என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்கள்"

    • முதல் சுதந்திரப் போரான 1857 கிளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக லட்சுமிபாய் முக்கிய பங்கு வகித்தார்.
    • தனது ராஜ்ஜியத்தை கைப்பற்ற முயன்ற பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போராடி அவர் தனது உயிரை தியாகம் செய்தார்.

    பிரதமர் மோடி சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்தியாவின் முதல் சுதந்திரப் போரான 1857 கிளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக லட்சுமிபாய் முக்கிய பங்கு வகித்தார்.

    தனது ராஜ்ஜியத்தை கைப்பற்ற முயன்ற பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போராடி அவர் தனது உயிரை தியாகம் செய்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெண்ணெய் கலந்த, கிரீமி கிரேவியில் போடப்படும் தந்தூரி கோழியின் துண்டுகள் தான் பட்டர் சிக்கனில் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன.
    • பூண்டு அல்லது வெண்ணெய் என எதுவாக இருந்தாலும், பட்டர் சிக்கனை நானுடன் சேர்த்து சாப்பிடவே பெரும்பாலோர் விரும்புகிறோம்.

    வட இந்தியாவின் புகழ்பெற்ற உணவான பட்டர் சிக்கன், டேஸ்ட்அட்லஸ் நிறுவனம் வெளியிட்ட தரவரிசையில் 5-வது இடத்தை பெற்றுள்ளது.

    'உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள்' என்ற தலைப்பிலான பட்டியலில் துருக்கியின் பிலிக் டோப்காபி முதலிடத்திலும், மொராக்கோவைச் சேர்ந்த ரிஃபிசா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சிக்கின் மற்றும் கொரிய வறுத்த சிக்கன் ஆகியவை 2-வது இடத்திலும் உள்ளன. முதல் 20 இடங்களில் உள்ள மற்றொரு இந்திய உணவு தந்தூரி சிக்கன். இது 14-வது இடத்தில் உள்ளது.

    வெண்ணெய் கலந்த, கிரீமி கிரேவியில் போடப்படும் தந்தூரி கோழியின் துண்டுகள் தான் பட்டர் சிக்கனில் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன.

    ஒரு நாள் தந்தூரி சிக்கனை வீணாக்குவதைத் தவிர்க்கும் முயற்சியில் இந்த உணவு உருவாக்கப்பட்டது. ஆனால் அது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக தற்போது மாறி உள்ளது.

    பிரிவினைக்கு முந்தைய காலத்தில் பெஷாவரில் உள்ள மோதி மஹால் உணவகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது பொதுவான கதை. உணவகத்தில் பணிபுரிந்த குந்தன் லால் குஜ்ரால் மற்றும் குந்தன் லால் ஜக்கி ஆகியோர் 1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, தாக்கூர் தாஸ் மாகோ என்ற தொழிலதிபருடன் சேர்ந்து மோதி மஹாலைத் திறந்தனர். இரண்டு குடும்பங்களும் பட்டர் சிக்கனை உருவாக்கியதாக உரிமை கோருகின்றன.

    பூண்டு அல்லது வெண்ணெய் என எதுவாக இருந்தாலும், பட்டர் சிக்கனை நானுடன் சேர்த்து சாப்பிடவே பெரும்பாலோர் விரும்புகிறோம்.

    டாப் உணவுகள் பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறாதது வருத்தம் என்று சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்தியாவில் பலரது விருப்ப உணவாக சிக்கன் பிரியாணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
    • டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. இதில் விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

    இந்நிலையில் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இதய நோய், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.

    அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் நபருக்கு தொற்று நோய் இருக்கிறதா, என்னென்ன தடுப்பூசிகளை இதுவரை அவர்கள் செலுத்தி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா ஆகிய ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

    இதில் தற்போது கூடுதலாக நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் டிரம்ப் நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

    அதில் விண்ணப்பதாரரின் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக இதய நோய் , சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, வளர்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்த நோய்கள் பராமரிப்புக்கு லட்சக்கணக்கான டாலர் தேவைப்படலாம் அந்த செலவுகளை ஏற்கக் கூடிய வகையில் விண்ணப்பதாரர் இருக்கிறாரா என்பதையும் விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியர்களை பணியமர்த்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும்
    • H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

    அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்கா தெளிவுபடுத்தியது.

    இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.

    H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

    இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இன்று முதல் வெளிநாட்டினருக்கான வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் தானாகவே நீட்டிப்பு செய்யும் முறை முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.

    இதுவரை, வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் புதுப்பித்தல் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் காலத்தில், 540 நாட்கள் வரை தங்கள் வேலையைத் தொடரலாம்.

    ஆனால் புதிய விதியின் கீழ், தற்போதைய வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் முன் புதுப்பித்தல் பெறாத எவரும் உடனடியாக வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்பு புதுப்பித்தல் விண்ணப்பத்தை முறையாக தாக்கல் செய்வதன் மூலம் வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை சரியான நேரத்தில் புதுப்பிக்க இயலும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த புதுப்பித்தல் நடவடிக்கைக்கு 3-12 மாதங்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அமெரிக்காவின் இந்த முடிவு அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

    • சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
    • வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரம், சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது.

    கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி இருக்கிறது அல்லது திருப்பி அனுப்பி இருக்கிறது.

    சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக ஒரு நாடு கூறுமேயானால், நாங்கள் அத்தகைய நபர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கிறோம்.

    சட்டபூர்வமற்ற முறையில் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்கிறோம்.

    சட்டவிரோத இடப்பெயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

    வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட விசா முறைகள் குறித்து நாங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வி நிலையங்களில் சேரமுடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

    • அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை
    • எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

    அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு H-1B விசா வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்ச மாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

    இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இது எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது.

    இதற்கிடையே ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.

    இந்த நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க பரீசிலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு பல்வேறு துறை நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து உள்ளனர்.

    அமெரிக்காவின் மருத்துவத்துறை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று கருத்துக்கள் எழுந்தன. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மிகப்பெரிய மருத்துவ அமைப்புகள் கவலைகளை தெரிவித்தன.

    இதையடுத்து விசா கட்டண உயர்வில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறும் போது, "அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளன. அதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவார்கள் என்று தெரிவித்தார்.

    • 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
    • அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

    அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.

    அடுத்த 12 மாதங்களுக்கு இந்த உத்தரவு செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் எச்-1பி விசாவை போன்று சீனாவின் புது முயற்சி - தெற்காசிய திறமைமிகு ஊழியர்களை இழுக்க களம் இறங்கும் சீனா

    இந்நிலையில், அமெரிக்காவில் H-1B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், K-விசா என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.

    H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுகின்ற, உலகம் முழுவதும் உள்ள அதிதிறமையான பணியாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் நோக்கில் இந்த புதிய விசா அறிமுகம் ஆகியுள்ளது. அக்டோபர் 1 முதல் K-விசா நடைமுறைக்கு வருகிறது.

    • இனிமேல் H-1B விசா பெற ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது
    • அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.

    இந்த புதிய உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அமெரிக்காவில் தற்போதைய விசாவில் படித்து வரும் மாணவர்கள் தங்களது படிப்பை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்து கொள்ளலாம். ஆனால் படிப்பை முடித்த பிறகும் அவர்கள் சிக்கல்களை சந்திக்கலாம்.

    படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணிபுரிய 1 லட்சம் டாலர்கள் (ரூ.88 லட்சம்) கட்டண உயர்வை செலுத்த வேண்டும். இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதை குறைக்கும் என்று கூறப்படுகிறது. 

    • அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
    • அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.

    இந்த புதிய உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் வருடாந்திர கட்டணம் அல்ல, ஒரு முறை விண்ணப்ப கட்டணம் மட்டுமே என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.

