என் மலர்
நீங்கள் தேடியது "டி20 உலககோப்பை கிரிக்கெட்"
- இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை நடக்கிறது
- டி20 உலககோப்பைக்கு கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். அதன்படி கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது. தற்போது இத்தாலி, நெதர்லாந்து அணிகள் 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இத்தாலி முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. இன்னும் 5 நாடுகள் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது.
- குரூப் 1-பிரிவில் இலங்கை, நியூசிலாந்தை தவிர மற்ற அணிகள் 3 போட்டிகள் முடிந்து விட்டது.
- நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன.
சிட்னி:
மழை காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் சுவாரசியம் குறைந்து காணப்படுகிறது.
மழை காரணமாக இதுவரை 4 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே, நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான், அயர்லாந்து-ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆகிய போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இதில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருந்தது. மழையால் அந்த அணியின் வெற்றி பறி போனது. மற்ற 3 போட்டிகளும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
மேலும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையின் விதியால் இங்கிலாந்து அதிர்ஷ்டம் இல்லாமல் அதிர்ச்சிகரமாக தோற்றது.
மழையால் ஆட்டம் ரத்தாவதால் அரை இறுதியில் நுழைய 'குரூப்-1' பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த பிரிவில் இலங்கை, நியூசிலாந்தை தவிர மற்ற அணிகள் 3 போட்டிகள் முடிந்து விட்டது. நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதல் இடத்தில் இருக்கிறது.
இலங்கை, ஆப்கானிஸ்தான் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் இந்த பிரிவில் எந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்ல இயலாத நிலை காணப்படுகிறது. ஒவ்வொரு அணியும் போட்டியில் உள்ளன.
முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இந்த பிரிவில் இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.
குரூப்-2 பிரிவில் இந்தியா 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே தலா 3 புள்ளியும், வங்காள தேசம் 2 புள்ளியும் பெற்றுள்ளன. பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் தாங்கள் மோதிய 2 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.






