search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரோட்டா"

    • வீடியோவை பகிர்ந்து சுற்றுலா பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடைக்காரரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    சுற்றுலா தலங்களில் உணவு பொருட்களின் விலை மற்ற இடங்களை காட்டிலும் அதிகமாக இருப்பது சகஜம்தான் என்றாலும், இலங்கையில் சாலையோர கடை ஒன்றில் கொத்து பரோட்டாவுக்கு ரூ.1900 கேட்டதாக சுற்றுலா பயணி ஒருவர் வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.

    அந்த பதிவில் அவர் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்ற போது அங்குள்ள சாலையோர கடை ஒன்றுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது கொத்து பரோட்டா விலை கேட்ட போது ரூ.1900 என கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

    அதற்கு அவர் விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் சென்று விடுங்கள் என கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோவை பகிர்ந்து சுற்றுலா பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடைக்காரரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    • டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
    • தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    கே.கே. நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மோகன்ராஜ். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த "டிப் டாப்" வாலிபர் ஒருவர் ரூ.760-க்கு பரோட்டா, பிரைட் ரைஸ், சிக்கன் உள்ளிட்ட டிபன் வகைகளை பார்சல் வாங்கினார் அப்போது பணத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக கூறிய வாலிபர் கடை ஊழியரை அனுப்பி வைத்தால் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மோகன் ராஜ், கடையில் வேலை பார்த்து வரும் சிறுவனை அனுப்பி வைத்தார். டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    கடையின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவிற்குள் சென்று ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர் ஓட்டல் ஊழியரின் செல்போனை கேட்டு வாங்கினார்.

    மேலும் 2-வது தளத்தில் உள்ள நண்பரிடம் கூறி விட்டேன். போய் பணத்தை வாங்கி கொண்டு வா" என்று கூறி அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பிய ஓட்டல் ஊழியர் அந்த வீட்டின மேல் தளத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.

    அவர் கீழே இறங்கி வருவதற்குள் டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து செல்போனுடன் தப்பி சென்றுவிட்டார். சினிமா பாணியில் அவர் ஏமாற்றி டிபன் வாங்கி சென்று இருப்பது தெரிந்தது.

    டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு நூதனமான முறையில் செல்போனையும் பறித்து தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் பன் பரோட்டா மிகவும் பிரபலம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்

    சர்க்கரை - 1 தேக்கரண்டி

    முட்டை - 1

    பால் - 1 மேசைக்கரண்டி

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * ஒரு கிண்ணத்தில் மைதா, தேவையான அளவு உப்பு, சர்க்கரை, ஒரு முட்டை உடைத்து ஊற்றி, அதில் பால் சேர்த்து நன்கு பிசையவும்.

    * பிசைந்த மாவில் எண்ணெயை தடவி இரண்டு மணி நேரம் மூடிவைக்கவும்.

    * இரண்டு மணி நேரம் கழித்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகள் மீது எண்ணெயை தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

    * அடுத்து கல்லில் எண்ணெயை தடவி மாவை சப்பாத்தி கட்டையால் மெல்லிதாக தேய்க்க வேண்டும்.

    * தேய்த்த மாவை விரலால் சூற்றி (வட்ட வடிவில்) வைக்கவும்.

    * ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சூடவும்.

    * சுவையான மற்றும் மொறு மொறுப்பான மதுரை பன் பரோட்டா தயார்.

    * இதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன், மட்டன் சால்னா சூப்பராக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • 2 வாலிபர்கள் வாந்தி, மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முரளி கிருஷ்ணன் (வயது 21). இவர் தனது நண்பர் கலையரசனுடன் (20) நேற்று இரவு, கொங்கணாபுரம்-ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கினர். வீட்டுக்கு சென்று பரோட்டாவை சாப்பிட்டபோது குருமாவில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும் உடலுக்கு நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.
    • பரோட்டா பற்றி சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

    மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும், அதே நேரம் அதிக பழிச்சொல்லுக்கு உள்ளாகும் உணவாகவும் இருப்பது, பரோட்டா. தெரு ஓர கடை முதல் `பைவ் ஸ்டார்' ஓட்டல் வரை பலவிதமான சுவைகளில் ருசிக்கப்படும் பரோட்டா மீது மூன்றுவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

    ஒன்று: பரோட்டா மைதாவை பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது. அதில் நார்ச்சத்து இல்லை.

    இரண்டு: போஸ்டர் ஒட்டும் பசைப் பொருள் போன்றுதான் மைதாவை குழைத்து பரோட்டா தயாராகிறது. அதனால் அது குடலின் தசைச்சுவர்களில் ஒட்டிக்கொள்ளும்.

    மூன்று: பரோட்டா செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் ஜீரண கட்டமைப்புகள் நெருக்கடிக்குள்ளாகும்.

