என் மலர்
நீங்கள் தேடியது "சிக்கன்"
- பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில், பல்வேறு தென் மாநில உணவு வகைகள் புதிதாக சேர்ப்பு
- முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா ஆகிய உணவு வகைகள் சேர்ப்பு
வெளிநாடுகளுக்குச் செல்லும் தங்களது விமானங்களில் பயணிகளுக்கு தென்னிந்தியவின் சிறப்பான உணவுகளை இலவசமாக வழங்கப் போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு உணவான மிளகாய்ப் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், மூன்று வகை சட்னிகளான தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்டினி உள்ளிட்டவையும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் தமிழக பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் பிரியாணி, மலபாரி கோழிக் கறி, சிக்கன் பிம்பாப் உள்ளிட்ட அசைவ உணவுகளும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
- வெண்ணெய் கலந்த, கிரீமி கிரேவியில் போடப்படும் தந்தூரி கோழியின் துண்டுகள் தான் பட்டர் சிக்கனில் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன.
- பூண்டு அல்லது வெண்ணெய் என எதுவாக இருந்தாலும், பட்டர் சிக்கனை நானுடன் சேர்த்து சாப்பிடவே பெரும்பாலோர் விரும்புகிறோம்.
வட இந்தியாவின் புகழ்பெற்ற உணவான பட்டர் சிக்கன், டேஸ்ட்அட்லஸ் நிறுவனம் வெளியிட்ட தரவரிசையில் 5-வது இடத்தை பெற்றுள்ளது.
'உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள்' என்ற தலைப்பிலான பட்டியலில் துருக்கியின் பிலிக் டோப்காபி முதலிடத்திலும், மொராக்கோவைச் சேர்ந்த ரிஃபிசா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சிக்கின் மற்றும் கொரிய வறுத்த சிக்கன் ஆகியவை 2-வது இடத்திலும் உள்ளன. முதல் 20 இடங்களில் உள்ள மற்றொரு இந்திய உணவு தந்தூரி சிக்கன். இது 14-வது இடத்தில் உள்ளது.
வெண்ணெய் கலந்த, கிரீமி கிரேவியில் போடப்படும் தந்தூரி கோழியின் துண்டுகள் தான் பட்டர் சிக்கனில் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன.
ஒரு நாள் தந்தூரி சிக்கனை வீணாக்குவதைத் தவிர்க்கும் முயற்சியில் இந்த உணவு உருவாக்கப்பட்டது. ஆனால் அது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக தற்போது மாறி உள்ளது.
பிரிவினைக்கு முந்தைய காலத்தில் பெஷாவரில் உள்ள மோதி மஹால் உணவகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது பொதுவான கதை. உணவகத்தில் பணிபுரிந்த குந்தன் லால் குஜ்ரால் மற்றும் குந்தன் லால் ஜக்கி ஆகியோர் 1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, தாக்கூர் தாஸ் மாகோ என்ற தொழிலதிபருடன் சேர்ந்து மோதி மஹாலைத் திறந்தனர். இரண்டு குடும்பங்களும் பட்டர் சிக்கனை உருவாக்கியதாக உரிமை கோருகின்றன.
பூண்டு அல்லது வெண்ணெய் என எதுவாக இருந்தாலும், பட்டர் சிக்கனை நானுடன் சேர்த்து சாப்பிடவே பெரும்பாலோர் விரும்புகிறோம்.
டாப் உணவுகள் பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறாதது வருத்தம் என்று சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்தியாவில் பலரது விருப்ப உணவாக சிக்கன் பிரியாணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைக்கலப்பாகி உள்ளது.
- ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் பிஜுனூரில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்போது, திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட சிக்கன் துண்டுகள் சிறியதாக இருந்ததாக மணமகன் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, மணமகன் வீட்டாருக்கு பொறித்த சிக்கன் சிறிய துண்டுகளாகவும், மணமகள் வீட்டாருக்கு பெரியதாகவும், அதிகமாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி உள்ளது.
சிக்கன் பிரச்னையில் திருமண வீடுடே கலவர வீடாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
- அலாதியான சுவையைக் கொண்டது கோழி நெய் ரோஸ்ட்!
- கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியான மங்களூருவின் பிரபல உணவு!
