என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெதர்லாந்து"

    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது.
    • ஷிவம் துபே அதிரடியாக ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார்.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஷிவம் துபெ அதிரடியாக

    ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன்னும், திலக் வர்மா 31 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும் எடுத்தனர்.

    நெதர்லாந்து சார்பில் வான் பீக் 3 விக்கெட்டும், ஆர்யன் தத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. பாஸ் டி லீட் 33 ரன்னும், ஜாக் லயன் 26 ரன்னும், மைக்கேல் லெவிட் 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 4வது வெற்றியைப் பதிவு செய்தது

    இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், ஷிவம் துபெ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஷிவம் துபே 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 3-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 18 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து திலக் மற்றும் சூர்யகுமார் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். திலக் 27 பந்தில் 31 ரன்னிலும் சூர்யகுமார் 28 பந்தில் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதனை தொடர்ந்து ஷிவம் துபே - பாண்ட்யா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். துபே முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 21 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியாக வந்த ரிங்கு சிங் தனது பங்குக்கு ஒரு சிக்சரை பறக்கவிட்டார்.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குல்தீப் யாதவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கும் அக்சர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.

    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.
    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    மும்பையில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும், கொழும்பில் பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இந்திய அணி 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை இன்று எதிர் கொள்கிறது.

    அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.நெதர்லாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி பல சாதனைகளைப் புரிந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரன் குவிப்பில் புதிய சாதனை படைக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.

    டி20 போட்டியில் இந்திய அணி வங்காள தேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதைத் தாண்டி புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.

    சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இதுவரை ஆடவில்லை. உடல் தகுதியுடன் இருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. வெற்றி அணியே தேவை என்று கருதினால் மாற்றம் இருக்காது.

    பேட்டிங்கில் இஷான் கிஷன் (158 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (128 ரன்), திலக்வர்மா, ஷிவம் துபே ஆகியோரும், பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் (தலா 6 விக்கெட்), பும்ரா (3 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் பணியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுகிறார்.

    டி20 போட்டியில் இந்திய அணி நெதர்லாந்துடன் மோதுவது 2-வது முறை. இதற்குமுன் 2022 உலகக் கோப்பையில் சிட்னியில் நடந்த ஆட்டத்தில் 56 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    நெதர்லாந்து ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளது. பாகிஸ்தானிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும், அமெரிக்காவிடம் 93 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. நமீபியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந் தது.

    • ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
    • ஆஸ்திரேலியா 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 6 லீக் ஆட்டம் மற்றும் ஒரு சூப்பர் 8 சுற்று போட்டி என ஆக மொத்தம் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

    அதன்படி, கடந்த 8-ந்தேதி நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் (டி பிரிவு), நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும் (டி பிரிவு) தோற்கடித்தன.

    சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3-வது போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    நெதர்லாந்து அணி அமெரிக்காவை தோற் கடித்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் (3 விக்கெட்) தோற்றது. 2-வது போட்டியில் நமீபியாவை (7 விக்கெட்) வீழ்த்தியது. அமெரிக்க அணி இந்தியாவிடம் 29 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானிடம் 32 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இந்திய அணி ஆடாவிட்டாலும் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 2 ஆட்டங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது. இதேபோல நாளையும் ரசிகர்கள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை நடைபெறும் மற்ற போட்டிகளில் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே (கொழும்பு, காலை 11 மணி), கனடா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (டெல்லி, மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.

    ஆஸ்திரேலியா 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் போட்டியில் அயர்லாந்தை 67 ரன்னில் வீழ்த்தி இருந்தது. ஜிம்பாப்வேயும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஓமனை (8 விக்கெட்) தோற்கடித்தது.

    இத்தாலி, நேபாளம் அணிகள் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

    • மேக்ஸ் டவுட்டை இணையத்தில் இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
    • நெதர்லாந்து ரசிகர்களை இந்திய ரசிகர்கள் என் மீது கோபமாக இருந்ததாகத் தெரிகிறது

    டி20 உலகக் கோப்பை இன்று தொடங்கியது. கொழும்பு நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் குரூப் ஏ அணியில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- நெதர்லாந்து அணிகள் மோதின

    டாஸ் வென்ற பாகிஸதான் பந்து வீச்சை தொடங்கியது. அதன்படி நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்து 19.5 ஓவரில் 147 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதையடுத்து 148 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், பகீம் அஷ்ரப் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர் மேக்ஸ் டவுட் தவறவிட்டார். அதன் விளைவாக 19 ஆவது ஓவரிலேயே 24 ரன்களை பகீம் அஷ்ரப் விளாசினார். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வென்றது.

    கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 29 ரன்கள் குவித்த பகீம் அஷ்ரப் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், பகீம் அஷ்ரப் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட மேக்ஸ் டவுட்டை இணையத்தில் இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    இதுகுறித்து பேசிய மேக்ஸ் டவுட், "என்னை பற்றி வந்த சில கருத்துக்கள் மிகவும் கடுமையானவை, யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்று. நெதர்லாந்து ரசிகர்களை இந்திய ரசிகர்கள் என் மீது கோபமாக இருந்ததாகத் தெரிகிறது" என்று கிண்டலாக தெரிவித்தார். 

    • கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
    • மற்ற நாடுகளில் உள்ள தங்களது பழங்கால பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு அருங்காட்சியகம் வலியுறுத்தியது.

    நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச் நகரில் கலை மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது எகிப்துக்கு சொந்தமான ஒரு கல்சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த சிற்பம் எகிப்து மன்னர் மூன்றாம் துட்மோஸ் வம்சத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனவும், சட்ட விரோதமாக இங்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மற்ற நாடுகளில் உள்ள தங்களது பழங்கால பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு அருங்காட்சியகம் வலியுறுத்தியது.

    இந்தநிலையில் எகிப்துக்கு சொந்தமான கல்சிற்பத்தை நெதர்லாந்திடம் திருப்பி ஒப்படைப்பதாக பிரதமர் டிக் ஸ்கூப் தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.
    • காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளனர்.

    காசாவை ஆக்கிரமித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதித்து நடவடிக்கை எடுக்க முடியாததால் நெதர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பெசல் ஸ்மோட்ரிச் மற்றும் இடாமர் பென்-கிர் போன்ற தீவிர வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றும் இஸ்ரேலிய அமைச்சர்கள் டச்சு நாட்டுக்குள் நுழைவதையும், இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.

    இருப்பினும், அமைச்சரவையில் எதிர்ப்பு காரணமாக இது நடக்கவில்லை. இதனால் காஸ்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

    வெளியுறவு அமைச்சர் ராஜினாமாவைத் தொடர்ந்து, சமூக ஒப்பந்த அமைச்சர் மற்றும் அரசு செயலாளர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.  

    முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) காசாவில் பஞ்சம் நிலவுவதாக அறிவித்தது. காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளதாகக் அதன் அறிக்கை கூறியது.   

    • இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை நடக்கிறது
    • டி20 உலககோப்பைக்கு கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். அதன்படி கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது. தற்போது இத்தாலி, நெதர்லாந்து அணிகள் 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இத்தாலி முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. இன்னும் 5 நாடுகள் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது.

    • செல்போனுக்கு எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பத்தை வெங்கட் ரமணன் பதிவு செய்து இருந்தார்.
    • வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    சென்னை, மேற்கு மாம்பலம், சீனிவாச பிள்ளை தெருவை சேர்ந்தவர் வெங்கட் ரமணன். இவரது மனைவி கலா. இவர்களது மகள் நெதர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் வெங்கட் ரமணனும், அவரது மனைவியும் கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு நெதர்லாந்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர்.

    இந்த வீட்டில் ஏற்கனவே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் மர்ம நபர்கள் வந்தால் செல்போனுக்கு எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பத்தையும் வெங்கட் ரமணன் பதிவு செய்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வெங்கட்ரமணனின் செல்போனுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் தனது செல்போன் மூலம் வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடை ந்தார்.

    இதுபற்றி அவர் உடனடியாக செல்போன் மூலம் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வெங்கட சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் வெங்கட்ர மணனின் வீட்டிற்கு சென்றபோது கொள்ளையர்கள் பொருட்களுடன் தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு ரோந்து பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் ஏழுமலை ஆகியோர் தலைமையிலான அசோக் நகர் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அருகில் உள்ள பக்தவத்சலம் தெருவில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 2 பேரையும் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் பல்லாவரம் பகுதியை சேர்ந்த கமலக் கண்ணன் (65), திருப்பத்தூரை சேர்ந்த ஆரி பிலிப் (57) என்பது தெரிந்தது.

