என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digital"

    • பெண்கள் உலக கோப்பை போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    • இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து புதிய உச்சம்.

    சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பையை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தது. இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெற்ற பெண்கள் உலக கோப்பை போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதிய இறுதிப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் 18.5 கோடி பேர் நேரலையில் பார்த்து ரசித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியையும் 18.5 கோடி பேர் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் கண்டுகளித்து உள்ளனர்.

    இதன் மூலம் ஆண்கள் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு இணையான பார்வைகளை மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியும் பெற்றுள்ளது.

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றொரு சிறப்பான சாதனையையும் படைத்துள்ளது. இந்த போட்டி தொடர் முழுவதையும் சேர்த்து ஜியோஹாட்ஸ்டாரில் 44.6 கோடி பார்வைகள் பதிவாகியுள்ளன.

    கடந்த 3 உலகக் கோப்பைத் தொடரின் பார்வைகளையும் ஒன்றாக சேர்த்து கிடைக்கும் பார்வைகளின் எண்ணிக்கையைவிட இது அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது தரவுகள் மூலம் தெளிவாகிறது. மகளிர் கிரிக்கெட்டுக்கான வரவேற்பும் வெகுவாக அதிகரித்துள்ளது.

    இந்தியா-தென் ஆப்பி ரிக்கா மோதிய இறுதிப் போட்டி சராசரியாக ஒரு நாளில் ஐ.பி.எல். தொட ருக்கு கிடைக்கும் பார்வை களைக் காட்டிலும் அதிக பேரால் பார்க்கப்பட்டுள்ள தும் குறிப்பிடத்தக்கது.

    • தொழில் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.
    • இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம்.

    புதுடெல்லி:

    டெல்லியில் 9-வது மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நான் 'மேக் இன் இந்தியா' பற்றி பேசியபோது, பலர் அதை கேலி செய்தனர். அவர்களின் காலத்தில் புதிய தொழில்நுட்பம் இந்தியாவை அடைய கணிசமான நேரம் பிடித்தது. ஒரு காலத்தில் 2 ஜி உடன் போராடிய நாடு தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் இணைப்பை அடைந்துள்ளது.

    இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 ஜி ஸ்டேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பெரிய உள்நாட்டு சாதனையாகும். இதன் மூலம், உலகில் இந்த திறனைக் கொண்ட 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இன்று இந்தியாவில் ஒரு ஜி.பி. வயர்லெஸ் டேட்டாவின் விலை ஒரு கப் டீயின் விலையை விடக் குறைவு.

    டிஜிட்டல் இணைப்பு இனி ஒரு சலுகையோ அல்லது ஆடம்பரமோ அல்ல. அது தற்போது ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    தொழில் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம். நாங்கள் சீர்திருத்தங்களின் வேகத்தை அதிகரித்து வருகிறோம்.

    இந்தியா மொபைல்கள், செமிகண்டக்டர்ஸ் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பின்னணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரவேற்பாளர் குரல் ஒலிக்கிறது.
    • வைரலான வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. அதே போல மனிதர்கள் செய்யும் வேலைகளை டிஜிட்டல் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எளிதாக செய்ய முடிகிறது.

    இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் மெய்நிகர் வரவேற்பாளராக செயல்படும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஓட்டல் மியாமி மாநிலத்தில் அமைந்துள்ளது. அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தொலைதூரத்தில் இருந்து ஓட்டல் வரவேற்பறையில் உள்ள மேஜையில் டிஜிட்டல் திரை வழியாக இயக்குகிறார். ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு செக்-இன் செயல் முறையில் உதவுகிறார்.

    அப்போது பின்னணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரவேற்பாளர் குரல் ஒலிக்கிறது. திரையில் அவர் விருந்தினர்கள் முன்பு பேசி அவர்களுக்கு ஓட்டலின் விதிகளை கூறி வாடிக்கையாளர்களுக்கு அறைக்கு செல்ல வழிகாட்டுவது போன்று காட்சிகள் உள்ளது. வைரலான வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், மக்கள் இந்த இடங்களை புறக்கணிக்க வேண்டும். இதனால் பலர் வேலைகள் இழக்க நேரிடும் என பதிவிட்டனர். அதே நேரம் சிலர் இந்த முயற்சியை பாராட்டினர்.



    • பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
    • பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பெர்ஹாம்பூர்:

    ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பவர் கீதாஞ்சலி தாஸ். இவரை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டனர். தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்ட அவர்கள், கீதாஞ்சலி தாஸ் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.14 லட்சம் தருமாறு கூறிய அவர்கள், அதில் ரூ.80 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை விசாரணைக்குப்பின் தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் கூறியதைப்போல பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கீதாஞ்சலி தாஸ், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்த மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த 2 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.

    அவர்களை ஒடிசா அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் கைது மோசடியில் பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • முதியவர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.
    • புகாரின்பேரில் போலீசார் பணம் பறித்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

    நவிமும்பை:

    நவிமும்பை கோபர்கைரானே பகுதியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு, அண்மையில் வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது. இதில் எதிர்முனையில் தோன்றிய நபர், தன்னை சி.பி.ஐ. அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.

