என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண மோசடி"

    • 2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் மீது குற்றச்ட்டு எழுந்தது.
    • பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    கடன் மோசடி வழக்கு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    நவம்பர் 14 ஆம் தேதி அவர் முன்பு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுகுறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 2025 இல் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

    • செப்டம்பர் முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.
    • இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    புனே:

    இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகிறது.

    லிங்கை தொட்டால் பரிசு, அரசின் உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி பணம் பறிப்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யு.பி.ஐ. ஐ.டி. கேட்டு பணம் பறிப்பது, டிஜிட்டல் கைது என பல்வேறு வகைகளில் மோசடிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆனாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு என்ற ஆன்லைன் விளம்பரத்தை நம்பிய ஒருவர் ரூ.11 லட்சம் இழந்த சம்பவம் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்துள்ளது.

    புனேயை சேர்ந்த 44 வயதான ஒருவர் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் பேசிய ஒரு பெண், நான் தாயாவதற்கு ஒரு ஆண் தேவை. என்னை கர்ப்பமாக்கக்கூடிய ஒரு ஆணை தேடுகிறேன். என்னை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு தருகிறேன். அந்த நபரின் கல்வி, சாதி, அழகு ஒரு பொருட்டல்ல என கூறி இருந்தார்.

    இதைப்பார்த்த ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது, சில விபரங்களை கேட்டுள்ளனர். மேலும் பரிசு பெறுவதற்காக சில சரிபார்ப்பு விதிமுறைகள் உள்ளன என கூறியுள்ளனர். பின்னர் பதிவு, சரிபார்ப்பு, ஜி.எஸ்.டி. என பல காரணங்களை கூறி பல்வேறு வகைகளில் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.

    பின்னர் அவர் கர்ப்பமாக்கும் வேலை தொடர்பாக தனது கேள்விகளை கேட்டபோது, மறுமுனையில் பேசியவரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் அழைத்தபோது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணத்தை இழந்த ஒப்பந்ததாரர் அளித்த தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை முடக்கி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம். என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
    • போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடம் பகுதியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 70). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி கணவர்களுடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

    இதில் 3-வது மகள் அனந்தநாயகி (37). இவர் தனக்கு சொந்தமான வீட்டு பத்திரத்தை கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக தனது தாயார் ராஜேஸ்வரியிடம் அடகு வைத்து ரூ.2லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுத்து பத்திரத்தை மீட்டு கொள்வதாக உறுதி கூறியுள்ளார்.

    ஆனால் 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதற்கிடையே பத்திரத்தை ராஜேஸ்வரி சிலரிடம் காண்பித்த போது அது கலர் ஜெராக்ஸ் பத்திரம் என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தனது மகளிடம் பணம் அல்லது ஒரிஜினல் பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராஜேஸ்வரி, தனது மகள் அனந்தநாயகி மீது புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார்.
    • இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அறிமுகமானார். அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக்கொண்டனர்.

    சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் "ஐ லவ் யூ" என்று ஒரு செய்தியை அனுப்பினாள். அதற்கு அந்த சிறுவன் "ஐ லவ் யூ டூ" என்று பதிலளித்தான்.

    மறுநாள், அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார். இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் "ஐ லவ் யூ" என்று சொல்வீர்களா? இதை அறிந்ததும் அவரது கணவர் எனக்கு போன் செய்ததாகக் கூறினார்.

    அவர்கள் அனைவரும் மைலாவரம் போலீஸ் நிலையத்தில் இருக்கிறார்கள். உடனே அங்கு வர வேண்டும் என மிரட்டினார். இந்த வார்த்தைகளால் பயந்துபோன சிறுவன் அழுது, தான் என்ன சொன்னாலும் செய்வேன் என்று கூறினான். இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, அந்த நபர் ஆன்லைன் மூலம் ரூ. 11,000 பறித்துக் கொண்டார்.

    சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஒரு புதிய வகை போக்கைப் புகுத்துகிறார்கள். இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர். வாலிபர்கள் இதில் சிக்காமல் இருக்க கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார்.
    • இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக உ.பி. வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் மீது அந்த அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    குடும்ப அவசர நிலை எனக் கூறி ஆருஷியும் அவரது தாயாரும் தன்னிடம் இருந்து இருந்து பணம் வாங்கி ஏமாற்றியதாக தீப்தி சர்மா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆக்ராவில் உள்ள தனது குடியிருப்பில் புகுந்து தங்கம், வெள்ளி, ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் ரொக்கத்தை ஆருஷி கோயல் திருடிச் சென்றதாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மத்திய பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
    • சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மத்திய பிரதேச மாநில அரசிடமிருந்து அரசு நிதியுவியை பெறுவதற்காக பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, மின்னல் தாக்கி இறந்ததாக போலியாக சான்றிதழ் தயாரித்து ரூ.11 கோடியை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் சியோனி, கியோலாரி தாலுகா பகுதியை சேர்ந்தவர் தரம் சச்சின் தஹாயக். மோசடி மன்னனான இவர் பாம்பு கடித்து இறந்தவர்கள், நீரில் மூழ்கி பலியானவர்கள், மின்னல் தாக்கி இறந்ததாக கூறி போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து அரசு நிதி உதவி தொகை ரூ.11.26 கோடியை மோசடி செய்துள்ளார்.

    அந்த பணத்தை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். 2018-19 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்த மோசடி நடந்துள்ளது.

    இதில் ரமேஷ் என்பவர் பாம்பு கடித்து 30 முறை இறந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதேபோல் ராம்குமார் என்பவர் 28 முறை பாம்பு கடித்து இறந்ததாக போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மேலும் நீரில் மூழ்கி இறந்ததாகவும், மின்னல் தாக்கி பலியானதாகவும் போலி சான்றிதழ் தயாரித்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெறுவதற்காக போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து இந்த மோசடி நடந்துள்ளது. இதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    கியோலாரி தாலுகா அலுவலகத்தில் பதிவேடுகளை நிதித்துறை சமீபத்தில் ஆய்வு செய்ததில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இதையடுத்து 47 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று இணை இயக்குனர் ரோகித் கவுசல் தெரிவித்துள்ளார்.

    • பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மோசடி பேர்வழிகள் நூதன முறையில் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். மோசடிகாரர்கள் விரிக்கும் வலையில் படித்தவர்களும் பணத்தை இழந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக 'ஷாப்பிபை' உள்பட பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆன்லைன் மோசடி கும்பல் ஆசை வார்த்தை கூறினர்.

    ரூ.28 ஆயிரம் முதலீடு செய்தால் 30 நாளில் ரூ.1 லட்சத்து 800 தருவதாகவும் அல்லது தங்கமாக பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதனை நம்பிய புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு எந்த பணமும் வரவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.
    • புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த லட்சுமி காந்த் (வயது54). இவர் ஓசூர் அருகே சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பூஜைகள் செய்வதற்காக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கனியூரை சேர்ந்த சசிகுமார் (61), சங்கர் கணேஷ் (43), செல்வராஜ் (61), உடுமலைப்பேட்டை நக்கீரர் தெருவை சேர்ந்த சசிகுமார் (48), திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரை சேர்ந்த பிரபாகர் (37), சேலம் குகை முங்கபாடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் (45), கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆலடி ரோட்டை சேர்ந்த நடராஜன் (48), சுந்தர்ராஜ் நகரை சேர்ந்த முத்து குமாரவேல் (48), விஜயவாடா கொத்தப்பேட்டை சையத்குலாம் தெருவை சேர்ந்த பிரகாஷ் குப்தா (68) மற்றும் அவர்களுடன் சில பெண்கள் உள்ளிட்டோரை ஓசூருக்கு அழைத்து வந்து ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தார்.

    இந்த பூஜைகள் குறித்து லட்சுமி காந்த், சாந்தபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்த கிஷோருக்கு கூறியுள்ளார். கிஷோர் மூலம் பூஜைகள் குறித்து அவரது சகோதரரான குள்ளப்பாவிற்கும் குள்ளப்பாவின் மனைவி ராதாம்மாவிற்கும் (46) தெரியவந்தது.

    சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற அவர்கள் கோவிலில் பூஜைகளை நடத்தியுள்ளனர். தொடர்ந்து தாங்கள் பல்வேறு பூஜைகளை செய்து புதையல் எடுத்து தருவதாக குள்ளப்பா மற்றும் அவரது மனைவி ராதாம்மா ஆகியோரிடம் ஆசை வார்த்தை கூறினர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் சிறியதாக புதையல் பூஜை ஒன்றை நடத்தியவர்கள். இந்த புதையல் பூஜையில் ஒரு பானையில் சிறிய அளவில் தங்க காசுகள் கிடைத்ததாக ராதாம்மாவையும் அவரது கணவர் குள்ளப்பாவையும் அனைவரும் நம்ப வைத்துள்ளனர். தங்க காசுகளை கணவன், மனைவி இருவரும் கடைக்கு கொண்டு சென்று சோதித்து பார்த்து உண்மை என நம்பினர்.

    அதனை தொடர்ந்து அந்த கும்பல் ராதாம்மா மற்றும் குள்ளப்பா ஆகியோரிடம் இந்த பகுதியில் பெரிய அளவில் புதையல் ஒன்று உள்ளது. அதனை பல்வேறு தீய சக்திகள் தடுத்து வருகின்றன.

    பெரிய அளவில் பணம் கொடுத்தால் அந்த சக்திகளை விரட்டி புதையலை எடுக்கலாம். அதன் மூலம் கோடீஸ்வரராக மாறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்கான செலவுக்காக ரூ.8 லட்சம் அளவில் பணம் வாங்கியுள்ளனர்.

    பூஜைகளை செய்த அவர்கள் ஒரு பானையில் தங்கம், வைரம், வைடூரியம் இருப்பதாக கூறி அதனை பத்திரமாக வீட்டில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி பானையை கொடுத்தனர்.

    அதனை பெற்றுக்கொண்ட ராதாம்மா தன்னுடைய வீட்டில் வைத்து அந்த பானையை பூஜை செய்து வந்துள்ளார். அதே நேரத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது, புதையலை வாங்குவதற்கு ஒரு கும்பல் வந்தனர்.

    அவர்களிடம் ரூ.2½ கோடி பணம் அட்வான்ஸ் வாங்கி ராதாம்மாவிடம் கொடுத்து புதையல் பானை அருகே வைத்துள்ளனர். இரண்டையும் ஒரே நேரத்தில் தான் திறக்க வேண்டும் எனவும் கூறி நம்ப வைத்துள்ளனர். புதையல் வீட்டில் இருப்பதை கண்டு மகிழ்ச்சியில் திளைத்த ராதாம்மா, குள்ளப்பா தம்பதியினரிடம் பூஜை நடத்துபவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டுள்ளனர்.

    இதனிடையே ராதாம்மாவின் மகனுக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படவே வீட்டிலிருந்த பானை மற்றும் ரூ.2½ கோடி பணம் இருந்த பெட்டியை அவர் உடைத்துப் பார்த்தார்.

    அப்போது இரண்டிலும் பழைய காகிதங்கள் தான் இருந்துள்ளது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அவர்கள் உணர்ந்தனர்.

    அதே நேரத்தில், பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.

    வாடகை பணத்தை அவர்கள் கொடுக்காததால் அவர்கள் பேசுவதில் பல்வேறு புதையல் சார்ந்த விஷயங்கள் இருப்பதை அறிந்த அவர், 100 எண் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்து விட்டார்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கவனத்திற்கு தகவல்சென்றது. அவரது உத்தரவின் பேரில் நல்லூர் போலீசார் அந்த கும்பல் தங்கி இருந்த விடுதியில் சுற்றி வளைத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

    இந்த புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
    • சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.

    ஒயிட்பீல்டு:

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இளம்பெண்ணின் வாட்ஸ்-அப்புக்கு ரிசர்வ் வங்கி அதிகாரி எனக்கூறி கொண்டு ஒரு நபர் பேசினார்.

