என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம நபர்கள்"

    • சுவரை உடைக்கும் போது சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
    • மர்ம நபர்கள் இரும்பு கம்பியை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேரிஸ் கார்னர் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. பாருடன் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன் உள்ளிட்ட நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் பாரிலும் சிலர் பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்று இரவு பணி முடிந்து டாஸ்மாக் கடை மற்றும் பார் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பின் பக்கமாக வந்தனர். பின்னர் அவர்கள் இரும்பு கம்பியால் சுவரை உடைத்தனர். வேகம் வேகமாக சுவரை உடைக்கும் போது சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இதனைப் பார்த்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டனர். அதில் சில அடி நீளத்துக்கு சுவரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

    முன்பக்கம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்–பட்டுள்ளதால் பின்புறமாக வந்து சுவரை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளை அடிக்க முயன்றது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பொருத்தப்–பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று இரவு இவர்கள் கடையில் வேலை முடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர்.
    • கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியங் கொண்டான் நகரை சேர்ந்தவர் ஜான். இவர் திண்டிவனம் காந்திசிலை அருகே கம்ப்யூட்டர் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இதேபோல அந்த பகுதியில் ஆனந்த் என்பவர் செல்போன் சர்வீஸ் சென்டரும் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர்கள் கடையில் வேலை முடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கம்ப்யூட்டர் சர்வீஸ் மையத்தின் பூட்டுகளை உடைத்தனர். இதேபோல செல்போன் சர்வீஸ் மையம், அருகில் உள்ள பேன்சிஸ்டோர் ஆகி யவற்றின் பூட்டுகளையும் உடைத்தனர்.

    அப்போது ஆட்கள் வரும் சத்தம் கேட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இன்று காலை ஜான் உள்பட 3 பேரும் கடைகளை திறக்க வந்தனர். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. ேபாலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • வீரசோழன் ஆற்றங்கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடை உள்ளது.
    • மர்ம நபர்கள் மது பாட்டில்கள் மற்றும் பணத்தை எடுத்து சென்றனர்.

    நீடாமங்கலம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கீழ தூண்டில் விநாயகம் பேட்டை டாஸ்மாக் கடை பூட்டு உடைத்து திருட்டு நடந்துள்ளது.

    இது தொடர்பாக கடை மேற்பார்வையாளர் பழனிவேல் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்று கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இக்கடை உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் கதவு மற்றும் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, மது பாட்டில்களையும் விற்பனையான பணத்தையும் எடுத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    • இன்று அதிகாலை முருகையன் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்தார்.
    • இரும்பு கடைக்குள் நுழைந்து பொருட்கள் திருட முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் அருகே குமராபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் எதிர்புறத்தில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை உள்ளது. இங்கு குமராபுரம் சேர்ந்த முருகையன் (வயது 59) என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை முருகையன் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நெல்லிக்கு ப்பம் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து முருகையனை சிகிச்சை க்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் முருகேசன் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிருக்கு மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். இந்த நிலையில் பழைய இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் யாராவது திருடவந்த போது காவலர் முருகையன் தடுத்த போதுஅங்கிருந்த மண்வெட்டியால் தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்கு வெட்டினா ர்களா? என்பதனை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் ஆஞ்சநேயர் கோவில், அம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும், மேலும் பழைய இரும்பு கடைக்குள் நுழைந்து பொருட்கள் திருட முயற்சி செய்தது குறிப்பி டத்தக்கதாகும்.

    இதனை தொடர்ந்து பழைய இரும்பு பொருள் வாங்கும் கடைக்கு காவலராக முருகையன் இருந்த நிலையில் மர்ம நபர்கள் கொலைவெறியுடன் தலையில் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடலூர் , நெல்லிக்குப்பம் பகுதிகளில் பெண்களிடமிருந்து செயின் பறிப்பு மற்றும் கடைக்கு காவலராக பணிபுரிந்து வந்த முருகேசன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி சென்ற சம்பவம் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது. 

    • ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பின.
    • மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.

    இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கனமழை பெய்து கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை.

    இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.

    இரண்டு பூட்டுகளை உடைத்து லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது வங்கியின் காவலாளி முத்துகண்னு வந்தார்.

    இதை பார்த்த கொள்ளையர்கள் முத்துகண்ணுவை தாக்கிவி ட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதனால் வங்கியில் இருந்த சுமார் ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும் 14 லட்சம் ரொக்கமும் தப்பின.

    தகவலறிந்து பொதுமக்கள் வங்கியில் முன்பு திரண்டனர்.

    தகவல் அறிந்து வந்த கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அசோக் ஆகியோர் வங்கியில் கொள்ளை போகவில்லை எனவும் நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தனர்

    இதனால் நிம்மதியடடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கேல்சிலிண்டரை விட்டு சென்று உள்ளனர்.

