என் மலர்
நீங்கள் தேடியது "மோசடி"
- விண்ணப்பங்களை கொடுக்காமலேயே தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.
- விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 50 சதவீதம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நிறைய வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் இதுவரை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவத்தை வழங்குவோம் என்று கூறினார்கள், மூன்று முறை வீட்டு கதவை தட்டுவோம் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சரியான பயிற்சி இல்லை. இதன் காரணமாக வாக்காளர்களுக்குரிய விண்ணப்பபடிவங்கள் அவர்களை சென்று சேரவில்லை. மேலும், விண்ணப்ப படிவங்களை பெற்றவர்கள் குறைந்த அளவிலேயே, அதாவது 40 சதவீதத்திற்கு உள்ளேயே தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுக்குரிய வாக்காளர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விண்ணப்பங்களை கொடுக்காமலேயே இப்படி தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் பெரிய மோசடி நடந்துள்ளதாக கருதுகிறோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம்.
ஆனால் கலெக்டர் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம் அப்படி ஏதாவது விடுபட்டவர்கள் இருந்தால் அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு மேல் அதற்குரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்கிறார். அது எப்படி முடியும் அது முடிகிற காரியமா? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆளும் கட்சியான தி.மு.க. இந்த வாக்காளர் விண்ணப்ப படிவத்தை அதிகளவில் பெற்றுள்ளனர். அவர்களுடைய தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். அப்போது அந்த நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகிறோம் என்று கூறுகிறார். அப்படி என்றால் அந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
எனவே தேர்தல் அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு அனைத்து வாக்காளர்களிடம் அவர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற முடியும். இல்லாவிட்டால் அதில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனையும் மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கி இருந்தனர்.
- எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை.
சமீப காலமாக பிரபல தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் பெயரில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது நடிப்பில் ஆர்வமுள்ளவர்களை குறிவைத்து சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மோசடி நடைபெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அந்நிறுவனம் பெயரில் போலியாக வெளியிடப்படும் அறிவிப்பு மற்றும் அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியது. அதேபோல், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில், நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவண்டாம் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
- Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மீக மோசடி கும்பலிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
- சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்
மகாராஷ்டிராவில் புனே நகரில் பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மூடநம்பிக்கையால் போலி ஆன்மீக கும்பலிடம் சிக்கி ஏமாந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த ஐடி ஊழியருக்கு ஆட்டோ இம்யூன் நோய் மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு மகள்கள் உள்ளனர்.
2018 ஆம் ஆண்டு, ஒரு பக்தி பஜனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலந்து கொண்ட ஐடி ஊழியரின் மனைவிக்கு ஒருவரும் அறிமுகம் ஏற்பட்டது. அந்த நபர் 3 பேர் அடங்கிய Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மீக மோசடி கும்பலிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்றும் அந்த கும்பல் தம்பதியினரை நம்பவைத்துள்ளது.
நோய்களைக் குணப்படுத்த சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறி அவர்கள் தொடர்ந்து தம்பதியிடம் பணம் பெற்று வந்துளளனர்.
பின்னர், பிரிட்டனில் உள்ள தம்பதியின் வீடு மற்றும் புனே அருகே சொந்தமாக உள்ள விவசாய நிலங்கள் உட்பட குடும்பத்தின் சொத்துக்கள் துரதிர்ஷ்டத்தைத் தருவதாக அவர்களை நம்ப வைத்தனர்.
இந்தக் கும்பல் குடும்பத்தினரை இவற்றை விற்க வற்புறுத்தியது. விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தை, அது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறி, புத்திசாலித்தனமாக கும்பல் வசப்படுத்தியுள்ளது.
இதன் பின்னரும் பூஜைகளுக்காகக் கேட்ட பெரும் தொகையைச் செலுத்த உறவினர்களிடமிருந்து ஐடி ஊழியர் கடன் வாங்கியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.14கோடியை அந்த கும்பல் தம்பதியிடமிருந்து ஏமாற்றி பறித்துள்ளது.
