search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே மெக்கானிக் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    வீட்டில் பீரோ திறந்து துணிகள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.

    தியாகதுருகம் அருகே மெக்கானிக் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    • மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும் படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மடூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44) மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் தனது மனைவி சந்திரா மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் செந்தில் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சந்திரா தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதே பகுதியில் உள்ள உணவகத்திற்கு வேலைக்குச் சென்றார். மீண்டும் வேலை முடித்துவிட்டு அவரது மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் முன்பக்க மரக் கதவில் இருந்த பூட்டு உடைத்து வீட்டின் உள்ளே இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பட்டம் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×