என் மலர்tooltip icon

    இந்தியா

    மகள்களின் Autism குறைபாட்டை குணமாக்குவதாக கூறி IT ஊழியரிடம் இருந்து ரூ.14 கோடி பறித்த போலி ஆன்மீக கும்பல்
    X

    மகள்களின் Autism குறைபாட்டை குணமாக்குவதாக கூறி IT ஊழியரிடம் இருந்து ரூ.14 கோடி பறித்த போலி ஆன்மீக கும்பல்

    • Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மீக மோசடி கும்பலிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
    • சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்

    மகாராஷ்டிராவில் புனே நகரில் பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மூடநம்பிக்கையால் போலி ஆன்மீக கும்பலிடம் சிக்கி ஏமாந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    அந்த ஐடி ஊழியருக்கு ஆட்டோ இம்யூன் நோய் மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு மகள்கள் உள்ளனர்.

    2018 ஆம் ஆண்டு, ஒரு பக்தி பஜனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலந்து கொண்ட ஐடி ஊழியரின் மனைவிக்கு ஒருவரும் அறிமுகம் ஏற்பட்டது. அந்த நபர் 3 பேர் அடங்கிய Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மீக மோசடி கும்பலிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்றும் அந்த கும்பல் தம்பதியினரை நம்பவைத்துள்ளது.

    நோய்களைக் குணப்படுத்த சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறி அவர்கள் தொடர்ந்து தம்பதியிடம் பணம் பெற்று வந்துளளனர்.

    பின்னர், பிரிட்டனில் உள்ள தம்பதியின் வீடு மற்றும் புனே அருகே சொந்தமாக உள்ள விவசாய நிலங்கள் உட்பட குடும்பத்தின் சொத்துக்கள் துரதிர்ஷ்டத்தைத் தருவதாக அவர்களை நம்ப வைத்தனர்.

    இந்தக் கும்பல் குடும்பத்தினரை இவற்றை விற்க வற்புறுத்தியது. விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தை, அது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறி, புத்திசாலித்தனமாக கும்பல் வசப்படுத்தியுள்ளது.

    இதன் பின்னரும் பூஜைகளுக்காகக் கேட்ட பெரும் தொகையைச் செலுத்த உறவினர்களிடமிருந்து ஐடி ஊழியர் கடன் வாங்கியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.14கோடியை அந்த கும்பல் தம்பதியிடமிருந்து ஏமாற்றி பறித்துள்ளது.

    பல வருடங்கள் கடந்தும் குழந்தைகளின் உடல்நிலை மாறாமல் இருந்ததால், தம்பதியினருக்கு சந்தேகம் வந்த நிலையில் தற்போது அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் ஒரு சாமியார் உட்பட அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×