என் மலர்
நீங்கள் தேடியது "தந்தூரி சிக்கன்"
- வெண்ணெய் கலந்த, கிரீமி கிரேவியில் போடப்படும் தந்தூரி கோழியின் துண்டுகள் தான் பட்டர் சிக்கனில் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன.
- பூண்டு அல்லது வெண்ணெய் என எதுவாக இருந்தாலும், பட்டர் சிக்கனை நானுடன் சேர்த்து சாப்பிடவே பெரும்பாலோர் விரும்புகிறோம்.
வட இந்தியாவின் புகழ்பெற்ற உணவான பட்டர் சிக்கன், டேஸ்ட்அட்லஸ் நிறுவனம் வெளியிட்ட தரவரிசையில் 5-வது இடத்தை பெற்றுள்ளது.
'உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள்' என்ற தலைப்பிலான பட்டியலில் துருக்கியின் பிலிக் டோப்காபி முதலிடத்திலும், மொராக்கோவைச் சேர்ந்த ரிஃபிசா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சிக்கின் மற்றும் கொரிய வறுத்த சிக்கன் ஆகியவை 2-வது இடத்திலும் உள்ளன. முதல் 20 இடங்களில் உள்ள மற்றொரு இந்திய உணவு தந்தூரி சிக்கன். இது 14-வது இடத்தில் உள்ளது.
வெண்ணெய் கலந்த, கிரீமி கிரேவியில் போடப்படும் தந்தூரி கோழியின் துண்டுகள் தான் பட்டர் சிக்கனில் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன.
ஒரு நாள் தந்தூரி சிக்கனை வீணாக்குவதைத் தவிர்க்கும் முயற்சியில் இந்த உணவு உருவாக்கப்பட்டது. ஆனால் அது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக தற்போது மாறி உள்ளது.
பிரிவினைக்கு முந்தைய காலத்தில் பெஷாவரில் உள்ள மோதி மஹால் உணவகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது பொதுவான கதை. உணவகத்தில் பணிபுரிந்த குந்தன் லால் குஜ்ரால் மற்றும் குந்தன் லால் ஜக்கி ஆகியோர் 1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, தாக்கூர் தாஸ் மாகோ என்ற தொழிலதிபருடன் சேர்ந்து மோதி மஹாலைத் திறந்தனர். இரண்டு குடும்பங்களும் பட்டர் சிக்கனை உருவாக்கியதாக உரிமை கோருகின்றன.
பூண்டு அல்லது வெண்ணெய் என எதுவாக இருந்தாலும், பட்டர் சிக்கனை நானுடன் சேர்த்து சாப்பிடவே பெரும்பாலோர் விரும்புகிறோம்.
டாப் உணவுகள் பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறாதது வருத்தம் என்று சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்தியாவில் பலரது விருப்ப உணவாக சிக்கன் பிரியாணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கன் - அரை கிலோ
தயிர் - 175 மில்லி (ஒரு தம்ளர்)
தந்தூரி மசாலா - சிறிதளவு
தந்தூரி கலர் பொடி - ஒரு சிட்டிகை
எலுமிச்சம்பழம் - ஒன்று
வறுத்து அரைத்த தனியா, சீரகம், மற்றும் அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை - தலா ஒரு சிறிய தேக்கரண்டி.
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கோழி இறைச்சியில் தோலுரித்து நான்கு துண்டுகளாக்க வேண்டும்.
கூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.
வறுத்து அரைத்த தனியா, சீரகம் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை இறைச்சியில் பூசி தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா கலந்து தயிருடன் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
மறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து தணலில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.
பின்னர் எலுமிச்சம் பழத்தை வாட்டப்பட்ட இறைச்சி மீது பிழிந்துவிட்டு சூடான தந்தூரி சிக்கனை பரிமாறவும்.
தந்தூரி சிக்கன் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






