என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வரி உயர்வு"

    • கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பு.
    • டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லை என்றால், ரஷியா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும் என்று டிரம்ப் கூறினார்.

    இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    அதன்படி 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத புதிய வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    நாம் பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும், அவர்களிடம் எந்தவிதமான வரிகளையும் அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்காமல் மானியம் வழங்கி வருகிறோம்.

    இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது உலக அமைதி ஆபத்தில் உள்ளது. சீனா மற்றும் ரஷியா கிரீன்லாந்தை விரும்புகின்றன. அதை தடுக்க டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது.

    அமெரிக்காவின் வசம் இருந்தால் மட்டுமே இந்த புனிதமான நிலப்பகுதியை யாரும் தொடமாட்டார்கள். உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க, இந்த அபாயகரமான சூழ்நிலை விரைவாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் முடிவுக்கு வர வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

    எனவே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,நார்வே, சுவீடன்,நெதர்லாந்து பின்லாந்து ஆகிய 8 நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப் படும்.

    அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் வாங்குவதற்கான எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஜூன் 1-ந்தேதி இந்த வரி விகிதம் 25 சதவீதமாக உயரும். கிரீன்லாந்தை முழுமை யாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்.

    இந்த நாடுகள் "அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அவை மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகின்றன.

    கிரீன்லாந்தை சொந்தமாக்க அமெரிக்கா 150 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வருகிறது. டென்மார்க் மற்றும் இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கிரீனலாந்தில் மக்கள் பேரணி நடத்தினர். இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேசிய கொடியை அசைத்தப்படி கிரீன்லாந்து விற்பனைக்கல்ல" என்று முழக்கமிட்டனர்.

    • சொத்துவரி உயர்வு வரும் ஜூலை 1-ந் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • புதிய வரி உயர்வுக்கான சாப்ட்வேர்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி பொது சீராய்வு செய்திட அரசாணை பிறப்பித்தது. இதன்பேரில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு தொடர்பான கூட்டம் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதில், ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி சொத்து வரி பொது சீராய்வு கூட்டமும் கடந்த மே மாதம் 24-ந் தேதி நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடா்ந்து ஈரோடு மாநகராட்சியில் அரசாணைப்படி கடந்த 1-4-2022-ம் தேதியில் இருந்து புதிய சொத்து வரி அமல்படுத்தப்பட்டு, இந்த வரி உயர்வினை வரும் ஜூலை 1ம் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையர்(கணக்கு) குமரேசன் கூறியதாவது:-

    விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவினம், மாநகராட்சி செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் பிற துறைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை அளிக்க ஏதுவாகவும் அரசாணையில் அறிவுறுத்தியுள்ளவாறு, கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981 அத்தியாயம் 5 பிரிவு, 118ல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றியும் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கூட்ட பொருட்களின் அடிப்படையில் ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயா்வு பொது சீராய்வு செய்யப்பட்டது.

    இதையடுத்து புதிய வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவில் இருந்தால் பழைய வரி தொகையில் கூடுதலாக 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    601 சதுர அடி முதல் 1200 சதுர அடிக்குள் இருந்தால் 50 சதவீதமும், 1,201 சதுர அடி முதல் 2800 சதுர அடி வரை இருந்தால் 75 சதவீதமும், 2,800 சதுர அடிக்கு மேல் இருந்தால் 100 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல், காலியிடங்களுக்கு ஏற்கனவே உள்ள வரியில் இருந்து 100 சதவீத உயர்வும், பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு 50 சதவீதம் உயர்வும், தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீதமும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு அரசாணைப்படி கடந்த 1-4-2022ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

    ஆனால், மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதன்பிறகு தான் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளதால், அது அரசு கெஜட்டில் பதிவு செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய வரி உயர்வுக்கான சாப்ட்வேர்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த வரி உயர்வு வரும் ஜூலை 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    முதல் அரையாண்டிற்கான புதிய வரியை வரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள்ளும், 2-ம் அரையாண்டிற்கான வரியை வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் ஆண்டு(2023) மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்தலாம். புதிய வரி விதிப்புக்கு மக்கள், மாநகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×