    மேலும் சி.சி.டிஒயர்களை கட் செய்து ஹர்டுடிஸ்க் எடுத்து சென்று உள்ளனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும் படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மடூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44) மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் தனது மனைவி சந்திரா மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் செந்தில் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சந்திரா தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதே பகுதியில் உள்ள உணவகத்திற்கு வேலைக்குச் சென்றார். மீண்டும் வேலை முடித்துவிட்டு அவரது மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் முன்பக்க மரக் கதவில் இருந்த பூட்டு உடைத்து வீட்டின் உள்ளே இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பட்டம் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.
    • சிலைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே விளங்குளம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அட்சயபுரீ ஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில், கி.பி.13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் இக்கோவிலில் வழிபட்டதாகவும் கல்வெட்டு உள்ளன. உடலில் ஏற்பட்ட ஊனம் இக்கோவிலில் நிவர்த்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இங்கு சனி பகவான் திருமண கோலத்தில் காட்சி தருகிறார். பூச நட்சத்திர பரிகார தலமாகமாகவும் விளங்கிறது.அட்சய திருதியை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இக்கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள் வைக்க உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில், திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது. திருவாரூரில் இருந்து சிலைகளை எடுத்து வந்து திருவிழா செய்வதற்கு சிரமமாக இருப்பதாக கருதிய கிராம மக்கள், அதற்கு பதிலாக கடந்த 2011ம் ஆண்டு கிராமத்தினர் ஐம்பொன் சிலைகளின் மாதிரியை கொண்டு சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் சிலைகளை செய்து வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 13ம் தேதி நடந்த திருவிழா இரவு பூஜை முடிந்து அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை நடராஜர் சன்னதி பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து அர்ச்சகர் அளித்த தகவலின் பேரில், கிராமத்தினர் கோவிலுக்கு வந்த போது கோவிலில் இருந்த பித்தளையான அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் சிலைகள் திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து கோவில் செயலர் அலுவலர் தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் நேற்று கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது 4 நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 20 கிலோ எடையும், சுமார் 60 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    • முன்பக்கம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.
    • மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவஸ்தாசா வடியை சேர்ந்தவர்அசார் முகமது.

    இவர் வெளிநா ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நஷியாபேகம் (வயது 28).

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முன்பக்கம் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.

    மேலும் வீட்டினுள் இருந்த ஹோம் தியேட்டர், தையல் எந்திரம், பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்த்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர்.
    • ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரோடுபரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஷம்சுதீன்(வயது30). இவர் வடசேமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செல்போனில் அழைப்பு வந்ததால், மேலேரி தனியார் கல்லூரி அருகில் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு ஷம்சுதீன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். 

    அப்போது சங்கரா புரத்தில் இருந்து கள்ளக்கு றிச்சி நோக்கி இருசக்கர வாகனத்த்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர். ஆனால் அவரோ தர மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஷம்சுதீனின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் கிழித்து விட்டு அவரிடம் இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    படுகாயம் அடைந்த சம்சுதீனை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து செல்போன்களை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.  மேலும் சங்கராபுரம் சீர்பாத நல்லூர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்(62). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் முனியம்மாளிடம் பேச்சு கொடுத்து அவரது கழுத்தில் கிடந்த ரூ.60 ஆயிரம் மதிப்புடைய 3 பவுன் சங்கிலியை பறித்து க்கொண்டு, தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்து றைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவுசெய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் லீலாவதி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.
    • மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி விட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை நல்லான் நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி லீலாவதி (வயது 63).

    இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள் லீலாவதி கழுத்தில் கிடந்த 11 Ñ பவுன் தங்க சங்கிலியை சட்டென்று பறித்தனர்.

    அதிர்ச்சியடைந்த லீலாவதி திருடன்.. திருடன்.. கத்தி கூச்சலிட்டார்.

    அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று தப்பி விட்டனர்.

    இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது.
    • சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் சப்.இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தைசேர்ந்தவர் செல்வம் (வயது 47).விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு அருகே இருக்கும் ஏப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக ஊருக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீேராவை திறந்து அதில் இருந்த பணம்- நகையை கொள்ளையடித்து சென்றனர். மாலை நேரம் செல்வம் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடைந்துஉள்ளே சென்று பார்த்தபோது பீேராவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது. இதுகுறித்துஒலக்கூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் சப்.இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதேபோல பாதிரி கிராமத்தை சேர்ந்த காளி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை,5000 ரூபாய் பணம்,ஆகியவை திருடிச் சென்றுள்ளனர்.மேலும் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் 250 கிராம் கிலோவெள்ளி பொருட்கள் கொள்ளைபோய் இருந்தது. இதுதவிர நீலகண்டன் என்பவரது வீட்டிலும்கொள்ளையர்கள் 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். தேபோ மேலும் பாங்களத்தூர் பாதிரி,போன்ற பல்வேறு இடங்களில் பூட்டை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்து உள்ளனர்.அங்கு எந்த பொருளும்இல்லாததால் அங்கிருந்து சென்றுள்ளனர். திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வீட்டில் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் ரோடு அருள் நகரை சேர்ந்தவர் ஆனந்த் எட்வின் ( வயது 33) . சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் இந்த கைவரிசையை காண்பித்தது தெரியவந்தது.

    இது குறித்த அவர் தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×