search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனடா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல்.
    • அமெரிக்கா பயன்படுத்தும் நான்கில் ஒரு பங்கு எண்ணெய் கனடாவில் இருந்து வருகிறது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என டொனால்டு டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, டிரம்பின் வரி மிரட்டல் தீங்கு என்பதை அமெரிக்க மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:-

    அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என்கிறார். இது நடக்கப்போவதில்லை. கனடாவில் இருந்து வரும் மின்சாரம் அல்லது எண்ணெய்க்கு 25 சதவீதம் கூடுதல் வரி என்பதை எந்த அமெரிக்கரும் விரும்பமாட்டார்கள். இது தொடர்பாக அமெரிக்க மக்கள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

    அனைத்து அமெரிக்க மக்களின் வாழ்க்கையையும் எளிதாக்குவதற்காக டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான முயற்சியை அவர் செய்ய வேண்டும். அனைத்து அமெரிக்க ஊழியர்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். வரி உயர்வு போன்ற விசயங்கள் அவர்ளை தீங்கு விளைவிக்க போகிறது.

    இவ்வாறு ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    கனடாவிடம் இருந்து எண்ணெய் அல்லது எந்தவொரு பொருட்களும் அமெரிக்காவுக்கு தேவையில்லை. ஆனால், அமெரிக்கா பயன்படுத்தும் நான்கில் ஒரு பங்கு எண்ணெய் கனடாவில் இருந்து வருகிறது. அல்பெர்ட்டா மாகாணம் அமெரிக்காவுக்கு தினசரி 4.3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

    • பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
    • கனடாவை ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாற்ற விரும்புகிறேன்.

    ஒட்டாவா:

    கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்த சூழலில் அண்மை காலமாக சொந்த கட்சியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் அவரது செல்வாக்கு சரிய தொடங்கியது.

    இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். எனினும் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் பிரதமராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே பிரதமராக பதவியேற்பார். அந்த வகையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை வருகிற மார்ச் 9-ந் தேதி நடத்த ஆளும் லிபரல் கட்சி முடிவு செய்துள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே கனடாவின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார்.

    இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவரான சந்திரா ஆர்யா, தற்போது கனடாவின் ஒட்டாவா மாகாண எம்.பி.யாக இருந்து வருகிறார்.

    பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து சந்திரா ஆர்யா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கனடா தனது தலைவிதியை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. கனடாவை ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாற்ற விரும்புகிறேன். இதை சாத்தியமாக்கக ஒதுக்கீட்டின் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிசபையுடன் ஒரு சிறிய மற்றும் திறமையான அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    இதுவரையில் சந்திரா ஆர்யா மற்றும் முன்னாள் எம்.பி பிராங்க் பெய்லிஸ் ஆகிய இருவர் மட்டுமே பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை முறையாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ
    • ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார்.

    அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த எக்ஸ் பதிவிற்கு எலான் மஸ்க் கிண்டலாக பதில் அளித்துள்ளார். அதில், "பெண்ணே, இனிமேல் நீங்கள் கனடாவின் கவர்னராக இருக்க போவதில்லை. ஆகவே நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
    • கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ

    அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

     

    டிரம்ப் தனது புளோரிடா மார்-ஏ லாகோ தோட்டத்தில் செய்தியாளர் கூட்டத்தில், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க "பொருளாதார சக்தியை" பயன்படுத்துவேன் என்று தெரிவித்தார்.

    பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். அவற்றை கைப்பற்ற படைகளை கூட அனுப்புவேன்.தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன்.

    அதேபோல் கனடாவுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோவும் அமெரிக்காவின் அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்திருக்கிறார்.  

    • தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
    • ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார்

    கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

    அவரது பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சந்தித்தார். அவருக்கு எதிராக பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளனர். இதையடுத்து பதவி விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி டிரம்ப் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    அதில், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள்.

    கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.

    இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரிஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

    ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். சமீப காலமாகவே அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என்ற வாதத்தை டிரம்ப் முன்வைத்து வருகிறார். கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது.
    • இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான ஜார்ஜ் சாகல், பிரதமர் பதவி போட்டியில் உள்ளார்.

    கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

    அவரது பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சந்தித்தார். அவருக்கு எதிராக பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளனர். இதையடுத்து பதவி விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கனடாவின் புதிய பிரதமராக யார் தேர்வு செய்யப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. பிரதமர் பதவி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உள்பட 8 பேர் உள்ளனர்.


    முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது. இவரது தந்தை ஆனந்த் தமிழ்நாட்டையும், தாய் சரோஜ் பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் டாக்டர்கள்.

    அனிதா ஆனந்த் 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக இருந்தார். கொரோனா காலத்தில் கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தில் மருத்துவ உபகரணங்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்காற்றினார்.


    அதேபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான ஜார்ஜ் சாகல், பிரதமர் பதவி போட்டியில் உள்ளார். இவர் இயற்கை வளங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராகவும், சீக்கிய காக்கசின் தலைவராகவும் உள்ளார்.

    மேலும் சில நாட்களுக்கு முன்பு துணைப் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கிறிஸ்டியா பிரீலேண்ட், முன்னாள் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, மூத்த அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், முன்னாள் பேங்க் ஆப் கனடா மற்றும் பேங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னி மற்றும் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், கிறிஸ்டி கிளார்க் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

    இப்போட்டியில் அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளார். 57 வயதாகும் அனிதா ஆனந்த் 2010-ம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டவியல், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் சட்டம், தொடர்ந்து டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் பயின்ற அவர் நோவாஸ்கோர்சியாவில் பிறந்தவர்.

    • சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக ஜஸ்டின் ட்ரூடோராஜினாமா செய்ததாக தகவல்
    • அக்டோபரின் பிற்பகுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது.

    கனடா நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி மற்றும் சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் 9 ஆண்டுகளாக வகித்து வரும் கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

    ட்ரூடோவின் விலகல், அக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    • எப்போது ராஜினாமா பற்றி அறிவிப்பார் என்பது பற்றி தெரியாது.
    • 2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ட்ரூடோ பொறுப்பேற்றார்.

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தி குளோப் மற்றும் மெயில் தங்களுக்கு கிடைத்த தகவல்களில் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

    அதில், எங்களிடம் பேசிய படி ஜஸ்டின் ட்ரூடோ எப்போது ராஜினாமா பற்றி அறிவிப்பார் என்பது பற்றி தங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் புதன்கிழமை நடைபெற இருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு முன்பு அது நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த தகவல் பற்றிய கேள்விக்கு கனடா பிரதமர் அலுவலகம் உடனடி பதில் அளிக்கவில்லை. ட்ரூடோ உடனடியாக வெளியேறுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

    2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ட்ரூடோ பொறுப்பேற்றார். அப்போது கட்சி ஆழ்ந்த சிக்கலில் இருந்தபோது முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

    ட்ரூடோவின் விலகல், அக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போயகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    • விமான ரெக்கைகள் தரையில் உரசி தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறக்கப்பட்டுள்ளது.
    • செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது.

    ஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

    பிஏஎல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கும் ஏர் கனடா 2259 விமானம் கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு 80 பயணிகளுடன் இன்று [ஞாயிற்றுக்கிழமை] வந்துகொண்டிருந்தது.

     

    தரையிறங்கும் கியர் செயலிழந்ததைத் தொடர்ந்து ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் விமான ரெக்கைகள் தரையில் உரசி தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், விமானத்தின் இறக்கைகள் ஓடுபாதை மேற்பரப்புடன் உரசுவதை காட்டுகிறது. இதன் விளைவாக எஞ்சின் பகுதி தீப்பற்றியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, அதிஷ்டவசமாக பயணிகள் அல்லது பணியாளர்களிடையே எந்த உயிரிழப்பும், காயமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகம

    இந்த விபத்து நடப்பதற்கு சில சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவின் முவான் நகரில் உள்ள விமான நிலையத்தில் 181 பயணிகளுடன் சென்ற ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கிய பின் வெடித்தது. இந்த விபத்தில் 127 பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. 

    • அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடாவை முன்மொழிகிறேன்
    • வெயின் கிரேட்ஸ்கிவெயின் கிரேட்ஸ்கியை பிரதமராக முன்மொழிகிறேன்.யை பிரதமராக முன்மொழிகிறேன்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் அமெரிக்காவின் பெருமையை மீட்பதுதான் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு ஒரே வழி வரி விதிப்பதுதான்.

    அண்டை நாடான கனடான அமெரிக்காவை சுரண்டுவதாக தனது கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்றதும், முதலில் கையெழுத்திடும் கோப்புகளில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதுதான் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த வரிவிதிப்பு கனடாவை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என ஜஸ்டின் ட்ரூடோ கருதுகிறார்.

    கடந்த மாதம் ஜஸ்டின் ட்ரூரோ டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை நடததினர். இது கனடாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும என தெரிவித்தார். அப்போது டொனால்டு டிரம்ப் "அமெரிக்காவிடம் இருந்து 100 பில்லியன் டாலர் அளவில் கொள்ளை அடிக்காவிடில் உங்ளுடைய நாடு உயிர்வாழ முடியாது. அப்படித்தானே? என கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், மற்றொரு பதிவில் கவர்னர் என ஜஸ்டின் ட்ரூடோவை குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். அத்துடன் உங்களுடைய வரி 60 சதவீதத்திற்கு மேல் குறைக்கப்படும். கனடா வர்த்தகம் உடனடியாக இரண்டு மடங்காகும். உலகில் உள்ள மற்ற எந்த நாடும் பெறாத ராணுவ பாதுகாப்பை பெறும்.

    அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை முன்மொழிகிறேன். இதனால் வரி குறையும். வெயின் கிரேட்ஸ்கியை பிரதமராக முன்மொழிகிறேன் என ஜஸ்டின் ட்ரூடோவை கிண்டல் செய்துள்ளார்.

    ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து கனடா நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். மக்கள் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

    டொனால்டு டிரம்ப் தனது Truth சமூக வலைத்தளத்தில் "நான் வெய்னிடம் கனடாவின் பிரதமர் பதவிக்கு நீங்கள் ஏன் போட்டியிடக்கூடாது, விரைவில் கனடாவின் ஆளுநர் என்று அறியப்படுவீர்கள்- நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள், நீங்கள் பிரச்சாரம் செய்யக்கூட வேண்டியதில்லை என்றேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

    வெயின் தலைசிறந்த ஐஸ் ஹாக்கி வீரர் ஆவார்.

    • பதவியை ராஜினாமா செய்வதாக கிறிஸ்டியா அறிவித்துள்ளார்.
    • முதல் முறையாக பொது வெளியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    கனடா நாட்டின் துணை பிரதமர் மற்றும் அந்நாட்டின் நிதியமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டின் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கிறிஸ்டியா அறிவித்துள்ளார்.

    துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என இரு பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ள கிறிஸ்டியா, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு எதிரான கருத்து வேறுபாட்டை முதல் முறையாக பொது வெளியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    சமீபத்தில் கனடாவை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 250 கனடா டாலர்களை காசோலையாக வழங்குவதற்கான கொள்கை தொடர்பாக பிரதமர் ட்ரூடோ மற்றும் துணை பிரதமராக இருந்த கிறிஸ்டியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் நீண்ட காலமாக ட்ரூடோவின் லிபரல் கட்சியில் மிக முக்கிய தலைவராக இருந்து வருகிறார். 2020 ஆம் ஆண்டில் இருந்து கனடா நாட்டின் நிதியமைச்சராகவும் கிறிஸ்டியா பதவியில் இருந்து வந்தார். இந்த நிலையில், துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ள கிறிஸ்டியா கனடாவின் நிதி வருவாயை கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தி இருக்கிறார்.

    தனது ராஜினாமா கடிதத்தில் டிரம்ப்-இன் அச்சுறுத்தல் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கிறிஸ்டியா குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்டியா தொடர்ந்து லிபரல் உறுப்பினராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இருக்க வரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், வரவருக்கும் கனடா தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இறக்குமதி செய்யப்படும் கனடா நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். இது கனடாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அமேரிக்கா சென்று டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்தார்.
    • அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடும் என ட்ரூடோவிடம் சொன்னார்

    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் கனடாவை அமேரிக்காவின் 51 வது மாகாணமாக பொருள்படும்படி அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோவை [மாகாண] கவர்கனர் ட்ரூடோ என்று தனது சமூக வளைதல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் சொந்தமாக நடத்தி வரும் ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடகத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

    டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்டேட் ஆப் கானடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இரவு உணவருந்தியது மகிழ்ச்சியாக இருந்தது vஎன்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார், மேலும் , கனடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் சேர்ந்து, விரைவில் மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மற்றும் எங்களிடையில் நடக்கும் வர்த்தகம், வரி குறித்த பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கும் வகையில் அமையும் என்று பதிவிட்டுள்ளார்.

     

    முன்னதாக கடந்த நவம்பர் 25 அன்று, அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கனடாவும், மெக்சிகோவும் தடுக்கவில்லையென்றால் பதவியேற்றவுடன் இரு நாட்டு பொருட்களுக்கும் 25 சதவீத வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

    அமெரிக்க வர்த்தகத்தை அதிகம் சார்ந்துள்ள கனடா இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால் கனடா அதிபர் ட்ரூடோ பதறியடித்துக்கொண்டு கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அமேரிக்கா சென்று டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்தார்.

    ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின்படி, அன்றைய தினம் டிரம்ப் இரவு விருந்தின் போது ட்ரூடோவிடம், எல்லைப் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக குறைகளை நிவர்த்தி செய்ய தனது வரி உயர்வு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

     

    அத்தகைய வரி கனேடிய பொருளாதாரத்தை அழித்துவிடும் என்றும் எல்லையில் அதிக கவனம் செலுத்துவதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார். இந்த உரையாடலின்போது, ஒருவேளை கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறக்கூடும் என ட்ரூடோவிடம் கேலியாக சொன்னார் என்றும் ஃபாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டது.

    இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் நேரடியாகவே தனது சமூக வலைத்தளத்தில் கனடாவை அமெரிக்காவின் மாகாணமாகக் குறிப்பிட்டு ட்ரூடோவை ஆளுநராக குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. 

    ×