search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parotta"

    • டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
    • தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    கே.கே. நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மோகன்ராஜ். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த "டிப் டாப்" வாலிபர் ஒருவர் ரூ.760-க்கு பரோட்டா, பிரைட் ரைஸ், சிக்கன் உள்ளிட்ட டிபன் வகைகளை பார்சல் வாங்கினார் அப்போது பணத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக கூறிய வாலிபர் கடை ஊழியரை அனுப்பி வைத்தால் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மோகன் ராஜ், கடையில் வேலை பார்த்து வரும் சிறுவனை அனுப்பி வைத்தார். டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    கடையின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவிற்குள் சென்று ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர் ஓட்டல் ஊழியரின் செல்போனை கேட்டு வாங்கினார்.

    மேலும் 2-வது தளத்தில் உள்ள நண்பரிடம் கூறி விட்டேன். போய் பணத்தை வாங்கி கொண்டு வா" என்று கூறி அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பிய ஓட்டல் ஊழியர் அந்த வீட்டின மேல் தளத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.

    அவர் கீழே இறங்கி வருவதற்குள் டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து செல்போனுடன் தப்பி சென்றுவிட்டார். சினிமா பாணியில் அவர் ஏமாற்றி டிபன் வாங்கி சென்று இருப்பது தெரிந்தது.

    டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு நூதனமான முறையில் செல்போனையும் பறித்து தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் பன் பரோட்டா மிகவும் பிரபலம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்

    சர்க்கரை - 1 தேக்கரண்டி

    முட்டை - 1

    பால் - 1 மேசைக்கரண்டி

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * ஒரு கிண்ணத்தில் மைதா, தேவையான அளவு உப்பு, சர்க்கரை, ஒரு முட்டை உடைத்து ஊற்றி, அதில் பால் சேர்த்து நன்கு பிசையவும்.

    * பிசைந்த மாவில் எண்ணெயை தடவி இரண்டு மணி நேரம் மூடிவைக்கவும்.

    * இரண்டு மணி நேரம் கழித்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகள் மீது எண்ணெயை தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

    * அடுத்து கல்லில் எண்ணெயை தடவி மாவை சப்பாத்தி கட்டையால் மெல்லிதாக தேய்க்க வேண்டும்.

    * தேய்த்த மாவை விரலால் சூற்றி (வட்ட வடிவில்) வைக்கவும்.

    * ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சூடவும்.

    * சுவையான மற்றும் மொறு மொறுப்பான மதுரை பன் பரோட்டா தயார்.

    * இதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன், மட்டன் சால்னா சூப்பராக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கினர்.
    • வீட்டுக்கு சென்று பரோட்டாவை சாப்பிட்டபோது குருமாவில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முரளி கிருஷ்ணன் (வயது 21). இவர் தனது நண்பர் கலையரசனுடன் (20) நேற்று இரவு, கொங்கணாபுரம் - ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கினர். வீட்டுக்கு சென்று பரோட்டாவை சாப்பிட்டபோது குருமாவில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால்அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 வாலிபர்கள் வாந்தி, மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முரளி கிருஷ்ணன் (வயது 21). இவர் தனது நண்பர் கலையரசனுடன் (20) நேற்று இரவு, கொங்கணாபுரம்-ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கினர். வீட்டுக்கு சென்று பரோட்டாவை சாப்பிட்டபோது குருமாவில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • உடல் ஆரோக்கியத்திற்கு இந்த பரோட்டா மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை - ஒரு கப்

    கோதுமை மாவு - கால் கிலோ

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * முதலில் தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும்.

    * முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    * கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

    * மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும்.

    * தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    * இப்போது சத்தான சுவையான முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பரோட்டா பிரியர்கள் மத்தியில் ரோட்டுக்கடை கிளி பரோட்டா படு ஃபேமஸ்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    சால்னாவுடன் சிக்கன் அல்லது மட்டன் தொக்கை வைத்து அதன் மேல் பரோட்டாவை பிரித்து போட்டு வாழை இலையால் மூடி 15 நிமிடம் அடுப்பு தவாவில் வேக வைத்து எடுத்தால் பூ போல் பிரியும் வாழை இலை பரோட்டா தயார். இதன் வாசனையே பசியை வரவழைத்து நம்மை சாப்பிட தூண்டும். இதை வீட்டிலேயும் செய்யலாம். செய்முறையை இந்த பதிவில் பகிர்கிறோம்.

    தேவையான பொருட்கள்

    வெஜிடபிள் சால்னா - 2 கப்

    பரோட்டா - 2

    வாழை இலை - 1

    நறுக்கிய வெங்காயம் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    வாழை இலையை அடுப்பில் காட்டி இரு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி எடுத்து கொள்ளவும்.

