search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனடா"

    • இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.
    • போட்டி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

     


    இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் நிலவியது. போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் அவகாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின.

    போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார். இது அர்ஜென்டினா கோப்பையை வெல்ல காரணமாக மாறியது. போட்டி நிறைவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    • அர்ஜென்டினா, கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
    • முதல் பாதியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    இதனிடையே அரையிறுதியில் தோல்வியை தழுவிய கனடா மற்றும் உருகுவே அணிகள் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 8-வது நிமிடத்தில் உருகுவே தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    மறுபுறம் கனடா அணி போட்டியின் 22-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது. இதன் காரணமாக இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் அடுத்த கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டினர். எனினும், முதல் பாதியில் கனடா 1-1 உருகுவே அணிகள் சமநிலையில் இருந்தன.

     


    இதைத் தொடர்ந்து 2-வது பாதியில் வெகு நேரம் ஆகியும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாத அளவுக்கு போட்டி நெறுக்கமாக இருந்தது. போட்டியின் 80-வது நிமிடத்தில் கனடா அணி தனது 2-வது கோலை அடித்து முன்னிலை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 90-வது நிமிடத்தில் உருகுவே அணியும் தனது 2-வது கோலை அடித்ததால் போட்டி மீண்டும் சமனுக்கு வந்தது. இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணி வீரர்களால் வெற்றிக்கான கோல் அடிக்க முடியாமல் போனது.

    இதன் காரணமாக பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் 3-4 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது அசத்தியது. இதன் காரணமாக நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே மூன்றாவது இடம்பிடித்தது.

    • அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது.
    • முதல் பாதியில் கொலம்பியா அணி முன்னணி வகித்தது.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா என நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது. இதனிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் களம்கண்டன.

    இந்த போட்டி துவங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். போட்டியின் 39-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் லெர்மா தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதன் மூலம் போட்டியின் முதல் பாதியில் கொலம்பியா அணி முன்னணி வகித்தது.

    முதல் பாதி வரை இதே நிலை நீடித்தது. 0-1 என்ற கணக்கில் முன்னிலையுடன் இரண்டாம் பாதியில் விளையாடியது கொலம்பியா. மறுப்பக்கம் உருகுவே அணி பதில் கோல் அடிக்கும் முயற்ச்சிகளை தீவிரப்படுத்தியது. எனினும், அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    இதன் காரணமாக போட்டி முடிவில் 0-1 என்ற கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோத உள்ளன.

    கோப்பா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன. முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா மற்றும் உருகுவே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மூன்றாவது இடம் பிடிக்கும்.

    • கனடா அணி பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியது.
    • கோபா அமெரிக்கா 2024 தொடரில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார்.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா என நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    இதனிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    மறுபுறம் கனடா அணி பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியது. எனினும், முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியில் மற்றொரு கோல் அடிக்கும் முயறச்சியில் அர்ஜென்டினா அணியும், பதில் கோல் அடிக்க கனடா அணி வீரர்களும் முயற்சித்தனர்.

    அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி போட்டியின் 51-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-0 என்று முன்னிலை பெற்றது. கோபா அமெரிக்கா 2024 தொடரில் மெஸ்ஸி அடித்த முதல் கோல் அந்த அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியது.

    போட்டி முடிவில் கனடா வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

    முதல் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவிய கனடா அணி இந்த தொடரில் தனது கடைசி போட்டியை ஜூலை 14 ஆம் தேதி விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோபா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்தை பிடிக்க முடியும்.

    நாளை நடைபெற இருக்கும் 2-வது அரையிறுதி போட்டியில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். தோல்வியை தழுவும் அணி ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா அணியை எதிர்கொள்ளும். 

    • கனடா வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார்.
    • ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார்.

    ஒட்டவா:

    கனடாவின் ராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார். தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார்.

    2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.

    அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் கனடா படைகளை வழிநடத்திய ஜென்னி கரிக்னன், 2019 முதல் 2020-ம் ஆண்டு வரை, 'நேட்டோ மிஷன் ஈராக்'கை வழிநடத்தினார்.

    • எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது.
    • ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும்.

    வாஷிங்டன்:

    சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின.

    விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப் பட்டு 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் தொடங்கியது. பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030-ம் ஆண்டு முடிகிறது.

    அதன்பின்னர் விண் வெளியில் இருந்து அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தி வளிமண்டலத்திற்கு கொண்டு வருவதற்காக பிரத்தியேக விண்கலம் உருவாக்கப்படுகிறது.

    இந்த பணியை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது. இந்தப் பணிக்கான 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

    அடுத்த 10 ஆண்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.5 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக் கூடிய ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளது.

    இதுதொடர்பாக நாசா கூறும்போது, யு.எஸ். டி.ஆர்.பிட் வாகனத்தை (விண் கலம்) உருவாக்கி வழங்குவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும். இது விண்கலம் தயாரிப்புக்கான தொகை மட்டுமே.