சமையல் உலகில் எப்போதும் புதுமைகளும், பாரம்பரிய சுவைகளும் சந்திக்கும் தருணங்கள் உண்டு. அப்படியான ஒரு அலாதி சுவையைத் தன்னகத்தே கொண்டதுதான் கோழி நெய் ரோஸ்ட். கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியான மங்களூரைச் சேர்ந்த இந்த உணவு, அதன் தனித்துவமான சிவப்பு நிறத்திற்காகவும், வாயில் கரையும் சுவைக்காகவும் மிகவும் புகழ் பெற்றது. இந்த சுவையான சிக்கன் ரெசிபியை சமையல் கலைஞர் கதிரவன் நமக்காக செய்து காட்டியுள்ளார்.

செய்முறை விளக்கம்
காஷ்மீரி மிளகாய் விழுது தயாரித்தல் :
* முதலில் ¼ கிலோ காஷ்மீரி மிளகாயை நன்கு கழுவி, தண்ணீரில் வேகவைக்க வேண்டும்.
* வேகவைத்த இந்த மிளகாயைத் தண்ணீர் வடித்துவிட்டு, பசை போல அரைத்து எடுக்கவும்.
* காஷ்மீரி மிளகாய் காரம் குறைவாக இருந்தாலும், அற்புதமான சிவப்பு நிறத்தை அளிக்கும். மேலும், இந்த விழுதை எண்ணெயில் வதக்கி வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்! இந்த விழுதுதான் நாம் தயாரிக்க உள்ள கோழி நெய் ரோஸ்டிற்கான அடிப்படைச் சுவையாகும்.
கோழி நெய் ரோஸ்ட் செய்முறை :
* ஒரு வாணலியை எடுத்து, அதில் 2 கரண்டி நெய் சேர்க்கவும்.
* நெய் சூடானதும், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கவும்.
* பச்சை வாசனை நீங்கியவுடன், நாம் தயாரித்து வைத்திருக்கும் காஷ்மீரி மிளகாய் விழுதில் 2 தேக்கரண்டியை வாணலியில் சேர்க்கவும்.
* இந்த மிளகாய் விழுதை நன்கு வதக்க வேண்டும். சமைக்கும்போது விழுதிலிருந்து நெய் தனியாகப் பிரிந்து வரும். இதுதான் சரியான பதம்!
* இப்போது, மிளகுப் பொடி (¼ தேக்கரண்டி), மஞ்சள் தூள் (½ தேக்கரண்டி), சீரகப் பொடி (½ தேக்கரண்டி) ஆகியவற்றைச் சேர்த்து உடனடியாகக் கிளறவும்.
* மசாலாக்களைக் கலந்த உடனே, வெட்டி வைத்திருக்கும் கோழியை வாணலியில் சேர்க்கவும். இந்தக் கலவையில், நாம் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை; நெய்யே பச்சை வாசனையை நீக்கிச் சரியாகச் சமைத்துவிடும்.
* கோழியை மசாலாவுடன் நன்கு கிளறிய பின், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* சிறிதளவு தண்ணீரை மட்டும் தெளித்து மீண்டும் கிளறி, வாணலியை ஒரு மூடியால் மூடவும்.
* மூடி போட்டு வேகவைக்கும் போது, அடுப்பை அப்படியே குறைந்த தீயில் (Low Flame) வைக்கவும்.
* சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தால், சுவையான கோழி நெய் ரோஸ்ட் தயாராகியிருக்கும்! இந்த ரெசிபி, மிளகாயை வேகவைத்து செய்வதால், அதிக காரம் இல்லாமலேயே அற்புதமான நிறத்தையும் மணத்தையும் தரும்.
கோழி நெய் ரோஸ்ட்டின் பலன்கள்
* கோழி இறைச்சி புரதத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கும், எலும்புகளை வலுப்படுத்தவும் அத்தியாவசியமானது.
* இதில் சேர்க்கப்படும் நெய் (Ghee) ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், ஆற்றல் மூலமாகவும் செயல்படக்கூடியது.
* காஷ்மீரி மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.
* இஞ்சியும், சீரகமும் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பாரம்பரிய மூலிகைகள் ஆகும்.
இந்த விரைவான மற்றும் சுவையான கோழி நெய் ரோஸ்ட், உங்கள் சமையல் அட்டவணையில் நிச்சயம் இடம்பெற வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவாகும். இது சிறந்த ஸ்டார்ட்டர் ஆகவோ, அல்லது சப்பாத்தி போன்றவற்றுடன் மெயின் கோர்ஸாகவோ சேர்த்து உண்ண ஏற்ற ரெசிபியாகும். இதைச் செய்து பார்த்து, மங்களூரின் மணக்கும் சுவையை உங்கள் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!
- தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.
- சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அசைவ பிரியர்கள் அனைவருமே சிக்கன் சாப்பிடுவது வழக்கம். அவர்களுக்கு சிக்கன் மிகவும் பிடித்த உணவாகவும் இருக்கும். ஆனால் தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து எலும்பு, மூட்டு பிரச்சனைகள் ஏற்படும் என்றும், இதய நோய் வர வாய்ப்புள்ளது என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
- டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
- தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
கே.கே. நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மோகன்ராஜ். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த "டிப் டாப்" வாலிபர் ஒருவர் ரூ.760-க்கு பரோட்டா, பிரைட் ரைஸ், சிக்கன் உள்ளிட்ட டிபன் வகைகளை பார்சல் வாங்கினார் அப்போது பணத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக கூறிய வாலிபர் கடை ஊழியரை அனுப்பி வைத்தால் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மோகன் ராஜ், கடையில் வேலை பார்த்து வரும் சிறுவனை அனுப்பி வைத்தார். டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
கடையின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவிற்குள் சென்று ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர் ஓட்டல் ஊழியரின் செல்போனை கேட்டு வாங்கினார்.
மேலும் 2-வது தளத்தில் உள்ள நண்பரிடம் கூறி விட்டேன். போய் பணத்தை வாங்கி கொண்டு வா" என்று கூறி அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பிய ஓட்டல் ஊழியர் அந்த வீட்டின மேல் தளத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.
அவர் கீழே இறங்கி வருவதற்குள் டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து செல்போனுடன் தப்பி சென்றுவிட்டார். சினிமா பாணியில் அவர் ஏமாற்றி டிபன் வாங்கி சென்று இருப்பது தெரிந்தது.
டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு நூதனமான முறையில் செல்போனையும் பறித்து தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.
- புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன்(வயது39).
இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.
கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எங்கள் கடைக்கு சென்னை குறுக்குபேட்டையை சேர்ந்த செந்தில்மோகன் என்பவர் வந்தார்.
அவர் தான் சென்னையில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருவதாகவும், எனக்கு மொத்தமாக சிக்கன் சப்ளை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்கான பணத்தை உரிய தவணையில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார்.
இதனை நம்பி நாங்கள் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.
இதுவரை சப்ளை செய்த சிக்கனுக்கு ரூ.47 லட்சத்து 37 ஆயிரத்து 999 செந்தில்மோகன் தர வேண்டும். ஆனால் அவர் இதுவரை பணத்தை தரவில்லை.
இதுகுறித்து அவரிடம் கேட்டால் விரைவில் தருகிறேன் என்றார்.
இந்நிலையில், கடந்த 10 மாதமாக செந்தில்மோகன் சிக்கன் வாங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் சென்னைக்கு சென்று அவர் கூறிய இடத்திற்கு சென்றேன்.
அப்போது அங்கு அவர் சொல்லிய சிக்கன் கடை இல்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை. அப்போது தான் அவர் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.
எனவே சிக்கன் வாங்கி விட்டு ரூ.47.37 லட்சம் மோசடி செய்த செந்தில்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இப்படி செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.
சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இப்படி செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பிரட் - 4
முட்டை - 1
பால் - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1/2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பிரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி பின்னர் அதனை எண்ணெயில் போட வேண்டும்.
* இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் ரெடி.
- மாலை வந்ததும் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று ஒரு மிக பெரிய குழப்பம் ஏற்படுகிறது.
- வாங்க சிக்கன் நக்கெட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
வீட்டில் அம்மாக்களுக்கு மாலை வந்ததும் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று ஒரு மிக பெரிய குழப்பம் ஏற்படுகிறது. அதுவும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்றதாகவும் இருக்க வேண்டும். அதற்கு தான் நாங்க ஒரு சிம்பில் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணியிருக்கோம் வாங்க சிக்கன் நக்கெட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை:
போன்லெஸ் சிக்கன் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
மைதா - 2 டீஸ்பூன்
முட்டை - 2
ப்ரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:
* சிக்கனை சுத்தம் செய்துவிட்டு மிகவும் மெல்லியத் துண்டுகளாகப் போடவும்.
* ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
* வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.
* தண்ணீர் ஊற்ற வேண்டாம். சிக்கனில் உள்ள தண்ணீரிலேயே வெந்துவிடும்.
* அடிப்பிடிக்காமல் சிக்கன் துண்டுகளை இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிவிட்டு வேக வைக்கவும்.
* தண்ணீர் முழுவதும் சுண்டி, சிக்கன் வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
* மைதா, ப்ரெட் தூள் இரண்டையும் தனித்தனி கிண்ணங்களில் எடுத்துக்கொள்ளவும்.
