என் மலர்
நீங்கள் தேடியது "Trump"

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் வடகொரியா விவகாரம் மற்றும் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான இறக்குமதி வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக டிரம்ப் இன்று விரிவாக விவாதிக்கவுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டின் தேசிய கீதங்கள் இசைக்க மன்னரும் ராணி மசாக்கோவும் டிரம்ப்பை கை குலுக்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஜப்பான் அரசின் பிரசித்திபெற்ற அகாசாகா அரண்மனையில் இன்று பகல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் டிரம்ப் மன்னர் அளிக்கும் சிறப்பு விருந்தில் பங்கேற்கிறார்.
இந்த பயணத்தின் மூலம் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீதம் பேருக்கும் திறமை அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது.
இந்த முறையில் மாற்றம் செய்து வேலை மற்றும் திறமை அடிப்படையில் 57சதவீதம் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டுகளுக்கு பதிலாக ‘அமெரிக்காவை கட்டமைக்கும்’ (Build America visa) குடியுரிமைகளை வழங்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
தற்போதைய குடியுரிமை சட்டங்கள் மேதாவிகள் மற்றும் புத்திசாலிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளன. மிகவும் குறைந்த கூலி வாங்குபவர்கள்தான் வெளிநாடுகளில் இருந்து இங்கு அதிகமாக வருகின்றனர். இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
நாம் உருவாக்க விரும்பும் அமெரிக்காவுக்காக வெளிநாட்டினருக்கு கதவுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆனால், இவர்களில் பெரும்பகுதியினர் தகுதி மற்றும் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