    பின்பு இலையை பிரித்து வைத்து அதன் மேல் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னா ஊற்றவும்.

    இப்போது அதில் நறுக்கிய வெங்காயத்தை தூவவும்.

    பின்பு அதன் மேல் மீண்டும் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னாவை ஊற்றவும்.

    இறுதியாக அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை தூவி வாழை இலையை பக்குவமாய் மடித்து நூல் அல்லது வாழை நாரை வைத்து வாழை இலையை கட்டி எடுத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேல் கட்டி வைத்துள்ள வாழை இலை பரோட்டாவை வைக்கவும்.

    இப்போது கடாயில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

    இப்போது வாழை இலையை திருப்பி போட்டு மீண்டும் சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான வாழை இலை கிளி பரோட்டா தயார்.

    • ஹோட்டலில் இந்த பரோட்டா வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று இந்த பரோட்டாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 500 கிராம்

    தயிர் - 3 தேக்கரண்டி

    பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

    வெண்ணெய் - 3 தேக்கரண்டி

    முட்டை - 2

    உப்பு - தேவையான அளவு

    கொத்துக்கறி மசாலாவிற்கு தேவையான பொருட்கள்

    கொத்துக் கறி - 500 கிராம்

    பெரிய வெங்காயம் - 2

    பூண்டு - 4 பல்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 4 மேஜைக் கரண்டி

    செய்முறை:

    கொத்துக் கறியுடன் மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, கொத்துக் கறியைப் போட்டு கிளறவும்.

    மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு போட்டுக் கிளறி நன்றாக வதக்கி, கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.

    பரோட்டா செய்முறை:

    மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், வெண்ணெய், தயிர் இவற்றைப் போட்டுக் கலந்து, பிசைந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.

    முட்டையுடன் சிறிது உப்புத் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும்.

    மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, மிக மெல்லியதாக தேய்க்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் விரித்த மாவைப் போட்டு, முட்டையை கரண்டியில் எடுத்து பரவலாக தடவவும்.

    கொத்துக்கறி மசாலாவை இதன் மீது பரப்பவும். மாவை, இடது பக்கமும், வலது பக்கமும் மடக்கி மூடவும். கவனமாக திருப்பிப் போட்டு, பொன்நிறமானதும் எடுத்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான முட்டை கொத்துக்கறி பரோட்டா ரெடி.

    • குழந்தைகளுக்கு கொத்து பரோட்டா செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
    • ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை எப்படி வீட்டில் செய்வது குறித்து காணலாம்..

    தேவையான பொருள்கள்:

    பரோட்டா - 2

    முட்டை - 1

    வெங்காயம் - 2

    எண்ணெய் - 4 ஸ்பூன்

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 2

    உப்பு - தேவையான அளவு

    பூண்டு - 8 பல்

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    கொத்தமல்லி - தேவையான அளவு

    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி குழைய வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.

    * அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.

    * 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    * சுட சுட சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா தயார்.

    * இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..

    • நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும் உடலுக்கு நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.
    • பரோட்டா பற்றி சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

    மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும், அதே நேரம் அதிக பழிச்சொல்லுக்கு உள்ளாகும் உணவாகவும் இருப்பது, பரோட்டா. தெரு ஓர கடை முதல் `பைவ் ஸ்டார்' ஓட்டல் வரை பலவிதமான சுவைகளில் ருசிக்கப்படும் பரோட்டா மீது மூன்றுவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

    ஒன்று: பரோட்டா மைதாவை பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது. அதில் நார்ச்சத்து இல்லை.

    இரண்டு: போஸ்டர் ஒட்டும் பசைப் பொருள் போன்றுதான் மைதாவை குழைத்து பரோட்டா தயாராகிறது. அதனால் அது குடலின் தசைச்சுவர்களில் ஒட்டிக்கொள்ளும்.

    மூன்று: பரோட்டா செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் ஜீரண கட்டமைப்புகள் நெருக்கடிக்குள்ளாகும்.

    * மைதாவில் நார்ச்சத்து இல்லையா?

