என் மலர்tooltip icon

    பெல்ஜியம்

    • பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 6 வங்களில் 13 ஆயிரம் கோடி மோசடி.
    • கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

    மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான மெஹுல் சோக்சி 2018 முதல் 2022 வரை பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 6 வங்கிகளிடம் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது.

    மெஹுல் சோக்சிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டதும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். அவர் பெல்ஜியத்தில் இருப்பது தெரியவந்தது இதனால் அவரை கைது, இந்தியாவிற்கு நாடு கடத்தும்படி சிபிஐ பெல்ஜியம் அரசுக்கு வேண்டுகோள் வைத்தது. அவரது வழக்கு தொடர்பான ஆவணங்களை பெல்ஜியத்திற்கு வழங்கியது.

    இந்த நிலையில்தான் பெல்ஜியம் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் பலமுறை ஜாமீன் கேட்டும், நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை.

    இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அவரை கைது செய்ததற்கும், இந்தியாவுக்கு நாடு கடத்தல் கோரிக்கையும் செல்படியானதாகும் என உத்தரவிட்டுள்ளது. என்றபோதிலும், அப்பீல் செய்ய வாய்ப்புள்ளதால், உடனடியாக நாடுகடத்த சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.

    மெஹுல் சோக்சி நீதிமன்றத்தில் 2017ஆம் அண்டு நவம்பர் மாதம் ஆண்டிகுவா அண்டு பார்படா குடியுரிமை பெற்ற பிறகு, டிசம்பர் 14, 2018-ல் இந்தியாவின் குடியுரிமையை திருப்பி கொடுத்துவிட்டேன் எனத் தெரிவித்தார்.

    • இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதம் இறுதியில் உலகின் பிற பகுதிகளையும் வேட்டையாடும்.
    • இது இந்தியா, பாகிஸ்தான் உறவுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னையாகவும் உள்ளது என்றார்.

    பிரெசல்ஸ்:

    பெல்ஜியம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறேன். ஒசாமா பின்லேடன் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஏன் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவ நகரத்திற்கு அருகே பாதுகாப்பாக வாழ்ந்ததாக உணர்ந்தார்? உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதம் இறுதியில் உலகின் பிற பகுதிகளையும் வேட்டையாடும். இந்தப் பிரச்சனை இந்தியா, பாகிஸ்தான் உறவுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சனையாகவும், கவலையாகவும் உள்ளது. அதே பயங்கரவாதம் இறுதியில் உங்களைத் துரத்த மீண்டும் வரும்.

    போர் மூலமாகவோ அல்லது போர்க்களத்தில் இருந்தோ பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என இந்தியா நம்பவில்லை.

    எங்கள் நலன்களுக்கு உதவும் ஒவ்வொரு நாடுகளுடனும் நல்ல உறவை விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    • மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
    • மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் பிறப்பித்தது.

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.

    இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.

    அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடைசியாக மெகுல் சோக்சி தஞ்சம் அடைந்தார். மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்சியும் பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றார்.

    மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்தது.

    இந்நிலையில் புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பெல்ஜியம் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஜாமின் கோரி பெல்ஜியம் நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

    இதனிடையே மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.  

    • மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்
    • மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகளை சோக்சி மேற்கொண்டுள்ளார்.

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.

    இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.

    அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடைசியாக மெகுல் சோக்சி தஞ்சம் அடைந்தார். மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்சியும் பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றார்.

    மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்தது.

    இந்நிலையில் புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சோக்சி, பெல்ஜியம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகளை சோக்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாக அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.  

    • ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார்.
    • இதன்மூலம் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பிரஸ்சல்ஸ்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட இந்த லீக்கின் இறுதிச்சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடந்தது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர்.

    நேற்று நடந்த இறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார்.

    இந்நிலையில், ஈட்டி எறிதலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் இறங்கினார்.

    மொத்தம் 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரது அதிகபட்சமாக 3வது சுற்றில் 87.86 மீட்டர் எறிந்தார்.

    90 மீட்டர் என்ற இலக்கை இம்முறையும் நீரஜ் சோப்ரா கடக்க முடியவில்லை.

    கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார்.

    • ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார்.
    • சாப்லே 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தைக் கடந்தார்.

    பிரஸ்சல்ஸ்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட இந்த லீக்கின் இறுதிச்சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடக்கிறது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார். அவர் 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தைக் கடந்தார்.

    கென்ய வீரர் முதலிடமும், மொராக்கோ வீரர் இரண்டாம் இடமும் பிடித்தனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் சாப்லே 8 நிமிடம் 14.18 வினாடிகளில் தூரத்தைக் கடந்து 11வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
    • இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனின் முக்கியமான பதவிக்கு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தை ஐரோப்பிய தலைவர்களிடம் நடைபெற்று வருகிறது.

