக்கெரீன், மெர்வே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.