    மைதாவில் நார்ச்சத்து இருக்கிறது. நார்ச்சத்தில் நீரில் கரைபவை, நீரில் கரையாதவை என இரண்டு வகை உண்டு. சத்துக்களின் அடிப்படையில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலனை கொண்டவைதான். நார்ச்சத்து கொண்ட உணவு என்றாலே அது வைக்கோல் போன்றோ தும்புகள் போன்றோ இருக்கும் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால் நார்ச்சத்து கொண்ட உணவுகள் எல்லாம் தோற்றத்தில் அப்படி இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

    கோதுமை மாவில் கரையும் மற்றும் கரையாத இரு வகை நார்களும் உள்ளன. மைதா மற்றும் அரிசி மாவில் கரையும் நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை, குளுகோஸ் பவுடர் போன்றவைகளில் நார்ச்சத்தே இல்லை. இன்னொரு விஷயம், நார்ச்சத்து இருந்தால் மட்டுமே அது நல்ல உணவு என்ற அர்த்தம் இல்லை. இதய நலனுக்கு நார்ச்சத்து கொண்ட உணவுகள் ஏற்றது என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியர்கள் அன்றாடம் உண்ணும் பலவகையான உணவுகளில் நார்ச்சத்து இருக்கவே செய்கிறது.

    * மைதாவின் பசை குடலில் ஒட்டிக்கொள்ளுமா?

    செகன்ட்ஷோ சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவைக் கடந்து வீடு திரும்புபவர்கள் சாலை ஓரங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்களை பார்த்திருப்பார்கள். போஸ்டரில் பசை கூழை தேய்த்து ஒட்டுவார்கள். அதை பார்த்தவர்களில் சிலர் பரப்பிவிட்ட கருத்துதான், மைதாவின் பசை குடலில் ஒட்டிக்கொள்ளும் என்பது! மனித உடல் அமைப்பும், இயக்கமும் விஞ்ஞானரீதியாக உணரப்பட்டவை. எந்த உணவும் குடலில் ஒட்டிப்பிடிக்காது.

    மனித குடல் பைப் போன்றது அல்ல. அதை ஒரு பம்ப் போன்றது என்று எடுத்துக்கொள்ளலாம். உண்ணும் உணவு, இந்த பம்பின் செயல்பாட்டால் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும். நாம் எதை சாப்பிட்டாலும் அந்த பம்ப் செயல்பட்டுக்கொண்டேதான் இருக்கும். அதுபோல் குடலின் சுவர்களிலும் சில விசேஷ கட்டமைப்புகள் உண்டு. சுவர்களில் திசுக்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்படுவதும், அவை உணவோடு அடிக்கடி பெயர்ந்து போவதும் நடந்துகொண்டே இருக்கும். இந்த இயக்க நிலையின் அடிப்படையில் எந்த உணவும் போஸ்டரை ஒட்டும் பசை போன்று குடலோடு ஒட்டிக்கொள்ளாது.

    * பரோட்டா ஜீரணமாவது கடினமா?

    இந்த குற்றச்சாட்டு வித்தியாசமானது. ஏன் என்றால் பரோட்டா தாமதமாக செரிமானம் ஆவது அதன் குறையல்ல, நிறை. உண்ணும் உணவுகளில் கிளைசெமிக் இன்டக்ஸ் குறிப்பிடத்தக்கது. விரைவாக செரிமானமாகக்கூடியதாக கருதப்படும் கஞ்சி, ஆப்பம், இட்லி போன்றவைகள் கிளைசெமிக் இன்டக்ஸ் அளவில் உயர்ந்தவை. இவை உடலின் மெட்டபாலிக் செயல்பாட்டை கோளாறாக்கக்கூடும். இவைதான் சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், இதயநோய், உடல்பருமன் போன் றவைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அதனால் தாமதமாக செரிமானமாகும் உணவுகளை நோக்கி உலகம் திரும்பிக்கொண்டிருக்கிறது. பரோட்டோ போன்று தாமதமாக செரிமானமாகும் உணவுகளை சிறிதளவு சாப்பிட்டாலும் நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வைத்தரும்.

    நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும் உடலுக்கு நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. அதுபோன்ற சராசரி உணவுதான் பரோட்டாவும். அளவோடு, அதிக இடைவெளி விட்டு எல்லா உணவுகளையும் உண்பதுபோல் இதையும் உண்ணலாம். காரமான சைடு டிஷ்களோடு சேர்த்து கண்டபடி பரோட்டா சாப்பிட்டு உடல் நலனை கெடுத்துக்கொண்டால் அது பரோட்டாவின் குறை அல்ல. சாப்பிட்டவரின் குறை. பரோட்டா பற்றி சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

    பாசிப்பருப்பு, கோதுமை மாவு சேர்த்து செய்யும் இந்த பரோட்டா மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கோதுமை மாவை உப்பு மற்றும் மிளகாய் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பை கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

    பிறகு பிசைந்த மாவை பரோட்டாவாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மூங்தால் பரோட்டா தயார்.

    ×