    ஏற்கனவே H-1B விசாக்களை வைத்திருப்பவர்கள் மற்றும் தற்போது அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் அமெரிக்கா வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் புதிதாக H-1B விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
    • இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பிரதமர் மோடிக்கு பிறந்தநாளுக்கு டிரம்ப் அழைத்து வாழ்த்து கூறிய பிறகு 'ஆப்கி பார், டிரம்ப் சர்க்கார்' அரசாங்கத்திடமிருந்து நீங்கள் பெற்ற பரிசுகளைப் பார்த்து இந்தியர்கள் வேதனைப்படுகிறார்கள்

    * H-1B விசாக்களுக்கு ஆண்டு கட்டணம் $100,000 (ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்பட்டது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை கடுமையாக பாதிக்கும். H-1B விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள்.

    * ஏற்கனவே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால் 10 துறைகளில் மட்டும் இந்தியாவிற்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    * இந்திய அவுட்சோர்சிங்கை இலக்காகக் கொண்ட HIRE சட்டம்.

    * சபாஹர் துறைமுக விலக்கு நீக்கப்பட்டது, நமது மூலோபாய நலன்களுக்கு இழப்பு.

    * இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

    * டிரம்ப் சமீபத்தில் மீண்டும் (பதினொரு முறை!) தனது தலையீட்டால் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறுகிறார்.

    இந்தியாவின் தேசிய நலன்கள் மிக உயர்ந்தவை. கட்டி அணைப்பது, வெற்று முழக்கங்கள் இடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் மக்களை "மோடி, மோடி" என்று கோஷமிட வைப்பது என்பது வெளியுறவுக் கொள்கை அல்ல!

    வெளியுறவுக் கொள்கை என்பது நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது; இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பது மற்றும் ஞானத்துடனும் சமநிலையுடனும் நட்பு நாடுகளை வழிநடத்துவது பற்றியது" என்று தெரிவித்துள்ளார். 

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
    • இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி 2017 இல் பதிவிட்ட டுவீட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார். இப்பதிவில், "மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், இந்தியாவில் பலவீனமான ஒருவர் பிரதமராக உள்ளார்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
    • 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

    அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், H1B விசா என்பது அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை விசா. இதைப் பற்றி சுருக்கமாக இக்கட்டுரையில் பார்ப்போம்.

    H1B விசா யாருக்கு எல்லாம் கிடைக்கும்?

    * உயர் கல்வித் தகுதி (பொதுவாக Bachelor's அல்லது Master's degree) மற்றும் குறிப்பிட்ட துறையில் திறமை கொண்டவர்கள்.

    * பொதுவாக IT, Engineering, Finance, Medicine, Research போன்ற துறைகளில் வேலை பெறுபவர்கள்.

    யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

    * தனிநபர் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.

    * அமெரிக்காவில் உள்ள நிறுவனம் (Employer) தான் விண்ணப்பிக்க வேண்டும்.

    செல்லுபடியாகும் காலம்:

    * ஆரம்பத்தில் 3 வருடம்.

    * அதிகபட்சம் 6 வருடம் வரை நீட்டிக்கலாம்.

    விசா தேர்வு முறை:

    * ஒவ்வொரு ஆண்டும் H1B lottery system மூலம் தேர்வு செய்கிறார்கள்.

    • வருடத்திற்கு சுமார் 65,000 விசா + Master's degree பெற்றவர்களுக்கு 20,000 விசா ஒதுக்கப்பட்டுள்ளன.

    சிறப்பம்சம்:

    * விசா பெற்றவர் அதே நிறுவனத்துக்கு (Employer) மட்டுமே வேலை செய்ய முடியும்.

    * நிறுவனத்தை (Employer) மாற்ற வேண்டுமென்றால் புதிய H1B transfer செய்ய வேண்டும்.

    நன்மைகள்:

    * அமெரிக்காவில் சட்டப்படி வேலை செய்யலாம்.

    * குடும்பத்தினரை (spouse, children) H4 visa மூலம் அழைத்துச் செல்லலாம்.

    * நிரந்தர குடியுரிமைக்கு (Green Card) வழிவகுக்கும்.

    ×