search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digital"

    • குறிப்பிட்ட அளவு பண பரிவர்த்தனைக்கு மட்டுமே பிடித்தம் கிடையாது.
    • ஆன்லைன் பணபரிமாற்றத்தை ஏற்பதில்லை.

    சென்னை:

    டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. ரோட்டோர தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் முறையிலேயே வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்துகிறார்கள். இது எளிமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ஆனால் பல கடைகளில் ஆன்லைனில் செலுத்துவதற்கு பதில் பணமாக செலுத்தினால் வாங்கும் பொருள்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

    சென்னை பரங்கிமலை மெயின்ரோட்டில் ஒரு பழக்கடையில் அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கடைக்காரரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நான் தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொள்முதல் செய்ய செல்கிறேன். அங்கு பணமாகத்தான் கேட்கிறார்கள். ஆன்லைன் பணபரிமாற்றத்தை ஏற்பதில்லை.

    அதுமட்டுமல்ல நான் தினமும் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கிறேன். குறிப்பிட்ட அளவு பண பரிவர்த்தனைக்கு மட்டுமே பிடித்தம் கிடையாது. என்னிடம ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் உள்ளன.

    வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணத்தை அதிகமாக செலுத்துவதால் எனக்கு அதிகப்படியான பரிவர்த்தனைகளுக்கான பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக மாதம் தோறும் வங்கிகள பிடித்தம் செய்கின்றன.

    தேவையில்லாமல் நானும் சிரமப்பட்டு யாரோ ஒருவருக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுப்பதைவிட என்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

    உதாரணத்துக்கு ஒரு வாடிக்கையாளர் 500 ரூபாய்க்கு பழங்கள் வாங்கிவிட்டு டிஜிட்டலில் பணத்தை செலுத்தினால் முழுத்தொகையும் செலுத்த வேண்டும். அதையே பணமாக தந்தால் ரூ.475 தந்தால்போதும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி என்றார்.

    • இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை.
    • வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க .

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி 15-வது வார்டில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு, உறையூரான் தெரு, சக்கரபாணி நகர், கடலுார் பழைய மெயின்ரோடு, அப்பர் தெரு, வடக்கு மாட வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை. தெருவிளக்கு வசதிகளும் இல்லை, கொசுமருந்து அடிப்பதில்லை. குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் சார்பில் டிஜிட்டல் பேனர் அச்சிட்டு முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளனர்.

    இதில் பண்ருட்டி நகராட்சி நிர்வாகமே , வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க .ஆனால் 15 வது வார்டில் சாலை வசதி, சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி, பால்வாடி பராமரிப்பு இல்லை. கொசுமருந்து அடிப்பது இல்லை. தெருவை பராமரிப்பதும் இல்லை.இவையெல்லாம் பொதுமக்கள் கேட்டால் நிதியில்லையென சொல்றீங்க . வரி கேட்க மட்டும் வரிங்க. வார்டுக்கு செய்ய வர்ற மாட்டிங்க. இவண் 15-வது வார்டு திருவதிகை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பனியன் நகரான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளி மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
    • டாலர் சிட்டி திருப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 142 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. படித்தோர், படிக்காதோர் என யார்வேண்டுமானாலும், கையில் செல்போன் இருந்தால் போதும், மிக எளிதாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது. இதனால் நேரம் மிச்சப்படுத்தப்படுவதுடன், பண பாதுகாப்பு, சில்லரை தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மீதான மக்களின் ஆர்வம் அதிகரிக்க முக்கிய அம்சமாக உள்ளன.

    அந்த வகையில், டாலர் சிட்டி திருப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் 6 மாதத்தில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 142 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி கூறியதாவது:-

    பனியன் நகரான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளி மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர். பொதுமக்கள், வர்த்தகர்கள் மத்தியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 2.59 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக பீம் மற்றும் யு.பி.ஐ., மூலமாக மட்டும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 812 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. பீம் மற்றும் ஆதார் வாயிலாக 4,971 கோடி ரூபாய், பாரத் க்யூ.ஆர்., கோடு வாயிலாக 94.84 கோடி, ஐ.எம்.பி.எஸ்., மூலம் 90,423 கோடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக 3,679 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இணையதளம் இல்லாத யு.எஸ்.எஸ்.டி., மூலம் 160 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. வரும் நாட்களில் பணமில்லா பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது.
    • டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அந்த வகையில் யு.பி.ஐ. முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

    2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

    2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டி உள்ளது. இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    2017-ல் ரொக்கப் பரிவர்த்தனைகள் 90 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்து. இதற்கு 2016-ல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதே முக்கிய காரணம்.

    அதே சமயம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் யு.பி.ஐ. வாயிலான பணப் பரிவர்த்தனை 900 சதவீதம் அதிகரித்தது.

    ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது. யு.பி.ஐ.யின் வளர்ச்சியால், பல்வேறு வகையான கட்டணம் செலுத்தும் முறை இலகுவானதுடன், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.

    டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.), இண்டர் நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனத்தை (என்.ஐ.பி.எல்.) உருவாக்கி ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் இணைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனையை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    சமீபத்தில் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் யு.பி.ஐ. பணப்பரிமாற்ற சேவையில் இணைந்து உள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையில் இணைய உள்ளன.

    • கிராமப்புற டீக்கடையில் கூட டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
    • ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலக புகழ் பெற்றுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த அய்யன்கொல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நம் நாடு பல்வேறு வகையிலும் வல்லரசு நாடாக மாறி வருவதை வெளிநாடுகள் பாராட்டி வருகின்றன.