பல வருடங்கள் கடந்தும் குழந்தைகளின் உடல்நிலை மாறாமல் இருந்ததால், தம்பதியினருக்கு சந்தேகம் வந்த நிலையில் தற்போது அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் ஒரு சாமியார் உட்பட அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.
- செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.
- மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார்.
பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ஆனந்த். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.1.85 லட்சத்திற்கு ஒரு செல்போனை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் அவர் ஆர்டர் செய்த செல்போன் கூரியர் மூலமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கூரியர் நிறுவன ஊழியரும், நேற்று முன்தினம் பிரேம் ஆனந்த் வீட்டுக்கு வந்து ஒரு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார். உடனே அவரும், தான் ஆசையாக ஆர்டர் செய்த செல்போன் வந்ததாக நினைத்து பார்சலை பிரித்து பார்த்தார்.
அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த பார்சலில் செல்போன் பாக்சுக்குள் செல்போனுக்கு பதில் ஒரு பளிங்கு கல் இருந்தது. ரூ.1.85 லட்சம் மதிப்பிலான செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்ததால் கோபம் அடைந்த பிரேம் ஆனந்த் உடனடியாக கூரியர் ஊழியரின் செல்போனுக்கு அழைத்தார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.
செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.
இந்த மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.
- அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும்.
இந்தியாவில் தகவல் பரிமாற்றத்துக்காக 120 கோடிக்கும் அதிகமானோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சுமார் 95 கோடி பேர் தங்களது ஸ்மார்ட்போன்களில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். செல்போன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
மோசடி வலையில் சிக்கி நிதி இழப்பு ஏற்பட்டதாக அன்றாடம் பதிவாகி வரும் சம்பவங்களே இதற்கு சாட்சி. இது ஒருபுறம் இருக்க செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் அவ்வப்போது அழைப்புகள் வந்து வீண் தொல்லை கொடுக்கின்றன.
இந்த சூழலில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் காண புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளன. அதன்படி, செல்போனில் சேமித்து வைக்காத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பு வரும் எண்களுடன் சேர்த்து அந்த சிம் கார்டை பயன்படுத்துபவரின் பெயர் விவரமும் பதிவாகும்.
இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது. மோசடி மற்றும் சிரமத்தை கொடுக்கும் விரும்பாத அழைப்புகளுக்கு செல்போன் எண்ணோடு பெயரும் வரும் வகையிலான இந்த சேவை கடிவாளம் போடும் வகையில் இருக்கும். இதனால் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை இனி அடையாளம் கண்டு பயமின்றி எடுக்கலாம்.
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்த ஒருமித்த கருத்தை எட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன.
விரைவில் 2 அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து, அமலுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- நடிகர் காளி வெங்கட் இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார்.
- பொது மக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
ஆன்லைன் பங்கு சந்தை மோசடி தொடர்பாக சென்னை காவல்துறை விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொது மக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
நடிகர் காளி வெங்கட் இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார்.
இந்த வீடியோவை சென்னை காவல்துறை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அத்துடன், ஆன்லைன் பங்கு சந்தை மோசடியில் இருந்து பொது மக்கள் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வரிப் திரும்பப் பெறுதல் அல்லது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு மின்னஞ்சல்கள் வருகின்றன
- அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
வரிப் திரும்பப் பெறுதல் அல்லது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு வரும் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருமான வரித் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் உங்களின் PIN, கடவுச்சொற்கள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட ரகசியத் தகவல்களைக் கோராது.
இந்த மோசடி மின்னஞ்சல்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று, உங்களின் நிதித் தகவல்களைத் திருடும் Phishing மோசடியின் ஒரு பகுதியாகும்.
சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் அல்லது இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.
எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க, புதுப்பிக்கப்பட்ட ஆன்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்தவும்.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை webmanager@incometax.gov.in மற்றும் incident@cert-in.org.in ஆகிய முகவரிகளுக்கு அனுப்பிவிட்டு, உடனடியாக அந்த மின்னஞ்சலை நீக்கிவிடுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.
