என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nirav modi"

    • இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது
    • கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட நாட்டை விட்டு தப்பி ஓடிய 15 பொருளாதார குற்றவாளிகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    மக்களவையில் எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி இதனைத் தெரிவித்தார்.

    இந்த மொத்த நிலுவைத் தொகையில், அசல் தொகை ரூ.25,645 கோடி, அதே நேரத்தில் அதற்கான வட்டி ரூ.31,437 கோடியை எட்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுவரை, இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.38,895 கோடி வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகளுக்கு அவர்கள் கடன்பட்டுள்ளனர்.

    கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தத் தொகையை அவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு மட்டும் கடன்பட்டுள்ளார்.

    அவருக்குப் பிறகு, வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,799 கோடி கடன்பட்டுள்ளார். அவர்களுடன் சேர்ந்து, சந்தேசரா குழுமமும் ரூ.900 கோடி முதல் ரூ.1,300 கோடி வரை கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018 இன் கீழ் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

    இதற்கிடையே விஜய் மல்லையா, மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி அவ்வப்போது லண்டனில் பார்ட்டி நடத்தி நடனமாடி கொண்டாடும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.  

    • பெல்ஜியம் குடியுரிமை கொண்டவர் நேஹல் மோடி.
    • இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது இன்டர்போல்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர் நிரவ் மோடி. வைர தொழில் அதிபரான இவர், வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இவர் சகோதரர் நேஹல் மோடி. இவர் சாட்சிகளை அழித்தல் உள்ளிட்ட உதவியை சகோதரருக்கு செய்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    பெல்ஜியம் குடியுரிமை பெற்ற இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இரு அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று இன்டர்போல் நேஹல் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.

    இந்த நிலையில் நேஹல் மோடியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நிரவ் மோடி 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    லண்டன்:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை லண்டன் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிரவ் மோடி தாக்கல் செய்த 10வது மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
    • மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் பிறப்பித்தது.

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.

    இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.

    அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடைசியாக மெகுல் சோக்சி தஞ்சம் அடைந்தார். மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்சியும் பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றார்.

    மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்தது.

    இந்நிலையில் புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பெல்ஜியம் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஜாமின் கோரி பெல்ஜியம் நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

    இதனிடையே மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.  

    • மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்
    • மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகளை சோக்சி மேற்கொண்டுள்ளார்.

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.

    இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.

    அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடைசியாக மெகுல் சோக்சி தஞ்சம் அடைந்தார். மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்சியும் பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றார்.

    மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்தது.

    இந்நிலையில் புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சோக்சி, பெல்ஜியம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகளை சோக்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாக அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.  

    • டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
    • பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றுள்ளார்.

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.

    இந்த நிலையில் மெகுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்.

    அவர் மூலம் மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அவருக்கு பெல்ஜியத்தின் எப் ரெசிடென்சி கார்டு விசா வழங்கப்பட்டு உள்ளது. குடியுரிமை பெறுவதற்காக மெகுல் சோக்சி இந்தியா, ஆண்டிகுவா குடியுரிமைகளை மறைத்து போலி தகவல்களை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

    தற்போது மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருவதாக தெரிகிறது. மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும். இதையடுத்து அவரை நாடு கடத்த பெல்ஜியத்தில் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

    • நிரவ் மோடி 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    லண்டன்:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    அதில் நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, சிறையில் நிரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த 2 உளவியல் நிபுணர்கள், அவர் மன அழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர்.

    அதேநேரம் இந்தியாவில் நிரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உறுதியளித்தார். நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என அவரது வக்கீல் வாதிட்டார்.

    இந்நிலையில் நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனுவை லண்டன் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    அவர் மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதைக் காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பண மோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதிலிருந்து தப்பிப்பது நியாயமாகாது என்றும் லண்டன் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று தீா்ப்பளித்திருந்தது சரியே எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    • நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.
    • உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 2 வார கால அவகாசம் கேட்டு நிரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார்.

    லண்டன்:

    இந்தியாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டதால் அதுகுறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, சிறையில் நீரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த 2 உளவியல் நிபுணர்கள், அவர் மனஅழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர். அதேநேரம் இந்தியாவில் நீரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து, இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உறுதியளித்தார். நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்று அவரது வக்கீல் வாதிட்டார்.

    இந்த விசாரணையின் போது, ஐகோர்ட் நீதிபதிகள் அவரது மேல்முறையீட்டில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் தேவையற்றவை என்று தெரிவித்தனர். மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் அவரது மனநிலை நன்றாக இருப்பதையும், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதையும் உறுதி செய்த நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது.

    இதனையடுத்து நீரவ் மோடி தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், அதற்கேற்ப தனக்கு 2 வார கால அவகாசம் வழங்கவேண்டும் என்றும், லண்டன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிரவ் மோடி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதன்மூலம், நீரவ் மோடிக்கு இருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

    • தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்றும் நிரவ் மோடி மனுவில் தெரிவித்து இருந்தார்.
    • நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரவ் மோடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    புதுடெல்லி:

    வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6 ஆயிரத்து 498 கோடி கடன் பெற்றனர். ஆனால் அவர்கள் அந்த கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை.

    இதனால் அவர்கள் மீது கடந்த 2017-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

    இந்த வழக்கு தொடர்பான கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர். இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த அவர்கள் அங்கு ரூ.26 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

    இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் இங்கிலாந்து அரசு 2019-ம் ஆண்டு நிரவ் மோடியை கைது செய்து சிறையில் அடைத்தது. அதுமுதலே அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதி தருமாறு நிரவ் மோடி லண்டன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்றும் நிரவ் மோடி அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நிரவ் மோடியின் மனநலம் நல்ல நிலையிலேயே உள்ளது. அவரது மேல்முறையீட்டில் எந்த நியாயமும் இல்லை என்று கூறி அவரது மனுவை நிராகரித்தனர்.

    நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்காக மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 3 தடவை பல்வேறு வகைகளில் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்திலும் நிரவ் மோடி தோல்வியை சந்தித்து உள்ளார். இதனால் அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    நிரவ் மோடி தற்போது லண்டன் வாண்ட்ஸ்வர்த் சிறையில் உள்ளார். விரைவில் அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நிரவ் மோடி வேறு மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால் அடுத்த 28 நாட்களில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரவ் மோடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    • இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்றார்.
    • எனக்கு இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது என்றார் நிரவ்மோடி .

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டன் தப்பியோடினார்.

    பணத்தை திருப்பி செலுத்தாததால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வங்கி தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார். லண்டனில் உள்ள வான்ட்ஸ் வொர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அதற்கான செலவுத் தொகையை நிரவ் மோடியே செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து நிரவ் மோடி நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு லண்டனில் உள்ள பாக்கிங்சைட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் ஆஜரான நிரவ் மோடி தன்னை நாடு கடத்துவதற்கு எதிரான மேல் முறையீட்டுக்கான செலவு தொகை 150,247 பவுண்டுகள் (ரூ.146 லட்சம்) செலுத்த பணம் இல்லை. என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது .

    எனவே என்னால் பணம் செலுத்த முடியவில்லை என்றார்.

    அப்போது நீதிபதிகள் அவரிடம் சொத்துக்கள் ஏன் முடக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நிரவ்மோடி பதில் அளிக்கையில், எனது பெரும்பாலான சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன. அங்கு நான் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்றார்.

    அப்படியென்றால் அபராதத்தொகையாக மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் (ரூ.9.7 லட்சம்) எப்படி செலுத்திகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிரவ்மோடி கூறுகையில், "நான் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு சிறையில் இருக்கிறேன். எனது முதல் 2 வருடங்களில் கையில் இருந்த நிதி செலவாகிவிட்டது. எனவே கடந்த 2 ஆண்டுகளாக நான் மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் கடன் வாங்கி அபராதம் செலுத்துகிறேன் என்றார்.

    உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்றால் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ஏன் இந்தியாவிற்கு திரும்பவில்லை என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு நிரவ் மோடி எனக்கு இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது என்றார்.

    • ஐந்து இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
    • பெரிய நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதே பிரதமரின் முதன்மையான பொறுப்பு.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பின்னர் நாடு திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து

    இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வெளிநாடு சென்று திரும்பிய மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பவன் கேரா கூறியதாவது:-

    நாங்களும் அவருக்கு (பிரதமருக்கு) பெரும் வரவேற்பை வழங்குவோம். ஆனால் மற்ற மோடிகள் மீண்டும் அழைத்து வரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே இந்த வரவேற்பு இருக்கும். லலித் மோடி அல்லது நிரவ் மோடியை அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்தால் டெல்லி விமான நிலையத்தில் நின்று பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்போம்.

    பிரதமர் நாடு திரும்பிய இரண்டு மணி நேரத்திற்குள், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்று அறிவித்தது.

    இதுதான் பிரதமரின் சாதனையா? இந்த செய்தி வரும்போது அவர் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு கூட வந்திருக்க மாட்டார். இந்திய பிரதமர் வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவின் பிரதிநிதியாக செல்கிறார். என்னதான் அவருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும், பெரிய நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதே அவரது முதன்மையான பொறுப்பு.

    ஐந்து இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? இந்திய மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கும்போது இது தொடர்பான ஆலோசனை எப்போது நடக்கும்? நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியவுடன் மாணவர்கள் தடைசெய்யப்பட்டால், ராஜதந்திரத்தில் இது மிகவும் கசப்பான பதிலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    • விசாரணை அமைப்புகள் அவர்களை இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    கோடிக்கணக்கான பண மோசடி வழக்கில் நிரவ் மோடி, விஜய் மல்லை போன்ற தொழில் அதிபர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் உரிய நேரத்தில் அவர்களை கைது செய்யாததுதான் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோட காரணம் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது.

    சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டு முன்பு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமின் வழங்கப்பட்ட வியோமேஷ் ஷா, நிபந்தனையை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிய மனு விசாரணைக்கு வந்தது.

    அப்போது வியோமேஷ் ஷாவின் நிபந்தனை மாற்றி அமைக்கப்பட்டால் நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றோர் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    ஆனால், விசாரணை அமைப்பின் வாதத்தை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், "இந்த விவாதங்களை முழுமையாக நான் ஆய்வு செய்து பார்த்ததில் வெளிநாட்டிற்கு ஓடிய நபர்கள், விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் அவர்களை கைது செய்யாததுதான் காரணம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன்" எனத் தெரிவித்தார்.

    மேலும், "வியோமேஷ் ஷா சம்மன் அனுப்பியதற்கு பதில் அளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ஜாமின் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்காக பலமுறை விண்ணப்பம் செய்துள்ளார். ஷா வழக்கை நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றோர் வழக்குடன் ஒப்பிட முடியாது" என்றார்.

    நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி பலகோடி ரூபாய் பிஎன்பி மோசடியில் முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள். நிரவ் மோடி தற்போது இங்கிலாந்தில் உள்ள சிறையில் உள்ளார். மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் உள்ளார். மல்லையாக இங்கிலாந்தில் உள்ளார். 900 கோடி ரூபாய் லோன் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    ×