என் மலர்
நீங்கள் தேடியது "trump"
- ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அச்சமயம், அதிபர் டிரம்ப் கண்களை மூடி தூங்கிக்கொண்டுள்ளார். டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவு செயலாளர் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த மக்கள், 79 வயதான டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை இந்த வீடியோ காட்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
- வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது.
கராகஸ்:
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து கடந்த செப்டம்பா் முதல் வெனிசுலா அருகே கரீபியன் பகுதியில் அமெரிக்கா கடற்படையை பெரும் அளவில் குவித்து வருகிறது. இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் மதுரோவும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்து உள்ளார்.
தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரோ தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இறையாண்மை, சமத்துவம், சுதந்திரம் கொண்ட அமைதியை விரும்புகிறோம். அடிமையின் அமைதியையோ, காலனித்துவ அமைதியையோ நாங்கள் விரும்பவில்லை. வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது. எனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மோதலுக்குத் தயாராகும்போது வெனிசுலா வெளிப்புற கட்டளைகளுக்கு அடிபணியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்காவில் போதைப்பொருள் புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்
- கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலா தான் காரணம் என்று டிரம்ப் குற்றச்சாட்டி வரும் நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்தன.
இந்நிலையில், வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுகிறது. இதனை அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கவனத்தில் கொள்ளவும்" என்று சரிகை விடுத்துள்ளார்.
டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த வெனிசுலா, இது ஒரு 'காலனித்துவ அச்சுறுத்தல்' என்று தெரிவித்துள்ளது.
- அனைத்து நாட்டினருக்கான வழங்கப்பட்ட புகலிட விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
- 3-ம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளேன்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் பாதுகாப்பு படை அதிகாரி உயிரிழந்தார். மற்றொரு வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தையடுத்து அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது, வெளிநாட்டினர் மீதான சோதனையை தீவிரப்படுத்துவது என தனது குடியேற்ற கொள்கையை மறுசீரமைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் அனைத்து புகலிட விண்ணப்பங்களையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அனைத்து நாட்டினருக்கான வழங்கப்பட்ட புகலிட விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் இயக்குனர் ஜோசப் எட்லோ கூறியதாவது:-
ஒவ்வொரு வெளிநாட்டவரும் அதிகபட்சமாக சரிபார்க்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்யும் வரை புகலிட கோரிக்கைகளின் இடை நிறுத்தம் அமலில் இருக்கும் என்றார். 3-ம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளேன் என்று டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு புகலிட விண்ணப்ப நிறுத்தம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
- உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்றரை ஆண்டுகளைத் தாண்டியும் நடந்து வருகிறது.
- இந்தப் போரை நிறுத்த 28 அம்சம் கொண்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரை செய்தார்.
வாஷிங்டன்:
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதாக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. மூன்றரை ஆண்டுகளைத் தாண்டியும் இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே போரை நிறுத்த 28 அம்சம் கொண்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி அந்த ஒப்பந்தத்தை உக்ரைன் நிராகரித்தது.
இந்நிலையில், ரஷியா-உக்ரைன் போரில் கடந்த மாதம் மட்டும் இரு தரப்பைச் சேர்ந்த 25 ஆயிரம் வீரர்கள் பலியாகினர் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
எனவே இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய தூதுக்குழுவை அமெரிக்க அதிகாரிகள் அபுதாபியில் சந்தித்துப் பேசினர். இதன்மூலம் போர் நிறுத்தத்துக்கான அமைதி ஒப்பந்தத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
- நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி.
- வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக மம்தானி சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
நியூயார்க் நகர மேயராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக நேற்று சந்தித்துப் பேசினார்.
அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருக்கும் டிரம்ப், மம்தானி சந்திப்பு அந்நாட்டு அரசியலில் அனைவராலும் உற்று பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த இருவரது சந்திப்பை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசிதரூர் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக, சசிதரூர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகம் என்பது இப்படித்தான் செயல்பட வேண்டும். தேர்தலின் போது எந்த வார்த்தை ஜாலங்களும் இல்லாமல் உங்கள் கருத்தை முன்வைத்து போராடுங்கள். தேர்தல் முடிந்த பின், நாட்டின் பொதுவான நலன்களை நிறைவேற்ற, மக்களிடம் அளித்த வாக்குறுதிகளின்படி ஒத்துழைப்புடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இதுபோன்ற சந்திப்புகளை இந்தியாவில் அதிகம் பார்க்க விரும்புகிறேன். என் அளவிலான பங்களிப்பையும் செய்ய முயற்சித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக, பாஜ தலைவர்களை அதிகம் புகழ்ந்தும்,. காங்கிரசை விமர்சித்தும் சசிதரூர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்
- அமெரிக்க அதிபர் டிரம்பும் மம்தானியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை இதன்மூலம் பெற்றார்.
நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப் அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, நியூயார்க் மேயர் மம்தானியை வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் என்னை சந்திக்க உள்ளார் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியை சந்தித்தார். இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறுகையில், நியூயார்க் நகர வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
- ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும்.