    அப்போது உங்களது வங்கி கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது, அதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று அந்த நபர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அதன்படி, மும்பை போலீசார் எனக்கூறி மற்றொரு நபர், இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நீங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், உங்களை கைது செய்வோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.

    இந்த வழக்கில் உங்களை கைது செய்யாமல் இருக்க தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும்படி மர்மநபர் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.84½ லட்சத்தை இளம்பெண் அனுப்பி வைத்தார்.

    மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மர்மநபர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரி, மும்பை போலீசார் பெயரில் மிரட்டி பணம் பறித்ததையும் இளம்பெண் உணர்ந்தார். இதுபற்றி ஒயிட்பீல்டு மண்டல சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.

    • பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
    • பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பெர்ஹாம்பூர்:

    ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பவர் கீதாஞ்சலி தாஸ். இவரை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டனர். தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்ட அவர்கள், கீதாஞ்சலி தாஸ் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.14 லட்சம் தருமாறு கூறிய அவர்கள், அதில் ரூ.80 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை விசாரணைக்குப்பின் தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் கூறியதைப்போல பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கீதாஞ்சலி தாஸ், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்த மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த 2 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.

    அவர்களை ஒடிசா அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் கைது மோசடியில் பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
    • மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரந்தியத்தை சேர்ந்தவர் சகாயமேரி. இவருக்கு காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த நீலமேகன் மற்றும் திருநாள்ளாரை சேர்ந்த காயத்ரி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சிங் வேலை வாங்கி தர புதுச்சேரியில் ஆள் இருப்பதாக நீலமேகன் மற்றும் காயத்திரி ஆகியோர் சகாயமேரியிடம் கூறியுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் புதுச்சேரி பா.ஜ.க, பிரமுகரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற ராஜகணபதி (வயது35) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    இதனை நம்பி சகாயமேரி மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து நர்சிங் வேலைக்காக விக்கியிடம் ரூ.16.65 லட்சத்தை கொடுத்துள்ளனர்.

    ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், ஜெயக்கொடி விக்கியிடம் கேட்டுள்ளார். சில நாட்களில் வந்துவிடும் என விக்கி கூறி வந்துள்ளார்.

    இதையடுத்து விக்கி, அவர்களுக்கு ஜிப்மர் ஆவணங்கள், ஜிப்மர் ஐ.டி. கார்டு, ஜிப்மர் பணி ஆணை, சம்பளம் தொகை விவரங்கள் உட்பட்ட ஜிப்மர் இயக்குநரின் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.

    இதனை ஜெயக்கொடி மற்றும் சகாயமேரி ஆகியோர் ஜிப்மர் இயக்குனரிடம் காண்பித்த போது அது போலியான ஆவணங்கள் என்று தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் இதுகுறித்து ஜெயக்கொடி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விக்கி என்ற ராஜகணபதி. கோட்டுச்சேரி நீலமேகன் மற்றும் திருநள்ளாறை சேர்ந்த காயத்ரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

    இதை தொடர்ந்து மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார்.
    • ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை.

    ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது 33). இவர் பி.டெக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஐதராபாத் வந்தார்.

    ஐதராபாத்தில் உள்ள வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இளைஞர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக போலீசார் வம்சி கிருஷ்ணாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த வம்சி கிருஷ்ணா ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. போட்டோவை தனது வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்தார்.

    பின்னர் திருமண தகவல் வலைதளங்களில் தன்னுடைய தாய் அமெரிக்காவில் டாக்டராக வேலை செய்கிறார். நான் உள்ளூரில் வியாபாரம் செய்து வருகிறேன். 2-வது திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பதிவு செய்தார்.

    மேலும் தனது தாய் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இதனை உண்மை என நம்பி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வம்சி கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர்.

    பழக்கம் ஏற்பட்ட பெண்களிடம் தனது நிறுவனத்தில் ஐடி அதிகாரிகள் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர். தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார். இதன் மூலம் ரூ.2½ கோடி மோசடி செய்தார்.

    வம்சி கிருஷ்ணாவிடம் பணத்தை இழந்த பெண்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களது போட்டோவை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

    ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.

    பல்வேறு பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த வம்சி கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×