search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysterious persons"

    • கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் இருக்க மின் இணைப்பை துண்டித்தனர்
    • சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் ஆவாரங்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை சம்பவத்தன்று இரவு பூசாரி வழக்கம் போல பூட்டி விட்டு சென்றார்.

    நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்ததால் அதில் காட்சிகள் பதிவாகாமல் இருக்க மின் இணைப்பை துண்டித்தனர்.

    இதனை தொடர்ந்து மர்மநபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ,30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் உள்ள பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போலீசில் சிக்காமல் இருக்க மின் இணைப்பை துண்டித்து விட்டு உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்கள் அவர்களது ஊருக்கு செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஏறி உள்ளனர்.
    • போலீசாரை நியமித்து காலை மாலை நேரங்களில் பஸ்களை கண்காணிக்க வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நல்லூர் செல்லும் பஸ்நேற்று மதியம் நபஸ் நிலையம் வந்தது. இந்தப் பஸ்சில் ஏறுவதற்கு பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள் அவர்களது ஊருக்கு செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஏறி உள்ளனர்.அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் மனைவி அஞ்சலம் (65) செல்போன், ஆதார்கார்டு, ஏ.டி.எம்.கார்டு, 2 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் திட்டக்குடியை அடுத்துள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி மந்த்ராதேவி (35) என்ற பெண்ணிடமிருந்து பான்கார்டு, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகிய 2பேர்களிடம் பையிலிருந்த மணி பர்சை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட னர். யாரும் போலீசாரிடம் சிக்க வில்லை. திட்டக்குடி பஸ் நிலையத்தில் பெண்களிடம் பணம், நகை தொடர்ச்சியாக மர்ம நபர்கள் பறித்து செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் ேபாலீசாரை நியமித்து காலை மாலை நேரங்களில் பஸ்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மூன்றரை பவுன் தங்க நகை, 2 கேமரா ஆகியவை திருடு போனது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் நோயல்ஜாவ். இவரது மனைவி அந்தோணி லில்லி புஷ்பம் (வயது 70).

    சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்றனர்.

    அப்போது இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளது என செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

    இதைக் கேட்டு இருவரும் பதறியடித்துக் கொண்டு வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.

    பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகை, 2 கேமரா, வாட்ஜ், பட்டுப் புடைவை ஆகியவற்றை மர்ய நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அந்தோணி லில்லி புஷ்பம் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
    • சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம்- மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இறைச்சி கடைகள் உள்ளது. இதன் பின்புறம் சுமார் ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சிகரெட் புகைத்து விட்டு குப்பைகளின் மேல் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மளமளவென பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்து அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அக்கம் - பக்கம் உள்ள வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பியது. குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடம் வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.16 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மாப்பிள்ளைநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ஐயப்பன் (வயது 56). இவர் பெங்களூரில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதனால் அங்கு தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். இந்த நிலையில் ஐயப்பன் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    இதையடுத்து சொந்த ஊரான மாப்பிள்ளை நாயக்கன்பட்டிக்கு வந்து குடும்பத்துடன் ஓரிருநாட்கள் தங்கி இருந்தார் . பின்னர் வீட்டை பூட்டி விட்டு விஜயவாடாவுக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு வந்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.16 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி ஓடி விட்டனர்.

    இதற்கிடையே வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது குறித்து ஐயப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டிராயரில் இருந்த நகை மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கத்தை திருடினர்.
    • சத்தம் கேட்டு குடும்பத்தினர் முழித்து மர்ம நபர்களை விரட்டி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (வயது 35). சம்பவத்தன்று இரவில் காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டில் பின்பக்க வாசல் வழியாக புகுந்தனர். பின்னர் வீட்டின் ஒரு அறையில் டிராயரில் இருந்த நகை மற்றும் ரூ.3500 ரொக்கத்தை திருடினர். தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த காயத்ரி கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர். திடுக்கிட்டு முழித்த காயத்ரி திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு குடும்பத்தினர் முழித்து மர்ம நபர்களை விரட்டி சென்றனர்.

    ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி தலைமறைவாகி விட்டனர்.இது குறித்து காயத்ரி வல்லம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு அலுவலகத்தை சட்டவிரோதமாக மர்ம நபர்கள் பயன்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது.
    • அமராவதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி உள்ளது. இந்தப்பகுதியில் ஆண்டியகவுண்டனூர், உரல்பட்டி, கிழுவன்காட்டூர், குட்டிய கவுண்டனூர், பெரிசனம்பட்டி ஜக்கம்பாளையம்,அமராவதி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.நிர்வாக வசதிக்கு ஏதுவாக இரண்டு ஒன்றிய குழு உறுப்பினர்களும் உரல்பட்டி, அமராவதி பகுதியில் தலா ஒரு ஊராட்சிமன்ற அலுவலகமும் கட்டப்பட்டு உள்ளது.அங்கு சென்று பொதுமக்கள் நாள்தோறும் சேவைகளை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த சூழலில் அமராவதியில் கட்டப்பட்டு உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மர்ம நபர்கள் சட்ட விரோதமாக தங்கி உள்ளனர்.அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? எதற்காக அரசு அலுவலகத்தில் தங்கி உள்ளனர் என்பது தெரியவில்லை.இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏதுவாக ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி சார்பில் அமராவதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.அங்கு சென்று நாள்தோறும் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம்.இந்த சூழலில் அடையாளம் தெரியாத நபர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சட்டவிரோதமாக தங்கி வருகின்றனர்.அவர்கள் எதற்காக அங்கு தங்கி உள்ளனர் என்பது குறித்து விவரம் தெரியவில்லை.

    இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை.இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் தற்போதைய சூழலில் அரசு அலுவலகத்தை சட்டவிரோதமாக மர்ம நபர்கள் பயன்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இது குறித்து அமராவதி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள நபர்கள் மீதும், அவர்களை அங்கே தங்க வைத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • மசாலா பொருட்கள் இருந்த பெட்டி காணாமல் போனது தெரிய வந்தது.
    • சிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதியில் உள்ள மளிகை கடைக்கு தனியார் லாரி மூலம் மளிகை பொருட்கள் அடங்கிய பார்சல் பெட்டி, மற்றும் 2 மூட்டைகள் வந்தது. அதிகாலை நேரம் வந்தது. அதனை லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கடை முன்பு இறக்கி வைத்து விட்டு அவர்கள் சென்று விட்டனர்.

    இதன் பின்னர் கடைக்கு வந்த உரிமையாளர் பொருட்களை சரி பார்த்தபோது, சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மசாலா பொருட்கள் இருந்த பெட்டி காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து, கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது அதில் மர்ம நபர் ஒருவர் மசாலா பொருட்கள் அடங்கிய பெட்டியை திருடிச் செல்வது தெரிய வந்தது. இந்த நிலையில் பார்சல் பெட்டியை திருடும் மர்ம நபர் சிசிடிவி காட்சிகள், தற்பொழுது பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மரங்கள் ரூ.20 ஆயிரம் வருவாயாக ஏலம் விடப்பட்டது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர்.
    • இன்று காலை கோயில் பூசாரி வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார்.

    கடலூர்:

    வேப்பூர் திருபாக்கம் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.20 ஆயிரம் வருவாயாக கோவிலுக்கு கிடைத்தது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கோவிலில் பூஜைகள் செய்து வீட்டு, கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது ,கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார். ஊர் பொதுமக்கள் இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் உண்டியலில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது.   இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த காட்சி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
    • போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத்.

    இவர் தனது வீட்டில் நடைபெற உள்ள சுப நிகழ்வு ஒன்றிற்காக புது துணிகள் எடுக்க நாகையிலுள்ள பிரபல துணிக்கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கடையின் முகப்பு பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

    அதனை மர்ம நபர்கள் 3 பேர் நோட்டமிட்டு மறைத்து வைத்திருந்த கள்ள சாவியை ஒருவர் எடுத்துக் கொடுக்க அதனை கொண்டு லாவகமாக சைடு லாக் திறந்து நைசாக மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

    இந்த காட்சி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

    இது குறித்து வினோத் நாகை நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில், ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி, ஆறாகுளம் பிரிவு, உள்ளிட்ட பகுதிகளில்,இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் புதிய ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது.

    இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் சமாதானம் செய்தனர்.

    • 33 கிராம மக்களின் குலதெய்வமாக இந்த கோவில் இருந்து வருகிறது.
    • பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை காமராஜர் ரோடு வேதாத்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 75). இவரது குலதெய்வ கோவிலான மாசாணி அம்மன் கோவில் காரமடை அடுத்த திம்மம்பாளையத்தில் உள்ளது.

    திம்மம்பாளையம் முதல் கேரள மாநிலம் அட்டப்பாடி வரை உள்ள 33 கிராம மக்களின் குலதெய்வமாக இந்த கோவில் இருந்து வருகிறது. கோவிலுக்கு காரமடை சுற்று வட்டார பகுதிகளான திம்மம்பாளையம் வெள்ளியங்காடு புங்கம்பாளையம், உட்பட 33 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கோவிலில் உள்ள தகர ஓடு மற்றும் மணி, இலைகள், வேல் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மேலும் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காரமடை போலீஸ் நிலையத்தில் கோவிலை சேதம் செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்- இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்ம நபர்களை விரைவில் கைது செய்வதாக கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். 

    ×