    * மைதாவில் நார்ச்சத்து இல்லையா?

    மைதாவில் நார்ச்சத்து இருக்கிறது. நார்ச்சத்தில் நீரில் கரைபவை, நீரில் கரையாதவை என இரண்டு வகை உண்டு. சத்துக்களின் அடிப்படையில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலனை கொண்டவைதான். நார்ச்சத்து கொண்ட உணவு என்றாலே அது வைக்கோல் போன்றோ தும்புகள் போன்றோ இருக்கும் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால் நார்ச்சத்து கொண்ட உணவுகள் எல்லாம் தோற்றத்தில் அப்படி இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

    கோதுமை மாவில் கரையும் மற்றும் கரையாத இரு வகை நார்களும் உள்ளன. மைதா மற்றும் அரிசி மாவில் கரையும் நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை, குளுகோஸ் பவுடர் போன்றவைகளில் நார்ச்சத்தே இல்லை. இன்னொரு விஷயம், நார்ச்சத்து இருந்தால் மட்டுமே அது நல்ல உணவு என்ற அர்த்தம் இல்லை. இதய நலனுக்கு நார்ச்சத்து கொண்ட உணவுகள் ஏற்றது என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியர்கள் அன்றாடம் உண்ணும் பலவகையான உணவுகளில் நார்ச்சத்து இருக்கவே செய்கிறது.

    * மைதாவின் பசை குடலில் ஒட்டிக்கொள்ளுமா?

    செகன்ட்ஷோ சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவைக் கடந்து வீடு திரும்புபவர்கள் சாலை ஓரங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்களை பார்த்திருப்பார்கள். போஸ்டரில் பசை கூழை தேய்த்து ஒட்டுவார்கள். அதை பார்த்தவர்களில் சிலர் பரப்பிவிட்ட கருத்துதான், மைதாவின் பசை குடலில் ஒட்டிக்கொள்ளும் என்பது! மனித உடல் அமைப்பும், இயக்கமும் விஞ்ஞானரீதியாக உணரப்பட்டவை. எந்த உணவும் குடலில் ஒட்டிப்பிடிக்காது.

    மனித குடல் பைப் போன்றது அல்ல. அதை ஒரு பம்ப் போன்றது என்று எடுத்துக்கொள்ளலாம். உண்ணும் உணவு, இந்த பம்பின் செயல்பாட்டால் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும். நாம் எதை சாப்பிட்டாலும் அந்த பம்ப் செயல்பட்டுக்கொண்டேதான் இருக்கும். அதுபோல் குடலின் சுவர்களிலும் சில விசேஷ கட்டமைப்புகள் உண்டு. சுவர்களில் திசுக்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்படுவதும், அவை உணவோடு அடிக்கடி பெயர்ந்து போவதும் நடந்துகொண்டே இருக்கும். இந்த இயக்க நிலையின் அடிப்படையில் எந்த உணவும் போஸ்டரை ஒட்டும் பசை போன்று குடலோடு ஒட்டிக்கொள்ளாது.

    * பரோட்டா ஜீரணமாவது கடினமா?

    இந்த குற்றச்சாட்டு வித்தியாசமானது. ஏன் என்றால் பரோட்டா தாமதமாக செரிமானம் ஆவது அதன் குறையல்ல, நிறை. உண்ணும் உணவுகளில் கிளைசெமிக் இன்டக்ஸ் குறிப்பிடத்தக்கது. விரைவாக செரிமானமாகக்கூடியதாக கருதப்படும் கஞ்சி, ஆப்பம், இட்லி போன்றவைகள் கிளைசெமிக் இன்டக்ஸ் அளவில் உயர்ந்தவை. இவை உடலின் மெட்டபாலிக் செயல்பாட்டை கோளாறாக்கக்கூடும். இவைதான் சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், இதயநோய், உடல்பருமன் போன் றவைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அதனால் தாமதமாக செரிமானமாகும் உணவுகளை நோக்கி உலகம் திரும்பிக்கொண்டிருக்கிறது. பரோட்டோ போன்று தாமதமாக செரிமானமாகும் உணவுகளை சிறிதளவு சாப்பிட்டாலும் நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வைத்தரும்.

    நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும் உடலுக்கு நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. அதுபோன்ற சராசரி உணவுதான் பரோட்டாவும். அளவோடு, அதிக இடைவெளி விட்டு எல்லா உணவுகளையும் உண்பதுபோல் இதையும் உண்ணலாம். காரமான சைடு டிஷ்களோடு சேர்த்து கண்டபடி பரோட்டா சாப்பிட்டு உடல் நலனை கெடுத்துக்கொண்டால் அது பரோட்டாவின் குறை அல்ல. சாப்பிட்டவரின் குறை. பரோட்டா பற்றி சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

    ×