என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெயிலுக்கு ஆனந்தமாய் சுவைத்திட தர்பூசணி பரோட்டா
- நாளுக்கு நாள் அதிரித்து வரும் பரோட்டா மோகத்திற்கு பல வகை ருசிகளில் ஓட்டல்களில் விற்பனையாகிறது.
- வாழை இலை பரோட்டா, சாக்லேட் பரோட்டா என எத்தனையோ வந்துவிட்டது.
மதுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரோட்டாவின் ருசிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. டிபன் வகைகளில் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல் என்று அனைத்து வீட்டிலேயே தயாரித்து அடிக்கடி வழங்கும் நிலையில், ஓட்டலில் தயாராகும் புரோட்டாவுக்கு தனி மவுசு உண்டு.
அனைவருக்கும் பிடித்த உணவாகிப்போன பரோட்டா உடலுக்கு கேடு என்றும், அது தொடர்பாக பல்வேறு டாக்டர்களின் விமர்சனங்கள் வந்தபோதிலும் வாய்க்கு பூட்டு போட யாரும் விரும்பவில்லை. நாளுக்கு நாள் அதிரித்து வரும் புரோட்டா மோகத்திற்கு பல வகை ருசிகளில் ஓட்டல்களில் விற்பனையாகிறது.
விருதுநகர் பொரிச்ச பரோட்டாவில் தொடங்கி, மதுரை பன் புரோட்டா, லேயர் லேயராக வரும் நூல் பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, முட்டை லாப்பா பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, கைமா பரோட்டா, சிலோன் பரோட்டா, வாழை இலை பரோட்டா, சாக்லேட் பரோட்டா என எத்தனையோ வந்துவிட்டது.
இதற்கெல்லாம் மகுடம் சூட்டியதுபோல் மதுரையில் மற்றுமொரு சுவையாக தர்பூசணி பரோட்டாவை ஒரு தனியார் ஓட்டல் அறிமுகம் செய்துள்ளது.
மதுரையில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நித்தியானந்தா கைலாச நாடு என அறிவித்த நிலையில் கைலாசா நாட்டில் தனது உணவகத்தை அறிமுகம் செய்ய அனுமதி வேண்டி கடிதம் எழுதி அதன் நிர்வாகி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் முகக்கவசம் போன்ற வடிவில் பரோட்டா உருவாக்குவது என வித்தியாசமான முறையில் உணவகத்திற்கு வருபவர்களை ஈர்ப்பதற்காக சமூக வலைதளங்கள் மூலமாக இந்த ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்து வருகிறது. தற்போது தர்பூசணி விவகாரத்தில் மேலும் ஒரு விவாதத்திற்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தங்கள் உணவகத்தின் சார்பில் வெயிலுக்கு அறிமுகம், அடிக்கிற வெயி
லுக்கு ஆனந்தமாய் சுவைத் திட குளு குளு தர்பூசணி பரோட்டா என்ற வாசகத்து
டன் கூடிய விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு அவரது ஆதரவாளர்கள் சிலர் சூப்பர், ஆகா, ஓகோ, அருமை என்று கூறி அந்த ஓட்டலை குஷிப்படுத்தி ஆடியோ வெளியிட்டு வரு
கின்றனர்.
அதன்படி அந்த ஓட்டலில் திடீரென தர்பூசணி பரோட்டா என அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வீடியோவில் தர்பூசணி பழத்தை பரோட்டாமாவின் மீது வைத்து, அதன் மீது எண்ணெய் ஊற்றி, அதனை பொறித்து பீட்சா போல வெட்டிக் கொடுப்பது போன்ற வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் என உணவகங்கள் செய்தாலும் கூட அதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உரிய அனுமதி பெற்ற பின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதற்கிடையே மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரே மாதத்தில் பரோட்டா தயாரிக்கும் பயிற்சியும் ஒரு குழுவால் அளிக்கப்பட்டு வருகிறது.