- ரஷிய கச்சா எண்ணெயை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிறநாடுகள் மீதான வரி விதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு, ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். மேலும் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி என்று டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில், ரஷியாவின் கச்சா எண்ணெய் பயன்பாட்டை நிறுவத்துவதாக பிரபல தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அதன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையத்தில் ரஷிய கச்சா எண்ணெயை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் தொடர் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தொழில்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
- ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது.
- ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிக்கும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
வாஷிங்டன்:
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதிபர் டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் அமெரிக்கா பங்கேற்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஜி20 மாநாடு அடுத்து ஆண்டு அமெரிக்காவில் நடக்க உள்ளதால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக இந்த மாநாட்டில் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது
- காசாவில் பாதுகாப்பை வழங்க சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரித்தல்.
- டிரம்பால் மேற்பார்வையிடப்படும் அமைதி வாரியம் என்ற இடைக்கால அதிகாரத்தை அங்கீகரித்தல்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது முதற்கட்ட கோரிக்கையாகும். இதை இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்L உயிரோடு இருந்த 20 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
இந்த நிலையில் காசாவின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால திட்டத்திற்கான டொனால்டு டிரம்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஐ.நா, தீர்மானத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக் கொண்ட நிலையில், ஹமாஸ் நிராகரித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் பாதுகாப்பை வழங்க சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரித்தல், டொனால்டு டிரம்பால் மேற்பார்வையிடப்படும் அமைதி வாரியம் என்ற இடைக்கால அதிகாரத்தை அங்கீகரித்தல் மற்றும் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசிற்கான சாத்தியமான எதிர்கால பாதையை திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்பதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக நேதன்யாகு கருத்து தெரிவிக்கையில் "டிரம்பின் திட்டம் அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் அது காசாவை முழுமையாக ராணுவ மயமாக்குதல், ஆயுதக் குறைப்பு மற்றும் தீவிரமயமாக்கலை வலியுறுத்துகிறது" என்றார்.
அரசு சாரா ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை நிரந்தரமாக நீக்குதலை சர்வதேச நிலைப்படுத்தல் படை உறுதிப்படுத்தும். இது சர்வதேச சட்டத்திற்கு இணங்க தனது ஆணையை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்த படைக்கு அதிகாரம் அளிக்கிறது. ஐ.நா. மொழியில் இது ராணுவ சக்தியைப் பயன்படுத்துவதாகும். இந்த தீர்மானம் பாலஸ்தீன மக்களின் அரசியல் மற்றும் மனிதாபிமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகளின் அளவைப் பூர்த்தி செய்யவில்லை.
எந்தவொரு சர்வதேசப் படையும் ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவின் எல்லைகளில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீன அமைப்புகளுடன் (institutions) பிரத்தியேகமாக செயல்பட வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன ஆணையம் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐ.நா. மற்ற அரசு நாடுகளுடன் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜோர்டான், துருக்கி இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
- குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள்.
- ஜனாபதிபதி டிரம்பும் அவருடைய குழுவும் ரஷியாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்வைத்து பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். மேலும் உலக நாடுகளிடையே நிலவி வரும் மோதல்களை நிறுத்துவதாக கூறி வர்த்தக தடை, வரிவிதிப்பு என மிரட்டி வருகிறார்.
2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்தன. குறிப்பாக, ரஷியாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கு ஒருபடி மேல் ஏறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குதி செய்யும் நாடுகள் மீது அதிகப்பட்ச வரிவிதித்தார்.
ஏற்கனவே இந்தியா மீது 25 சதவீதம் வரிவிதித்தநிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீதம் என உச்சபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர், "குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும்.
இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க சொல்லியுள்ளேன்" என்றார். குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. லின்ட்லே கிராகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் இறக்குமதி வரிவிதிக்கும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு செனட் சபையில் 85 எம்.பி.க்கள் ஆதரவளித்திருந்தனர். மீண்டும் இதற்கான வாக்களிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லின்ட்லே கூறுகையில், "ஜனாபதிபதி டிரம்பும் அவருடைய குழுவும் ரஷியாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள். இதன்மூலம் ரத்த ஆறு ஓடுவது நிறுத்தப்படும். புதினின் போர் எந்திரத்திற்கு கச்சா எண்ணெய் வாங்கி நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது விரைவில் சம்மட்டி அடி கொடுக்கப்படும்" என்றார்.
- ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து டிரம்ப் முதல் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பதவியேற்றார்.
இதற்கு முன்னதாக ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து டிரம்ப் முதல் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வகையில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றை டிரம்ப் 2 முறையும் தொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஒரு பெண்ணை அதிபராக தேர்ந்தெடுக்க அமெரிக்கா தயாராக இல்லை என்று முன்னாள் அதிபர் ஒபாமாவின் மாணவி மிட்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய மிட்செல் ஒபாமா, "நாம் கடந்த தேர்தலை பார்த்தோம். அமெரிக்கா மிகவும் பாலியல் ரீதியிலானது. ஒரு பெண்ணை அதிபராக தேர்ந்தெடுக்க தயாராக அமெரிக்கா இல்லை. ஒரு பெண்ணால் நாட்டை வழிநடத்தப்பட முடியாது என்று நினைக்கும் ஆண்கள் இங்கு இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.