ஏற்கனவே ‘எச்.1பி.’ விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர், கடந்த பல ஆண்டுகளாக ‘கிரீன்கார்டு’ பெறுவதற்காக விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த புதிய திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமைய உள்ளது.
டிரம்பின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் சம்மதம் தெரிவிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த திட்டம் குறித்து ஆளும் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு டிரம்ப் விளக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இத்திட்டத்துக்கு ஜனநாயக கட்சியினர் ஒப்புக்கொண்டால் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், மறுத்துவிட்டால் இந்த விவகாரத்தை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பிரச்சனையாக எழுப்பவும் ஆளும் குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர்களுக்கு எச்-1 பி என்ற விசா வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் அந்த நாட்டில் வேலை பார்க்க அனுமதி கிடைக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் இந்த விசாவில் தங்கி இருந்து வேலை பார்க்கலாம்.
பின்னர் நிரந்தரமாக வேலை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு கிரீன் கார்டு விண்ணப்பித்து பெற முடியும். நீண்ட காலம் இங்கு குடியிருந்தால் அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கும்.
ஆனால், அதிபராக டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணி புரிவதற்கு பல கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளார்.
இதன்படி எச்-1 பி விசா முறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவில் இனி வேலை பெறுவது கடினமான ஒன்றாக மாறி இருக்கிறது.
இதற்கு முன்பு எச்-1 பி விசா மூலம் வேலையில் இருப்பவர்கள் தேவைப்பட்டால் வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால், இப்போதுள்ள விதிமுறைப்படி வேறு வேலைகளுக்கு மாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்பு எல்லா விதமான வேலைகளுக்கும் எச்-1 பி விசா வழங்கப்பட்டது. இப்போது வேலைகளை உயர் தகுதி பட்டியல் என பிரித்து அந்த பட்டியலில் உள்ள வேலைகளுக்கு மட்டுமே எச்-1 பி விசா வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு நபர் குறிப்பிட்ட வேலையில் பணியாற்றி வரும் நிலையில் அதே மாதிரியான வேலையை இன்னொரு நிறுவனத்தில் செய்வதற்காக மாறி செல்ல முடியாது. அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் அந்த வேலையை உயர் தகுதி பட்டியலில் சேர்த்து அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே அதில் சேர முடியும்.
இதற்காக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட பணியாளருக்காக எச்-1 பி விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். உயர் தகுதி பட்டியலில் அந்த வேலை இருந்தால் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும்.
சம்பந்தப்பட்டவர்களும் அந்த வேலையில் சேர முடியும். ஆனால், பெரும்பாலான வேலைகளை உயர் தகுதி பட்டியலில் சேர்க்கவில்லை.
எனவே, குறிப்பிட்ட வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாற முடியாத நிலை எச்-1 பி விசாதாரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
அது மட்டும் அல்லாமல் அவர்கள் தங்கள் மனைவி- குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்தியாவில் இருந்து பல லட்சம் பேர் எச்-1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு இதன் மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #H1B #trump
வாஷிங்டன்:
ஈரானின் அணுஆயுத உற்பத்தி பிரச்சினையால் 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. மேலும் ஈரானில் எண்ணை வருவாயை மூடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கக்சா எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கபோவதாக மிரட்டல் விடுத்தது.
எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது. இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணை வாங்குவதை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது. அந்த கெடு வருகிற மே 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இருந்தாலும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மேலும் சலுகையை நீடிக்க முடியாது என அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும். விலையும் கணிசமாக உயிரும் அபாயம் உள்ளது.
இதற்கு தீர்வுகாணும் வகையில் டிரம்ப் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ஈரானிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் அச்சம் கொள்ள தேவையில்லை.
சவுதி அரேபியா மற்றும் ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள நாடுகள் எனது வேண்டுகோளை ஏற்று எண்ணை உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இதே கருத்தைதான் அவர் கூறினார். எண்ணையை தாராளமாக உற்பத்தி செய்யுமாறு ஒபக் நாடுகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் பெட்ரோல் விலை குறையும் என்றார். இருந்தாலும் கடந்த மாதத்தில் இருந்து கச்சா எண்ணை விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் டுவிட்டரில் மற்றொரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கலிபோர்னியாவில் பெட்ரோல் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வு பிரச்சினை எழுந்துள்ளது. பெட்ரோல் விலையை குறைக்க அம்மாநில கவர்னருடன் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
ஈரானின் அணு ஆயுத உற்பத்தி பிரச்சினையால் 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது.
அத்துடன் ஈரானின் எண்ணெய் வருவாயை முடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தது. எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது.
இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி நிபந்தனை விதித்தது. இக்கெடு மே 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அளிக்கப்பட்ட பொருளாதார தடை விலக்கு சலுகையை மேலும் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக உயரும் அபாயம் உள்ளது.
ஈரானிடம் இருந்து இறக்குமதி நிறுத்தப்படும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 3 சதவீதம் அதிகரிக்கும். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 65 டாலராக உள்ளது. அது 74 டாலராக விலை உயரும் அபாயம் உள்ளது.
இது இந்தியாவின் அனைத்து பொருளாதார நிலைகளையும் பாதிக்கும். கச்சா எண்ணெயின் விலை உயரும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். அதன் தாக்கம் தற்போதே தொடங்கிவிட்டது. நேற்று இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 495 புள்ளிகள் குறைந்துவிட்டது.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு முழு தடை விதிக்கப்பட்டநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈடுகட்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DonaldTrump #SaudiArabia
உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார்.
இதையடுத்து, இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை அடியோடு நிறுத்தியது.
இதற்கு கைமாறாக அமெரிக்கா தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப்பெறவேண்டும் என வடகொரியா எதிர்பார்த்தது. ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்தது.
இந்த விவகாரம் குறித்து பேசி சுமுக தீர்வுகாண டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருநாட்டு தலைவர்கள் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எதிர்பார்த்தபடி இந்த சந்திப்பு இணக்கமாக நடைபெறவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த வடகொரியா, அமெரிக்கா தனது வாக்குறுதியை (பொருளாதார தடைகளை திரும்ப பெறுவது) நிறைவேற்றாத வரையில் அணுஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என அறிவித்தது.
இதனை கண்டிக்கும் விதமாக வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது.
இந்த நிலையில், கிம் ஜாங் அன்னுடன் 3-வது முறையாக சந்திப்பு நடைபெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் இதனை தெரிவித்தார். அப்போது மூன் ஜே இன்னும் உடனிருந்தார்.
பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:-
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் 3-வது சந்திப்பு நடைபெறலாம். ஆனால் இது வேகமாக நடைபெறும் செயல்முறை இல்லை.
படிப்படியாகத்தான் நடக்கும். கடந்த 2 சந்திப்புகளும் மகிழ்ச்சிகரமாகவும், உற்சாகமாகவும் நடந்தன. கிம் ஜாங் அன் உடனான பொழுது ஆக்கப்பூர்வமாக கழிந்தது.
நான், கிம் ஜாங் அன் மற்றும் மூன் ஜே இன் ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதா என்றால், அதுவும் நடைபெறும் என்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பின்னர் முன் ஜே இன் பேசுகையில், ‘‘டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் நிலவிவந்த போர் பதற்றத்தை போதுமான அளவு தணித்துள்ளது. தற்போது அமைதி மேலோங்கி இருக்கிறது. எஞ்சி இருக்கும் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படும் என நான் முழுமையாக நம்புகிறேன்’’ என்றார்.
3-வது முறையாக சந்திப்பு நடக்கலாம் என டிரம்ப் கூறியிருப்பது குறித்து வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. #Trump


இது தொடர்பாக அமெரிக்காவின் உளவுத்துறையான மத்திய புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) இயக்குனர் ஜேம்ஸ் கோமி விசாரணை நடத்தி வந்தார். பின்னர் அவர் இருந்து நீக்கப்பட்டு, சிறப்பு விசாரணை அதிகாரியாக எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லரிடம் வழங்கப்பட்டது.
ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு கடந்த 22 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது. இப்போது விசாரணை முடிந்து, அதன் அறிக்கை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷியா எந்த வகையிலும் உதவவில்லை என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தொகுத்து அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், பாராளுமன்றத்தில் பகிரக்கூடிய அம்சங்களை முடிவு செய்வார். வார இறுதியில் இந்த அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளை தெரிவிக்க இருப்பதாக பாராளுமன்ற தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வில்லியம் பார் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகே அறிக்கையின் முழு விவரம் தெரியவரும்.
அதிபர் டிரம்பின் முன்னாள் கூட்டாளிகள் ஆறு பேர் மீதும், பல ரஷியர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கெனவே குற்றம் சுமத்தியுள்ளது. டிரம்பின் பிரசாரத்திற்கு உதவ ரஷியர்கள் பலர் முன்வந்தபோதும் சதி நடந்திருப்பதற்கான ஆதாரத்தை முல்லர் கண்டறியவில்லை என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். #TrumpCampaign #Trump #USElection