    அதற்கு காரணம் இளைய தலைமுறைகளின் அறிவு வளர்ச்சியாகும். விளையாட்டு துறையில் சாதிப்பதற்கு பல புதிய செயல் திட்டங்களை செயல்படுத்தியதால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெரும் வெற்றி கிடைத்தது.

    புதிய கல்வி கொள்கையால் போட்டி தேர்வுகளில் எளிதாக சாதிக்க முடியும். நாடு டிஜிட்டல் மயமானதன் மூலம், கிராமபுறங்களும் வளர்ச்சி கண்டுள்ளன.

    தற்போது கிராமப்புற டீக்கடையில் கூட டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. வரும் 25 ஆண்டுகளில் இந்தியாவை மிக சிறந்த வல்லரசு நாடாக உருவாக்கும் வகையில், மாணவர்கள் தங்களை தற்போதே முழுமையாக உருவாக்கி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்றார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் வீட்டிற்கு சென்று, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலக புகழ் பெற்றுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.

    பின்னர் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்ற அவர், ஆவணப்படத்தில் இடம் பிடித்த ரகு மற்றும் பொம்மியை பார்வையிட்டு உணவு வழங்கினார்.

    மேலும் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படும் முறைகள், யானைகள் பராமரிப்பு, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படம் எடுக்கப்பட்ட இடங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து அவர் பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு மக்களை சந்தித்து பேசினார். மக்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், அவை முறையாக வந்து சேர்கிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    தேவர்சோலை பகுதிக்கு சென்ற போது, அங்கிருந்த தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளம் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்து மனு அளித்தனர். அதனை மத்திய மந்திரி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பந்தலூர் நெல்லியாளம் பகுதிக்கு சென்று அங்கு பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    • இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர்.
    • 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர்.

    திருப்பூர் :

    மின் கட்டணத்தை வசூல் மையங்கள், அரசு, இ - சேவை மையங்களில் ரொக்க பணம், காசோலை, வரைவோலையில் செலுத்தலாம். அவற்றில் அலுவலக நேரத்தில் மட்டுமே செலுத்த முடியும்.மின் வாரிய இணையதளம், செல்போன் செயலி, பாரத் பில் பே போன்ற டிஜிட்டல் முறையில் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தலாம்.

    மொத்தம் உள்ள 3.40 கோடி மின் நுகர்வோர்களில், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட இலவச திட்ட பயனாளிகள் போக, இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அதில் 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தற்போது பல்பொருள் அங்காடி முதல் தள்ளுவண்டி காய்கறி கடை வரை, கூகுல் பே போன்ற டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது.எனவே அனைத்து மின் நுகர்வோர்களிடம் இருந்தும், டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    டிஜிட்டல் முறையில் எப்படி கட்டணம் செலுத்துவது என்பது தொடர்பாக பிரிவு அலுவலகங்கள், மின் கட்டண மையங்களில் விளம்பரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதனால் கட்டண மையங்களுக்கு வந்து நுகர்வோர்கள் சிரமப்பட வேண்டியதில்லைங வசூல் பணமும் உடனே மின் வாரிய வங்கி கணக்கில் சேர்ந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் தொடங்கி வைத்தார்.
    • அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து வாகனத்தில் பெருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரோ கருவியை பார்வையிட்டார்.

    இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளால் உயரம், உடல் எடை, இரத்த அழுத்தம், சளி பரிசோதனை, அதிநவீன பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்திற்கு இரண்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    2 மாத காலத்திற்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மாநகராட்சிப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றும் வகையில் காசநோய் ஒழிப்பில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தான் நகர்ப்புற பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி மூலம் காசநோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    இந்த வாகனத்தில் 5 சமூக பணியாளர்கள் பணிபுரிவார்கள். எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காசநோய் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கு மருத்துவ பெட்டகத்தையும் மேயர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந், கவுன்சிலர் மஞ்சுளா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

    • சாப்ட்வேர்களை பயன்படுத்தி பிறப்பு, இறப்பு பதிவுகளை பராமரித்தனர்.
    • இணையதள முகவரியில் இருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    மத்திய அரசின் மின்னாளுமை திட்டத்தில் பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்கள் பெறுவதும், டிஜிட்டல் மயமாகியுள்ளது. கடந்த 2018 ஜனவரி 1 முதல் பிறப்பு, இறப்புகள் அனைத்தும் இணையதளத்தில் அப்லோடு செய்து, பொதுமக்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 4½ ஆண்டுகளாக, இதே நடைமுறை அமலில் உள்ளது.பழைய பிறப்பு, இறப்பு பதிவுகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பதிவு செய்து, சான்றிதழ் வழங்கியுள்ள பதிவுகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

    கடந்த 2013 முதல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வேறு வகை சாப்ட்வேர்களை பயன்படுத்தி பிறப்பு, இறப்பு பதிவுகளை பராமரித்தனர். இந்நிலையில் 2013 முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு விவரங்களையும் புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 2013 முதல் 2017 வரையிலான பிறப்பு, இறப்பு பதிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

    மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பதிவேற்றம் செய்யும் பணி நிறைவடைந்த பின் 2013 முதல் நிகழ்ந்த, பிறப்பு, இறப்புகளுக்கான பதிவு சான்றிதழை, crstn.org என்ற இணையதள முகவரியில் இருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என்றனர்.

    ×