- 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
- போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடம் பகுதியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 70). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி கணவர்களுடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
இதில் 3-வது மகள் அனந்தநாயகி (37). இவர் தனக்கு சொந்தமான வீட்டு பத்திரத்தை கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக தனது தாயார் ராஜேஸ்வரியிடம் அடகு வைத்து ரூ.2லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுத்து பத்திரத்தை மீட்டு கொள்வதாக உறுதி கூறியுள்ளார்.
ஆனால் 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதற்கிடையே பத்திரத்தை ராஜேஸ்வரி சிலரிடம் காண்பித்த போது அது கலர் ஜெராக்ஸ் பத்திரம் என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தனது மகளிடம் பணம் அல்லது ஒரிஜினல் பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராஜேஸ்வரி, தனது மகள் அனந்தநாயகி மீது புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
- அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுகிறது.
ஈரானில் வேலைவாய்ப்பு தருவதாக நடக்கும் மோசடிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சில ஏஜென்ட்கள் இந்தியர்களுக்கு ஈரானில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வழங்குவதாக அல்லது அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
இவர்களின் பேச்சுகளை நம்பி ஈரானுக்குச் செல்லும் இந்தியர்கள், அங்குள்ள குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு, பணயக்கைதிகளாக வைக்கப்படுகின்றனர்.
பின்னர், அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுவதாக அரசுக்குத் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக இத்தகைய வழக்குகள் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற போலியான உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
- பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும்.
- சமூக வலைதளங்களில் ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் ஹனிடிராப் ஆப் மூலம் தற்போது பெண்களை வைத்து மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிக்கும் நூதன மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.
இது மட்டுமின்றி வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை வைத்து இந்த கும்பல் வசதி படைத்த திருமணமான ஆண்களுக்கு வலை வீசுகின்றனர்.
சபல புத்தியால் ஏமாறும் ஆண்களை இளம்பெண்கள் ஓட்டல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு நெருக்கமாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மறைமுகமாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் படம் எடுக்கின்றனர்.
பின்னர் அந்த படங்களை காட்டி மிரட்டி இளம்பெண்கள் அப்பாவி போல நடித்து அழுது புலம்பி பணம் பறிக்கின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் இந்த ஆண்களுடன் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.
செகந்திராபாத்தை சேர்ந்த யோகா குரு என்பவரை இளம்பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேச தொடங்கினார். ஒரு கட்டத்தில் யோகா குருவை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து இருவரும் நெருக்கமாக இருந்தனர். அப்போது ரகசிய கேமரா மூலம் அதனை படம்பிடித்தனர்.
ஓட்டலில் தனிமையில் இருந்த போது யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தனது கணவருக்கு தெரிந்தால் தன்னை கொன்று விடுவார் எனக் கூறி அந்த இளம்பெண் கதறி அழுதார். இதனை நம்பி யோகா குரு ரூ.26 லட்சம் கொடுத்தார். அதனை பறித்துக் கொண்டு இளம்பெண் தலைமறைவாகிவிட்டார்.
இதே போல அரசு ஊழியர் ஒருவர் ஹனி டிராப் டேட்டிங் ஆப்பில் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டார். அந்த இளம்பெண் அவருடன் நீண்ட நாட்கள் தகவல்களை பரிமாறினார். பின்னர் இருவரும் ஒரு ஓட்டல் அறைக்கு சென்றனர்.
அங்கு வைத்து அரசு ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு இளம்பெண் தப்பி சென்று விட்டார்.
இதேபோல பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் லிப்ட் கேட்பது போலவும் இளம்பெண்கள் ஆண்களை மயக்கி அவர்களை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இதுவரை தெலுங்கானா மாநிலத்தில் 160 பேரை ஹனிடிராப் ஆப் மூலம் ஓட்டல் அறைகளுக்கு அழைத்து சென்று நிர்வாண படம் எடுத்து மிரட்டி ரூ.3 கோடி வரை பறிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும். அதனால் தைரியமாக வந்து புகார் அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹனிடிராப், மேட்ரிமோனி டேட்டிங், ஓரினச்சேர்க்கை ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் சபல புத்தி கொண்டவர்கள் இணைகிறார்கள். அவர்களை கவர்ந்து இழுத்து நிர்வாணமாக வீடியோ எடுக்கிறார்கள்.