    பின்னர் அவர், உங்கள் பெயரில் விமானத்தில் வந்த பார்சல் ஒன்று எங்களிடம் சிக்கியுள்ளது. அதில், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள், 8 பாஸ்போர்ட்டுகள், மடிக்கணினி ஆகியவை உள்ளது. இதனால் உங்களை டிஜிட்டல் கைது செய்யப் போகிறோம் என மிரட்டினார்.

    மேலும் இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் உடனடியாக ரூ.12½ லட்சத்தை அனுப்பி வைக்கவேண்டும் என கூறி ஒரு வங்கிக்கணக்கு எண்ணை தெரிவித்தார்.

    இதனால் பயந்து போன முதியவர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் பணம் பறித்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

    • சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் தொடங்கி வைத்தார்.
    • அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து வாகனத்தில் பெருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரோ கருவியை பார்வையிட்டார்.

    இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளால் உயரம், உடல் எடை, இரத்த அழுத்தம், சளி பரிசோதனை, அதிநவீன பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்திற்கு இரண்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    2 மாத காலத்திற்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மாநகராட்சிப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றும் வகையில் காசநோய் ஒழிப்பில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தான் நகர்ப்புற பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி மூலம் காசநோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    இந்த வாகனத்தில் 5 சமூக பணியாளர்கள் பணிபுரிவார்கள். எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காசநோய் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கு மருத்துவ பெட்டகத்தையும் மேயர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந், கவுன்சிலர் மஞ்சுளா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

    • இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர்.
    • 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர்.

    திருப்பூர் :

    மின் கட்டணத்தை வசூல் மையங்கள், அரசு, இ - சேவை மையங்களில் ரொக்க பணம், காசோலை, வரைவோலையில் செலுத்தலாம். அவற்றில் அலுவலக நேரத்தில் மட்டுமே செலுத்த முடியும்.மின் வாரிய இணையதளம், செல்போன் செயலி, பாரத் பில் பே போன்ற டிஜிட்டல் முறையில் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தலாம்.

    மொத்தம் உள்ள 3.40 கோடி மின் நுகர்வோர்களில், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட இலவச திட்ட பயனாளிகள் போக, இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அதில் 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தற்போது பல்பொருள் அங்காடி முதல் தள்ளுவண்டி காய்கறி கடை வரை, கூகுல் பே போன்ற டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது.எனவே அனைத்து மின் நுகர்வோர்களிடம் இருந்தும், டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    டிஜிட்டல் முறையில் எப்படி கட்டணம் செலுத்துவது என்பது தொடர்பாக பிரிவு அலுவலகங்கள், மின் கட்டண மையங்களில் விளம்பரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதனால் கட்டண மையங்களுக்கு வந்து நுகர்வோர்கள் சிரமப்பட வேண்டியதில்லைங வசூல் பணமும் உடனே மின் வாரிய வங்கி கணக்கில் சேர்ந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராமப்புற டீக்கடையில் கூட டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
    • ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலக புகழ் பெற்றுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த அய்யன்கொல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நம் நாடு பல்வேறு வகையிலும் வல்லரசு நாடாக மாறி வருவதை வெளிநாடுகள் பாராட்டி வருகின்றன.

    அதற்கு காரணம் இளைய தலைமுறைகளின் அறிவு வளர்ச்சியாகும். விளையாட்டு துறையில் சாதிப்பதற்கு பல புதிய செயல் திட்டங்களை செயல்படுத்தியதால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெரும் வெற்றி கிடைத்தது.

    புதிய கல்வி கொள்கையால் போட்டி தேர்வுகளில் எளிதாக சாதிக்க முடியும். நாடு டிஜிட்டல் மயமானதன் மூலம், கிராமபுறங்களும் வளர்ச்சி கண்டுள்ளன.

    தற்போது கிராமப்புற டீக்கடையில் கூட டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. வரும் 25 ஆண்டுகளில் இந்தியாவை மிக சிறந்த வல்லரசு நாடாக உருவாக்கும் வகையில், மாணவர்கள் தங்களை தற்போதே முழுமையாக உருவாக்கி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்றார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் வீட்டிற்கு சென்று, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலக புகழ் பெற்றுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.

    பின்னர் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்ற அவர், ஆவணப்படத்தில் இடம் பிடித்த ரகு மற்றும் பொம்மியை பார்வையிட்டு உணவு வழங்கினார்.

    மேலும் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படும் முறைகள், யானைகள் பராமரிப்பு, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படம் எடுக்கப்பட்ட இடங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து அவர் பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு மக்களை சந்தித்து பேசினார். மக்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், அவை முறையாக வந்து சேர்கிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    தேவர்சோலை பகுதிக்கு சென்ற போது, அங்கிருந்த தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளம் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்து மனு அளித்தனர். அதனை மத்திய மந்திரி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பந்தலூர் நெல்லியாளம் பகுதிக்கு சென்று அங்கு பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    • ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது.
    • டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அந்த வகையில் யு.பி.ஐ. முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

    2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

    2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டி உள்ளது. இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    2017-ல் ரொக்கப் பரிவர்த்தனைகள் 90 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்து. இதற்கு 2016-ல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதே முக்கிய காரணம்.

