என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரீன்லாந்து"

    • சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது.
    • பிரதமர் மோடி ஒரு அற்புதமான மனிதர், எனது நண்பர்.

    சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார்.

    அப்போது செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தனது நண்பர் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவருடன் நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    உங்கள் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அற்புதமான மனிதர், எனது நண்பர். எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் ஏற்படப் போகிறது என்று கூறினார்.

    இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை.
    • கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்றார்.

    லாவோஸ்:

    சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும். வேறு யாராலும் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியாது. கிரீன்லாந்தை நாங்கள் பாதுகாத்து அதனை டென்மார்க்கிடம் வழங்கினோம். இது நாங்கள் செய்த முட்டாள்தனம். இப்போது கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை. கிரீன்லாந்துக்கு எதிராக படைபலத்தை பயன்படுத்த மாட்டேன்.

    அமெரிக்க அதிபர்கள் கடந்த 2 நூற்றாண்டாக கிரீன்லாந்தை வாங்க முயன்று வருகின்றனர். பனியால் சூழப்பட்ட இந்த மாபெரும் நிலப்பரப்பை எங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். இது நேட்டோவுக்கான மிரட்டல் அல்ல. நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒன்றை யாராலும் மறுக்க முடியாது.

    நாங்கள் நேட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக குறைந்த அளவில் தான் நேட்டோவிடம் இருந்து பலன் பெறுகிறோம். நான் பல ஆண்டுகளாக நேட்டோவை எதிர்க்கும் விமர்சகராக இருந்து வருகிறேன். ஆனாலும், வேறு எந்த அதிபரையும் விட நான் நேட்டோவிற்கு அதிகமாக அள்ளிக் கொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

    • கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும்
    • கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என டிரம்ப் பதில் அளித்தார்.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும் என்றும், இதில் 100% உறுதியாக உள்ளதாகவும் டிரம்ப் மீண்டும் மிரட்டல் வைத்துள்ளார்.

    ராணுவ படையெடுப்பு மூலம் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என டிரம்ப் பதில் அளித்தார்.

    இந்நிலையில், கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய கொடியை ஏந்தி நிற்பதுபோல், தனது AI படத்தை Truth Social தளத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் கிரீன்லாந்து அமெரிக்க பிரதேசமாக நிறுவப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது.

    மேலும், கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் ஒரு AI படத்தையும் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கனடா நாட்டை அமெரிக்காவின் 51 ஆவது மகனாக இணைக்கவேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் வெனிசுலா நட்டு அதிபரை கைது செய்து அட்டையும் டிரம்ப் மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • எதிர்ப்பு தெரிவித்த நாடுகள்மீது கூடுதல் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும் என்றும், இதில் 100% உறுதியாக உள்ளதாகவும் டிரம்ப் மீண்டும் மிரட்டல் வைத்துள்ளார்.

    ராணுவ படையெடுப்பு மூலம் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என டிரம்ப் பதில் அளித்தார்.

    • கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • எதிர்ப்பு தெரிவித்த நாடுகள்மீது கூடுதல் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    பிரசெல்ஸ்:

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 8 நாடுகள் மீது கூடுதல் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் மார்க் ரூட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசினேன். அப்போது கிரீன்லாந்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தேன். தொடர்ந்து இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்தோம். இந்த வாரம் டாவோசில் அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    • நாங்கள் நிச்சயமாக அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம்.
    • ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அவசர கூட்டம் நடக்கிறது.

    கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறும்போது, டிரம்ப் விதித்துள்ள வரிகள் அட்லாண்டிக் கடந்த உறவு களைப் பலவீனப்படுத்தும். ஒரு ஆபத்தான சரிவுப் பாதைக்கு வழிவகுக்கும். ஐரோப்பா ஒற்றுமையுடனும், ஒருங்கிணைப்புடனும் தனது இறையாண்மையைக் காப்பதில் உறுதியுடனும் இருக்கும் என்றார்.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரேன் கூறும்போது, 'வரி அச்சுறுத் தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மை நிலைநிறுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இந்த மனப்பான்மையுடனேயே நான் எங்கள் நட்பு ஐரோப்பியப் நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவேன்' என்றார்.

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறும்போது, 'நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்பிற்காகச் செயல்ப டும் நட்பு நாடுகளின் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறானது. இது குறித்து நாங்கள் நிச்சயமாக அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம்.

    ஆர்க்டிக் பாதுகாப்பு முழு நேட்டோவிற்கும் முக்கியமானது என்பதையும், ஆர்க்டிக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நட்பு நாடுகள் அனைத்தும் இணைந்து மேலும் அதிகமாகச் செயல் பட வேண்டும்' என்றார்.

    சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் கூறும்போது, 'நாங்கள் எங்களை அச்சுறுத்த அனுமதிக்க மாட்டோம். தங்களைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து டென்மார்க்கும் கிரீன்லாந்தும் மட்டுமே முடிவெடுக்கும். நான் எப்போதும் என் நாட்டையும் எங்கள் நட்பு அண்டை நாடுகளையும் பாதுகாப்பேன்' என்றார்.

    இதற்கிடையே டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அவசர கூட்டம் நடக்கிறது.

    • கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பு.
    • டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லை என்றால், ரஷியா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும் என்று டிரம்ப் கூறினார்.

    இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    அதன்படி 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத புதிய வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    நாம் பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும், அவர்களிடம் எந்தவிதமான வரிகளையும் அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்காமல் மானியம் வழங்கி வருகிறோம்.

    இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது உலக அமைதி ஆபத்தில் உள்ளது. சீனா மற்றும் ரஷியா கிரீன்லாந்தை விரும்புகின்றன. அதை தடுக்க டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது.

    அமெரிக்காவின் வசம் இருந்தால் மட்டுமே இந்த புனிதமான நிலப்பகுதியை யாரும் தொடமாட்டார்கள். உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க, இந்த அபாயகரமான சூழ்நிலை விரைவாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் முடிவுக்கு வர வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

    எனவே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,நார்வே, சுவீடன்,நெதர்லாந்து பின்லாந்து ஆகிய 8 நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப் படும்.

    அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் வாங்குவதற்கான எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஜூன் 1-ந்தேதி இந்த வரி விகிதம் 25 சதவீதமாக உயரும். கிரீன்லாந்தை முழுமை யாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்.

    இந்த நாடுகள் "அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அவை மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகின்றன.

    கிரீன்லாந்தை சொந்தமாக்க அமெரிக்கா 150 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வருகிறது. டென்மார்க் மற்றும் இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கிரீனலாந்தில் மக்கள் பேரணி நடத்தினர். இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேசிய கொடியை அசைத்தப்படி கிரீன்லாந்து விற்பனைக்கல்ல" என்று முழக்கமிட்டனர்.

    • கிரீன்லாந்து தீவு அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு முற்றிலும் அவசியமானது.
    • கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷியா, சீனாகப்பல்களால் நிரம்பியுள்ளன.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது.

    இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இதில் ராணுவ நட வடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். இதற்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் கிரீன்லாந்தை கைப்பற்ற கடினமான வழியை தேர்வு செய்வோம் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

    கிரீன்லாந்து தீவு அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு முற்றிலும் அவசியமானது. உலகின் மிகப்பெரிய தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷியா, சீனாகப்பல்களால் நிரம்பியுள்ளன.

    அவர்களுக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி நாம் கிரீன்லாந்து விஷயத்தில் ஏதேனும் செய்யப் போகிறோம். ஏனென்றால் நாம் அதைச் செய்யா விட்டால் ரஷியாவோ அல்லது சீனாவோ கிரீன்லாந்தைக் கைப்பற்றிவிடும்.

    ரஷியாவையோ அல்லது சீனாவையோ நாம் அண்டை நாடாக வைத்திருக்க விரும்ப வில்லை. அந்த நாடுகள் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதை நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை,

    நான் எளிமையான முறையில் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறேன். ஆனால் அது முடியாவிட்டால் கடினமான வழியில் அதை செய்வோம். பேச்சுவார்த்தை மூலம் கிரீன்லாந்தை இணைக்க முடியாவிட்டால் அமெரிக்கா கடுமையான வழியில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

    நான் டென்மார்க்கின் மிகப்பெரிய ரசிகன் தான். ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் ஒரு படகு அங்கு தரையிறங்கியது என்பதற்காக அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமானது என்று அர்த்தமல்ல. எங்களுடைய பல படகுகளும் அங்கு சென்றிருக்கின்றன. கிரீன்லாந்து எங்களுக்கு கண்டிப்பாக தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது.
    • ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவும் ஒற்றுமையும் உண்டு.

    டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமானது என்று அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.

    கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது. இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்தநிலையில் கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது. டென்மார்க் அல்லது கிரீன்லாந்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவும் ஒற்றுமையும் உண்டு.

    சைப்ரஸ், லத்தீன் அமெரிக்கா, கிரீன்லாந்து, உக்ரைன் அல்லது காசா என எங்கு நடந்தாலும், சர்வதேச சட்ட மீறல்களை ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி டிரம்ப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • கிரீன்லாந்து பகுதிக்கு மட்டும் தனியாக தூதரை டிரம்ப் நியமித்தார்

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

    இதனிடையே, டென்மார்க் நாட்டின் கிரீன்லாந்து பகுதிக்கு மட்டும் தனியாக தூதரை நியமித்துள்ள ட்ரம்ப், அந்த பகுதி அமெரிக்காவுக்கு நிச்சயம் கிடைத்தாக வேண்டும் எனவும் பேசியதால் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், டிரம்மில் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்து பேசிய டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், "கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றும் அமெரிக்காவின் எந்தவொரு முயற்சியும், 80 ஆண்டுகால NATO பாதுகாப்பு இணைப்புகளை அழித்துவிடும். இவ்விவகாரத்தில் ஐரோப்பாவின் முழு ஆதரவும் தங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.

    • டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி டிரம்ப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

    டென்மார்க் நாட்டின் கிரீன்லாந்து பகுதிக்கு மட்டும் தனியாக தூதரை நியமித்துள்ள ட்ரம்ப், அந்த பகுதி அமெரிக்காவுக்கு நிச்சயம் கிடைத்தாக வேண்டும் எனவும் பேசியுள்ளார். 

    • அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.
    • நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என்றார் கிரீன்லாந்து பிரதமர்.

    நூக்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறார். ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக் நீல்சன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், அமெரிக்கா அதைப் பெறாது. நாம் வேறு யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல. நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    ×