இளம்பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் எடுத்து பணம் பறிக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
- கழிவறை செல்லும் போது நகைகள் அணிந்து செல்லக்கூடாது, அங்கு பாதுகாப்பு இருக்காது என ராகுல் கூறினார்.
- வேறு ஒருவரது செல்போன் மூலம் ராகுலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
சேலம்:
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி, இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் செல்போனில் மூழ்கி கிடந்த அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஈரோட்டை சேர்ந்த ராகுல் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ராகுல் கல்லூரியில் படிப்பதாக கூறி உள்ளார். இதனை தொடர்ந்து 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், இன்ஸ்டாகிராம் மூலம் தகவல்களை பரிமாறியும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து தனக்கு ஈரோடு என்று கூறிய ராகுல் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தால் நேரில் சந்திக்கலாம் என்று அந்த மாணவியிடம் கூறினார்.
இதனை நம்பிய மாணவி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்தார். தொடர்ந்து இரவு 9.45 மணியளவில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர் ராகுலை சந்தித்தார். ரெயில் நிலையம் முன்புள்ள பஸ் நிறுத்த பகுதிக்கு வந்ததும் தான் கழிவறைக்கு சென்று வருவதாக மாணவி, ராகுலிடம் கூறினார். அப்போது தனது கைப்பையை ராகுலிடம் அந்த மாணவி கொடுத்தார்.
அப்போது கழிவறை செல்லும் போது நகைகள் அணிந்து செல்லக்கூடாது, அங்கு பாதுகாப்பு இருக்காது என ராகுல் கூறினார். இதனை நம்பிய அந்த மாணவி தான் அணிந்திருந்த 3 பவுன் எடை கொண்ட 3 வளையல்கள், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை கழற்றி அந்த கைப்பையில் வைத்தார்.
மேலும் தனது செல்போன், லேப்டாப்பையும் அந்த கைப்பையில் வைத்து ராகுலிடம் கொடுத்து விட்டு கழிவறைக்கு சென்றார். பின்னர் சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது ராகுல் அந்த கைப்பையுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கதறினார்.
மேலும் வேறு ஒருவரது செல்போன் மூலம் ராகுலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் சம்பவம் குறித்து சென்னையில் உள்ள தனது தந்தைக்கு மாணவி தகவல் தெரிவித்தார். இதனால் கதறிய படி சேலம் வந்த அவர் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியுடன் பழகி சேலத்திற்கு வரவழைத்து நூதன முறையில் நகைகளை திருடி சென்ற ராகுலை அவரது போட்டோவை வைத்து தேடி வருகிறார்கள். மேலும் அவரது உண்மையான பெயர் ராகுலா அல்லது வேறு பெயர் கொண்டவர் இந்த பெயரை சொல்லி ஏமாற்றினாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.
- தனது வீட்டில் ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
- வரி நோட்டீஸ் அல்லது கடன் வசூல் அழைப்புகளை எதிர்கொள்ளும்போதுதான் இந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நயாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சுதிர் என்ற நபர் தனது வீட்டில் ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது கடையில் ரூ.141 கோடிக்கு விற்பனை செய்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் இதுற்குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து சுதிர் கூறும்போது, "டெல்லியில் 6 நிறுவனங்களை நிறுவ எனது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டும் எனக்கு இது போல் ஒரு நோட்டீஸ் வந்தது. அப்போது அந்த நிறுவனங்களுக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வருமானவரி அதிகாரிகளிடம் விளக்கினேன். தற்போது மீண்டும் நோட்டீஸ் வந்துள்ளது" என்றார்.
மற்றவர்களின் பான் கார்டு விவரங்களை சட்டவிரோதமாகப் பெற்று வங்கிக் கணக்குகளைத் திறக்க, போலி நிறுவனங்களை உருவாக்க, கடன்களைப் பெற அல்லது வரிகளைத் தவிர்க்க அவற்றைப் பயன்படுத்துவது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வருமான வரி நோட்டீஸ் அல்லது கடன் வசூல் அழைப்புகளை எதிர்கொள்ளும்போதுதான் இந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.






