search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mea"

    • இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
    • இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசா முனை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.

    இதற்கிடையே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

     இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார். அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • சிஏஏ எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
    • சிஏஏ குறித்த அமெரிக்காவின் அறிக்கை தேவையற்றது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்றார்.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சிஏஏ அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை, அது தவறானது, தவறான தகவல் மற்றும் தேவையற்றது என்று நாங்கள் கருதுகிறோம்.

    சிஏஏ 2019 இந்தியாவின் உள்ளடக்கிய மரபுகள் மற்றும் மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப உள்ளது.

    டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது என தெரிவித்தார்.

    • போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்தியர்களை அதில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பொய் வாக்குறுதிகள் அளிக்கும் ஏஜெண்ட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், ஆள் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஏஜெண்ட் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்பவேண்டாம். அந்த வாக்குறுதிகள் சிக்கலை ஏற்படுத்துவதுடன் ஆபத்தை ஏற்படுத்தும்.

    ரஷிய ராணுவத்திற்கு உதவியாகப் பணிபுரியும் இந்தியர்களை உடனே அந்தப் பணியில் இருந்து விடுவிப்பதுடன் அவர்களை தாயகம் அழைத்து வர உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    • தகவல்களை உறுதிசெய்யாமல் பணம், பாஸ்போர்ட் சான்றிதழ் உள்ளிட்ட எதையும் வழங்கக் கூடாது.
    • போலி முகவர்கள் மீது புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் வேலைகளுக்குச் செல்ல விரும்புவோர் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு:

    பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்லவேண்டும்.

    புலம்பெயர்வு சட்டம் 1983-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனத்திற்கான பதிவு சான்றிதழை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.

    வெளிநாட்டு நேரடி வேலைவாய்ப்பு அழைப்பு வருகிறது எனில் அந்நிறுவனத்தின் முகவரி, தொடர்பு எண்கள், என்ன வேலை, எவ்வளவு ஊதியம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்க்க வேண்டும். தேவை என்றால் புலம்பெயர்வு அதிகாரியிடம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    www.meaindia.nic.in, www.india.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு ஆட்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை சரிபார்த்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தகவல்களை உறுதிசெய்யாமல் ஒருபோதும் பணம், பாஸ்போர்ட் சான்றிதழ்கள் உள்ளிட்ட எதையும் கட்டாயம் வழங்கக்கூடாது.

    முகவருக்கான கட்டணமாக ஒன்றரை மாத ஊதியம் அல்லது அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு மேல் உரிய ரசீதுகள் இல்லாமல் கொடுக்க வேண்டாம்.

    விசா எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறதோ, அதற்காக மட்டுமே வெளிநாட்டில் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் சிறைத்தண்டனை வரை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவதற்கான உரிய வங்கிக்கணக்கை வைத்திருப்பது போன்றவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

    பாஸ்போர்ட்டை தொலையாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு ஒப்பந்தத்திலோ, வெற்று காகிதத்திலோ கையொப்பமிட்டு தரக்கூடாது. வெளிநாட்டில் நடைபெறும் போராட்டங்களில் பங்கெடுக்கக் கூடாது.

    சம்பந்தப்பட்ட நாட்டில் இந்திய தூதரகம் எங்கே உள்ளது, அதன் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

    போலி முகவர்கள் மீது புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இவைதவிர டெல்லியில் உள்ள புலம்பெயர்வு அலுவலகத்திலும் புகார் அளிக்கவும் வழிவகை உள்ளது உள்பட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

    • கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தை வெளியுறவுத்துறை கவனித்து வருகிறது.
    • அவர்களுக்கு தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் விரிவுபடுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

    இதுவரை 2 விசாரணைகள் நடந்துள்ளன. குடும்பத்தினரிடம் இருந்து மேல்முறையீடு செய்தோம், கைதிகள் இறுதி மேல்முறையீடு செய்தோம். அதன்பிறகு 2 விசாரணைகள் நடைபெற்றன.

    இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் விரிவுபடுத்துகிறது.

    இதற்கிடையே, டிசம்பர் 3-ம் தேதி சிறையில் இருக்கும் 8 பேரையும் சந்திக்க எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. அதனால் நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம், நாங்கள் எதைப் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.

    • குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.
    • இதுதொடர்பான சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இங்கிலாந்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார்.

    இதற்கிடையே லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி 23-ம் தேதி ஒலிபரப்பாகிறது.

    இந்நிலையில், இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:

    பி.பி.சி. ஆவணப்படம் அடிப்படையற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரசார படம். அதில் பாரபட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாகத் தெரிகிறது.

    இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளற விரும்புபவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது என தெரிவித்தார்.

    இந்த சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது.

    சென்னை:

    மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கிறது. பாக். ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.

    தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை கேட்டுக் கொண்டுள்ளார்.

    • கடந்த ஜுன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

    சென்னை:

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

    கடந்த 22-8-2022 அன்று நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது கடந்த ஜுன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் ஐந்தாவது நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், அவற்றின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலேயே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சரை தனது கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

    புதுடெல்லி:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர்.

    போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் அந்நாட்டு மக்களுடன் இந்தியா துணை நிற்கும். இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது. இலங்கையில் நெருக்கடி சூழலை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    சீனா அரசு உரிமை கோரும் அருணாச்சலப்பிரதேசம் எங்கள் நாட்டின் பிரிக்கமுடியாத, ஒருங்கிணைந்த பகுதி என இந்திய அரசு இன்று மீண்டும் குறிப்பிட்டுள்ளது. #ArunachalPradesh #MEAIndia
    புதுடெல்லி:

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

    சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ‘தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதுபோல் அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்வது எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

    சீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருந்து வருகிறது. அருணாச்சலப்பிரதேசம் என்னும் ஒரு பகுதியை சீன அரசு எப்போதுமே அங்கீகரித்தது கிடையாது என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இன்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கருத்துக்கு இந்திய அரசு சரியான பதிலடி கொடுத்துள்ளது. சீனா அரசு உரிமை கோரும் பகுதியான அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவின் பிறபகுதிகளுக்கு செல்வதுபோல் எங்களது நாட்டின் தலைவர்கள் அடிக்கடி அருணாச்சலப்பிரதேசத்துக்கு சென்று வந்துள்ளார்கள். எங்களது இந்த உறுதியான நிலைப்பாட்டை பல வேளைகளில் சீன அரக்கு நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். #ArunachalPradesh #MEAIndia
    அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா இன்று ரத்து செய்துள்ளது. #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளன. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார்.
     
    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.



    இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா இன்று ரத்து செய்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் மூன்று போலீஸ் அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். மேலும், பயங்கரவாதி புர்ஹான் வானிக்கு அஞ்சல் தலைகளும் வெளியிட்டுள்ளது.

    இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi
    இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்துள்ளது மிகவும் சிறப்பான செய்தி என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது #IndPakTalks #US
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளது. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார். 

    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

    இதனை அடுத்து, ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் தெரிவித்திருந்தார். 

    இதன்படி, நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கும்  இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக வெளியான செய்தி சிறப்பு மிக்கது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. 

    அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நயூர்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “ இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதாக வெளியான தகவல்கள் எங்கள் கவனத்துக்கு வந்தது. மிகவும் சிறப்பான செய்தி இது என்று நான் கருதுகிறேன்” என்றார். 
    ×