    தற்போது ஐரோப்பிய யூனியனின் தலைவராக இருக்கும் உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசெல்ஸில் நடைபெற்ற முதல்நாள் கூட்டத்தில் அதற்கான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை ஒன்றிரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தேர்தலில் உர்சுலாவின் ஐரோப்பியன் மக்கள் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் வலதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஜெர்மனியின் ஏஃப்டி, இத்தாலியின் ஃஎப்டிஎல், பிரான்சின் ஆர்என் கட்சிகள் செயல்பாடுகள் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளன.

    இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என முன்னதாகவே செய்திகள் வெளியானது.

    போர்ச்சுக்கலின் ஆண்டனியோ கோஸ்டா ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளார்.

    மால்டாவின் ராபர்ட்டா மெட்சோலா ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளார்.

    எஸ்டோனியாவின் கஜா கலலாஸ் வெளியறவுததுறை மற்றும் பாதுகாப்பு கொள்கையின் உயர் பிரதிநிதி பதவியை எதிர்பார்த்துள்ளார்.

    • பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பேரக்குழந்தையுடன் வசித்து வந்தார்.
    • தென் கொரியாவுக்கு விமானத்தில் செல்ல தயாராகி இருந்த நிலையில் கைது.

    பெல்ஜியம், லீஜ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சந்தேகிக்கும் வகையில் பொருள் ஒன்று மிதந்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொருளை மீட்டு பார்த்தபோது அது குளிர்சாதனப் பெட்டி என்று தெரியவந்தது. மேலும், அந்த பெட்டியில் மனிதக்கை, கால் பாகங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிடைத்த உடல் பாகங்களை கொண்டு ஆய்வு செய்தனர். இதில், அந்த உடல் பாகங்கள் 70 வயது மதிக்கத்தக்க பெண்ணுடையது என்று தெரியவந்தது.

    மேலும், துப்பறியும் நபர்களால் அந்தப் பெண்ணின் உடலின் எஞ்சிய பகுதிகளான தலை மற்றும் உடற்பகுதி அருகிலுள்ள குப்பை குவியலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், பெண்ணை கொலை செய்தது அவருடைய 30 வயது மதிக்கத்தக்க மகன் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, பெண்ணின் மகனை பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலில் இருந்து விடியற்காலையில் கைது செய்தனர். தென் கொரியாவுக்கு விமானத்தில் செல்ல தயாராகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கேத்தரின் கொலிக்னான் கூறினார்.

    மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் தனது தாயை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஆற்றில் வீசியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

    லீஜின் தென்மேற்குப் பகுதியான செராயிங்கில், அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பேரக்குழந்தையுடன் வசித்து வந்தார்.

    கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பிறகு, பெண்ணும் அவரது மகனும் வசித்து வந்த நிலையில், இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதங்களும், பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரத்தில் தாயை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி தூக்கி எறிந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் காவலில் வைத்துள்ளனர்.

    • உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ உள்ளது.
    • இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

    பிரெசெல்ஸ்:

    உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உள்பட 30 நாட்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இன்று இணைந்துள்ளது. நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்துள்ளது.

    நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்துள்ளதால் அந்நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஷியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும்.

    உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு மத்தியில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அமெரிக்கா, கனடாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
    • பெல்ஜியத்திலும் டிக் டாக் செயலிக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரசெல்ஸ்:

    அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகார பூர்வ மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனடாவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது. அதாவது அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார்.
    • கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது வக்கீல் நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.

    பிரஸ்சல்ஸ்:

    பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஜெனிவில் லெர்மிட் (வயது58). நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது 5 குழந்தைகளை கொலை செய்தார்.

    3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2019-ம் ஆண்டு மனநல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    இதற்கிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார். பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.

    கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது வக்கீல் நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'ஜெனிவில் லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகே கருணைக்கொலை செய்யப்பட்டார்' என்றார்.

    இவ்வழக்கின் விசாரணையின்போது, ஜெனிவில் லெர்மிட் மனநல டாக்டரை தவறாமல் சந்தித்து வந்தார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் அவரது வக்கீல்கள் வாதிட்டனர். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கத்தார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர்.
    • எவா காயிலி உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பிரசல்ஸ்:

    மத்திய வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசில் முடிவுகளை எடுப்பதற்கு கத்தாா் பணபலத்தை பயன்படுத்தி வருவதாக நீண்ட காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால் கத்தார் அரசு இதை திட்டவட்டமாக மறுக்கிறது.

    இந்த நிலையில் கத்தார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர்.

    எவா காயிலி உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு உள்பட 16 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி சுமாா் 6 லட்சம் யுரோ (ரூ.5.2 கோடி) பறிமுதல் செய்தனர்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இதனிடையே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கிரீஸ் நாட்டை சேர்ந்த எவா காயிலி ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    ×