என் மலர்
நீங்கள் தேடியது "MEA"
- மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் டெல்லியிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளார்.
- அங்கு அவர் அமெரிக்க வெளியுறவு மந்திரியை சந்திக்கிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய தாதுக்கள் விநியோகச் சங்கிலி தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் டெல்லியிலிருந்து புறப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில்,வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ அழைப்பின் பேரில், முக்கிய தாதுக்கள் குறித்த மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி ஜெய்சங்கர் பிப்ரவரி அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநாட்டில் தூய்மையான எரிசக்தி மாற்றம் மற்றும் தாதுக்கள் விநியோகச் சங்கிலியில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் இன்று சந்திக்க உள்ளார். இந்தப் பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார்.
- ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துவருகிறது.
புதுடெல்லி:
ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியக் குடிமக்கள் மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் அங்கு கிடைக்கும் எந்தவொரு போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது.
ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் கையாளும்படி வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
முதல் கட்டமாக அங்குள்ள இந்தியர்கள் விமானங்கள் மூலம் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமை மேலும் மோசமடைந்தால், அவர்களை மீட்க இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை மந்திரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
- அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 2,500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- தொடர் போராட்டங்களால் ஈரானில் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்து முடங்கியது.
புதுடெல்லி:
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
ஈரானில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 2,500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.
தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்தும் முடங்கியது.
இந்தப் போராட்டங்களால் நாடு முழுவதும் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்கு வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு கடந்த 5-ம் தேதி எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், ஈரானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாவதை அடுத்து, இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரானில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மீண்டும் ஒருமுறை தீவிரமாக அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- தனிப்பட்ட விருப்பங்களை பொதுப்பதவியில் இருப்பவர்கள் வெளிப்படுத்துவது அழகல்ல
- நியூயார்க் நகர மேயராக பதவியேற்ற அன்று உமர் காலித்துக்கு ஆதரவாக கடிதம் எழுதினார்
டெல்லி கலவர வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு ஆதரவாக கடிதம் எழுதிய நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட விருப்பங்களை பொதுப்பதவியில் இருப்பவர்கள் வெளிப்படுத்துவது அழகல்ல என குறிப்பிட்டுள்ளது.
2020 டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித் கிட்டத்தட்ட 5 வருடங்களாக சிறையில் உள்ளார். இந்த வார தொடக்கத்தில் இந்த கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமானை தவிர்த்து மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனிடையே உமர் காலித்துக்கு மம்தானி எழுதிய கடிதம் தொடர்பான பேச்சுகள் வெளிவரத் தொடங்கின.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஜன.1ஆம் தேதியன்று ஜோரான் மம்தானி பதவியேற்றார். அன்று டெல்லி கலவர வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் குறிப்பில் மம்தானி, "கசப்புணர்வு குறித்து நீங்கள் கூறிய வார்த்தைகளையும், அது ஒருவரை ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தையும் நான் அடிக்கடி நினைவுகூர்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்," என்று எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்தை உமர் காலித்தின் இணையர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மம்தானிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
"பொதுப் பிரதிநிதிகள் மற்ற ஜனநாயக நாடுகளின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்துவது பொதுப்பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பதற்குப் பதிலாக, நியூயார்க் மக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்." என தெரிவித்துள்ளார்.
- ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளது.
- போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானில் அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நாட்டு பணத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. இதனால விலைவாசி அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்க வேண்டும் என்று ஈரானி உச்சபட்ச தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஈரானுக்கான அவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்ற இந்திய மக்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் "சமீப நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஈரானுக்கு அடுத்த அறிவிப்பு வரும்வரை அவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஈரானில் தற்போதுள்ள இந்திய மக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். பேராட்டம் அல்லது வன்முறை நடைபெறும் பகுதியை தவிர்க்க வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் இணைய தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை உன்னிப்பாக கவனிக்கவும்" எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானில் இருப்பிட விசாவுடன் வசித்து வருபவர்கள், இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை என்றால், பதிவு செய்து கொள்ளவும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், 31 மாகாணத்தில் 25 மாணாகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- இந்தியா வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை.
- இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை என வெளியுறவுத்துறை கூறியது.
