என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cash"
- வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹேமலதா காத்து நின்றார்.
- சிறிது நேரம் கழித்து வந்த மர்ம நபர் பணம் செலுத்திவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (22). இவர் ரூ.36 ஆயிரத்துடன் தனது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்காக கே.கே நகர் ஆர்.கே சண்முகம் சாலையில் உள்ள வங்கிக்கு சென்றார். வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹேமலதா காத்து நின்றார் அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஹேமலதாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார் மேலும் வங்கி ஊழியர்கள் அனைவரையும் தனக்கு நன்றாக தெரியும் ஆகவே கவுண்ட்டரில் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று பணம் செலுத்தி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார் இதை உண்மை என்று நம்பிய ஹேமலதா ரூ36ஆயிரம் ரொக்கத்தை அவரிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து வந்த மர்ம நபர் பணம் செலுத்திவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
பின்னர் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்குள் சென்ற ஹேமலதா தனது வங்கி கணக்கில் பணம் ஏதும் செலுத்தப்படவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார் மேலும் பணம் செலுத்திவிட்டதாக கூறிய மர்ம நபர் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.
- ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுவதுடன் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ள–னர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மூலக் கொத்தளம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த–வர் தங்கமணி (வயது 62). இவர் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 28-ந்தேதி பெங்களூ–ரில் உள்ள மகன்கள் வீட் டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து கைவரிசையை காட்டி உள்ளனர்.
இவரது வீட்டை ராமநா–தபுரம் அருகே புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த அம்மாசி என்பவர் மனைவி பஞ்ச–வர்ணம் (55) என்பவர் பரா–மரித்து வந்துள்ளார். இந்த நிலையில் பஞ்சவர்ணம் நேற்று முன்தினம் காலை–யில் வீட்டை சுத்தம் செய்வ–தற்காக சென்றபோது அங்கு முன்வாசல் கதவு உடைக் கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து உடனடியாக ராமநாதபுரம் பஜார் போலீ–சாருக்கு தகவல் தெரிவித் தார். அதன்பேரில் போலீ–சார் விரைந்து வந்தனர். இதற்கிடையே பெங்களூர் சென்ற ஓய்வு பெற்ற அதி–காரி தங்கமணி ராமநாதபு–ரத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்த போது வீட்டுக்குள் இருந்த 51 பவுன் நகை, ரொக்க பணம் ரூ.40 ஆயிரம், வெள்ளி பொருட் கள் கொள்ளை போயிருப் பது தெரிய வந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரை உத்தரவின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீ–சார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வரு–கின்றனர். நேற்று மோப்ப–நாய், கைரேகை நிபுணர்கள் திருடு போன வீடுகளுக்கு சென்றும் எவ்வித முன்னேற் றமும் இல்லை. அதேபோல் இவரது வீட்டிற்கு நீண்ட தூரத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத் தப்பட்டிருப்பதால் திருடர் களை அடையாளம் கண்டு–பிடிப்பது போலீச ருக்கு பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும் திருடர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்க ப்பட்டு தீவிரமாக தேடுவ துடன் கண்காணிப்பு பணியி லும் ஈடுபட்டுள்ள–னர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சார வாரிய அலுவலகம் அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
- 7 பேரை போலீசார் கைது செய்தும் தொடர்நது அவர்களிடமிருந்து ரூ.8,350ஐ கைப்பற்றப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளகோவில் மின்சார வாரிய அலுவலகம் அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராமகிருஷ்ணன் (53), சக்திவேல் (66), ஈஸ்வரன் (60), பழனிச்சாமி (47), அழகர் (55), சண்முகம் (50), கோபால் (65) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ.8,350ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது
- பாய், தலையணை, மளிகை பொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கினர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த செருகுடி கிராமத்தில் தியாகராஜன், ஆராயி, பாஸ்கரன் ஆகிய 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தகவல் அறிந்த சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அதன் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பாய், தலையணை, மளிகைபொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினர்.
அப்போது செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ்குமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் மலர்க்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை, துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
- 19.400 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் உண்டியல் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை, துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.6 லட்சத்து 52 ஆயிரத்து 53 பணம் மற்றும் 37 கிராம் தங்கம், 19.400 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. உண்டியல் திறப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை காங்கேயம் ஆய்வாளர் சுமதி, வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
வெள்ளக்கோவில் வீரக்குமாரசாமி கோவில் தேங்காய் பழக்கடை ஒரு ஆண்டிற்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை, திருப்பூர் துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.2023ம் ஆண்டு ஜூலை 1 ந்தேதி முதல் 2024ம் ஆண்டு ஜூன் 30 ந்தேதி வரை தேங்காய் பழம் கடை நடத்தும் உரிமம் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 500 க்கு ஏலம் விடப்பட்டது. அதே போல் கோவில் வளாகத்தில் ஒரு ஆண்டிற்கு சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம் ரூ.19 ஆயிரத்து 500க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை காங்கயம் ஆய்வாளர் சுமதி, வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- இளம்பெண்ணை கடத்தி சென்று செக்ஸ் டார்ச்சர் செய்து பணம் பறிக்கப்பட்டது.
- 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோடு தெற்கு மடத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற மண்எண்ணை கண்ணன் (வயது44). இவர் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார்.இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கண்ணன், அவரது மனைவி பிரேமா, உறவினர்கள் செல்வி, பாலா, காதர், அருள், மணி சங்கையா ஆகிய 7 பேரும் அந்த பெண்ணை கடத்திச்சென்று அவரிடம் இருந்து ரூ. 6 ஆயிரத்து 500-யை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி பணம் பறித்த 7 பேரையும் கைது செய்தனர்.
- மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
- சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப டாஸ்மாக் அதிகாரிகள் அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம்.
நகரங்களில் உள்ள கடைகளில் எந்திரங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ் மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார்.
கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இரட்டிப்பு மோசடி வழக்கில் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தார்.
- ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார். அதில் உள்ள பொருட்களை விற்றுக் கொடுத்தால் லாபம் கிடைக்கும் என்றிருந்ததை நம்பிய அவர் 16 தவணைகளாக ரூ.82 ஆயிரத்து 400-ஐ அனுப்பினார். இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இழந்த தொகை ரூ.82 ஆயிரத்து 400-ஐ போலீசார் மீட்டனர். பின்னர் அந்த தொகை இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தார்.
- மேலூரில் பெண் தவறவிட்ட பணத்தை தம்பதி போலீசிடம் ஒப்படைத்தனர்.
- சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
மேலூர்
மேலூர் அருகே வினோபா காலனியை சேர்ந்தவர் நதியா. இவர் மேலூரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் ரூ.21 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு எஸ்.எஸ்.வி. சாலா தெருவில் சென்றார்.
அப்போது அவர் வைத்திருந்த கைப்பை தவறி கீழே விழுந்து விட்டது. அதனை கவனிக்காமல் அவர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். பின்னர் பணம் கொடுப்பதற்காக பணப்பையை தேடினார். அப்போது அதனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நதியா தவறவிட்ட பணத்தை தேடி வந்தனர்.
இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அ.வல்லாளபட்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியவர் மற்றும் அவரது மனைவி மூக்கம்மாள் ஆகியோர் கீழே கிடந்த பணப்பையை கண்டெடுத்தனர். அதனை யார் தவற விட்டார்களோ என்று கருதி மேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பணம் நதியா தவறவிட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
கீழே கிடந்த பணத்தை எடுத்து நேர்மையாக ஒப்படைத்த தம்பதிகளுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
- காருக்குள் கட்டுகட்டாக பணம் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைத்தனர்.
- உதவியாளர் குமார் கைது செய்த போலீசார் உதவி செய்ய பொறியாளர் ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (42). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் சொத்து வாங்கியுள்ளார். அதற்கான பத்திரப்பதிவுகளை, திருப்பூர் நெருப்பெரிச்சரில் பத்திரப்பதிவு ஜாயின்ட்-2 அலுவலகத்தில் மேற்கொண்டார். கட்டடத்தின் மதிப்பீட்டு அறிக்கை அளிக்க, களப்பணிக்காக, மதுரையில் உள்ள பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி., அலுவலகத்துக்கு பரிந்துரைத்தனர். மதுரையில் உள்ள உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) ராமமூர்த்தி, திருப்பூர் வந்து அக்கட்டிடத்தை கள ஆய்வு செய்தார்.
இதற்கான மதிப்பீட்டு அறிக்கையை அளிக்காமல் காலம் கடத்தியதோடு, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கோபாலகிருஷ்ணன் கொடுக்க முன் வராததால் பின்னர் ரூ.75 ஆயிரம் ரூபாயாக குறைத்திருக்கிறார்.
இருந்த போதிலும் பணத்தை கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன் குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் லஞ்ச பணத்தை வாங்குவதற்காக, உதவி செயற்பொறியாளரின் உதவியாளர் குமார், (45) என்பவர் வந்துள்ளார். அவரிடம் கோபாலகிருஷ்ணன் பணத்தை வழங்கியபோது, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் உதவியாளர் குமாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரது காரில் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் கட்டுகட்டாக பணம் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைத்தனர்.
அந்த பணம் குறித்து கேட்டபோது அதற்கான பதில் அவரிடம் இல்லை. இதனையடுத்து காரில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ. 6 லட்சத்து, 48 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் உதவியாளர் குமார் கைது செய்த போலீசார் உதவி செய்ய பொறியாளர் ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.