search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம்  வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    சிதம்பரம் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    • பிரசன்னா சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • 4 கிராம் தங்க காசு ரூ.7000 பணம் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு ேபானது.

    கடலூர்:

    சிதம்பரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 42) இவர் புவனகிரியில் கடை வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து 29-ந் தேதி மாமியார் வீட்டிலிருந்து சிதம்பரத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4 கிராம் தங்க காசு ரூ.7000 பணம் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு ேபானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசன்னா சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×