புதுடெல்லி:
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்கமுடியாது. ஆகையால் நாங்களும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்வோம். இதுதொடர்பாக போர்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை குறித்த டிரம்பின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். உறுப்பு நாடுகளுக்கு இடையே முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கும், இந்தியா பசுபிக் பிராந்திய நலன் குறித்து விவாதிக்கவும் மதிப்புமிக்க தலமாக குவாட் அமைப்பை இந்தியா கருதுகிறது.
குவாட் அமைப்பு தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது. சமீபத்தில் மும்பையில் இந்திய கடலோர பாதுகாப்பு வாரம் நடந்தது. குவாட் துறைமுகம் தொடர்பான கருத்தரங்கமும் நடந்தது.
இந்தியா வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை. இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை. இது குறித்து அறிந்ததும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
கடந்த சில மாதங்களாக ரஷிய ராணுவத்தில் பல இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை விரைவில் விடுவிக்கவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த விஷயத்தை மீண்டும் ரஷிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளோம்.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 44 இந்தியர்கள் தற்போது ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ரஷிய தரப்புடன் தொடர்பில் இருக்கிறோம். இவர்களின் குடும்பங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ரஷிய ராணுவத்தில் பணியாற்ற வழங்கப்படும் சலுகைகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
- சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
- வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
புதுடெல்லி:
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரம், சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது.
கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி இருக்கிறது அல்லது திருப்பி அனுப்பி இருக்கிறது.
சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக ஒரு நாடு கூறுமேயானால், நாங்கள் அத்தகைய நபர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கிறோம்.
சட்டபூர்வமற்ற முறையில் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்கிறோம்.
சட்டவிரோத இடப்பெயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட விசா முறைகள் குறித்து நாங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வி நிலையங்களில் சேரமுடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.
- ரஷியா, உக்ரைன் இடையிலான போா் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது.
- இப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
புதுடெல்லி:
ரஷியா, உக்ரைன் இடையிலான போா் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ரஷியாவுடன் அமெரிக்காவுக்கு மோதல் போக்கு அதிகரித்தது. அமைதி ஒப்பந்தத்தை கொண்டு வர ரஷியாவுக்கு டிரம்ப் நேற்று வரை கெடு விதித்திருந்தார்.
அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் புதின் இடையிலான சந்திப்பு வரும் 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், எனக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு வரும் 15-ம் தேதி அலாஸ்காவில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான ஒரு இறுதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப்-புதின் சந்திப்பை ரஷியாவும் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், அலாஸ்காவில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் புதின் சந்திப்பு நடைபெற உள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.
இந்த சந்திப்பு உக்ரைனில் அமைதியை கொண்டுவர உதவி புரியும், இது போருக்கான காலம் அல்ல என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதலாக வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
- இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.
இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதலாக வரி விதிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதம் வரி நியாயமற்றது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேச நலனைக் காக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
- இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்தார்.
- ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்றார்.
புதுடெல்லி:
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்தப் போர் 3 ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, நேட்டோ அமைப்பு உதவி வருகின்றன.
இதற்கிடையே, ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை எடுக்க ரஷியா தீவிரமாக மறுக்கிறது. நீங்கள் ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும். 100 சதவீத பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகள் தற்போதைய சந்தை சூழ்நிலை மற்றும் புவிசார் அரசியல் நிலைகளைப் பொறுத்தது. இந்த விஷயம் குறித்த அறிக்கைகளை நாங்கள் பார்த்துள்ளோம். அதில் ஏற்படும் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். நமது மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வது இந்தியாவுக்கு ஒரு முக்கிய முன்னுரிமை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த முயற்சியில் சந்தைகளில் கிடைப்பதாலும், உலகளாவிய சூழ்நிலைகளைப் பொறுத்தும் நாம் வழிநடத்தப் படுகிறோம். இந்த விஷயத்தில் இரட்டை வேடம் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.
- மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- இந்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.
வாஷிங்டன்:
குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக, வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட், மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு வாஷிங்டனில் இன்று தொடங்கியது. இதில் அமெரிக்கா சார்பில் மார்கோ ரூபியோ, இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஜப்பான் சார்பில் வெளியுறவு மந்திரி டகேஷி இவாயா மற்றும் ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரியும் கலந்து கொண்டனர்.
- மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- இந்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் என அமெரிக்கா அறிவித்தது.
இதுதொடர்பாக, வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட், மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். இதற்காக ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை அவர் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார் என தெரிவித்துள்ளது.