    இதில் பிடிபட்ட கொள்ளையன் கமலக்கண்ணன் மீது 70 வழக்குகளும் ஆரி பிலிப் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

    நண்பர்களான இருவரும் கூட்டாக சேர்ந்து பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்கள் ஆவர். போலீசார் விரட்டிசென்றபோது தப்பி ஓடமுயன்ற கொள்ளையன் ஆரி பிலிப் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கைதான 2 பேரிடம் இருந்து 6 பவுன் நகை, 1 ½ கிலோ வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு பணம் மற்றும் கவரிங் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    முன்னதாக கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தின் பூட்டை உடைத்தும் புகுந்து உள்ளனர். அங்கு லேப்டாப் மட்டும் இருந்ததால் கொள்ளையடிக்காமல் திரும்பி வந்து இருக்கிறார்கள்.

    அவர்கள் இதுபோல் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை ஆனதன் மூலம் நெதர்லாந்து ஒரு தனித்துவமான சாதனையை முறியடித்தது.
    • நெதர்லாந்து அணிக்காக தேஜா நிடமனுரு அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார்.

    உலகக்கோப்பை தகுதி சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்- நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து விக்கெட்டை இழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.

    இதையடுத்து ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 30 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் 5 சாதனைகள் அரங்கேறியுள்ளது.

    போட்டியை சமன் செய்த அதிகபட்ச ஸ்கோர்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை ஆனதன் மூலம் நெதர்லாந்து ஒரு தனித்துவமான சாதனையை முறியடித்தது. அவர்கள் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 374 ரன்களை சமன் செய்தனர். இதற்கு முன் நேப்பியரில் 2008-ல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் 340 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    சேசிங் செய்யும் போது மூன்றாவது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்

    நெதர்லாந்தின் 374 ரன், ஒருநாள் போட்டிகளில் இலக்கைத் துரத்தியதில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும். ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் இதுவாகும். தென்னாப்பிரிக்கா 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 435 ரன்களை சேஸ் செய்து அதிகபட்ச சேசிங் ஆகும்.

    சூப்பர் ஓவரில் அதிக ரன்

    இந்தப் போட்டியில், லோகன் வான் பீக் கிரிக்கெட் வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். 30 ரன்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.

    முந்தைய சாதனையாக 2008-ல் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 போட்டியில் 25 ரன்களும், கடந்த ஆண்டு பெண்கள் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவரில் 25 ரன்கள் எடுத்ததே ஆகும்.

    நெதர்லாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்த தேஜா நிடமனுரு

    நெதர்லாந்து அணிக்காக தேஜா நிடமனுரு அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். இவர் மார்ச் தொடக்கத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தனது முதல் சதத்தை அடித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நிக்கோலஸ் பூரன் மூன்றாவது அதிவேக சதம் அடித்தார்

    63 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிவேக சதம் அடித்த மூன்றாவது வீரராக நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 1999 -ல் வங்காளதேசத்திற்கு எதிராக பிரையன் லாரா 45 பந்துகளிலும், 2019-ல் இங்கிலாந்துக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 55 பந்துகளில் அதிவேக சதம் விளாசினர்.

    அதற்கு அடுத்தப்படியாக ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இது மூன்றாவது அதிவேக சதமாகும்.

    • நாட்டில் தஞ்சம் கேட்போரின் எண்ணிக்கையை குறைக்க ருடே முடிவு
    • எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ருடே தனது பதவியை ராஜினாமா செய்தார்

    நெதர்லாந்தில் மார்க் ருடே நான்கு கட்சிகள் கூட்டணி ஆதரவில் பிரதமராக இருந்து வந்தார். புலம்பெயர்ந்து நெதர்லாந்துக்கு வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்த கூட்டணி கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்பாடாமல் மோதல் முற்றியது. ருடே சமரசம் செய்ய கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதில் ரகசியம் ஒன்றுமில்லை. இடம்பெயர்வு கொள்கையில் கூட்டணி கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்து நிலவியது. தேர்தல் நடைபெறும் வரை மந்திரி சபை (காபந்து அரசு) தொடரும்' என ருடே தெரிவித்தார்.

    இதன் காரணமாக 150 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது. ருடே நெதர்லாந்தின் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெதர்லாந்தில் அடைக்கலம் கேட்டு வருபோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு 47 ஆயிரம் தஞ்சம் அடைய அனுமதி கேட்ட நிலையில், இந்த வருடம் அது இந்த வருடம் 70 ஆயிரமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

    இதை கட்டுக்குள் கொண்டுவர மாதத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என ருடே தலைமையிலான கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், தற்போது ஆட்சி கவிழ்ந்துள்ளது.

    ×