* முட்டையைத் தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து வைத்துக்கொள்ளவும்.
* ஒரு சிக்கன் துண்டை எடுத்து மைதாவில் முழுவதும் புரட்டி, அடுத்து முட்டையில் முழுவதும் தோய்த்து, உடனே ப்ரெட் தூளில் போட்டு புரட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
* இதுபோல் எல்லா சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொன்றாகவோ போட்டு ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்துவிடவும்.
* இதனை தக்காளி கெச்சப்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.
- சிக்கன் மஷ்ரூமை சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
மஷ்ரூம் - 1/2 கிலோ
சோள மாவு - 100 கிராம்
மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
பூண்டு - 2 முழுஅளவு
பிரெஷ் கிரீம் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன், சோளமாவு, மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து அவற்றை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மஷ்ரூம்களை உங்களுக்கு தேவைப்படும் வடிவில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு வதக்கவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.
பின்னர் ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு கட் செய்து வைத்துள்ள மஷ்ரூம்களை சேர்க்கவும், அதனுடன் சிறிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டு அதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனை தொடர்ந்து ஏற்கனவே பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு கலவையாக வரும் நேரத்தில் பிரெஷ் கிரீமை அதனுடன் சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.
சிக்கன் மஷ்ரூம் கிரேவி சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்
- பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.
அலுவலகம் சென்று வரும் பெண்களும், ஆண்களுக்கும் மிகவும் சவாலாக இருப்பது சாப்பாடுதான். சில நேரங்களில் வேலை பளு காரணமாக ஹோட்டல்களில் சாப்பிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் ஹோட்டல்களில் உபயோகிக்கும் மசாலா, சிக்கன், எண்ணெய் போன்றவற்றால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று கவலையும் அடைகிறார்கள். உங்களுக்காக ஈஸியா வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க...
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது - ஒரு டேபிள் ஸ்பூன்
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
வினிகர் - ஒரு டீஸ்பூன்
கேரட் - 1
குடைமிளகாய் சிகப்பு மற்றும் மஞ்சள் - 1 ஒன்று
வடித்த சாதம் - 2 கப்
வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
• முதலில் scramble egg செய்ய ஒரு கடாயில் எண்ணெய் முட்டை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலக்கவும். பின்னர் அதை தனியாக ஒரு பக்கம் எடுத்து வைத்து கொள்ளவும்.
• சிக்கனை 65 மசாலா சேர்ந்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பொரித்த சிக்கன்களை சிறுசிறு துண்டுகலாக வெட்டிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சிக்கன் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.
• அதனுடன் சோயா சாஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
• குடைமிளகாய் கேரட் வெந்ததும் வடித்த சாதம் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்
• பின் scramble egg வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
• இதோ சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டிலே ரெடி.
இதுபோல் வீட்டிலேயே நாம் கண்ணெதிரே செய்து சாப்பிடும் உணவுகளால் நமது உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
- அடுப்பில் வாணலியை வைத்து முட்டையை நன்கு அடித்து ஊற்றவும்.
- இறுதியாக வினிகர், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
சிக்கன் - 100 கிராம்
கார்ன்ஃப்ளார் மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டை - 1
வினிகர் - 1ஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
வெங்காய தாள் - சிறிதளவு

செய்முறை:
• 100 கிராம் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளை ஒரு குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
• வேகவைத்த சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வைத்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு போட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
• 1/2 கப் ஸ்வீட் கார்னில் பாதி அளவை எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
• அடுப்பில் வாணலியை வைத்து முட்டையை நன்கு அடித்து ஊற்றவும்.
• பின்னர் வெங்காய தாளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போடவும்.
• இதனுடன் அரைத்து வைத்திருந்த ஸ்வீட் கார்ன், சிறிதாக பிய்த்து வைத்திருந்த சிக்கன், 3 டம்பளர் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
• நன்கு கொதித்தவுடன் கரைத்து வைத்திருந்த கார்ன் ஃப்ளார் மாவு கரைசலை ஊற்றவும்.
• இதனுடன் மீதம் உள்ள ஸ்வீர் கார்னையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு 5 நிமிடம் இவை அனைத்தையும் கொதிக்க விடவும்.
• இறுதியாக வினிகர், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
• இப்போ சுவையான விடுமுறையில் சூடாக சாப்பிட சுவீட் கார்ன் சிக்கன் சூப் ரெடி.