    விண்வெளி நிலையத்தை வளிமண்டலத்திற்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஆபத்தை தவிர்ப்பதையும் இந்த விண்கலம் உறுதி செய்யும். டிஆர்பிட் விண்கலத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்படும்.

    அதன் பின்னர் அந்த விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்ட லத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும் என்று தெரிவித்தது. விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு இன்னும் நல்ல நிலையில் இருந்தாலும், அதனை அகற்றுவதற்கான எதிர்கால திட்டங்களை இப்போதே உருவாக்க வேண்டும் என்றும் எந்த உதவியும் வழங்கப்படாவிட்டால் அது இறுதியில் தானே பூமியின்மேல் விழுந்து மக்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
    • முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    அட்லாண்டா:

    உலககோப்பை கால்பந்து, ஐரோப்பிய கால்பந்து போட்டிகளுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியாகும்.

    வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களை சேர்ந்த நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இப்போட்டி பழமையானதாகும். 1916-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    கடைசியாக 2021-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது.

    48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இந்திய நேரடிப்படி இன்று காலை அமெரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இன்று காலை நடந்த தொடக்க ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா-கனடா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    49-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரசும், 88-வது நிமிடத்தில் லாடரோ மார்டினெசும் கோல் அடித்தனர்.

    • இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
    • கனடா 4 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 3 புள்ளிகளுடன் உள்ளது.

    புளோரிடா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

    அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியா, தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவை எதிர்கொள்ள இருந்தது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெற இருந்தது.

    மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பசை அதிகம் இருந்ததால். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், இந்தியா-கனடா இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதன்மூலம் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கனடா 3 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளது.

    • பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
    • கனடா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது.

    லாடர்ஹில்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

    அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியா தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை கனடாவுடன் மோதுகிறது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடக்கிறது.

    இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    இந்திய அணி பேட்டிங்கில் ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் பார்முக்கு திரும்ப வேண்டியது மிகவும் முக்கியம்.

    ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா அசத்தி வருகிறார். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கனடா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று ஏறக்குறைய முடிந்து விட்டது. அந்த அணியில் ஆரோன் ஜான்சன், கிர்ன், கார்டன், பர்கத்சிங், கலீம் சானா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    லாடர்ஹில்லில் மழை பெய்து வருகிறது. இதனால் இப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே இந்திய அணியுடன் மாற்று வீரர்களாக சென்ற சுப்மன்கில், அவேஷ்கான் ஆகியோர் நாடு திரும்ப உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் மற்ற மாற்று வீரர்களான ரிங்குசிங், கலீல் அகமது ஆகியோர் அணியுடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கனடாவுக்கு எதிராக நாளைய போட்டி முடிந்தவுடன் சுப்மன்கில், அவேஷ்கான், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்புகிறார்கள்.

    • முதலில் பேட் செய்த கனடா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து வென்றது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், கனடா அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், ஹரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 33 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் அடிக்க 52 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்தார். இதற்கு முன் இந்தப் பட்டியலில் டேவிட் மில்லர் (50 பந்துகள் - நெதர்லாந்துக்கு எதிராக, 2024) முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிக்கோலஸ் கிர்டன், ஸ்ரேயஸ் மோவா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • முகமது ஆமீர் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பையில் நேற்றிரவு நடைபெற்ற 22-வது லீக் போட்டியில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கனடா அணிக்கு துவக்கம் முதலே விக்கெட்டுகள் சரிய துவங்கின.

    அந்த அணியின் துவக்க வீரர் நவ்நீத் தலிவால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரஜத் சிங், நிக்கோலஸ் கிர்டன், ஸ்ரேயஸ் மோவா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மற்றொரு துவக்க வீரரான ஆரோன் ஜான்சன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் கனடா அணியின் ஸ்கோர் சற்று அதிகரித்தது. 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்த்தது.

    பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமீர் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இவருடன் களமிறங்கிய சைம் ஆயுப் 6 ரன்களிலும் அடுத்து வந்த ஃபகர் ஜமான் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபர் அசாம் 33 ரன்களை சேர்த்தார்.

    இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 107 ரன்களை சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது.
    • பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, கனடாவை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஜான்சன் - நவ்நீத் தலிவால் களமிறங்கினர். நவ்நீத் தலிவால் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பர்கத் சிங் 2 , நிக்கோலஸ் கிர்டன் 1, ஷ்ரேயாஸ் மொவ்வா 2, ரவீந்தர்பால் சிங் 0, சாத் பின் ஜாபர் 10 என அடுத்தடுத்து வெளியேறினர்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் ஒரு முனையில் சிறப்பாக ஆடி வந்த ஜான்சன் அரை சதம் விளாசினார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இறுதியில் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ×