search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு வங்கி பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    கொள்ளை முயற்சி நடந்த வங்கியில் போலீசார் ஆய்வு.

    கூட்டுறவு வங்கி பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

    • ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பின.
    • மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.

    இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கனமழை பெய்து கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை.

    இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.

    இரண்டு பூட்டுகளை உடைத்து லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது வங்கியின் காவலாளி முத்துகண்னு வந்தார்.

    இதை பார்த்த கொள்ளையர்கள் முத்துகண்ணுவை தாக்கிவி ட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதனால் வங்கியில் இருந்த சுமார் ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும் 14 லட்சம் ரொக்கமும் தப்பின.

    தகவலறிந்து பொதுமக்கள் வங்கியில் முன்பு திரண்டனர்.

    தகவல் அறிந்து வந்த கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அசோக் ஆகியோர் வங்கியில் கொள்ளை போகவில்லை எனவும் நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தனர்

    இதனால் நிம்மதியடடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கேல்சிலிண்டரை விட்டு சென்று உள்ளனர்.

    மேலும் சி.சி.டிஒயர்களை கட் செய்து ஹர்டுடிஸ்க் எடுத்து சென்று உள்ளனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×