    அதே சமயம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் யு.பி.ஐ. வாயிலான பணப் பரிவர்த்தனை 900 சதவீதம் அதிகரித்தது.

    ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது. யு.பி.ஐ.யின் வளர்ச்சியால், பல்வேறு வகையான கட்டணம் செலுத்தும் முறை இலகுவானதுடன், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.

    டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.), இண்டர் நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனத்தை (என்.ஐ.பி.எல்.) உருவாக்கி ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் இணைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனையை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    சமீபத்தில் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் யு.பி.ஐ. பணப்பரிமாற்ற சேவையில் இணைந்து உள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையில் இணைய உள்ளன.

    • பனியன் நகரான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளி மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
    • டாலர் சிட்டி திருப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 142 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. படித்தோர், படிக்காதோர் என யார்வேண்டுமானாலும், கையில் செல்போன் இருந்தால் போதும், மிக எளிதாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது. இதனால் நேரம் மிச்சப்படுத்தப்படுவதுடன், பண பாதுகாப்பு, சில்லரை தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மீதான மக்களின் ஆர்வம் அதிகரிக்க முக்கிய அம்சமாக உள்ளன.

    அந்த வகையில், டாலர் சிட்டி திருப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் 6 மாதத்தில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 142 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி கூறியதாவது:-

    பனியன் நகரான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளி மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர். பொதுமக்கள், வர்த்தகர்கள் மத்தியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 2.59 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக பீம் மற்றும் யு.பி.ஐ., மூலமாக மட்டும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 812 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. பீம் மற்றும் ஆதார் வாயிலாக 4,971 கோடி ரூபாய், பாரத் க்யூ.ஆர்., கோடு வாயிலாக 94.84 கோடி, ஐ.எம்.பி.எஸ்., மூலம் 90,423 கோடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக 3,679 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இணையதளம் இல்லாத யு.எஸ்.எஸ்.டி., மூலம் 160 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. வரும் நாட்களில் பணமில்லா பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை.
    • வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க .

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி 15-வது வார்டில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு, உறையூரான் தெரு, சக்கரபாணி நகர், கடலுார் பழைய மெயின்ரோடு, அப்பர் தெரு, வடக்கு மாட வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை. தெருவிளக்கு வசதிகளும் இல்லை, கொசுமருந்து அடிப்பதில்லை. குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் சார்பில் டிஜிட்டல் பேனர் அச்சிட்டு முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளனர்.

    இதில் பண்ருட்டி நகராட்சி நிர்வாகமே , வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க .ஆனால் 15 வது வார்டில் சாலை வசதி, சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி, பால்வாடி பராமரிப்பு இல்லை. கொசுமருந்து அடிப்பது இல்லை. தெருவை பராமரிப்பதும் இல்லை.இவையெல்லாம் பொதுமக்கள் கேட்டால் நிதியில்லையென சொல்றீங்க . வரி கேட்க மட்டும் வரிங்க. வார்டுக்கு செய்ய வர்ற மாட்டிங்க. இவண் 15-வது வார்டு திருவதிகை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • குறிப்பிட்ட அளவு பண பரிவர்த்தனைக்கு மட்டுமே பிடித்தம் கிடையாது.
    • ஆன்லைன் பணபரிமாற்றத்தை ஏற்பதில்லை.

    சென்னை:

    டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. ரோட்டோர தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் முறையிலேயே வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்துகிறார்கள். இது எளிமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ஆனால் பல கடைகளில் ஆன்லைனில் செலுத்துவதற்கு பதில் பணமாக செலுத்தினால் வாங்கும் பொருள்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

    சென்னை பரங்கிமலை மெயின்ரோட்டில் ஒரு பழக்கடையில் அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கடைக்காரரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நான் தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொள்முதல் செய்ய செல்கிறேன். அங்கு பணமாகத்தான் கேட்கிறார்கள். ஆன்லைன் பணபரிமாற்றத்தை ஏற்பதில்லை.

    அதுமட்டுமல்ல நான் தினமும் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கிறேன். குறிப்பிட்ட அளவு பண பரிவர்த்தனைக்கு மட்டுமே பிடித்தம் கிடையாது. என்னிடம ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் உள்ளன.

    வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணத்தை அதிகமாக செலுத்துவதால் எனக்கு அதிகப்படியான பரிவர்த்தனைகளுக்கான பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக மாதம் தோறும் வங்கிகள பிடித்தம் செய்கின்றன.

    தேவையில்லாமல் நானும் சிரமப்பட்டு யாரோ ஒருவருக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுப்பதைவிட என்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

    உதாரணத்துக்கு ஒரு வாடிக்கையாளர் 500 ரூபாய்க்கு பழங்கள் வாங்கிவிட்டு டிஜிட்டலில் பணத்தை செலுத்தினால் முழுத்தொகையும் செலுத்த வேண்டும். அதையே பணமாக தந்தால் ரூ.475 தந்தால்போதும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி என்றார்.

    ×